Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

34

June 30..

நல்ல கோலகலமாக தன் ஒரே பெண்ணின் திருமணத்தை முடித்தார் ராம்...

எல்லாம் நல்ல படியாக முடிய...எதையும் பற்றி நினைக்காம ஹேப்பியா உன் லைஃப்ப ஸ்டார்ட் பன்னு மச்சி என ஜரா மற்றும் ரம்யா  அபியை முதலிரவு அறையில் அனுப்பி வைத்தார்கள்..

படப்படப்புடனும் பயத்துடனும் அபி இருக்க...அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கண்களை மூடி மௌனமாக அழுதாள்..

"ஹலோ" என மாப்பிள்ளை கூற...தொன்டையில் ஈரம் இல்லாமல் எச்சில் முழுங்கி முழுங்கி "ஹலோ" என்றாள் அபி..

அபியின் அருகில் வந்து அமர்ந்தவன்,. ஏன் அபி, ஏன் இப்படி டென்ஷனா இருக்குறா என கேட்க...உங்க கிட்ட எத்தனை தடவை சொன்னேன்...இந்த கல்யாணம் வேண்டாம்...என்னை விட்ருங்கனு...ஏன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் என் வாழ்க்கையில் வந்தீங்க என அபி கேட்டாள்..

ஹ்ம்ம்...அப்படினா...உனக்கு என்னை பிடிக்கலை...அப்படி தானே என கேட்க...உங்களைனு இல்லை... எனக்கு கல்யாணமே வேண்டாம்... என்னால உங்க வாழ்க்கையே சந்தோஷம் இல்லாம போயிரும் என அபி அழுதபடி கூறினாள்..

உன் கூட இருந்தா மட்டும் தான்... நான் சந்சோஷமா இருப்பேன் அபி என்று கூறியவனிடம்... சீக்கிரம் பிரிஞ்சிறலாம்ங்க என அழுகையுடன் கூறியவளை... கூர்ந்து நோக்கினான்...

என்ன என கேட்டவளை...ஒன்னும் இல்லை...இப்ப நீ தூங்கி முழி...ரொம்ப டையர்டா இருக்கே என கூற...ஏன் அர்ஷா... ஏன்...நீ எனக்காக மட்டும் யோசிக்கிறே...உன் லவ்வ நான் புரிஞ்சிக்கலே...நான் தப்பு செய்ஞ்சிட்டேன்...உன் காதலை புரிஞ்சிக்காம,..ஒரு பொய்யனை கல்யாணம் பன்னிக்க சம்மதிச்சேன்..அப்படி இருந்தும் ஏன் என்னை கல்யாணம் பன்னுனே...நான் நல்ல பொண்ணு இல்லை என அர்ஷாவின் சட்டை காலரை பிடித்து கதறி அழுதாள் அபி...

ரிலாக்ஸ் அபி என முதுகை தடவி விட்டபடி கூறியவன்...நான் ஒன்னு கேக்குறேன்...நீ பதில் சொல்லுவியா என கேட்க...சரி என்றாள்..

சரி...நான் நல்லவனா இல்லையா...உண்மைய மட்டும் சொல்லு என அர்ஷா கேட்க...நீ ரொம்ப நல்லவன் என அபி கூறினாள்..

சரி முஸ்லீம்ஸ் ஒன்னு சொல்லுவாங்க தெரியுமா??

"கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுகு; கும் (தகுதியானவர்கள்.)"
                 னு...இது உனக்கு தெரியுமா?? என அர்ஷா கேட்க...ஹ்ம்ம்.. கேள்வி பட்றுக்கேன் என்றாள் அபி..

ீ தானே சொன்னா...நான் ரொம்ப நல்லவனு...அப்ப என் பொண்டாட்டி எப்படி இருப்பா?? நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் தானே...அப்படினா நீ நல்ல பெண் தானே...

நீ அல்லாஹ்வே நம்புவியா?? என அர்ஷா  கேட்க.. என்னை பொறுத்தவரை எல்லா கடவுளும் ஒன்னு தான் என அபி கூறினாள்..

அப்படினா அல்லாஹ் அதாவது கடவுள் தானே உன்னை எனக்கு குடுத்தார் என அர்ஷா கூற குழப்பத்துடனே அர்ஷாவை பார்த்த படி இருந்தாள் அபி...

(ஒரு தடவை அக்ஸரிடம் அபி கூறினாள்...ஏன் அக்ஸர்... இஸ்லாத்ல நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்கள் தானு குர்ஆன்ல சொல்லிக்கிறாங்க... அப்புறம் எப்படி...உன்னை மேரேஜ் பன்னிக்க போறேன்...நீ கெட்ட பையன்...அப்ப நானும் கெட்ட பெண்ணா?? நான் நல்ல பிள்ளை தானே என அபி கூற...ஹேய்...நீ நல்ல பொண்ணு... அதான் உன்னை சாமி எனக்கு தந்தான், நானும் நல்ல பையன் தான் என கூற ஓஓஓஓஓஓ என்றதோடு விட்டுவிட்டாள்)..

என்ன ஆச்சி மா...என்ன யோசிச்சிட்டு இருக்கே என அர்ஷா கேட்க...அது என இழுத்தவளை...நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்...நீ அழுக வேண்டாம்...நீ கஷ்ட பட வேண்டாம்...நீ எதையும் யோசிக்க வேண்டாம்...நீ ஹேப்பியா இருக்கனும்...பிகாஸ் இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டே... ஆன்ட் உன் வேலை இன்னும் முடியலே என அர்ஷா கூற என்ன என அபி முறைத்தாள்...

ச்சீ ச்சீ...உன் நினைப்பு எங்கே போகுது பாரு...நான் சொன்னது வேறே என கண்ணடித்து கூறிய அர்ஷா...எப்படியோ உன்னை மேரேஜ் பன்னிக்கிட்டேன்...நீ என் லவ்வ அக்ஸப்ட் பன்னிக்கலாம் தேவையில்லை...நீ எனக்கு ப்ரபோஸ் பன்னு...அது போதும் என புன்னகைத்தவனை...முறைத்து கொண்டிருந்தாள் அபி...

அட...நீ என்ன மா...எதுக்கெடுத்தாலும் முறைச்சிட்டு இருக்குறே...நானே மூணு வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கேன்...அது உனக்கு பொருக்கலையா என கேட்டவன்...இந்தா மா...என்னோட ஃபர்ஸ்ட் நைட் கிஃப்ட் என ஒரு கவரை குடுத்தான்...அதை திறந்து பார்த்தவளின் கண்களில் ஒரு நிமிடம் சந்தோஷம் வந்து மறைந்தது...

(அப்படி என்னதான் குடுத்திக்கிறானு பார்க்க போன ஆதர அபி முறைச்சி...அர்ஷா குடுத்ததை ஒளிச்சி வச்சிட்டா...நல்லதா போச்சி அடிக்கலை..
இருந்தாலும் நம்ம ஆதர் கள்ள தனமா அர்ஷா குடுத்ததை ஃபோட்டோ எடுத்துட்டு வந்துட்டாங்க😉😉)..

இதுதாங்க அர்ஷா குடுத்தது

பிடிச்சிருக்கா அபி என கேட்டவனிடம் தலையசைத்து ஆமா என்பதை போல செய்தாள் அபி..

(இப்படி தான் மூன்று வருஷம் முன்னாடி அபிக்கு அடிக்கடி ச்சாக்கி குடுப்பான்...

ஏன் அர்ஷா... அபிக்கு ச்சாக்கியா குடுக்குறேனு ரம்யா அர்ஷாவிடம் கேட்டா... நீ ஒரு படம் பார்த்தியா...அந்த மூவி நேம் சரியா தெரியலே...அதுல ஆரியா சொல்லுவாரு...பொண்ணுங்க ச்சாக்லேட் சாப்பிட்டா ரொமேன்ஸ் வருமாம்..

நான் குடுத்து அவ சாப்பிட்டா...அவளுக்கு என் மேலே ரொமேன்ஸ் வரும்லே...அதுக்கு தான் என கூறி சிரித்தான் அர்ஷா)

எனக்கு கிஃப்ட் என அர்ஷா கேட்க...முறைத்து வைத்தாள்...
(பின்னே...இந்த கல்யாணம் எப்படியாச்சிம் நிக்கனுமேனு  வேண்டிக்கிட்டு இருந்தவ...இப்படி கிஃப்ட்லாமா வாங்கி வைப்பா)..

சரி..சரி...முறைக்காதே...உனக்கு எல்லா வகையான ச்சாக்லெட்டும் வாங்கியாச்சி...வேற ஏதாவது வேணுமா என அர்ஷா கேட்க...நான் சொல்றத செய்வியா என கேட்டாள் அபி...

உத்தரவு இடுங்கள் மகாராணி...உங்க பேச்சை கேட்க இந்த அடியேன் காத்திருக்கேன் என அர்ஷா கூற...எனக்கு விவாகரத்து வேணும் அர்ஷா என கூறியவள்...அவன் கண்களை பார்க்க தைரியம் இல்லாமல் திரும்பி படுத்து கொண்டாள் அபி...

தன் மேல் தோளை உரிக்கும் அளவு வலி வந்து...சிறிது கண்ணீர் சிந்தியவன்..நான் கிடைக்காதுனு நினைச்ச என் அபி எனக்கு கிடைச்சிட்டா..என் காதல் மட்டும் எப்படி எனக்கு கிடைக்காம போகும் என நினைத்தவன்....அபி... அபி என அர்ஷா கத்தினான்...

நாம் சொன்ன வார்த்தைக்கு அர்ஷா கஷ்டபடுவானோ...இல்லாட்டி அழுவானோ என யோசித்த படி படுத்து இருந்தவளுக்கு...இவன் இப்படி அழைக்கவும் ஆச்சரியத்தை தந்தது..

என்ன..எதுக்கு கூப்டீங்க என அபி கேட்க...நீ நார்மல் டைம்லயே நைட் ட்ரெஸ் தான் வியர் பன்னுவா...இப்ப இந்த லெஹெங்கா, நகைலாம் போட்டுக்குட்டு உன்னால நிம்மதியா தூங்க முடியாது...இந்தா இந்த நைட் சூட்ட போட்டுக்கோ என அர்ஷா ஒரு பேண்ட் சர்ட்டை நீட்ட...அவனை பூரிப்புடன் பார்த்த படி இருந்தவள்...என் நிம்மதிய தான் நீ கெடுத்துட்டியே...அப்புறம் என்ன புதுசா நடிக்குறா என கேட்டாள் அபி...

ஹ்ம்ம்...திடீர்னு நல்லா பேசுறா...திடீர்னு கோவம் படுறா...திடீர்னு வெறுப்பா பேசுறா...டேய்...அர்ஷா...உன் நிலைமை ரொம்ப மோசம் டா...பாவம் நீ...எத்தனை நாள்ள உனக்கு பைத்தியம் பிடிக்க போகுதோ தெரியல என நினைத்து முகத்தை பாவமாக வைத்திருந்தான் அர்ஷா...

ட்ரெஸை நீட்டிய கையோடு அர்ஷா வைத்துக்கொண்டு அவளை பாவமாக பார்க்க...அவள் நகைகளை கழற்றி ஆடையை வாங்கி மாற்றி விட்டு வந்து படுத்தாள்..

"குட் நைட்" அபி மா என அர்ஷா கூற...அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது...

ஏன் கடவுளே...என்னை இப்படி சோதிக்கிறே...என்னால முடியல...அர்ஷா நல்லவன்...அவன் நல்லா இருக்கனும்...அதுக்கு நான் அவன் லைஃப்ப விட்டு போகனும்...அது தான் எங்க ரெண்டு பேருக்குமே நல்லது என முடிவெடுத்து தூங்கி போனாள் அபி...

அபிய எனக்கு குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்ஸ் கடவுளே...நீ என்னை மூணு வருஷமா சோதிச்சி எனக்கு என் அபிய குடுத்துட்டா...அவ மனசு மாறனும்...அவ கூட நான் சேருர நாள் ரொம்ப தூரம் இல்லை...நாங்க சாகுர வரை ஒன்னா இருக்கனும்.. எனக்கு துணையா இரு சாமி என வேண்டியபடி தூங்கி போனான் அர்ஷா...

பார்ப்போம்... யாரு வேண்டுதல அந்த கடவுள் நிறைவேத்த போறானு...












Hi frndz...
Yenna yellorum nallaa thitti saabamlaam vitteenga...
Me pawam...
Idhuku maela thaangaaadhu...
Adhuku than unga "abi" ku oru happy life kuduthikraen...
Idhuku maela thittaadheenga😭😭😭

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro