செந்தமிழ்
என் சிவந்த உதடுகள்
முத்தமிட ஏங்குது உனை
என் கள்ள மனம்
களவாட காத்திருக்கு உனை
என் சிந்தனையெல்லாம்
சித்திரமாக்க துடிக்குது உனை
நீதானே என் இன்ப
நொடிகளில் வினை
தூது விடுத்து
உன்னை காப்பேன்
எத்துயரத்திலும் உன்னை மதிப்பேன்
உன்னை கவிதையாய் எழுதி
காற்றில் விடுவேன் ...
அந்த கானல் நீரினையும்
உண்மையாக்குவேன்...
எல்லாம் உனக்காக...
ஏட்டுப்புத்தகம் போதாது எனக்கு
சிறுதுளி வரிகள் போதாது எனக்கு
உன் போதனை மடியில்
இடைவேளையில்லா உறக்கம்
வேண்டும் எனக்கு
உன்னோடு இவ்வுலகை ரசித்து கொண்டே இருக்க....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro