மர்மம்-17
இறுதியாய் சென்ற லியானை விரைந்து சென்று கட்டிக் கொண்டான் சத்யா.... இருவரும் ஓரிரு நிமிடங்கள் அப்படியே திற்க.... திடீரென திரன்....
நிரன் : நானும் மெடர்மான்க்கு போறேன்.... என்றான்....
அனைவரும் அவனை புரியாது நோக்க... அவன் முகத்தில் சென்றே தீருவேன் என்ற தீர்மானம் தெள்ள தெளிவாய் தெரிய.... அனைவரும் அவனை தடுக்க.... அவன் அருகில் சென்ற அஜிம்சனாவோ... அவன் முகத்தை தன் புறம் திருப்ப.... அவனோ அவள் கண்களை பார்த்தவன் அமைதியையே கடைப்பிடிக்க.... இன்னும் அந்த பிடிவாதம் அவன் முகத்தில் பிரதிபலிக்க.... அமைதியாய் ஓரிரு நிமிடங்கள் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவள்...
அஜிம்சனா : போய்ட்டு வா... என்றாள் அமைதியாக.... இந்த பதிலை எவருமே அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.... நிரனும் தான்.... அவன் சற்றே ஆச்சர்யத்தை அவன் பார்வைவில் காட்ட....
அஜிம்சனா : போய்ட்டு வா... நீ அங்க இருந்து ஹெல்ப் பன்னு... நா இங்க இருந்து பாத்துக்குறேன்... இப்போ ஏன் என்ன இப்டி பாக்குறீங்க எல்லாரும்...
அனாமிக்கா : நீயாவது அவன தடுப்பன்னு பாத்தா... என்னடி போய்ட்டுவான்னு வழி அனுப்புற.????
அஜிம்சனா : மூன்ல இருந்து அப்டேட் ஆய்ட்டே இருக்கும் டி... நாங்க இரெண்டு பேருமே இங்க இருந்துட்டா... மெடர்மான் ல எப்டி தெரிவிக்கிறது... சோ... எங்கள்ள ஒருத்தர் அங்க இருக்கனும்... அதனால நிரன் அங்க போகட்டும்... நா இங்க இருக்கேன்...
வினய் : என்ன அஜிமா நீயும் இப்டி சொல்ற...
அஜிம்சனா : அட... எங்கண்ணா போக போறான்... போய்ட்டு வந்நுருவாங்க எல்லாரும்... என உறுதியளிக்க.... சரியென ஒரு மனதாய் அனைவரும் ஒத்துழைத்தனர்....
நிரன் : தன்க்ஸ் டி... போகாதன்னு சொல்லி தடுத்துடுவியோன்னு நெனச்சிட்டே இருந்தேன்... நீயே புரிஞ்சிட்டு அனுப்பி வைக்கிறது.... நிம்மதியா இருக்கு....
அஜிம்சனா : கொன்னுடுவேன்.. புதுசா என்னடா தன்க்ஸு... உன்ன பத்தி எனக்கு தெரியாதா ... உன் நிம்மதி எதுல இருக்கும் னு எனக்கு நல்லாவே தெரியும்... பாத்து போய்ட்டு வாங்க... என அவள் கூறிய விதத்தில் ஏதோ இருக்குமோ... என்று அனைவருக்கும் சந்தேகம் எழ... நிரனின் மனமோ... நிச்சையம் ஏதோ இருக்கு... என அடித்து கூறியது...
லியான் : நிரா... டைம் ஆச்சு வா... என அழைக்க...
சத்யா : பாத்து போய்ட்டு வாங்க டா... என கூற... இருவரும் தலையசைத்து அனைவரையும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தனர்.... சுழற்றியடித்த அப்பாதை இறுதியில் இருவரையும் எங்கோ தள்ளிவிட்டது... கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவனின் கண்கள் அகல விரிந்தது... பச்சை நிற வாணத்தை கண்டு...
நிரன் : பச்சை கலர் வாணம் டா...
லிமான் : ஆமா டா....
நிரன் : ம்ம்ம் சரி மத்தவங்க எங்க டா...
லிலான் : தெரிலையே... என கூறி முடிக்க.... " டேய் லியான் நிரன் " என்ற அழைப்பு இவர்களை திசை திருப்பியது...
அங்கே மெடர்மான் நாயகர்கள் ஒன்றாய் நிற்க....
மித்ரான் : டேய் நிரன்... நீ எங்க டா இங்க...
நிரன் : அது மூன் ல இருந்து அப்டேட் வந்தா... உங்களுக்கு இன்பார்ம் பன்ன ஆள் இருக்கனும்ல டா... அதான் நான் வந்துட்டேன்...
நரா : இவ்ளோ நேரம் என்னடா பன்னிக்கிட்டு இருந்தீங்க..
நிரன் : எல்லாருக்கும் டாட்டா பாய் பாய் சொல்லிட்டு வர்ரதுக்கு லேட் ஆய்டுச்சு தங்கக்சி... அதான்...
ஃத்வருண் : சரி நாம பாட்டுக்கும் நாங்க எங்க இடத்துக்கே போய்ர்ரோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்... இப்போ என்ன பன்றது...
லியான் : அடப்பவி... அப்ரம் எதுக்கு டா பெருசா டயலாக் விட்டீங்க அங்க....
டிவின் : நீ தான டா எங்களுக்கு மேல ரொம்ப மெரட்டீட்டு வந்த...
லியான் : நா எங்க மெரட்டுனேன்....
அரானா : மறதி வந்துருச்சா உனக்கு...
லியான் : அது... இல்ல மா.. நீங்க தான ஃபர்ஸ்ட்டு டயலாக் விட்டீங்க... அப்ரம் நிலம கை மீறி போறத பாத்து நா கொஞ்சம் மெரட்டுனேன்.... என ஒத்துக் கொள்ள....
நிரன் : பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.... நாம இனி நடக்கப் போறத பாக்கலாம்...
ராவனா : நீயும் அப்டியே அஜிம்சனா டயலாக் பேச ஆரம்ச்சிட்டடா அண்ணா...
நிரன் : வேற என்னமா பன்றது... சொல்லி சொல்லியே எனக்கும் பழக்கி விட்டுட்டா....
லியான் : அஜி சொல்றது கரெக்ட் தான டா... அப்ரம் என்ன...
நிரன் : சரி சரி... நீ உடனே உன் தங்கச்சிக்கு ஸப்போர்ட் பன்றேன்னு வாராதடா... நடக்கப்போறத பத்தி யோசிக்கலாம்....
தில்வியா : இப்போதிக்கு... நாம எப்டியாவது மூனோட மூவ்மென்ட்... ஆர் எதாவது தூது மாரி வந்துருக்கான்னு செக் பன்னனும்... எதுக்கு சந்திரன் சூரியன் மறைக்கப்பட்டுச்சுன்னு கண்டுப்புடிக்கனும்..
நரா : லெட்ஸ் மூவ்... என ஆடிட்டோரியத்தின் தோட்டத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு திரும்பினர்... சுற்றி முற்றி ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே வந்தவன் அனைவரும் ஒரு வீட்டில் நுழைவதை கண்டு பின் தொடர்ந்தான்....
லியானுக்கு ஏதோ வீட்டை வந்தடைந்த உணர்வு எழுந்தது... அதை உணர்ந்தவன்.... தன் வாட்ச்சை நோண்டிக் கொண்டே படிகளில் ஏறினான்.... திடீரென இரெண்டாவது படியில் கால் வைத்ததுமே அது மேலே அழைத்துச் செல்ல... அப்போதே இந்த நவீன முறை இருப்பதல்லவா... என யோசித்தான்.... ஏனெனில் பூமியில் படிகளிளே ஏரி ஏரி இறங்கி இறங்கி பழகிய மெடர்மான் நாயகர்கள் இந்த நவீன முறையை மறந்து தான் போயிருந்தனர்....
இரண்டாவது மாடியை சென்றடைந்ததும் செவுற்றில் மாட்டியிருந்த கடிகாரம் இடதில் சுழன்று நேரம் மாலை ஆறென காட்ட... அதை பார்த்துக் கொண்டே சில அடி எடுத்து வைத்தவன் அவன் வாட்சில் எதையோ பார்த்துக் கொண்டே அவனின் இரகசிய அறையில் நுழைந்தான்... ஓரிடத்தில் அவன் வாட்ச்சில் ஏதோ சத்தம் கேட்க... அதை ஆராய்ந்துக் கொண்டே.... ஒரு ஒயரை பிடித்து இழுத்தான்.... அறை ஒளிமயமானது....
உள்ளே நுழைந்தவனை தேடிக் கொண்டே வந்த நிரன்... அவன் இங்கிருப்பதை அறிந்து உள்ளே நுழைந்தான்....
நிரன் : சொல்லிட்டு வர மாட்டியா டா....
லிமான் : ம்ம் அப்டியே வாட்ச்ச பாத்துட்டு வன்ட்டேன் டா... சரி.... ப்ரக்டிஸ் ஆய்க்கோ... என ஓர் கதிரையில் அமர்ந்துக் கொண்டான்.... நிரனும் லியானின் ஆராய்ச்சி கூடத்தை தனக்கு பழக்கப்பட்டதாக்கிக் கொண்டான்.... ஏனெனில் இங்கிருந்து அவனும் தானே பணி செய்ய போகிறான்....
தமிழ்நாடு
அனைவரும் மௌணமாய் நிற்க.... இந்நிலையிலே இருக்க இயலாமல் அதை கலைக்கத் தொடங்கினான் சத்யா...
சத்யா : சரி நா வெள்ள போய்ட்டு வரேன்....
தாரா : எங்க??
சத்யா : இன்னும் டூ வீக்ஸ்க்கு இருக்க கேஸஸ்ஸ எல்லாம் என் ஜூனியர் கேங்ட்ட குடுக்கனும்... ஆர் தள்ளி போடனும்... அதான்...
ஸ்வத்திக்கா : சரி பாத்து போய்ட்டுவா
சத்யா : ம்ம்ம்...
வினய் : சக்தி.... ஷ்ரவா... ஆர்வின்.. ஆஃபீஸ்ல 7 ஓ க்லாக் மீட்டிங்கு கெளம்பீடுங்க... என்றுவிட்டு சென்றான்....
அவர்களுக்கும் மனநிலை மாற்ற ஓர் வாய்ப்பு கிடைத்ததாய் நினைத்து தயாராக சென்றனர்.... நாயகிகள் அவரவர் வேலையில் தங்களை வற்புருத்தி நுழைத்துக் கொண்டனர்... அனைவரின் மனமும் நொடிக்கு நொடி ரியாவை நினைத்து துடித்துக் கொண்டிருந்தது....
சத்யன் வினய் சக்தி ஷ்ரவன் ஆர்வின் ஐவரும் சேர்ந்து நடத்தும் கம்பெனி தான்.... AD CONSTRUCTIONS .... தமிழ்நாட்டில் நிலைத்த புகழுடன் நிற்கும் வளரும் தொழிலதிபர்கள் என்றாலே அனைரும் AD CONSTRUCTIONS ஐ தான் கூறுவர்.... அந்தளவுக்கு மக்களிடையே நற்பெயர் பெற்ற நிறுவனம்... சத்யன் வக்கீலாய் இருப்பினும்.... ஷ்ரவன் அஸிஸ்ட்டென்ட் கமிஷ்னரய் இருப்பினும் .... கார்வின் விஞ்ஞானியாய் இருப்பினும்.... இத்தத AD CONSTRUCTIONS ஐ ஐவரும் ஒன்றாக தான் நிறுவுகின்றனர்.... வினய் மற்றும் சக்தியே முழு நேம் இதில் ஈடுபட்டிருப்பர்... மற்ற மூவரும் பாதி நாள் ஈடுபட்டிருப்பர்.... ஐவரும் இதில் பார்ட்னர்ஸ்... இதே AD CONSTRUCTIONS னில் தான் மீனாவும் ஆத்மிக்காவும் பணி புரிந்து வருகின்றனர்....
வாய் மூடப்பட்ட நிலையில் சிறிது கசிந்த கண்ணீருடன் கை கட்டப்பட்ட நிலையில் கீழே காலை மடக்கி அமர்ந்திருந்தாள் ரியா.... அவளருகில் கதிரையை இழுத்து போட்டு அமர்ந்த தர்மன்.... அவளை ஏற இறங்க பார்த்தவாறு...
தர்மன் : நீலிக்கண்ணீர் வடிக்கிறத நிறுத்தீட்டு அவனுங்க இங்க என்ன பன்ன வந்தாங்கன்னு சொல்லு...
ரியா உடனே அவரை பார்க்க பிடிக்காமல் தலையை திருப்பிக் கொள்ள....
தர்மன் : அட... திமிர பார்த்தியா... நீ என் கஸ்டடில இருக்க தெரியும்ல.... உன்ன என்னால என்ன வேணா பன்ன முடியும்....
அவரை ஏளனமாய் பார்த்தவள் மீண்டும் திரும்பிக் கொண்டாள்...
தர்மன் : எதுக்கு வந்தாங்க சொல்லு.... அவள் அமைதியையே கடைப்பிடிக்க.... டேய் அந்த கட்ட அவுருங்க டா... என கட்டளையிட.... சுற்றி இருந்த ரௌடிகளில் ஒருவன் வந்து அக்கட்டை எடுத்து விட....
தர்மன் : சொல்லு...
ரியா : சொல்ல முடியாது போயா.... என ஏனமாகவே பதிலளிக்க...
தர்மன் : ஏய்.... ஒழுங்கா சொல்லிடு... இல்ல....
ரியா : இல்லனா... இல்லனா என்ன யா... கொல்லுவியா.... சரி கொல்லு... கொல்லு.... நீ ஒன்னும் பன்ன மாட்டன்னு எனக்கு தெரியும் யா..
தர்மன் : நா இப்ப நெனச்சா கூட உன்ன கொன்னுட்டு ஆத்துலையோ கடல்லையோ வீச முடியும்..
ரியா : அப்ரம் உன் உடம்பு கடல்ல மிதக்குறத யாராலையும் தடுக்க முடியாது...
தர்மன் : அன்...
ரியா : உன்னால நெனைக்க மட்டும் தான் முடியும்... மத்தபடி என்ன பன்ன முடியும் உன்னால சொல்லு... ஒன்னுத்தையும் கிழிக்க முடியாது... என தீர்க்கமாய் கூறினாள்...
தர்மன் : நா செய்வேன்... உன்ன கொன்னு புதைக்கிறேன் பாரு...
ரியா : நீ என்ன தொட்ட கொஞ்ச நேரத்துலையே நீ இந்த பதவில இருக்க மாட்ட.... எப்டின்னு பாக்குறியா... அவன் சொன்னத செய்வான் டா... இங்க நடக்குறது அங்க தெரியாதுன்னு நெனைக்காத.... அவங்க அவங்க இடத்துக்கு போய்ர்க்கலாம்... ஆனா எனக்கு எதாவது ஆச்சுன்னு தெரிஞ்சா போதும் உன்ன போலீஸ் கமிஷ்னரே ஜெயில்ல தூக்கி போடுவான்.... அந்தளவுக்கு எனக்கு பக்கபலமா என் நண்பர்கள் இருக்காங்க டா...
தர்மன் : ம்.... உண்மை தான்.... அவன் வரக்கூடாது... அவனால வெறும் ஒரு நாள்ள எனக்கு கோடிக்கணக்கான லாஸ்.... விட்டா என் சாம்ராஜ்ஜியமே அழிஞ்சிருக்கும்.. இருந்தாலும்.... சொல்லு ... என்ன பன்றதுக்காக இங்க வந்தானுங்க.... என அருகிலிருந்து ஜாடியை ஓங்க....
ரியா : அவனுங்களே போய்ட்டானுங்க... இப்போ தெரிஞ்சிட்டு என்னையா பன்ன போற.... போயா அந்த பக்கம்....
தர்மன் : சொல்ரியா இல்லையா....
ரியா : சொல்ல முடியாது... அவன் வரலன்னாலும் உன் சாம்ராஜ்ஜியம் அழியும் டா... அந்த காத்தாடிய யாராலையுமே சரி பன்ன முடியாது....
தர்மன் : பன்னுவேன்.... பணம் சம்பாதிப்பேன்.... அதுக்கு எல்லாம் ரெடி ஆய்டுச்சு... என கூற....
இதை கேட்ட ரியா அதிர்ந்தது உண்மையே.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro