Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

26

காலையில் எழுந்ததும் வழக்கம் போல அபிக்கு மனது பாரமாக இருக்கவும்.. ஃபோனை எடுத்து பார்க்க... அக்ஸர் மெஸேஜை பார்த்ததர்க்கு அறிகுறியாக ப்ளூ டிக் காண்பித்திருந்தது... ஆனால், பதில் மெஸேஜ் வரவில்லை...

காலை வேலையை முடித்து கடனே என டிவியின் முன் அமர்ந்தவள் டிவியில் என்ன ஓடுறது என்பது கூட தெரியாமல் அவன் கூட பேசுன... ஆரம்பத்தில் நடந்ததை மட்டுமே யோசித்து சிறித்த படி இருந்தவள் ஃபோனை எடுத்து டிபியை மாற்றினாள்...

அபி... அப்பா உன் கிட்ட பேசனுமாம் என கூறி சீதா ஃபோனை குடுக்க...
சொல்லுங்க ப்பா... நல்லா இருக்கீங்களா என கேட்ட அபியிடம்... ஹ்ம்ம்... நல்லா இருக்கேன் மா... நீ எப்படி இருக்கிறா என கேட்ட தந்தையிடம்... நல்லா இருக்கேன் ப்பா என கூறியதும்...

மா... நீ அக்ஸர் கிட்ட இப்ப பேசுறியா என ராம் கேட்க... ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்... இல்லை ப்பா என கூறினாள்...

ஹ்ம்ம்... நேத்து அக்ஸர் வேலை செய்ற கடைக்கு போயிருந்தேன் மா... வழக்கமா சந்தோஷமா சிறித்த முகத்தோட இருக்கிறவன் இப்ப சோகமா இருக்கான் மா... என்னை பார்த்ததும் சிறிக்கனுமேனு கஷ்டப்பட்டு சிறிக்கிறான் மா... சோகத்தை குத்தகைக்கு எடுத்த மாதிரி இருக்கான்...
அவங்க வீட்லையும் சுத்தமா பேசுறது இல்லையாம்.... எரிஞ்சு எரிஞ்சு விழுறானாம்... ஒரு வேலை நீ அக்ஸர் கூட பேசலேனு அப்படி இருக்கானோ என ராம் கூறவும்...

அபிக்கு சிரிக்கவா?? அழுகவா?? என்றிருந்தது😕😕...

அப்பா... தலை வலிக்குது... நான் அப்புறமா பேசுறேன் என கைப்பேசியை அணைத்தவள்...

உங்களோட முடிவு ஃபர்ஸ்ட் டைம் தப்பா போயிருச்சி ப்பா... நீங்க செலெக்ட் பன்னவன் ரொம்ப கெட்டவன் ப்பா...
உங்க செலக்ஷன் தப்பா போச்சி ப்பா...
உங்களோட ச்செல்ல பொண்ணு... அவ கண்ல இருந்து சிரிக்கும் போது கூட கண்ணீர் வர கூடாதுனு நினைப்பீங்களே... இனிமே அவ வாழ்க்கை ஃபுல்லா அழுக போற ப்பா... உங்கனால தான்... உங்கனால தான்... அவ தெரிஞ்சே கிணத்துல குதிக்க போறா ப்பா என மௌனமாக அழுதவள்....டிவி யில்...

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

சொல்லாமல் கொள்ளாமல்,
நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,
மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,
கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,
கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,
பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;
பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,
காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!

சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..!

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள..! 

பாடல் வர...

இதுக்கு மேலே இந்த வீட்டில இருந்தா பைத்தியம் பிடிச்சிரும் என நினைத்தவள்...அம்மா...நான் ரம்யா வீட்டுக்கு போயிட்டு வரேன் மா என கூறி சென்றாள்...

ஐஐஐஐ.... அபி அத்தை... அபி அத்தை என சந்தோஷமாக கத்திய படி தத்தக, புத்தக ஓடி வந்த அஜூவை பார்த்ததும்... மனதில் உள்ள மொத்த பாரமும் இறங்கி விட...
அஜூ டார்லு என சந்தோஷமாக தூக்கி கொஞ்சியவள்... அபி அத்தை க்கு "அவ்வா"(kiss)  தாங்க மா என கூறியவளிடம்... எக்கு ச்சாக்கி என அஜூ தன் மழலை மொழியில் கேட்க...

அச்சச்சோ... மறந்துட்டேனே செல்லோ... ச்சாக்கி வாங்கிட்டு வரலையே என அபி அஜூவை ஓரக்கண்ணால் பார்த்த படி கூற... அபியை பாவமாக பார்த்த அஜூ... போ... உன் கூட க்கா என கூற.... அஜூ செல்லம்... நீ என் கூட பேசலேனா அபி அத்தை அழுவேனே என கூறி பொய்யாக அழுவுனவளை பார்த்தவன்... அதாதே அத்தை... அவ்வா தாதேன் என கூறி தன் பிஞ்சு கைகளால் அபிக்கு வராத கண்ணீரை தொடைத்து விட்டு.. அவ்வா குடுக்க... அதில் பூரித்தவள்...

அட அஜூ செல்லோ...இங்கே பாருங்க என கூறி தன் கையில் இருந்த பையை அஜூ குடுக்க... அதை பார்த்ததும் சந்தோஷத்தில் அபியிடமிருந்து துள்ளி குதித்த அஜூ... வேகமாக அந்த பையை விரித்து பார்த்தவன் அதில் உள்ள ச்சாக்கி மற்றும் டாய்ஸை வெளியே எடுத்து வரிசையாக அடுக்கினான்...

கையில் ஒரு ஜெம்ஸ் பாக்கேட்டை எடுத்து...
மம்மி..."பிக்கிளி பிக்கி மம்மி" என கூறி ரம்யாவை கூப்பிட்டபடி ஓடி செல்ல... யாரு செல்லம் தந்தா என கேட்டபடி வந்த ரம்யாவிடம்... ஏன் டி... நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு... வீட்டை திறந்து போட்டுட்டு யாரு வராங்கனு கூட தெரியாம இருக்கிறா... பிள்ளை வேற வாசல்ல நிக்கிறான்... இது தான் நீ பிள்ளையை பார்த்துக்குற இலட்ச்சனமா என கத்திக் கொண்டிருந்தவளை பாவமாக பார்த்தாள் ரம்யா...

சரி டி...கேர்ஃபுல்லா இரி...இப்ப உலகம் ரொம்ப கெட்டு போச்சி என கூறியவளிடம்.. எம்மா...க்ஷதாயே...
போதும்...
இவ்வளவு அக்கறையா பேசுறியே... அப்புறம் எதுக்கு டி அஜூக்கு கோல்டுனு சொல்லியும் இவ்வளவு சாக்லேட் வாங்கிட்டு வந்திக்கிறே என ரம்யா முறைக்க.... ஈஈஈஈஈ... வந்ததும் அதை தானே டி கேக்குறான்... அதான் என இழிக்க... போதும்...போதும்... இழிச்சது என கூறி உள்ளே அழைத்து ரம்யா செல்ல... அடுத்த இரண்டு நிமிடத்தில் ஜரா வந்து நின்றாள்...

அதானே...பார்த்தேன் என ரம்யா ஜராவை முறைக்க... ஈஈஈஈஈ என இழித்தாள்...
(வேற ஒன்னும் இல்லை...ஜராவும் ச்சாக்கியோட வந்திருந்தாள்😂😂)...

சொல்லு டி... எதுக்கு வர சொன்னே என ஜரா கேட்க.. .காலையில் டேட் பேசுனதை அனைத்தையும் கூறியவள்.... இதுக்கு மேலே முடியல டி... தலையே வெடிச்சிரும் போல... அதான் இங்கே கிளம்பி வந்துட்டேன் என கூற ரம்யான் முகம் புஸ்ஸானது...

ஹேய் அபி... நீ ஒரு விஷயத்த கவனிச்சியா என்ற ஜராவை இருவருமே முறைத்தனர்...

அடி லூசுங்களா...முறைக்காதீங்க டி...
நான் சொல்றதை கேளுங்க என ஜரா கூற...

ஹ்ம்ம் சொல்லு டி என்ற அபியிடம்...

அக்ஸர் இப்ப எல்லோரு மேலயும் எரிஞ்சு விழுறாங்க டி...

அப்படினா அவன் உன் கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கலை... நீ நினைக்கிற மாதிரி... நீ அவனுக்கு போர் அடிக்கலை டி... அவன் ஏதோ ப்ராப்ளம்ல இருக்கான்... அதான் அவனை அவனே வருத்திக்குறான்...
உன் கிட்ட சொல்ல முடியாத படி ஏதோ இருக்கு டி... நீ பொறுமையா இரி... அதை பத்தி அக்ஸரா சொல்லுற வரை நீ எதுவும் கேட்டுக்காதே என ஜரா கூற...

நீ சொல்லுறது சரினாலும்... அக்ஸர் அப்படி இல்லை டி... அவன் சோகத்தை எப்பயும் முகத்துல காமிக்க மாட்டான்... அதை விட முக்கியம்...ஹீரேனாள கூட எப்பையும் நடிக்க முடியாது டி... அந்த அளவுக்கு நடிப்பான்.... அவனோட டைம் பாஸே...
"டப்ஸ் மாஸ்" தான் டி.... அப்படி பட்டவன் வெளியே அப்பட்டமா முகத்துல தெரியுற மாதிரி எப்படி டி சோகத்தை வச்சிருப்பான் என அபி கூற...

ஹ்ம்ம்... அப்ப அந்த அளவுக்கு அவன் சோகமா இருக்கான் டி என கூறியவள்... கண்டிப்பா லவ் ஃபைலியரா தான் இருக்கனும் என ஜரா கூற.... அபியின் முகம் வாடியது...

இதை பொருத்து கொள்ளாத ரம்யா... ஏன் டி நீ அப்படி சொல்லுறே... அபி சொன்ன வரைக்கும் பார்த்தா கண்டிப்பா என்கேஞ்மென்ட்க்கு அப்புறம் அக்ஸர் லவ் பன்னிருக்க மாட்டான்... ஒரு வேலை என்கேஞ்மென்ட் முன்னாடி  அக்ஸர் லவ் பன்னிருந்தா... அவன் என்கேஞ்மென்ட்க்கு சம்மதிக்க மாட்டான்...

அப்படியே அவங்க வீட்டுல சொன்னதால உன்னை கல்யாணம் பன்னிக்க சம்மதிச்சாலும்... வேற ஒரு பொண்ணை மனசுல வச்சிட்டு உன் கிட்ட இவ்வளவு தூரம் பேசிருக்க மாட்டான்... அதுவும் இவ்வளவு டீப்பா.... கண்டிப்பா எந்த பசங்கனாலயும் முடியாது டி... ஒருத்தியை மனசுல வச்சிட்டு இன்னொருத்தி கூட பேச முடியாது என கூறியவள் ஒரு வேலை ஜரா சொல்லுற மாதிரி அக்ஸர்க்கு லவ் ஃபைலியர்னு உனக்கு தோனிச்சினா...
எக்காரணத்தைக் கொண்டும் இப்பையோ அல்லது உங்க கல்யாணத்துக்கு அப்புறமோ கேட்டுறாதே என ரம்யா கூற...

ஏன் என்பதை போல அபி பார்க்க...
அவன் ஒரு வேலை அப்படி யாரையும் லவ் பன்னாம இருந்து...நீ அவனை சந்தேகம் பட்டிருந்ததா அக்ஸர் நினைச்சா உங்களுக்குள்ள விரிசல் வந்துரும் டி... அதான்... அப்படி விரிசல் வராம பார்த்துக்கோ என ரம்யா  கூற... அபி தலையசைத்தாள்...

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க அபிக்கு நோடிஃபிகேஷன் வந்தது....
வேகமாக ஃபோனை எடுத்து பார்க்க...
அக்ஸரிடமிருந்து "சாரி" என மெஸேஜ் வந்திருந்தது...

ஹேய்...அக்ஸர் சாரினு அனுப்பிக்கிறானு சந்தோஷமாக அபி கூற ரம்யா மற்றும் ஜரா சந்தோஷம் அடைந்தனர்...

அக்ஸர்க்கு அபி பதில் ஸ்மைலி😍 அனுப்பினால் ஜரா கூறிய படி...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro