Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

சரியாக ஒரு மாதம் கழித்து காலை சென்னை விமான நிலையம் அதற்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க அந்த விமான நிலையத்திலிருந்து கையில் தனது உடமைகள் நிறைந்த பெட்டியுடனும் கண்ணில் எதையோ எதிர்பார்த்து அதை நடத்திக்காட்டும் தீவிரத்துடனும் வந்து இறங்கினான் சஞ்சீவ் . இன்றுடன் அவன் இந்த சென்னை மண்ணை விட்டு சென்று மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தது . அவனிற்காக பதிவு செய்திருந்த வாகனம் வந்து விட தனது உடமைகளை பின்னிருக்கையில் வைத்தவன் வாகன ஓட்டியை நோக்கி ஒரு சிறிய சிரிப்பை உதிர்த்து விட்டு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் .

அந்த வாகன ஓட்டி அவனிடம் ஸ்னேஹமாக சிரிப்பை உதித்தவர் " சென்னைக்கு வேலை விஷயமா வந்துருக்கீங்களா சார் ?"

என்று கேட்க தனது கைபேசியில் அதுவரை கவனத்தை வைத்திருந்த அவனும் " ஆமா "

வாகன ஓட்டி " சொந்த ஊரு நமக்கு சென்னை தானா?"

சஞ்சீவ் " இல்லைங்க சொந்த ஊரு மதுரை ஆனா படிச்சது மொதல்ல வேலை பார்த்தது எல்லாமே சென்னை தான்.அப்பறோம் மதுரைல இருந்தேன் 3 வருஷம் அமெரிக்கால ப்ராஜெக்ட் பண்ண போயிருந்தேன் இப்போ தான் திரும்ப வரேன் "
என்று கூற

அதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தவர் " ஊருக்கு போகலைங்களா இங்க வந்துடீங்க "

சஞ்சீவ் ஒரு கசப்பான புன்னகையை சிந்தியவன் " என்னோட தேவை இனி அங்க இல்ல " என்று வெளியில் பார்க்க துவங்கி விட வாகன ஓட்டியும் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் வாகனத்தை ஓட்ட வாகனத்தில் பூங்காற்றிலே உன் சுவாசத்தை என்ற பாடல் மனம் கொண்ட ரணத்தை மேலும் கீறி விடுவதாய் இருந்தது .

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

அவன் பார்வையை வெளியிலேயே பதிந்திருக்க அப்பொழுது அவனது வாகனத்தை தாண்டி ஒரு இருசக்கர வாகனம் சென்றது . கணநேரம் என்றாலும் உயிரில் உறைந்தவளின் தரிசனம் அல்லவா மனதும் மூளையும் செயலிழக்க ஸ்தம்பித்து ஒரு கணம் நின்றவன் அந்த வாகனத்தை பார்க்க போக்கு வரத்து நெரிசலில் சிக்கியதாலோ என்னவோ அவன் இருந்த மகிழுந்துக்கு முன்பு தான் நின்றிருந்தாள் .
அவளது நீண்ட கூந்தல் இன்றும் அவனது இதழில் ஒரு புன்னகையை தவழவிட்டது. அவனது ஆசைக்காக அவள் வளர்த்ததல்லவா. அது தந்த உவகையில் இதழ்கள் விரிய புன்னகைத்தவன் அவள் வாகனம் கண்கள் தாண்டி மறைந்து புள்ளியாகும் வரை பார்த்தபடி இருந்தான் .

அதுல்யாவோ தான் விரிவுரையாளராக இருக்கும் கல்லூரிக்கு வந்து இறங்கியவள் தனது வரவை பயோமெட்ரிக்கில் பதிந்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வகுப்புக்குள் செல்ல அவள் சென்றவுடன் மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் சத்தமிட்டனர்" ஹாப்பி பர்த்டே மாம்" என்று அவள் அதை சற்றும் எதிர்பார்க்காததால் திடீரென்று கேட்ட சத்தத்தில் நெஞ்சை பிடித்து தன்னை நிலை படுத்தியவள் சிரித்தபடி தனது மாணவச்செல்வங்களை நோக்க அவர்கள் அனைவரும் அவளுக்கு ஒரு ரோஜா பூவை கொடுத்தவர்கள் அவளை மேஜைக்கு அழைத்து சென்று நடுநாயகமாக இருந்த ஒரு blackforest கேக் ஐ ஆர்பாட்டமாய் வெட்ட கூற அவளோ தனது பிறந்தநாளை சிறப்பிக்க நினைக்கும் மாணவர்களை நினைத்து மகிழ்ந்தாலும் வெளியில் " டேய்ய் கத்தி என் வேளைக்கு உலை வச்சுராதீங்கடா " என்று கூற

அதில் ஒருவனோ " என்ன mam நீங்க சம்பவம் பண்றதுலாம் நமக்கு சாம்பார் சாப்பிடற மாதிரி யார் கேட்பா"

என்று கத்த வாசலில் வந்து நின்ற hod யோ " நான் கேட்பேன் " என்றபடி முறைத்துக்கொண்டு வந்தவர் மாணவர்கள் பயத்தில் நிற்பது போல் நடிப்பதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவர் அதுல்யாவை பார்த்து "உங்க பர்த்டே நீங்க celebrate பண்ண நெனைச்சா எல்லாத்தையும் campusku வெளிய வச்சுக்கோங்க . now clear it soon " என்று கூறியவர் அங்கிருந்து அகன்று விட அதுல்ய தனது மாணவர்களை செல்லமாய் முறைத்தவள் அந்த கேக்கை வெட்டி தானும் உண்டு அவர்களுக்கும் கொடுத்து அடுத்த பத்தாவது நிமிடம் அப்படி ஒரு விஷயம் நடந்தது என்பதற்கான தடயம் ஏதும் இல்லாமல் அதை சுத்தம் செய்ய வைத்து வகுப்பு எடுக்க ஆரம்பித்திருந்தாள் .

அவள் முதல் வருடம் பயிலும் மாணவர்களுக்கு digital principles and system design என்கின்ற பாடப்பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள் . மற்றவர் போல் முற்றும் முதலுமாக புரியாத மொழியில் பாடம் எடுப்பது போல் இல்லாமல் மாணவர்களுடன் கலந்துரையாடி அவள் நேர்த்தியாக பாடம் எடுக்கும் பாங்கு அங்கு அனைவரையும் அவளுக்கு விசிறி ஆகி இருந்தது . மாணவர்களிடம் கடுகடுவென்று இராமல் தோழமையாக அதே சமயம் எல்லை தாண்டாமல் பழகும் அதுல்யா mam அவர்களுக்கும் பிரியமானவளே . அவள் தனது துன்பங்கள் மறந்து சிறிது நிம்மதியாய் இருக்கும் இடமும் இது தான் என்பதாலோ என்னவோ அவளுக்கு இந்த பணியின் மேல் ஒரு தீரா காதல் .

தனது விரிவுரையை முடித்தவள் இடைவெளி விட்டதும் விரிவுரையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று அமர்ந்தவள் மார்க் ரெஜிஸ்டெரை புரட்ட அவள் அருகில் அமர்ந்திருந்த அவளின் அம்மா வயது மதிக்கத்தக்க மேகலா என்னும் விரிவுரையாளர் அவளை பார்த்து புன்னகைத்தார் .
அவள் பதிலுக்கு புன்னகைத்தவள் தனது உணவு டப்பாவை திறக்க அதில் இருந்த தயிர்சாதம் மற்றும் சோயா பொரியலை பார்த்தவர் . "என்ன அதுல்யா நீ பொறந்த நாள் அதுவுமா தயிர் சாப்பாடா சாப்பிடறது ?"

என்று கேட்க அவரை பார்த்து புன்னகைத்தவள் " எனக்கு எல்லா நாளும் ஒரே மாதிரி தான் mam .பொறந்த நாளுக்குனு ஏதும் தனியா செஞ்சுக்குறதில்ல "என்று கூற

அவரோ அவளை ஆயாசமாய் பார்த்தவர் " 26 வயசு தான் ஆகுது அதுக்குள்ள ஏன் இப்டி முற்றும் துறந்த முனிவர் மாறி பேசுறேன்னு எனக்கு புரியல " என்று கூற அவளோ அதற்கும் ஒரு சிரிப்பை உதிர்த்தவள் தனது உணவை சிக்கிக்கொண்ட தொண்டையுடன் உண்டாள் . பழைய நினைவுகள் சூறாவளியாய் சுழன்றடித்தது நினைவுகளில் .

அங்கு அந்த நிசப்தமான இரவில் அனைவரும் உறங்கி இருக்கும் வேளையில் அதுல்யா மட்டும் தனது அழைபேசியையே கொட்ட கொட்ட முழித்து பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவளது 21ஆவது பிறந்தநாள் . 12 மணியிலிருந்து அவளின் அன்னை தந்தை தோழியர் போன்ற பலர் வாழ்த்து கூறி இருக்க , அவளின் விடுதியிலும் அவளுடன் படிக்கும் மாணவிகள் cake cutting வைத்து அமர்க்களைபடுத்தி இருந்தனர் எனில் அவள் உயிராய் நினைக்கும் அவன் மட்டும் ஒரு குறுஞ்செய்தி கூட போடவில்லை இரவு 1 மணி வரை பொறுத்தவள் அவனுக்கு அழைக்க அவளின் அழைப்பும் எடுக்கப்பட வில்லை .

இன்னொரு முறை அழைத்தவளுக்கு அழைப்பு முடியும் தருவாயில் தான் அலைபேசி எடுக்கப்பட்டது . எடுக்கப்பட்டதும் அப்புறத்தில் இருந்து வந்த தூக்க கலக்கமான ஹெல்லோவில் அவள் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆத்திரமும் உடைப்பெடுத்திருந்தது .
அதுல்யா" ஏன்டா நீயெல்லாம் எதுக்கு டா லவ் பண்ற ? நீ ஒரு ஆளு உனக்கு ஒரு லவ் ஒரு girlfriend ஒரு கேடு . singleaave சாவ வேண்டிய ஐந்து டா நீ உன்ன தேடி தேடி லவ் பண்ணி பின்னாடியே வரேன் பாரு என் புத்திய என் புத்திய " என்று அவள் பொரிந்து கொண்டே இருக்க அங்கிருந்து சஞ்ஜீவிற்கோ ஆத்திரம் எல்லையை கடந்திருந்தது.

சஞ்சீவ் " ஏய்ய் அறிவுகெட்டவளே நடுராத்திரி கால் பண்ணி காட்டேரி மாறி கத்துக்கிட்டு இருக்க . அங்க என் மேனேஜர் சொட்ட தலையன் தான் தூங்க விடாம வேலை வேலைனு உயிரை வாங்குறான்னா நீயும் தூங்குறவன கூப்பிட்டு வெறுப்பேத்துற "

அதுல்யா அவன் குரலில் இருந்த சோர்வை உணர்ந்தவள் சட்டென்று கோபம் மட்டுப்பட்டவளாய் " என்னாச்சு பா ரொம்ப workaa ?"

என்று கேட்க அவனோ அவளின் அந்த குரலில் சமன் பட்டவன் " ப்ச் புது ப்ரொஜெக்ட்ல போட்டு வருக்குறானுங்க டி நீயும் புரிஞ்சுக்க மாட்டேங்குற " என்று கூற

அவளிற்கோ அவனின் வேலை அதிகம் என்று தெரிந்ததில் இருந்து தானாக அழைக்காது அவனை வெளியே அழைத்து செல்லவும் கேட்காது இருந்த தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று கூறியதில் மேலும் மனம் காயப்பட்ட " சரி ரெஸ்ட் எடு " என்று கூறி விட்டு பட்டென்று வைத்து விட்டாள் . அவள் அப்படி ஒரு குரலில் கூறவும் தான் தான் என்ன கூறினோம் என்றே யோசித்தவன் தேதியை பார்க்க அவளின் பிறந்தநாள் என்றே நினைவு வந்தது .

தன் தலையில் தானே அடித்துக்கொண்டவன் " ப்ச் எவன் மேலயோ இருக்குற கோவத்தலாம் இவள் கிட்ட காட்டிட்டேன் பாவம் விஷ் பண்ணலனதும் கால் பண்ணி இருக்கா ." என்று மனம் இடித்துரைக்க அவன் இன்னொரு முறை அவளை தொடர்பு கொள்ள அவளோ அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு உறங்கி விட்டாள். அதில் மேலும் வருத்தம் அடைந்தவன் தனது அலுவலகத்திற்கு அந்நேரம் அடுத்த நாள் விடுமுறை எடுப்பதற்கான மின் அஞ்சலை அனுப்பி விட்டு விடியும் வரை உறங்கியவன் விடிந்ததும் எழுந்து அவளை தேடி அவளின் விடுதிக்கே சென்று விட்டான் .

அடுத்த நாள் காலையில் எழுந்த அதுல்யா தனது அலைபேசியை பார்த்தவள் அவனிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதை பார்த்து உதடு சுழித்தவள் " நான் கால் பண்ணா திட்டிட்டு மறுபடி கல்லாஹ் பண்ணி இருக்க போடா நா எடுக்கமாட்டேன் "என்று நினைத்தவள் சென்று தயாராகி உடைமாற்றி தனது கல்லூரி பையை எடுத்தவள் வெளியே சாலையில் இறங்கி நடக்க அவள் விடுதி வாசலில் தனது பைக்கில் நின்றவாறு கை அசைத்து சிரித்தான் சஞ்சீவ் .

அவனை சற்றும் எதிர்பார்க்காமல் பார்த்ததில் ஒரு நொடி மலர்ந்து சிரித்த அவள் முகம் அவன் முன்தினம் நடந்து கொண்ட விதத்தில் சுருங்க அதற்குள் அவள் அருகில் வந்திருந்தவன் " சாரி சாரி அத்து நேத்து ஏதோ டென்ஷன்ல .. " என்று படபடத்தவன் அவளிடம் கையை நீட்டி " ஹாப்பி பர்த்டே " என்று கூற

அவளோ தலையை திருப்பியவள் " ஒன்னும் வேணாம் அந்த சொட்ட தலையணையே கட்டிக்கிட்டு அழு "

சஞ்ஜீவோ சிரித்தவன்" அவனை கட்டிக்கிட்டா அவன் பொண்டாட்டி என்ன நினைப்பா அத்து ?வேணுனா அவனுக்கு ஒரு பொண்ணிருக்கு அதை கட்டிக்கலாம் "
என்று கூற

அதுல்யாவோ அவனை சுளீர் சுளீரென்று கையில் அடித்தவள் " எப்போ எப்போன்னு இருக்குற நீ "
என்று கூற

அவனோ சுற்றிமுற்றி பதட்டமாய் பார்த்து அடிக்குரலில் எச்சரித்தான் " அத்து எல்லாரும் பாக்குறாங்க behave "என்று கூற

அவளோ " அதான பார்த்தேன் என்னடா ரூல்ஸ் புக் கொஞ்சம் ரொமான்டிக்காலாம் பண்ணுதேன்னு " என்று நினைத்தாலும் அடிப்பதை தன்னால் நிறுத்தியவள் அவனை பார்க்க அவனோ அவளை மயக்கும் அந்த கன்னக்குழி சிரிப்புடன் அவள் புறம் கையை நீட்டினான் ஹாப்பி பர்த்டே என்று அவளோ அவளின் கல்லூரியில் அனைவர் முன்பும் அணைத்து ஹாப்பி பர்த்டே பேபி என்று ஆர்ப்பாட்டம் செய்யும் காதலர்களை இவனுடன் ஒப்பிட்டு பார்த்தவள் அவனின் கண்ணியத்தை நினைத்து சிரித்தபடி அவனின் கையை பற்றிக்கொண்டாள் . அந்த கண்ணியம் தானே அவளை அவனிடம் ஈர்த்த ஒன்றும் .

அவனோ தனது பைக்கை நோக்கி அவளை கைபிடித்து அழைத்து சென்றவன் " இன்னைக்கு fulla உன்கூட தான் . "

அதுல்யா " ஹே நீ யாரு ?எங்க என் லவர்? நீ வேற யாரோ கைய விடு. "
என்று கூற

அவனோ சிரித்தபடி அவளின் கையை பிடித்தவன் " ரொம்ப கலாய்க்காத டி உன்னை மீட் கூட பண்ணல 2 மாசமா வேலை வேலைனு ஓடிட்ருக்கேன் .நேத்து வேற ரொம்ப பேசிட்டேன் ,வா ஒரு நாள் ஜாலியா போய்ட்டு வரலாம் "
என்று கூறி அவளை ஏற்றிக்கொண்டவன் முதலில் சென்றதென்னவோ கோவிலிற்கு தான் .

அவளோ கோவிலை கண்டு ஆயாசமானவள் " கோவிலுக்கு தா இவ்ளோ அளப்பறையா கூப்டு வந்தியா " என்று கேட்டவள் அவனுடன் செல்ல அவனோ ஒரு அர்ச்சனை கூடை வாங்கியவன் அவளை பார்த்து பூ வேண்டுமா என்று கூட கேட்காமல் உள்ளே அழைத்து செல்ல விழைய

அங்கிருந்த ஒரு பூ விற்கும் பெண்மணி தான் " வெறும் தலைல கோவிலுக்குள்ளே போகாதமா ஒரு மொழம் பூ வச்சுட்டு போ " என்று கூற அவனை தீயாய் முறைத்தாள் அதுல்யா .

அவளது பார்வையில் அசடு வழின்வன் பூ வாங்கி அவள் கையில் கொடுத்தவாறே " என்னடி மொறைக்குற ? வேணுனா கேட்க வேண்டி தான மறந்துறுது " என்று கூற

அவளோ " ஆமாடா பூ வாங்கி குடுன்னு எல்லாம் நா சொல்லிட்டு இருக்கேன் . எத்தனை தடவை கூப்பிட்டு வந்தாலும் இதே தான் பண்ற. தானா தோணனும் அதெல்லாம். இது மட்டும் உங்களுக்கு எப்பவும் மறந்துறும் " என்று கூறி சிலுப்பிக்கொள்ள அவனோ மனதில் சொல்லாம எப்படி வாங்கி தர முடியும் என்று சலித்தவன் மனதென்னவோ இனியாவது வாங்கவேண்டும் என்று என்று குறித்துக்கொண்டது .

அது ஒரு பெருமாள் கோவில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க அவள் பெயரில் அர்ச்சனை செய்யக்கொடுத்தவன் மனமுருகி கடவுளை வேண்ட கடவுள் நம்பிக்கை அத்தனை இல்லாத போதும் கண் மூடி கணநேரம் அவள் மற்றும் அவனது வாழ்வு சிறக்கவும் அவனது வேண்டுதல்கள் நிறைவேறவும் வேண்டியவள் கொடுத்த குங்குமத்தை வாங்கி தனக்கு இட்டுக்கொண்டு அவனிற்கு இட்டு நெற்றியில் கை வைத்து ஊதிட அவனோ அழகாய் சிரித்தவன் அவளின் மூக்கில் விழுந்திருந்த குங்குமத்தை ஊதி விட்டான் .

பின் பிரகாரத்தை சுற்றியவள் வெளியே அவள் அவன் கை பிடித்தபடி வந்தாள். அங்கே சக்கரை பொங்கல் பிரசாதமாக இடப்பட கூட்டமாக இருந்தது . அதுல்யாவிற்கு கோவிலில் போடப்படும் சக்கரை பொங்கல் மிகவும் விருப்பமானது ஆனால் கூட்டம் என்றால் ஒவ்வாமை . அவளது முகத்தை படித்தவன் தானே சென்று ஒன்று வாங்கி வந்து அவளிற்கு கொடுக்க அவளோ முகமெல்லாம் புன்னகையாக அதை வாங்கி உண்டவள் அவனிற்கு கையில் சிறிது கொடுத்தாள் . ஊட்டி விட்டால் அதற்கு அரை மணி நேரம் வகுப்பெடுப்பானே .
அதுல்யாவின் சின்ன சின்ன மனசுணுக்கங்களும் அவன் வாங்கி தந்த சக்கரை பொங்கலில் பின்னே போய் இருந்தது .

அடுத்தது எங்கே செல்லலாம் என்று அவள் கேட்க அவனோ " அப்படியே நேரா தாம்பரம் போய் அங்க பைக்கை போட்டுட்டு பாண்டி பஸ்ல ஏறுனோம்னா மஹாபலிபுரம்க்கு லுஞ்சுக்கு போயிரலாம் அங்க ஒரு 2 hours இருந்துட்டு அங்க இருந்து மறுபடி பாண்டி பஸ்ல தாம்பரம் வந்துருவோம் அங்கே இருந்து உன்ன நா ஹாஸ்டெல்ல drop பண்ணிருறேன் "
என்று கூற

அதுல்யாவோ இது வரை பொதுப் பேருந்தில் சென்று இராதவள் அவனிடம் தயக்கமாய் " bikelaye போலாம்ல ஏன் பஸ் "

அவனோ அவளை பார்த்தவன் "long journey பஸ்ல பேசிட்டே போகலாம் பைக்ல போகேல நீ பேசுனா நா முன்னாடி வர வண்டியை பாப்பேனா நீ பேசறதை கேப்பேனா.weekend கண்டபடி ஓட்டுவாங்க எனக்கு வேற ரொம்ப நாள் ஆச்சு இங்க இந்தியால ஓட்டி "என்று தனது வகுப்பெடுக்கும் படலத்தை துவங்க

கை எடுத்து மேல் நோக்கி ஒரு கும்பிடு போட்டவள் " buslaye போவோமடா சாமி " என்று கூற அவனோ சிரித்தவன் அவளோடு தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கி வாகனத்தை செலுத்தினான் .

அவளுக்கு அவனை பின்னிருந்து அணைத்தபடி நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று அலாதி ஆசை இருந்தது ஆனால் அவனுக்காக அடக்கிக்கொண்டாள். இன்று விடுப்பெடுத்து அவளுடன் அவன் நேரம் செலவழிப்பதே பெரிய விஷயம் என்று உணர்ந்தவள் பின் மனசுணுக்கத்தை விட்டு அவனுடனான பொழுதுகளை ஆழ்ந்து அனுபவித்தபடி வந்தாள் .

அவர்கள் வரும்பொழுதே ஒரு பாண்டிச்சேரி பேருந்து புறப்பட தயாராக அதில் ஒரு இருவர் அமரும் இருக்கை இருக்க அதில் சென்று அமர்ந்து கொண்டனர் .

நல்லவேளையாக என்றும் இடப்படும் எருக்கம்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா என்ற பாடல்கள் ஒலிக்கப்படாமல் மெல்லிசையாய் இளையராஜாவின் கைவண்ணத்தில் முகைந்த பாடல்களும் அவள் பிரியப்படும் ஜன்னல் இருக்கையும் கொடுக்கப்பட்டு விட குதூகலித்து போனாள் அதுல்யா . அவனது தோளில் சாய்ந்தபடி அவனது முகம் நோக்கியவள் இந்த இரண்டு மாதங்களாக பேசாத கதை அனைத்தும் பேசி அவனையும் பேச வைத்து சிரிக்கவைத்து சிரித்து என்று அந்த இரண்டு மணி நேரத்தையும் இனிமையாக்கிக்கொண்டிருந்தனர் . அங்கு ecr இல் இறங்கியவர்கள் அங்கே இருந்த ஒரு தாபா போன்ற உணவகத்திற்கு செல்ல அவள் விருப்பப்பட்டதனைத்தும் வாங்கி கொடுத்தான் அதில் உற்சாகம் அடைந்தவள் அவனையும் அந்த உணவுகளை உண்ண வைத்தாள்.

 அங்கிருந்து பொடிநடையாய் கடற்கோவிலை அடைந்தவர்கள் வித விதமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டும் அங்கே ஆங்காங்கு விற்ற குச்சிமிட்டாய் நெல்லிக்காய் போன்றவற்றை உண்டு கொண்டும் அந்த கோவிலை சுற்றி பின் பாண்டவர் ரதங்களை கண்டு என்று கால் கடுக்க நடந்தபடி இலக்கில்லாது பேச்சும் சிரிப்பும் என்று நேரத்தை கடத்தினர் . நான்கு மணி ஆனதும் அங்கே பேருந்துக்கு நின்றவர்களுக்கு இம்முறையும் இருக்கை கிடைத்து விட இருந்த வசதிக்கு அவனின் மார்பில் சாய்ந்து அவன் சட்டையை பிடித்தபடி உறங்கி போய் இருந்தாள் அதுல்யா .

அவள் முகத்தில் என்றும் அவனை ஈர்க்கும் குழந்தைத்தனம் குடி இருந்தது . சிரித்தபடி அவளின் கன்னத்தை வருடியவன் கவனத்தை ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்ப்பதில் திருப்பினான் . அவன் மனதும் பல நாள் கழித்து காதலியுடன் செலவிட்ட நிமிடங்களின் நெகிழிச்சியில் இருந்தது . கோயம்பேடு வரும் வரை உறங்கியவளை அதன் பின் உலுக்கி எழுப்பியவன் அவள் மேலும் தூங்கி வழிவதை பார்த்து இரண்டு கால் போட்டு அமர சொன்னவன் அவள் கரத்தை தனது இடுப்பை சுற்றி இறுக்கிக்கொண்டான் . அவன் வண்டியை கிளப்பும் வரை தூக்கக்கலக்கத்தில் இருப்பது போல் இருந்தவள் அதன் பின் அவன் முதுகிலிருந்து நிமிர்ந்து அவனை ஒரு நமட்டு சிரிப்புடன் நோக்கியவள் அவன் இடுப்பில் பிடியை கூட்டியபடி சுகமாய் அவனின் முதுகில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் விடுதி வந்ததும் அவளின் கையை பற்றியவன் " நடிச்சது போதும் எந்திரி ஹாஸ்டல் வந்துருச்சு என்று சிரிப்புடன் கூற "

அவளோ மனதில் " எமகாதகன் எப்படியாது கண்டுபுடுச்சுறுறான் " என்று நினைத்தவள் இறங்கி அவனை பார்க்க அவனோ ஒரு சிறு தலை அசைப்புடன் அவளை நோக்கி புன்னகைத்தான் விடை தரும் விதமாக " அவளும் புன்னகைத்தவள் அவன் உணரும் முன்னே அவன் கன்னத்தில் முத்திரையை பதித்துவிட்டு ஓடி விட்டிருந்தாள் .

பதட்டத்துடன் சுற்றி பார்த்தவன் யாரும் இல்லை என்று ஆசுவாசப்பட்டான் என்னதான் மனதில் அவள் முத்தம் மத்தாப்பை சிதற விட்டாலும் வெளியில் கடுகடுவென வைத்தவன் " வெவஸ்த்தையே இல்ல இவளுக்கு " என்று தலையை ஆட்டியபடி சென்று விட்டான் .

அந்த நினைவில் இருந்து யாரோ கூப்பிடும் சத்தத்தில் விழித்தவள் என்ன என்று பார்க்க ஒரு அலுவலகர் " உங்கள பார்க்க யாரோ வந்துருக்காங்க mam " என்று கூற அவளோ தன்னை பார்க்க யார் இந்நேரம் வந்திருப்பார்கள் என்று எண்ணியபடி வெளியில் செல்ல அவர்களோ அந்த நபர் கல்லூரியின் பக்கவாட்டில் இருந்த indoor ஸ்டேடியத்தில் காத்திருப்பதாய் கூறினார்கள் . அங்கே சென்றவள் கதவை திறந்து சுற்றி முற்றி பார்க்க அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்தபடி அவளையே கண் அகலாமல் பார்த்திருந்தான் சஞ்சீவ் .

அவனை இரண்டு வருடங்கள் தாண்டி பார்த்த பரவசம் முகத்தை நொடியில் மலரச்செய்தாலும் அடுத்த நொடி அவன் வீசி சென்ற வார்த்தைகளும் அவள் எடுத்த முடிவும் கண் முன் வர முகத்தை உணர்ச்சித்துடைத்தவாறு வைத்தவள் அவனை நோக்கி சென்றாள். அவள் அருகில் வந்ததும் கலங்கிய கண்ணை சிமிட்டி சரி செய்தவன் அவளை நோக்கி புன்னகைத்தவாறே நெருங்க அவளோ " எதுக்கு வந்தீங்க "என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் சட்டென்று மனம் அடி வாங்கினாலும் அதை மறைத்தவன் அவளை பார்த்து " உன்னை தான் பார்க்க வந்தேன் அம்மு" என்று கூற

அவளோ விரக்தியாய் புன்னைகைத்தவள் " உங்களுக்கு என்ன பாக்க மொதல்ல என்ன ரைட்ஸ் இருக்கு ? மொதல்ல இங்கே இருந்து கிளம்புங்க இருக்குற பிரச்சனை போதாதுன்னு " என்று திரும்பி நடக்க போனவள்

அவனின் " மிச்செஸ் அதுல்யா சஞ்ஜீவ பார்க்க சஞ்ஜீவ் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு " என்று கூற

அவனை திரும்பி பார்த்து ஏளனமாய் இதழ் வளைய பார்த்தவள் " ஓஓ நா மிசஸ் அதுல்யா சஞ்ஜீவ்ன்னு இன்னும் ஞாபகம் இருக்கா not bad பட் i am not interested to meet you mr .sanjeev ." என்றவள் திரும்பி நடக்க

அவனோ " மீட் பண்ண தான் கூடாது greet பண்லாம்ல " என்று அவள் கையை பற்றியவன் தன் புறம் இழுத்து அணைத்தபடி " ஹாப்பி பர்த்டே டி . உன்கிட்ட பேசணும் ப்ளீஸ் இன்னைக்கு நாம மீட் பண்ற பார்க்குக்கு வந்துரு " என்று கூற அவளோ பதறியபடி அவனை தள்ளி விட்டாள்.

"இதென்ன உங்க வீடா சஞ்ஜீவ்"என்று சீற

அவளை சிரிப்புடன் பார்த்தவன் " அப்போ வீடுன்னா பரவா இல்லையா " என்று கேட்க அவளோ ஒரு முறைப்புடன் அங்கிருந்து அகன்று செல்ல

அவனோ " ஈவினிங் 6 கு வெயிட் பண்ணுவேன் "

அதுல்யா திரும்பி " அப்டி வரலைனா ?" என்று ஒற்றை புருவம் ஏற்றி இறக்க அவனோ

இரு கையை விரித்து "அப்போ உன் வீட்டுக்கு நா வருவேன் " என்று கூற அவளோ தலையில் அடித்தபடி சென்றாள்.
காலமும் அது தந்த ரணமும் இருவரின் குணாதிசியங்களையும் மாற்றி அமைத்திருந்தது .



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro