கவிதை நீயே!
கோபமெல்லாம்
கொட்டித் தீர்ப்பாள்...
அவளின்
குட்டிக் கண்ணில்
என்னை எட்டிப் பார்ப்பாள்...
மெல்லச் சிரிப்பை
மறைத்துக் கொள்வாள்
என் மேனியெல்லாம்
சிலிர்க்கச் செய்வாள்...
பதம் பார்த்துச்
சமைத்து வைப்பாள்
எனைப் பார்த்து ரசித்து
அவளும் உண்பாள் ....
மடியில்
தலையணை வைத்து
தலைக்கோதிடுவாள்
நினைவில்
உறங்கிய நேரம்
மறக்கச் செய்வாள்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro