Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தந்திரம்


கோபத்தில் சித்து பத்திரிக்கையில் இருந்ததை படிக்க,  

"யுவராஜ்  வெட்ஸ்  அனன்யா  " என்று இருந்தது......

சித்து படிப்பதை கேட்ட  ராம், முருகன் உட்பட அனைவரின்  முகத்திலும்  அதிர்ச்சி பரவியது...... 

"இதெப்படி வந்துச்சு... நான் கரெக்டா தானே கொடுத்துட்டு வந்தேன்.... " என்று சொல்லிய முருகன் பத்திரிக்கையை  வாங்கி பார்க்க.....

அதில் யுவராஜின் அப்பா பெயர் அவனை பற்றிய அனைத்து விவரங்களும் சரியாக போடப்பட்டிருந்தது.....

"ஒரு வேளை நாம யுவராஜுக்கும் அனன்யாவுக்கும் தான் கல்யாணம்னு  பத்திரிக்கை ஆபிஸ்ல  நிச்சயம் முன்னாடி பேசிகிட்டு இருந்தோமே.... அதுனால தப்பா பிரிண்ட் போட்ருப்பாங்களோ..... " என ராம்  சொல்ல....

"இல்லையே அதுக்கு அப்புறமும் நான் போய் எழுதிக்கொடுத்துட்டு வந்தேனே... எப்படி மாறுச்சுனு தான் புரியல "  என முருகன் புலம்ப....

சித்துவோ குழப்பத்தில் ஆழ்ந்தான்...

"பிரிண்ட்டிங்கல  தான் ஏதாச்சும் மிஸ்டேக் வந்துருக்கும்.... சும்மா போட்டு குழப்பிக்காதீங்க.. "  என சித்துவின் அம்மா சீதா சொல்ல...  ராம், முருகனின் முகம் தெளிந்தது...

ஆனால்  சித்து, அனன்யாவின் முகம் தெளியவில்லை...

" அதுனால என்ன இன்விடேஷன ரிட்டர்ன் பண்ணிரலாம்... திரும்பவும் பிரிண்ட் பண்ண சொல்லுவோம்.....இந்த சின்ன ரீசனுக்குலாம் கல்யாணம் நின்றுமா என்ன??? " என முருகன் அனன்யாவை பார்த்தபடி கூற...

முருகனின் பேச்சில் கோபமுற்ற அனன்யா, வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல மீண்டும் சித்துவை பார்வையால் எரிக்க துவங்கினாள்.....

சித்து "ஐயோ முறைக்குறாளே.... இவரு வேற நேரம் காலம் புரியாம காலையிலேயே இவகிட்ட கோர்த்து விடுறாரு... " என உள்ளூர புலம்பிக்கொண்டான்.... 

சில மணி துளிகள்  சித்துவை  முறைக்கும் பணியை தொடர்ந்த அனன்யா வேகமாக தன் கைப்பையை எடுத்துக்கொண்டு  தனது ஸ்கூட்டியில் அலுவலகம் சென்றுவிட்டாள்...

சித்துவும்  கிளம்ப எத்தனிக்கும் போது, தேன்மொழி "எனக்கு என்னவோ உறுத்தலாவே இருக்குங்க...  " என சொல்ல....

சித்து கிளம்பும் நேரத்தை தாமதப்படுத்தினான்.....

"ஏன் தேனு அப்படி சொல்லுற??? " என சித்துவின் அம்மா சீதா கேட்க...

"அனு கல்யாண பேச்சு எடுத்ததுல இருந்து ஒரே தடங்கல் தான்... முதல யுவராஜ்கூட நிச்சயம் ஏற்பாடு பண்ணோம்..... அதுவும் நின்றுருச்சு.... அப்புறம் சித்துவோட நிச்சயம் ஆச்சு.... எங்கேஜ்மெண்ட் அப்போ போட்ட ரிங்கையும் அனு கழட்டி எறிஞ்சுட்டா...... அவ என்னன்னா கல்யாணமே வேணாம்னு சொல்லுறா..... ஆனா நீங்க எல்லாரும் அவளுக்கு விருப்பம் இல்லாமலே கல்யாணத்த முடிவு பண்ணி, நடத்துரலயே குறியா இருக்கீங்க... அதான் எனக்கு ஒரே கவலையா இருக்கு...  நாம ஜாதகம், ஜோசியம்னு எதையுமே பாக்கல... " என தேனு தன் மன ஆதங்கத்தை வெளியில் கொட்ட.....

"அவ சின்ன பொண்ணு தேனு.....அவ  அப்படி தான் சொல்லுவா... நாம தான் அவளுக்கு எது நல்லதுன்னு பாத்து பண்ணனும்.. " என முருகன் சொல்ல.....

"இருந்தாலும் எனக்கு ஏதோ கவலையா இருக்குங்க.... " என தேன்மொழி தன் மனகவலையை வெளிக்கொணர.....

"சரிம்மா சொல்லு... என்ன பண்ணலாம்" என ராம் கேட்க....

"அண்ணா... ஜோசியம் பாக்கலாம் அண்ணா... ஏதாச்சும் தோஷம் இருந்தா கூட இப்படி நடக்கும்... "  என தேன்மொழி கூற..

"ஆமாங்க... நாம ஜாதகம் எதுவும் பாக்காம பண்றதுனால தான் தடங்கலா வருதோன்னு தோணுது.... " என சீதாவும் கூற...

"சரி... வர சண்டே ஜோசியர வர வச்சு பாத்துருவோம்..." என முருகன்  சொல்ல..  அனைவரும் ஆமோதிப்பதாய் தலையசைத்தனர்...

சித்து மீண்டும் கிளம்ப முற்படும் போது, வாசலில் ஒரு கார் வந்து நின்றது..

யாரென பார்க்க அதிலிருந்து யுவராஜ் இறங்கிவந்தான்...

வந்தவன் சித்தார்த்தை பார்த்துவிட்டு நேராக முருகனிடம் சென்றான்....

"சொல்லுங்க அங்கிள்... எதுக்கு என்னையும், அப்பாவையும் வர சொன்னீங்க.... அப்பா ஊர்ல இல்லை அங்கிள்... அதான் என்னை பாத்துட்டு போக சொன்னாரு..... " என யுவி முருகனிடம் சொல்ல...

"ஒன்னும் இல்லை... யுவி....எங்கேஜ்மெண்ட் அன்னைக்கு  உன்னையும் உன் அப்பாவையும் நாங்க கூப்பிட்டு வச்சு அசிங்கம் படுத்தின மாதிரி ஆகிடுச்சு... உன்னோட அப்பாவும் கோச்சிக்கிட்டாரு...நீயும், சித்துவும் ஒழுங்கா பேசிக்கிறதில்ல...  நீயும் முன்னாடி மாதிரி இங்க வர்ரதில்லை... அதான்பா  உன்கிட்டயும், உன் அப்பாகிட்டயும் மன்னிப்பு கேக்கலாமேன்னு இங்க கூப்பிட்டேன்... நானே உங்க வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்ருக்கணும்.... ஆனா,......எங்க குடும்பத்தால உனக்கும், உங்க அப்பாவுக்கும் ஏற்பட்ட அவமானம்.... இதுல யார்மேலயும் தப்பு சொல்லி நான் பிரச்சனையா மேலும் வளர்க்க விரும்பல.... எல்லாத்துக்கும் சேத்து மன்னிச்சுடுப்பா... உங்க அப்பா வாசன்கிட்டயும் கேட்டேன்னு சொல்லு.." என முருகன் கை கூப்ப.....

முருகனின் கையை தனது இருகைகளாலும் பற்றி,  "அய்யோ அங்கிள்.... நீங்க பெரியவங்க.. என்னை போய்... " என பேசிய யுவராஜின் வார்த்தைகள் உணர்ச்சி மிகுதியால்  முழுமை பெறவில்லை....

முருகனை தொடர்ந்து ராம், சீதா, தேன்மொழி என அனைவரும் "மன்னிச்சுரு யுவி " என மாறி மாறி சொல்ல... யுவிக்கு சங்கடமாகிப்போனது...

"ஐயோ என்னய சங்கடப்படுத்தாதீங்க.... நான் அப்பாகிட்ட சொல்லுறேன்... அப்பா கண்டிப்பா புரிஞ்சுப்பார்.... "  என யுவி சொல்ல... அனைவரும் புரிந்தபடி, யுவியை பார்த்து மென்னகைத்தனர்...

இதையனைத்தையும்  பொருட்காட்சியில் நின்று வேடிக்கை பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்... சித்தார்த்....

முருகன் யுவியிடம் "நீ  தான் கிருஷ்ணா, அனுவோட கல்யாணத்துல எல்லா வேலையும் செய்யணும்..... " என  சொல்ல....

யுவியின் முகத்தை இருள் சூழ்ந்தது....

கிருஷ்ணா யுவியிடம் வந்து "யுவி பாரு என்னோட வெட்டிங் இன்விடேஷன் " என காட்ட....

யுவியின் முகத்தை சூழ்ந்த இருள் தற்காலிகமாய் விலகியது.....  சிறு புன்னைகையுடன் அதை வாங்கிய யுவி "ரொம்ப நல்லா இருக்கு கிருஷ்ணா " என சொல்ல கிருஷ்ணா மகிழ்ச்சி கொண்டான்......

அதே நேரத்தில் மேஜையின் மீது இருந்த அனன்யாவின் கல்யாண பத்திரிகை யுவியின் கண்ணில் பட, அதை எடுத்து அவன் பார்க்க, அதில் "யுவராஜ் வெட்ஸ் அனன்யா " என்றிருக்க  எல்லையில்லா இன்பம் அவன் நெஞ்சை சூழ, மெல்லிசை ஒன்று பின்னணியில் ஓடுவதாய் அவனுக்கு தோன்றியது...... யுவியின்  கண்கள் தொடங்கி முகம் முழுதும் ஆனந்தம் அப்பிக்கொண்டது...

அனிச்சையாய்  யுவியின் கைகள், "யுவராஜ் வெட்ஸ் அனன்யா " என்ற வாக்கியத்தை வருட....

"யுவி "என்ற முருகனின் அழைப்பில் அவன் உலகில் இருந்து வெளியில் வந்தான்...

"அது அனுவோட கல்யாண பத்திரிக்கை, சித்துவுக்கு பதிலா உன்னோட பேர தப்பா பிரிண்ட் பண்ணிட்டாங்க.... " என முருகன் சொல்ல

யுவியின் கண்ணில் யாருமறியா ஏமாற்றம் நொடியில் தோன்றி மறைந்தது......

யுவியின் பிரிவால் வாடிய சித்தார்த் அதற்கு மேல் பொறுக்க இயலாமல்,  "யுவி " என அழைக்க, யுவி சித்துவை நோக்கினான்....

"சாரி யுவி.... நீயும் தப்பு பண்ண.... நான் பண்ணதும் தப்பு தான்... என்ன இருந்தாலும் நான் உன்ன அடிச்சருக்க கூடாது.... சாரி மச்சி... " என சித்து யுவியை  கட்டிக்கொள்ள.....

சித்துவின் அணைப்பில் இருந்த யுவி, கையில் இருந்த கல்யாண பத்திரிகையை ஒரு கையில் பிடித்தபடியே அதையே பார்த்து  சிரித்தபடி  நிற்க....

"சாரி மச்சி....  உன்கிட்ட பேசாம, பழகாம என்னால இருக்க முடியலடா  " என மீண்டும் சித்து சொல்ல, சித்துவின் பேச்சில் உணர்வுபெற்ற யுவியின் கைகள் சித்துவை அணைத்துக்கொண்டன ......

"விடு மச்சி... பாஸ்ட் இஸ் பாஸ்ட்....  என்னாலையும் உன்கிட்ட பேசாம இருக்க முடியலடா " என யுவி சித்துவை அணைத்தபடியே சொல்ல, சித்துவின் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வெளியேற, சித்துவின் யுவியின் மீதான அணைப்பை அழுத்தினான்..

யுவி -சித்துவின் பாசப்பிணைப்பை  கண்ட, தேன்மொழி, சீதை, வாணியின் கண்களில் ஆனந்தத்தில் நீர் தேங்கி நின்றது....

"டேய் போதும்டா....முடியல....  உங்க பிரண்ட்ஷிப் பாசத்தை ஜூஸா ஊத்துறீங்க ... உங்களால அங்க பாரு அம்மா, அத்தை, என் வாணி டார்லிங் கண்ணுல இருந்து டாம் ஓபன் ஆகி  எப்படி ஓடுது பாரு " என கிருஷ்ணா அவ்விருவரையும் கலாய்க்க....

சித்துவும், யுவியும் விலகினர்....

சித்து, அனைவரையும் பார்த்து புன்னகைக்க, யுவியோ யாரும் அறியாமல் கையில் இருந்த கல்யாண பத்திரிக்கையை தனது ப்ளேஸிரில் ஒளித்து  பத்திரபடுத்திகொண்டான்.....

"ரெண்டு பேரும் இப்படியே இருக்கனும்... என் கண்ணே பட்டரும் போல " என சொல்லிய  சீதா யுவி மற்றும் சித்துவுக்கு நெட்டிமுறித்தார்....

"நீ தான்பா கிருஷ்ணா, அனு கல்யாணத்துல எல்லா வேலையும் முன்னாடி இருந்து பாக்கணும் " என முருகன் யுவியிடம் சொல்ல....

"கண்டிப்பா அங்கிள்...  நான்  முன்னாடி இல்லாம எப்படி கல்யாணம் நடக்கும் " என யுவி அழுத்தி சொல்லி வன்மம் மிகுந்த மர்ம புன்னகை ஒன்றை உதிர்த்தான்....

.
.
.

அனைவரிடமும் விடைபெற்ற யுவி, காரில் ஏறி அமர்ந்து பயணமானான்.... பயணத்தின் போது ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தி, ப்ளேசரில் மறைத்து வைத்த பத்திரிகையை கையிலெடுத்து  மீண்டும் அதை படித்தான்...

        "யுவராஜ்  வெட்ஸ் அனன்யா " என்ற வாக்கியத்தை ஒரு முறை படித்து சிரித்தவன், அந்த எழுத்துக்களை  கைகளால் மென்மையாய் வருடி,  அதன் மேலே அழுத்தம் மிகுந்த முத்தமொன்றை பதித்தான்....

" யுவராஜ் வெட்ஸ் அனன்யா...ஆமா.. யுவராஜ் வெட்ஸ் அனன்யா தான்.... இந்த இன்விடேஷன்ல இருக்குறது தான் நிஜம்.....  அனன்யா இந்த யுவராஜ்க்கு தான்... என் டோரா எனக்கு தான்... எனக்கு மட்டும் தான்....  டோரா சித்துக்கு இல்ல... யுவிக்கு சொந்தமானவ.... " என காதல் வெறிபிடித்தவன் போல,சொன்னதையே திரும்ப சொல்லி,  பத்திரிகையை பார்த்து புலம்பிய யுவி,  ஒரு சூட்சம தந்திர  புன்னைகை உதிர்த்தான்.....

"ம்..... முருகன் அங்கிள் என்ன சொன்னாரு... டோரா கல்யாணத்துக்கு எல்லா வேலையும் நான் செய்யணும்னு தானே.... ஆமா எல்லா வேலையும் நான் தான் செய்ய போறேன்... ஏன்னா இந்த கல்யாணம் இந்த யுவராஜுக்கும், என் செல்லக்குட்டி  அனன்யாவுக்கும் நடக்கப்போற கல்யாணம்.... நான் வேலை செய்யாம யாரு வேலை செய்வா?????...."  என  வாய்விட்டு சொன்ன யுவி,  வண்டியின் கியரை அழுத்தி, சூட்சம புன்னைகையை  முகத்தில்  ஏந்தியவண்ணம்  புறப்பட்டான், அலுவகத்திற்கு....

.
.

இரு தினங்களுக்கு பின்,

ஜோசியர் அனன்யா மற்றும் சித்தார்த்தின் ஜாதகத்தை விரலை நீட்டியும், மடக்கியும்  ஆராய்ந்தபடி கணிக்க...

இரு குடும்பங்களும் அவரின் பதிலை ஆவலாய் எதிர்நோக்கி இருந்தனர்....

"பத்து பொருத்துததுல ஏழு பொருத்தம் பொருந்தி வருது.... ஆனா ரெண்டு மாசத்துக்குள்ள இந்த கல்யாணம் நடக்கலைன்னா எப்பவுமே இந்த கல்யாணம் நடக்காது... " என சொல்ல அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...



"அதெல்லாம் பிக்ஸ் பண்ண டேட்ல  கண்டிப்பா  கல்யாணம் நடக்கும் " என முருகன் சொல்ல....

அனன்யாவின் முகத்தில் ஆத்திரம் தெள்ளதெளிவாய் வெளிப்பட்டது....  அனன்யா சித்துவை முறைக்க அவனோ மேலே பார்ப்பது போல் நடித்துக்கொண்டிருந்தான்...

"நடந்தா சந்தோசம் தான் " என ஜோசியர் கூறினார்.....

"ஏதாச்சும் தோஷம் இருக்கா ஜோசியரே....??? " என தேன்மொழி கேட்க...

"ஒரு தோஷமும் இல்லம்மா ... உங்க குலதெய்வத்தை வேண்டிக்கோங்க... எல்லாம் நல்லதாவே நடக்கும் " என சொல்லிய ஜோசியர் விடை பெற்றுக்கொண்டார்..

.

.
.

நாட்கள்  நகர்ந்துக்கொண்டிருந்தன.....


அனன்யா திருமணத்தை நிறுத்த பல திட்டங்கள் தீட்டியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது... நாட்கள் நகர்ந்தாலும் அனன்யாவின் முடிவோ "இப்போதைக்கு திருமணம் வேண்டாம்" என்பது மட்டுமே....

சித்துவோ, அனன்யாவின் முடிவை மாற்ற முயற்சிக்க, அனுவோ "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் " என்பது போல் தன் முடிவை கடுகளவும் மறுபரிசீலனை செய்ய அவள் விரும்பவில்லை....

இதற்கிடையில் யுவியோ சூட்சம தந்திரங்களை செயல்படுத்த துவங்கினான்....

சித்துவின்  வீட்டிற்கு யுவி அடிக்கடி வரத்துவங்கினான்... அனன்யாவிடம் பேசுவதற்கு முயற்சித்தான்.... அவளிடம் பேசுவதற்கு தானே வாய்ப்புகளை உருவாக்கி கொண்டான்....

யுவியின் முயற்சியில் அனன்யா எரிச்சலுற்றாலும், அவன் தொடர் தொல்லை முயற்சியால் அவனிடம் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல்  பேசத்துவங்கிருந்தாள்....

யுவியின் உள்நோக்கத்தை அறியா சித்துவோ, எப்படியோ இந்தியா -பாகிஸ்தான் போல அடிச்சுகிட்ட யுவியும், அனன்யாவும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என எண்ணி நிம்மதி கொண்டான்....

ஒரு நாள் கையில் ஒரு புத்தகத்தை கையில் ஏந்திய வண்ணம், கண்களில் மகிழ்ச்சியுடன்  அவன் வீட்டை அடைந்தான் சித்தார்த்.....

சித்து உற்சாக குரலில் "அனு " என அனைவருக்கும் கேட்கும்படி அழைக்க அனு மாடிப்படியில் இருந்து கீழிருக்கும் சித்துவை நோக்கினாள்...

யுவியும் அப்போதே வீட்டிற்குள் நுழைய சித்துவின் கையில் இருந்த புத்தகத்தை பார்த்த யுவியின் கண்கள் சிவக்க, வயிறு தீயின்றி பற்றிக்கொண்டது...... தீயின் தாக்கத்தால் அவன் இருகாதுகளிலும் நிறமற்ற  வெப்பபுகை வெளிப்பட்டது....


..............................

Hi friends....

Very very sorry for late update.... college, work nu suthama samalika mudila...Sunday kooda leave kidaikurathu ippo rare agiruchu.....Enakum sekram type panni update panna dan aasai..Time kidaikamatenguthu my dear readers😔...

Intha story  start pannum pothu vetiya dan irunthen....Athunala oralavu regular a update panen...But ippo niraiya  commitments...Tight schedule... Mudinja alavu next part poda try panren...

Catch u later on next update makkale 👋👋👋👋👋


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro