Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

25

தான் வைத்து வரும் ஸ்டேடஸை யாரும் பார்க்க வேண்டாம் என நினைத்து சில முக்கியமான கான்டேக்ட் ஆன அக்ஸர்,ஜரா, ரம்யாக்கு மட்டும் தெரியும் படி வைத்தாள்..

திடீரென அக்ஸரிடமிருந்து மெஸேஜ் வந்தது...

வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்:ஹாய்...எப்படி இருக்கீங்க??

அபி: (என்ன இவன், மறுபடியும் மரியாதை குடுக்குறானே...
ஆரம்பத்தில் வாங்க, போங்க...அப்புறம் வா மா, போ மா...அப்புறம் வா டா, போ டா...கடைசியில் வா டி, போ டி...
மறுபடியும் முதலிருந்தா...
என்ன நடக்க போகுதோ...சரி..பேசுவோம்)
ஃபைன்...நீங்க??

அக்ஸர்: ஹ்ம்ம்...இருக்கேன்...ஏதோ..

அபி:(ரீசன் கேட்ட திட்டுவானோ...இல்லை...ரீசன் கேக்கலனா நீ ஒரு பொண்டாட்டியா...அக்கறையே இல்லைனு கேப்பானே...என்ன செய்யலாம்??)
ஏங்க...என்னாச்சி??

அக்ஸர்: அதுலாம் சொல்ல முடியாது...

அபி: (கோவம் வருது...ஹை பி.பி)
அப்புறம் எதுக்கு வந்தீங்க...உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இப்படிலாம் பேசுறீங்க😕😕

அக்ஸர்: இப்ப என்ன ஓவரா கத்துரா...இதுக்கு தான் டி உன் கூட பேசவே பிடிக்கலை...எப்ப பார்த்தாலும் கோவம் படுறே...எங்க ம்மா சொன்னதுலாம் கரெக்ட் தான்...

அபி: அத்தை என்ன சொன்னாங்க...

அக்ஸர்: ஆமா...ஏதோ எங்க அம்மா வ வைச்சி உன் இஷ்டத்துக்கு படுத்துறே...
உங்க சித்தப்பா இறந்து போன அன்றைக்கு அப்படி கேட்டிகுறே... எங்க அம்மா, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சொல்றா டா...கல்யாணம் ஆனா என்னலாம் பன்னுவானு நினைச்சாலே பயமா இருக்கு டா னு சொல்றாங்க... எங்க அம்மா தான் எனக்கு முக்கியம்... நீ அப்புறம் தான்...
உன் இஷ்டத்துக்கு நடந்துக்காதே...

அபி: (அப்படினா... அன்னைக்கி நம்ம கிட்ட பொய் சொல்லிக்கிறான்... ஏன் அம்மா ஒரு மாதிரி இருக்காங்கனு என் கிட்டயே கேட்டிக்குறான்... கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மல பத்தி தப்பா சொல்லிருக்காங்க... இப்ப என்ன பன்னலாம்... ஆமா ஆமா...சித்தூ இறந்து போனதுக்கு அப்புறம் தான் இவன் பேசுறத குறைச்சான்...அப்ப இதான் ரீசனா இருக்குமோ??)

அக்ஸர்: இங்க பாரு... நான் மத்தவங்க மாதிரி இல்லை... என்னை அடக்கி வைக்கலாம்ங்க்ற நினைப்பு உன் மனசுல இருந்திச்சுனா அதை இப்பவே அழிச்சிறு...
என்னால காதலிக்கவும் முடியாது...
உன் கிட்ட அடிமையாவும் இருக்க முடியது...
ஃபர்ஸ்ட் என் குடும்பம் தான் முக்கியம்..
உன் கிட்ட பேசுனதுல என் சந்தோஷமே போச்சி....

அபி: நானா உங்களை பேச சொன்னேன்...
ஏன் என் கிட்ட வந்து பேசுறீங்க...நீங்க தானே பேசலேனு சன்டை பிடிச்சி பேச வைச்சீங்க😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

அக்ஸர்: அட...ச்சீ...வாய மூடு...
எதிர்த்து பேசுனா பல்ல தட்டி கைல தந்துருவேன்...எதுக்கெடுத்தாலும் கோவம் பட்டு என்னை அடக்கலாம்னு நினைக்காதே... ஏதோ பேசனும்னு தோனி வந்தா... மறுபடியும் உன் வேலையை காமிக்கிறிலே... போ டி... பாய்(bye)...

இவன் பேசுனத பார்த்து அபிக்கு அழுகையா வருது... இதைலாம் ஸ்க்ரீன் சாட் எடுத்து அப்படியே ஜரா, அபி மற்றும் ரம்யா இருக்கும் "பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்" இருக்கும் க்ரூப்க்கு அனுப்புறா...

அபி: பாரு டி...எப்படிலாம் பேசுறானு...

ரம்யா: 😠😠😠

ஜரா: நல்லது தானே டி...

அபி: என்ன டி சொல்லுறே??

ரம்யா: லூஸா நீ ஜரா??

ஜரா: அப்படி இல்லை டி...இவ்ளோ நாளா அக்ஸர் எதுவுமே பேசலே டி... எதுக்கு அவாய்டு பன்றானு தெரியாம இருந்திச்சி...
இப்ப நாம்ம போட்ட ப்ளேனால அவன் இவ்ளோ தூரம் பேசிக்கிறான் டி... அதுவும் உரிமையில பேசிக்கிறான்லே... இது நல்ல விஷயம் தானே...

அபி: 😯😯😯😯

ரம்யா: உன் மூஞ்சி... பக்கி.. எப்படி லாம் யோசிக்கிது பாரு...@ஜரா

ஜரா: உண்மை டி...பட், அக்ஸர் சொன்னது ஃபுல்லா உண்மை இல்லை டி...

அபி: என்ன டி சொல்லுறே... புரியலே ஜரா..

ஜரா: ஆமா அபி... அக்ஸர் சுஜி னு ஒரு பொண்ண பத்தி பேசுனான்... அப்புறம் ஏதோ தப்பு பன்னிட்டேனு சொன்னான்...
அவன் சொன்னதுல உண்மையா இருந்தாலும் அப்படியே ஏத்துக்க முடியாது...
நீ அதிகமா கோவம் படுறதா சொல்லுறானே...அப்படியா??
அவன் கிட்ட கோவமா பேசுவியா??

அபி: நான் ஏன் தெரியுமா கோவம் படுவேன்... சாப்பிடாமா வேலைனு இருப்பாங்க ஆன்ட் அதிகமா சிகரெட் அடிப்பாங்க... வீட்டுக்கு ஃபோன் பேச மாட்டாங்க... இதுக்கு தான் கோவம் படுவேன்...

ரம்யா: அபி கோவம் படுறது சரி தானே...

ஜரா: ஹ்ம்ம்... இனிமே கோவம் படாதே... நான் ஒரு மெஸேஜ் அனுப்புறேன்...
அப்படியே ஃபார்வேட் பன்னு...

{சாரி மா...உங்க அம்மா கிட்ட பேசுனது தப்பு தான்... இனிமே அத்தை கிட்ட அப்படி பேச மாட்டேன்... நான் கோவம் படலே... ப்ராமிஸா கோவம் பட மாட்டேன்.. நான் செய்ஞ்சது தப்பு தான் and நான் கோவம் பட்டது கூட உங்க நல்லதுக்காக தான் மா... நீங்க டைம்க்கு சாப்பிட்டா தான் உடம்புக்கு நல்லது.. அப்புறம் சிகரெட் உடம்புக்கு கெடுதி மா and அத்தை ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீங்க ஃபோன் பேச மாட்டிக்கிறீங்கனு அதான் மா...இதை தவிர நான் எதுக்காகவும்
உங்க மேலே கோவம் பட்டது இல்லை மா...இனிமே உங்க பேச்ச மீற மாட்டேன்...
மன்னிச்சிடுங்க...சாரி மா...
டாடா}..

ரம்யா:😢😯😕😁😂😆😈😠

அபி: 😢😯😈😕😆😠😴

ஜரா: என்ன டி ரியாக்ஷன்...எல்லாத்தையும் கலந்து குடுக்குறீங்க...

அபி: போ ஜரா... என்னால இப்படி அனுப்ப முடியாது... ரீட் பன்னும் போதே இர்ரிடேடிங்கா இருக்கு... போ டி...
அவன் தப்பு பன்னுவான்... நான் சாரி கேக்கனுமா??😕😕😕

ஜரா: நான் சொல்றத செய்... உன் நல்லதுக்கு தான் சொல்றேன்...க்ஷஅவ்வளவு தான்...

ரம்யா:😯😯😯😯😯

அபி: சரி...அனுப்பி தொலைக்கிறேன்...

(ஜரா அனுப்புன மெஸேஜ அப்படியே அக்ஸர்க்கு காபி பேஸ்ட் பன்னி அனுப்புறா)....

அனுப்பிட்டேன் டி...

ஜரா:குட்...இனிமே அவன் என்ன சொன்னாலும் கோவம் படாதே டி...

ரம்யா: ஓகே டி...பிள்ளை முழிச்சிட்டான்...
நாளைக்கு பேசுறேன்...

அபி: குடும்ப இஷ்த்திரி போயிட்டா டி...

ரம்யா: இல்லை டி லூஸு...பிள்ளைக்கு கோல்டா இருக்கு...

ஜரா: என்ன டி சொல்லுறா...இப்ப அஜூ செல்லம் எப்படி இருக்கான்...

அபி: அஜு டார்லுக்கு என்ன டி...

ரம்யா: அடி... இல்லை... அவனுக்கு தண்ணி
செட் ஆகலே போல... அதான்... ஹாஸ்பிடல்க்கு போனோம்... பெரிசா ஒண்ணும் இல்லை டி..

அபி: ஓகே.. டி..
பிள்ளைய பார்த்துக்கோ...

ஜரா: ஆமா டி...டேக் கேர் டி..

ரம்யா: ஹ்ம்ம்...ஓகே...டி...

அபி: ஓகே டி.. டாடா

ஜரா: டாடா
.
.

ஹ்ம்ம்... ரம்யா மாதிரி இருக்கனும் இருந்தா...

ஸ்கூல் டேஸ்ல இருந்த ரம்யா வாசு என்ற பையன விரும்பினால்...

வாசுக்கு பெரிசா இன்ட்ரெஸ்ட் இல்லை..
ஆனால், அக்செப்ட் பன்னிக்கிட்டேன்...

அதிகமாலாம் லவ்வ ரம்யாக்கிட்ட காமிச்சது இல்லை...ஏன் "ஐ லவ் யூ" னு கூட சொன்னது இல்லை...

ரம்யா தான் உருகி உருகி லவ் பன்னுனா...

ரீசன் பெரிசா இல்லை...பார்த்த உடனே புடிச்சிருச்சு...

அதான்... இவ ஃப்ரெண்ட்ஸ் சிரிப்பாங்க...
என்ன டி... இது சினிமா காதல்னு...

நீங்க என்னமும் சொல்லுங்க... எனக்கு வாசுவ புடிச்சிருக்கு... லவ் பன்றேனு சொன்னாள்...

ஒரு நாள் கல்லூரி விட்டு வந்ததுல இருந்து வாசுக்கு ஃபோன் பன்னிட்டு இருக்குறா...

அவன் எடுக்கவே இல்லைனு...
ஒரே டென்ஷன்ல இருக்குறா ரம்யா..

அப்ப தான் வாசுக்கு ஆக்ஸிடெண்ட்னு நியூஸ் வந்திச்சி...

ரம்யா ரொம்ப பயந்து அழுவுறா...

ஒன்னும் பெரிசா அடி இல்லை...கால்ல மட்டும் தான் அடினு சொல்லுறாங்க...

வாசு கால்ல அடி பட்டதுனால கொஞ்சம் கால்ல வலைச்சி நடப்பான்...
எப்படியும் ரம்யா நம்மள ஏத்துக்கமாட்டானு நினைச்சான்... ரம்யாவோட அப்பா... வாசு வீட்டில வந்து பேசுர வரை...

இல்லை...எனக்கு ரம்யா  வேண்டாம்... அவ லைஃப் நல்லா இருக்கனும்... ப்ளீஸ், அவளுக்கு சொல்லி புரிய வைங்க மாமா என வாசு கூற...

அட... மருமகனே... அதான் என்னை மாமானு சொல்லிடீங்களே... அப்புறம் என்ன... நான் கூட ஃபர்ஸ்ட் மறுப்பு தான் சொன்னேன்... இப்ப எனக்கு நிஜமா உங்களை ரொம்ப புடிச்சிருக்கு... நீங்க தான் என் பொண்ண நல்லா பாத்துருப்பீங்க என ரம்யாவின்ன் தந்தை கூறி... அப்புறம் என் மகளுக்கு சீக்கிரமே கல்யாணத்தை வைக்கனுமாம் என கூறி சிரிக்க...
எல்லோருக்கும் இந்த சம்பந்தம் பிடித்து போனதால்.. அடுத்த இரண்டு மாதத்திர்க்குள் கல்யாணத்தை முடித்தனர்..

இப்ப ரம்யா வாசு அவர்கள் இரண்டு வயது மகன் அஜித்துடன் சந்தோஷமா இருக்காங்க...

இப்ப ரம்யாவை விட அளவுக்கு அதிகமா வாசு தான் தன் காதலை வெளிப்படுத்துரான்...

இப்படியே ரம்யாவ பத்தி யோசிச்சிட்டு எப்பையும் ரம்யா லைஃப் நல்லா இருக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு படுத்துட்டா அபி..

பாவம்.... அபி லைஃப் எப்படி போக போதுனு தெரியாம😕😕

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro