அனயமறுக்கும் என்னவளின் நினைவுகள்
நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்.
நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும் ! தீப்பெட்டியென நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய் உரசி உரசி எரியும் மனது. ஒருமுறைதான் பிறந்தாய் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்.
தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro