Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முள்ளும் மலரும் 18

தங்களது கடந்த காலத்தில் மூழ்கியிருந்தவனை மீராவின் புலம்பல் கலைத்தது.. தூக்கத்தில் எதையோ நினைத்து பயந்து அழுது கொண்டிருந்தாள்..

" மீரா அழாத.. எழுந்திரு.. உனக்கொன்னும் ஆகல.. " என்று அவள் கன்னத்தை தட்டியவாரே எழுப்பினான். கண்களைத் திறந்து கிருஷைப் பார்த்தவள் இன்னும் அழ ஆரம்பிக்க கிருஷிற்குத் தான் அவளை சமாதானப் படுத்த போதும் போதும் என்றானது.

அவளைத் தன்தோள் ஆதரவாக சாய்த்தவன் " ப்ளீஸ் மீரா நான் சொல்றத மட்டும் கேளு.. சரியா.. " என்றவனிடம் " ஐ அம் சாரி கிருஷ்.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல என்னை மன்னிப்பியா.. நான் ஒரு முட்டாள்டா.. எல்லாத்தையும் தப்பாவே தான் புரிஞ்சிக்குறேன்.. சாரி " என அழுதுகொண்டே கூறினாள்.

அவள் மன்னிப்பு மனதை உலுக்கினாலும் மன்னிக்க அவனால் இயலவில்லை.. அவனை ஒரு கொலைகாரனாக நினைக்கும் அளவிற்கு துணிந்த அவளை அவன் எவ்வாறு மன்னிப்பான்.  அதும்வெறும் வாய்வார்த்தைக்கு கூறிய வார்த்தைக்காக.. இருப்பினும் கவலையில் இருக்கும் அவளை இன்னும் வருத்த வேண்டாம் என எண்ணி " மன்னிச்சிட்டேன்.. அழாத மீரா. வா வெளிய போலாம் " என அவளை எழுந்து நிற்க வைத்தான்.

அவன் தன்னை மன்னிக்கவில்லை என்பதை உணர்ந்தவள் அப்படியே நிற்க, அவளைக் கண்டுகொள்ளாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

தயங்கியபடியே வெளியே வந்த மீரா கிருஷைத் தேட, அதற்குள் ராம் அவளருகே வந்து " அக்கா வீட்டுக்குப் போலாமா .. இங்க இருக்கப் பிடிக்கலக்கா.. " என்று சோகமாக கேட்க அப்போதுதான் ராமின் முகத்தைப் பார்த்தாள். அவனது முகமும் கலையிழந்து இருந்தது.

வீட்டிற்கு சென்று கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தவள்
" சரி வாடா " என்று அவளைக் கீழே அழைத்துச் சென்றாள்.

அதே நேரத்தில் பூஜை முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
மீரா வருவதைப் பார்த்ததும் அவளிடம் வந்த கீதா கையில் ஒரு தாம்பூலத்தட்டைத் தந்து விட்டு,தயக்கமாக " மீரா கிருஷ் உங்கிட்ட எல்லாத்தையும் பேசிட்டானு நினைக்கிறேன்.. இந்நேரம் உங்க அப்பா அம்மா இருந்திருந்தாக் கூட இதத்தான் பண்ணிருப்பாங்க.. ப்ளீஷ் மீரா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுமா.. நீயும் எத்தனை நாள்தான் தனியா தம்பி தங்கையோட கஷ்டப் படுவ.. ராமையும் நிலாவையும் நாங்க பார்த்துக்கறோம்டா.. சரினு சொல்லு " என்று கூறினார்.

அவள் வாயைத் திறந்து பதில்
சொல்லுமுன்பே " யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க. எனக்கு இதுல விருப்பம் இல்ல " என கத்திவிட்டு தனதறைக்குள் புகுந்து கொண்டான் கிருஷ்.

மீராவும் வேண்டாமென்று தான் சொல்ல நினைத்தாள்.. ஆனால் அவளுக்கு முன் அவன் கூறியது மிகவும் வேதனை அளித்தது.
கிருஷின் நடவடிக்கை கீதாவிற்கும் அதி்ர்ச்சியை அளித்தது. மீராவிற்கு எவ்வாறு பதிலளிப்பது என தயங்கிய கீதாவிடம் " ஆன்ட்டி விடுங்க.. எதும் வொர்ரி பண்ணிக்காதீங்க.நாங்க வரோம் " என்று ராமின் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.. அவர்கள் வெளியே செல்வதைப் பார்த்ததும் உதயும் நிலாவும் அவர்கள் பின்னே சென்றனர்..

வாசல்வரை சென்ற மீராவினை கைப்பற்றி தடுத்தாள் மேகா.. அவளைப் பார்த்ததும் கோபம் வந்தாலும் " என்ன வேணும் மேகா " என்று பொறுமையாக கேட்டாள்..

ராமுவும் நிலாவும் அருகில் இருப்பதைப் பார்த்ததும் " மீரா கொஞ்சம் அங்கிட்டு வரியா.. ஒரே நிமிசம் ப்ளீஸ் " என்று கெஞ்ச, மீராவும் சென்றாள்..

அங்கே சென்றதும் மீராவின் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு " மீரா என்னை மன்னிச்சிடு.. அன்னைக்கு உங்கிட்ட ரொம்ப ரூடா நடந்திட்டேன்.. உன்னால தான் கிருஷ் எங்கள விட்டு வெளிநாடு போயிட்டானு ஆத்திரத்துல உன்மேல கோபத்தைக் காட்டிட்டேன்.. காலேஜ்ல கூட நீ கிருஷ ஏத்துக்காம ப்ரண்ட்னு சொன்னப்ப அவன் ரொம்ப ப்பீல் பண்ணுவான்.. அதான் என்னால உங்கோட கடைசிவரை ப்ரண்ட்லியாவே இருக்க முடியல.. இப்போ அதை நினைச்சா கில்ட்டியா இருக்கு..  சாரி மீரா " என்று உண்மையான வருத்தத்துடன் கூறவும்,

" சிஸ்டர் விடுங்க.. நானும் உங்கமேல கோபமா தான் இருந்தேன்.. அதனால தான் ரெண்டுபேரும் க்ளோஸ் ஆக முடியல.. நான் உங்களை மன்னிச்சிட்டேன்.. நான் கிருஷுக்கு கொடுத்த கஷ்டத்துக்கு இதெலாம் ஒண்ணுமே இல்ல.. " என மீரா மேகாவிற்கு ஆறுதல் கூறியவாரே ' இனியும் அவரப்பட்டு யாருடைய கேரக்டரையும் ஜட்ஜ் பண்ணக் கூடாது என மனதுக்குள் முடிவெடுத்தாள்.

மேகாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டு " நீ கிருஷோட காதல புரிஞ்சிட்டல.. எனக்கு இப்பதான் ஹேப்பியா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா ஒன்னு சேரனும்.. பாவம் கிருஷ்.. "எனக் கூறிக் கொண்டே மீராவைப் பார்க்கும்போது தான் தெரிந்தது அவள் முறைக்கிறாள் என்று..

" மீரா கோபப்படாத.. முன்னமாறி உன்னை நான் கட்டாயப்படுத்தல..நீயே பொறுமையா யோசி.. கிருஷ விட உனக்கு  பெட்டர் பார்ட்னர் கிடைப்பாங்களானு யோசிச்சுப்பாரு..
நான் வரேன் பாய் " என்று கூறிச் சென்றாள் மேகா.

வீட்டிற்கு வந்தும் கிருஷின் நிராகரிப்பு, மேகாவின் பேச்சு.. என மீரா சிந்தனையில் ஆழ்ந்துவிட ராமினைக் கவனிக்கத் தவறிவிட்டாள்.

அங்கே கிருஷினை மொத்தக் குடும்பத்தாரும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

" மம்மி இதுக்குமேலத் திட்டுனா என் காது பஞ்சராயிடும். போதும் " என்று தனது காதைப் பொத்திக் கொண்டு கூறிய கிருஷின் தலையில் கொட்டிய கீதா " ஏன்டா எவ்ளோ அழகா நான் அவளுக்கு புரிய வெச்சி்ட்டு இருந்தேன்.. அவ ஓகே சொல்ற நேரத்தில இப்படி பண்ணிட்டியேடா.." என்று திட்ட,

" மம்மி உன் மருமகளப் பத்தி உனக்கு முழுசா தெரியல.. அவளுக்கு இன்னும் டைம் வேணும்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் யோசிக்கட்டும்.. அதுக்குத் தான் இந்த வெட்டி வீராப்பு ஆக்டிங்லாம்..அவளே மனசுமாறி நம்பகிட்ட வருவா.. அதுவரை வெயிட் பண்ணு.. " என்று அவர்களை சமாளித்தான் கிருஷ்..

மீரா மனம் இனியாவது கரையுமா?
ராமின் சோகத்திற்கான காரணம் யார்? என்பதை அடுத்த பதிவிலே காண்போம்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro