Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யாருக்குள் இங்கு யாரோ -19

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கனவு நானடி ❤️❤️❤️

சஞ்சனாவின் பின்னே சென்றான்   அகரன்

அகரன் :சஞ்சு நில்லும்மா உனக்குதான் தெரியும்ல நான் யாராவது எனக்கு ஹெல்ப் பண்ணா அவங்களுக்கு கிப்ட் எதாவது குடுப்பேன்னு. இங்க பாரு நான் பியூன்க்கு கூட 5000 குடுக்க சொல்லிட்டேன். சாயா கிட்ட  இருக்குற வாட்ச் பழசு அதான் நான் இத வாங்குன. நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற.

சஞ்சனா :நான் ஏன் டென்ஷன் ஆகுறேனா. நான் டென்ஷன் ஆக கூடாதுன்னா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு

அகரன் :சரி சரி சொல்றேன்.

சஞ்சனா :நானும் ஒரு மாசமா ஒரே வாட்ச் தான் கட்டி இருக்கேன் என்ன வாட்ச்சுன்னு சொல்லு. ம்ம்ம் என்னோட கைய பாக்காம சொல்லு.

அகரன் :சரி சொல்றேன் பிரவுன் கலர் வாட்ச்

சஞ்சனா :அகரா எனக்கு ப்ரவுன் கலர் பிடிக்காது அது கூட மறந்துட்டியா

அகரன் (m.v):டேய் என்னடா இப்படி சொதப்பிட்ட. எப்படி சமாளிக்க. ஓ கோல்ட் வாட்ச் போட்ருக்கியா

அகரன் :எனக்கு தெரியும் நான் சும்மா தான் சொன்ன.நீ கோல்ட் வாட்ச் போட்ருக்க.நீ இப்படி திடீர்னு வந்து ஸாக் குடுத்த உடனே நான் மறந்து போய்ட்டேன். இன்னும் என்ன நம்பலயா

சஞ்சனா :உன்ன நான் நம்புறேன் டா. ஆனா என்னமோ எனக்கு உன்ன என்னவிட்டு யாராவது பிரிச்சுடுவாங்களோன்னு தோணுது. அதான்டா உன்கூடவே இருக்கணும்ன்னு தோணுது. என்ன தப்பா நினைக்காத டா

அகரன் :நான் ஏன் உன்ன தப்பா நினைக்க போறேன். எனக்கு இன்னும் நல்லா கியூர் ஆன பிறகு
நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் இப்போவே பாட்டிக்கிட்ட பேசுறேன்.

அகரன் அம்மாவிடம் பேசி திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு பிறகு நல்ல நாளினை பார்க்க சொன்னான். அவர்களும் சந்தோசமாக ஒப்புக்கொண்டனர்.

அகரன் :போதுமா மேடம் இப்போவாது உள்ள வந்து சாப்பிடுறிங்களா.

சஞ்சனா :இல்லை டா நான் அம்மா ரிலேட்டிவ் வீட்டுக்கு போணும்.அத சொல்லித்தான் நான் இங்க வந்தேனே.

அகரன் :அப்புறம் மேடம் அந்த வாட்ச் கொடுக்கலாமா வேண்டாமா

சஞ்சனா :தாராளமா குடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் போறேன். அகரா உன்ன காதலிக்க மட்டும் இல்ல.முழுசா நம்புறேன். (மறுபடியும் படித்து அர்த்தத்தை புரிந்து கொள்ளவும் )

சஞ்சனா சென்று விட்டாள்.

சத்யா :என்ன டா நடந்துச்சு

அகரன் நடந்ததை கூறினான்.

விஷால் :என்னது மூணு மாசம் கழிச்சு கல்யாணமா அவ்ளோ சீக்கிரம் ஏன். நல்லா யோசிடா

சத்யா :எனக்கும் நீ அவசரப்படறியோன்னு தோணுது டா 

அகரன் :எண்ணைக்கா இருந்தாலும் அவ்ளதான கல்யாணம் பண்ணிக்க போறேன். நான் என்ன காலேஜ்ஜா படிக்கிறேன் எனக்கும் வயசாகுதுல்ல. இன்னும் 3 மாசம் இருக்கு டா

சத்யா :அப்போ இந்த மூணு மாசத்துல உனக்கு மனசு மாறிச்சுன்னா

அகரன் :என்ன டா மனசு மாறும்

விஷால் :அது இல்லை மச்சான். அப்புறம் நீ பிஸினஸ்ல பிஸி ஆகி முடிவ மாத்திக்கிட்டா என்ன பண்றதுன்னு சொல்ல வர்றான்

அகரன் :என்னோட முடிவுல மாற்றமே இல்லை இந்த ஜென்மத்துல அவதான் என்னோட மனைவி அத யாராலும் தடுக்க முடியாது 

அப்போது சரியாக அகரன் போன் அடித்தது. ஜோசப் தான் அழைத்தார். சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தான் அகரன்.

விஷால் :என்ன டா

அகரன் :அது ரெண்டு நாள் கழிச்சு ட்ரடிஷனல் டே.அதான் ஜோசப் கால் பண்ணி நியாபகப்படுத்துனாரு.

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க இங்கே சாயாவும் ஹரிணியும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஹரிணி :சாயா இங்க பாரு இந்த  ப்ளௌஸ் ரொம்ப டைட்டா இருக்கு. நான் ரொம்ப குண்டா ஆகிட்டேன் போல

சாயா :அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல ஹரிணி . இது நீ 2 வருஷத்துக்கு முன்ன வாங்குன இப்போ எப்படி அது செட் ஆகும். குடு நான் தையல் பிரிச்சு தர்றேன்.

ஹரிணி :ம்ம்ம் சரி இந்தா நீ சொல்லிட்ட நான் நம்புறேன்.

அப்போது ஹரிணி போன் அடித்தது. ஹரிணி போன் எடுத்தாள்.

ஹரிணி :சீனியர் கூப்பிடுறாரு நான் போய் பேசிட்டு வர்றேன்

சாயா :ம்ம்ம் போ போய் பேசு

சாயா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

ஹரிணி :ஹலோ சீனியர்

சத்யா :ஹலோ ஹரிணி ஆட் பாத்தியா

ஹரிணி :பாத்தேன் சீனியர் செம்மையா இருந்துச்சு. இண்ணைக்கு பஸ்ல கூட எல்லாரும் என்ன சிலர் பாத்து கேட்டாங்க நீங்க அந்த ஆட்ல வந்தவங்க தானேன்னு அப்புறம் அம்மா அப்பா. அகரன் அண்ணா,  அம்மா அ, ப்பா, பாட்டி, தாத்தா, சாயா , எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

சத்யா :நான் முக்கியமான விஷயத்துக்காக கூப்பிட்டேன் நீ என்னோட ப்ராஜெக்ட்ல ஹீரோயின்னா பண்றியா

ஹரிணி :என்ன சீனியர் சொல்றிங்க. எனக்கு ஹார்ட் வேகமா துடிக்குது. கலாய்க்கிறிங்க போல

சத்யா :இல்ல உண்மையாதான் நீ பண்ணா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. உனக்கு தான் அந்த ரோல் ஷூட் ஆகும்

ஹரிணி :ஐயோ நீங்க உண்மைய சொன்னாலும் பொய் சொன்னாலும் எனக்கு செட் ஆகாது. எனக்கு ஆக்ட்டிங் ரசிக்க தான் பிடிக்கும் மத்தபடி நடிக்க எல்லாம் செட் ஆகாது

சத்யா :நீ நடிக்க வேண்டாம்  இந்த கேரக்டர் நிச்சயமா உனக்கு பக்காவா இருக்கும் நீ சரி சொல்லு போதும் 

ஹரிணி :இல்லை சீனியர் எனக்கு அதெல்லாம் வேண்டாம். இண்ணைக்கு சில பேர் என்ன பார்த்து கண்டு பிடிச்சது எனக்கு சந்தோசம்தான். ஆனா அதே நேரம் நான் சாயாகிட்ட பேச கூட முடியல எல்லாரும் என்னையே பார்த்தது ஒரு மாதிரி இருக்கு.  அந்த  வாழ்கை எனக்கு வேண்டாம். நான் வேலை செய்றது எனக்கு சந்தோசம் தருது வேலை முடிச்சா நான் என்னோட வீட்டுக்கு வந்துடுவேன்.வீடு ஆபீஸ்  இதுதான் என்னோட உலகம். ஆனா நீங்க சொல்றது என்னால கற்பனைல கூட வாழ முடியாத ஒரு உலகம்
எனக்கு அது வேண்டாம். தூரத்துல இருந்து ரசிக்கலாம் ஆனா என்னால அங்க வாழ முடியாது.

சத்யா :ஏன் நான்  இந்த பீல்ட்ல தானே இருக்கேன்

ஹரிணி :ஆமா சீனியர் நீங்க சொல்றதும் உண்மைதான் உங்கள பிடிக்கும் ஆனா அங்க என்னால வர முடியாது.

சத்யா :ஓகே பைன் பாய்

ஹரிணி :ஹலோ ஹலோ சீனியர்

ஹரிணி (m.v):என்ன கட் பண்ணிட்டாரு ஒருவேளை கோபப்பட்டுருப்பாரோ. நான் தப்பா எதுவும் சொல்லவே இல்லையே. திரும்ப கூப்பிடலாமா வேணாமா வேண்டாம். கூப்பிட்டு பாக்கலாம்.

மீண்டும் அழைத்தாள். பிஸி பிஸி என்று வந்தது. ஹரிணி நேராக சென்று சாயாவை பார்த்தாள் நடந்ததை கூறியவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

சாயா :இங்க பாரு நீ அழுதா அவர் உன்கிட்ட இப்போ பேசிடுவாரா. எனக்கு புரியுது நீ ஏன் இவ்ளோ பீல் பண்றேன்னு நமக்கு பிடிச்சவங்க நம்மள பிடிச்சவங்க நம்ம கிட்ட பேசலன்னா கூட இல்லன்னா எப்பிடி  வலிக்கும்ன்னு எனக்கு தெரியும். நீ இன்னொரு முறை ட்ரை பண்ணு

ஹரிணி :நீ தர்ஷன் அண்ணா பத்தி பேசுறியா சாயா

சாயா :நிறுத்து ஹரிணி இன்னொரு வாட்டி அந்த பேர சொல்லாத. அந்த உறவு முடிஞ்சு போச்சு நானே இப்போதான் எல்லாத்தையும் மறந்து வாழ பழகிட்டு இருக்கேன் . என்னோட வாழ்க்கையோட இக்கட்டான நிலைமையில என்ன விட்டுட்டு போனான். அவன் மேல வச்ச அன்புனால பட்ட காயம் இப்போ மறுபடியும் எனக்கு யாரு மேலயும் அன்பு காட்டவே பயமா இருக்கு. உறவுகள் நீ பாக்குற கதைகள்ல வர்ற மாதிரி இருக்காது ஹரிணி. ஒரு முறை நீ ரியாலிட்டி பாத்துட்டேன்னா அதுக்கப்பறம் உன்னால வாழ்க்கை முழுக்க மீண்டு வர முடியாது. நீங்க மட்டும் இல்லன்னா நான் எண்ணைக்கோ நான் செத்து போயிருப்பேன் இந்த வாழ்க்கை ஏன் இப்படி ஒரே நேரத்தில பாடம் கத்து தர்றேன்னு சோதிக்கிதுன்னு தெரியல ஹரிணி என்னால முடியல. நானும் மறக்கணும்ன்னு நினைக்கிறேன் என்னால மறக்க முடியல. மறக்கணும்ன்னு நான் எடுக்குற ஒவ்வொரு முயற்சியும் தோத்துபோய் தோத்துபோய் என்ன பாத்து எனக்கே கோபம் வருது. நானும் உண்மையா  சிரிக்கணும்ன்னு நினைக்கிறேன்பேசணும்னு நினைக்கிறேன் ஆனா என்னால முடியல. உனக்கும் அது தெரியும் நீங்க என்ன சரி பண்ண தான் எல்லாம் பண்றீங்க அப்டின்னும் எனக்கு தெரியும். என்னால முடியல இப்போ மறுபடியும் அதே பேர் என்னால முடியல.

சாயா ஹரிணியின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்

ஹரிணி :சாயா அழாத சாயா. என்னோட சாயா எவ்ளோ தைரியமான பொண்ணு தெரியுமா இப்படி அழுதா எப்படி. பெரியப்பா என்ன சொல்லுவார் உன்கிட்ட எப்பவும் நீ அழ கூடாது. நீ அழுதா அவரால தாங்க முடியாதுன்னு தானே சொல்லுவார் இப்போ நீ அழுதா அவர் பேச்சுக்கு என்ன மரியாதை

சாயா :சரி நான் அழல. நான் அழுதேன்னு சித்தப்பா சித்திக்கிட்ட சொல்ல கூடாது

ஹரிணி :சொல்ல மாட்டேன்

சாயா :நீ இப்போ அவர்க்கிட்ட பேச ட்ரை பண்ணு

ஹரிணி :இல்ல எனக்கு பேச தோணல சாயா. நீ பீல் பண்ணாத என்ன. நீ கொஞ்சம் நேரம் அம்மாக்கிட்ட பேசு  எல்லாம் சரி ஆயிடும்

சாயா :வேண்டாம் நான் பேசுறத வச்சே சித்தி g கண்டு பிடிச்சுருவாங்க. நான் தூங்குறேன்.நீயும் தூங்கு

அடுத்த நாளும் அப்படியே சென்றது பர்வீன் இல்லாததால் சாயாவிற்கு சற்று கடினமாக இருந்தது எந்த ஐடியாவாக இருந்தாலும் பர்வீனிடம் சொல்லுவாள் ஆனால் இப்போது அது முடியாமல் போனது. சஞ்சனாவும் ஆபிஸ் வரவில்லை அவளுக்கு பதில் தாத்தா தான் வந்தார். மறுதினம் அகரன் வீட்டிற்கு வந்தான். அன்றும் அகரன் ஆபீஸ்ற்கு செல்லவில்லை. சத்யாவிடம் ஹரிணி பேசவில்லை. சத்யாவும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. அன்று இரவு வழக்கம் போல சாயா மாடிக்கு சென்றாள். அகரன் அவளுக்காக காத்திருந்தான்.

அகரன் :ஹாய் சாயா. என்ன நான் இல்லாம இந்த இடம் எப்படி இருந்துச்சு

சாயா :அமைதியா இருந்துச்சு சார்

அகரன் : யாரும் இல்லைனா அமைதியா தான் இருக்கும். இனி அமைதியா இருக்காது. இந்த வாட்ச் பாருங்க எப்படி இருக்கு 

சாயா :ரொம்ப அழகா இருக்கு சார்

அகரன் :அப்போ நீங்களே வச்சிக்கோங்க

சாயா :என்ன சார் சொல்றிங்க எனக்கு எதுக்கு வாட்ச். என்கிட்ட தான் ஒரு வாட்ச் இருக்கே

அகரன் :அது பழசா இருக்கே

சாயா :என்ன அந்த அளவுக்கு நோட் பண்ணீங்களா

அகரன் :இல்ல நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணீங்க இல்லையா அதான் நான் உங்களுக்கு இத குடுத்தேன்.மத்தபடி ஒண்ணுமில்ல

சாயா :சார் இதோட விலை என்ன

அகரன் :சாயா அது எதுக்கு

சாயா :சும்மா சொல்லுங்க சார்

அகரன் :18000   ஏன் கேக்குறீங்க

சாயா :ஓ அவ்ளோ விலை ஜாஸ்தியா. ஒரு நிமிடம் சார்.

தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தை கழற்றினாள்.

சாயா :இந்தாங்க சார்

அகரன் :எனக்கெதுக்கு இது

சாயா :நீங்க என்னோட உயிர காப்பாத்தி இருக்கீங்க அதான் இந்தாங்க. இந்த மோதிரத்தை எடுத்துக்கோங்க. எங்கப்பா எப்போவும் சொல்லுவார் இந்த மாதிரி நல்ல பழக்கத்த மத்தவங்க கிட்ட இருந்து கத்துக்கணும்ன்னு

அகரன் :என்ன சாயா சொல்றிங்க
எனக்கு புரியல

சாயா :சொல்றேன் சார். பலன் எதிர்பாக்காமல் செய்றதுதான் உதவி. நீங்க நான் பண்ண உதவிக்கு இன்னொரு உதவி பண்ணா நெஸ்ட் டைம் ஹெல்ப் பண்றப்போ இதுக்கு என்ன கைமாறு கிடைக்கும்ன்னு தான் தோணும்

அகரன் :ஐ ஆம் சாரி நான் இப்படி யோசிக்கல.இந்த வாட்ச் நான் ரிடர்ன் பண்ணிடறேன் நீங்க உங்க மோதிரத்த கையில போடுங்க

சாயா :ஓகே ஓகே சார் 

அகரன் :நீங்க ரொம்ப கோபப்படுவிங்களோ

சாயா :எல்லா நேரமும் இல்லை. சில நேரம் மட்டும் கோபம் வரும். சும்மா கோப பட்டா அந்த கோபத்துக்கு உண்டான மரியாதை கிடைக்காது.

அகரன் :நாளைக்கு என்ன சாரீ கட்ட போறீங்க

சாயா :நீங்க செலக்ட் பண்ண சாரீ தான் கட்ட போறேன்

அகரன் :நான் பாக்க ஆவலா காத்திருக்கேன்

சாயா :அது எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது நான் தூங்க போறேன். குட் நைட் சார்

சாயா சென்று விட சஞ்சனாவிற்கு போன் செய்து பேச ஆரம்பித்தான். அடுத்த நாளும் அழகாக விடிந்தது. சாயாவும் ஹரிணியும் சீக்கிரமாக சென்று விட்டனர். அகரனும் ஆபீஸ்ற்கு சென்றான். இன்று எல்லாரும் புடவை வேஷ்டி சட்டை என அழகாக இருந்தனர். சஞ்சனாவும் வந்திருந்தாள்.அகரன் சரியான நேரத்தில் வந்தான். நேராக சஞ்சனாவை பார்த்து புன்னகையோடு வந்தான் சஞ்சனாவும் வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டாள்

அகரன் :ஹே நான் நீ இவ்ளோ அழகா இருப்பேன்னு நினைக்கல. உண்மையாவே சாரீ சூப்பர். ஜிமிக்கி மல்லிப்பூ ரொம்ப அழகா இருக்க இண்ணைக்கு

சஞ்சனா :நான் ஜிமிக்கி போடல டா

அகரன் :ஹே சஞ்சனா நீ என்ன அங்க தனியா பேசுற.இங்க பாரு சாயா எப்படி இருக்கான்னு

சாயா :தேங்க்ஸ் சார் நான் போறேன்.

நான்கு பேர் நான்கு விதமாக பேச அதுவும் சஞ்சனாவை கோபப்படுத்தியது.

சஞ்சனா முறைத்து விட்டு சென்று விட்டாள். அகரன் மீண்டும் தன்னை நொந்து கொண்டான். சிறிது நேரம் அவளை சமாதானம் செய்தவன் அவளை அனைவரின் முன்பும் அறிமுகம் செய்தான் தான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என்றும் அவளுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்றும். இதை சஞ்சனா சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அப்படியே பெருமை பொங்க சாயாவை பார்க்க சாயா சஞ்சனாவை மதிக்கவே இல்லை. இப்படியே இந்த நாள் ஓடி சாயங்காலம் வந்தது . வீட்டிற்கு வரும்போது பாட்டி ஹரிணியிடம் சத்யா அம்மாவிடம் இருந்து கோலம்   நோட் வாங்கி வர சொல்லியதால் சாயா வீட்டுக்கு செல்ல ஹரிணி நோட் வாங்கிவிட்டு வர சத்யா வீட்டுக்கு வந்தாள்.

சத்யா அம்மா :என்னமா சாரீ எல்லாம் கட்டி இருக்க

ஹரிணி :இண்ணைக்கு ட்ரடிஷனல் டே அதான்.

சத்யா அம்மா :அழகா இருகம்மா. நோட் வாங்க வந்தியோ

ஹரிணி :ஆமா ஆண்ட்டி

சத்யா அம்மா :மேல சத்யா ரூம்ல இருக்கு போய் எடுத்துக்கோ அவன் ஒர்க் அவுட் பண்ணிட்டு இருப்பான் அதனால நீ போய் எடு

ஹரிணி சென்றாள் சத்யா ரூமிற்கு நோட் அங்கிருந்த டேபிள் மீது இருந்தது. ஹரிணி அதை எடுக்க செல்ல பின்னே இருந்து சத்யா குரல் கேட்டது

ஹரிணி : குட் குட் ஈவினிங் சீனியர். நோட் ஆண்ட்டி எடுக்க சொன்னாங்க.எடுத்துட்டேன் நான் போறேன் பை ஆண்ட்டி  நான் போறேன்

சத்யா :நில்லு. உனக்கு என்ன உண்மையாவே பிடிக்குமா

ஹரிணி :ரொம்ப பிடிக்கும்

சத்யா :அப்புறம் ஏன் நீ  என்கிட்ட பேசல

ஹரிணி :எனக்கு பயமா இருந்துச்சு பேசி கோபம் அதிகம் ஆச்சுன்னா. நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா. இப்போ கூட அழுகை வருது

சத்யா :அழாத நீ கண்ண தொட.எதுக்கு அழுற

ஹரிணி :உங்கள கஷ்டபடுத்திட்டேன்ல அதான் அழுறேன்.

சத்யா :என்ன கஷ்டப்படுத்துனியா எப்போ

ஹரிணி :அண்ணைக்கு நீங்க கூட போன டக்குனு வச்சிங்களே அதான்

சத்யா :ஓ அதுவா.அது கோபம் இல்லை பயம்.

ஹரிணி :பயமா எதுக்கு

சத்யா :சொல்றேன் சொல்றேன்.நான் எத்தனை காதல் படங்கள் வசனங்கள் பேசினாலும் உண்மையில கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.  நான் அண்ணைக்கு ஒரு ப்ராஜெக்ட் பத்தி சொன்னல அதுக்கு பேரு காதல் திருமணம்

ஹரிணி :ஓகே

சத்யா :அதுல ஹீரோ நான் ஹீரோயின் நீ மட்டும்தான்

ஹரிணி :எனக்கு நடிக்க வராதே

சத்யா :நீ நடிக்க வேண்டாம் என்கூட வாழ்ந்தா போதும் கடைசி வரைக்கும் உன்கூட நான் இருப்பேன். அண்ணைக்கு நான் உன்கிட்ட சொன்னேன்ல என்னோட மனைவிய எப்படி பத்துப்பேன்னு அப்படியே நான் பாத்துக்குறேன். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா. வில் யூ மாரி மீ. நான் உன்கிட்ட எப்படி எப்படியோ சொல்லணும்ன்னு நினைச்சேன் ஆனா இப்படி சொல்லுவேன்னு நினைக்கல.உன்னோட பதில் என்ன. உன்னோட விருப்பம் தான்.படத்துல நூறு ஹீரோயின் வரலாம்  ஆனா என்னோட வாழ்க்கைல நீ மட்டும் தான் ஹீரோயின் என்ன சொல்ற ஹரிணி

ஹரிணி பதில் என்னவாக இருக்கும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro