Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முள்ளும் மலரும் 14

மறுநாள் காலை கல்லூரி வளாகத்தினுள் அலைபேசியில் மீரா யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள். " டேய் ஒன் வீக்கா.. என்னால அவ்ளோ நோட்ஸ்லா எழுத முடியாது. நீ அங்க புல் கட்டு கட்டுவ.. நான் இங்க உனக்கு கை வலிக்க எழுதனுமா.. "
.
.
.
" சரி சரி அழுகாத எழுதரேன்..
.
.
.
சரிடா.. யார்டயும் சண்டை போடல போதுமா.. நீ சீக்கிரமா வாடா.பாய்" என்று பேசிவிட்டு திரும்பும்போதே கையில் யாரோ முகத்திற்கு நேராக ஒற்றை வெள்ளை ரோஜாவை நீட்டினார்கள்..

" ஹாய் மீரா. குட் மார்னிங்.. என்னை காலங்காத்தல யாரயோ போன்ல வறுத்தெடுத்துட்டு இருந்த போல.. யாரு அந்த பாடி கார்ட் உதயாவா.. நீ பேசினது வெச்சுப் பார்க்கும்போது அவன் தொல்லை கொஞ்ச நாளைக்கு இல்ல போல" என்று குதுகளித்தான் நேற்று அவ்வளவு திட்டுகள் வாங்கிய கிருஷ்..

அவன் இன்றும் வருவான் என்பதை எதிர்பாராதவள் " கிருஷ் உங்கிட்ட பொறுமையா தான சொன்னேன்.. ஏன் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கிற " என்று தனது எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டு கூற,

" என்ன மீரா நீ.. இது வாழ்க்கை பிரச்சனை அவ்வளோ ஈசியால உன்னை விட முடியாது.  அந்தக் கஜினி முகமது மாறி தொடர்ந்து படை எடுத்துட்டே இருப்பேன் "என்றான் கூலாக..

" ச்சே நீயும் அந்தக் கேவலமான எடுத்துக்காட்டும்.. வரலாறு தெரியாதவன்லாம் எதுக்கு அதைப் பத்தி பேசனும் " என வாயில் முனுமுனுத்துக் கொண்டே நகர,

" ஓ உங்களுக்கு தெரியும்ல அதை சொல்ல வேண்டியது தான " என அவள் கைப்பிடித்துத் தடுக்க, அவனது கையை தட்டிவிட்டவள்
" மகமது ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் தோல்வி ஒன்னும் அடையல.. அவரால எவ்ளோ முடியுமோ அதை நல்லா சுருட்டிக்கிட்டு தா போனாரு.. கடைசியா இங்கையே டேராப் போட்டு தங்கிட்டு இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு போனாரு.. என்னைப் பொருத்தவரை அவர் 17 முறையும்  தோல்விலா அடையவே இல்ல. எல்லா டைமும் ஜெயிச்சிட்டு தான் போயிருக்காரு " என தனது கருத்தை வெளிப்படுத்த,

அதை ஆவென்று கேட்டுக் கொண்டிருந்தவன் " அப்போ நானும் ஒவ்வொரு தடவையும் உங்கோட பேசும்போது உம்மனசுல காதல் கொஞ்சம் கொஞ்சமா பூக்குதுனு சொல்ற.. அதேமாறி கடைசியா நீயும் என்னை லவ் பண்ணுவ அப்படி தான மீரா.. இது போதும் எனக்கு " என நிம்மதிப் பெருமூச்சை விட்டவன் தற்போது தான் தனது கையிலுள்ள பூவை பார்த்தான்.

" மீரா போகாத.  இங்கப் பாரேன்.. உனக்காக நான் என்னைக் கொண்டு வந்திருக்கேன் பாரேன் " என்று அவள் முன் வெள்ளை நிற ரோஜாவை நீட்டினான்..

இவனிடம் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக எதாவது சொல்லி மடக்கி விடுவான் என்ற பயத்தில் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்.

கிருஷும் விடாது துரத்திக்கொண்டே வந்தான்.  " ஏய் உனக்கு பொறுமையா சொன்னா புரியாதுனு நினைக்கிறேன்.. எல்லார் முன்னாடியும் கத்தி சொன்னாத புத்தி வருமா.. இல்ல உங்க வீட்ல சொல்லனுமா " என்று கோபமாக அவள் கேட்கவும்,

அவள் கூறியதைக் கேட்டவன் " மீரா ப்ளீஸ் எங்க வீட்ல மட்டும் சொல்லிடாத.. எங்க அப்பானா எனக்கு ரொம்ப பயம்.  அப்ரோ காலேஜ்கே அனுப்ப மாட்டாங்க.. ப்ளீஸ் " என கெஞ்ச ஆரம்பித்தான்.

அவள் கெஞ்சலை உண்மையென நம்பியவள் " இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. பீ கேர்புல் " என கோபமாகக் கூறிச் சென்றாள்.
கிருஷும் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்..

இவர்களது சம்பாசனையை ஒரு ஜோடிக் கண்கள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது..

கிருஷும் மகிழ்ச்சியாக தனது நண்பர்களிடம் இதைப் பகிர்ந்து கொண்டிருந்தான்.  " டேய் மச்சான் போற வேகத்தைப் பார்த்தா மீராவையும் நம்ம கேங்ல சேர வெச்சிருவ போல.. " என சோகமாக கேட்ட மகேஷிடம்,

" ஏன்டா அவ வந்தா உனக்கென்னடா பிரச்சினை " என கிருஷ் அவனிடம் கேட்க,

" டேய் பொண்ணடா அவ.. அவ அன்னைக்கு பேசுன பேச்சுல என் காது ஜவ்வே கிழிஞ்சிருக்கும்.. அந்தப் பஜாரிய போய் நீ " என ஆரவ் கிருஷைப் பார்த்துக் கூற, ஒரு அரையையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

அந்த வலியிலிருந்து மீண்டவன் எரிமலையாய் எரிந்து கொண்டிருந்த கிருஷை சமாதானம் செய்யும் பொருட்டு  " மச்சான் நான் சொன்னத தப்பா புரிஞ்சிட்டடா.. நாங்க சும்மா ரேக் பண்ணதுக்கே அந்தக் குதி குதிச்சவ நீ புரோபோஸ் பண்ணி தொல்லைக் கொடுத்தும் பொறுமையா போரானா என்ன அர்த்தம்.. மனசுக்குள்ள காதல் இல்லாமலா " என மெதுவாக சொன்னான்.

" ஆமான்டா எனக்கும் அப்படி தான் தோனுது.. அவளே சீக்கிரமா ஒத்துக்குவா பாரேன் " என்று மகேஷும் பரிந்துபேச,

அவர்கள் கூற்றில் மலர்ந்தவன் " அப்படியா சொல்றீங்க..
சாரி கோபத்துல அடிச்சிட்டேன் வாங்க இதுக்காக  உங்களுக்கு  டீரிட் தரேன் " என அவர்களை  வலுக்கட்டாயமாக கேண்டினுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் பேசுவதை  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மேகா ஒரு முடிவினை எடுத்தாள் .

மாலை தனது விடுதிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த மீராவை வழிமறைத்தாள் மேகா. 

மேகாவைப் பார்த்தும் " ஹாய் சிஸ்டர் " என்றாள். அதைக் கண்டுகொள்ளாமல் 
"  மீரா உங்கிட்ட சுத்தி வளைக்காம நேராவே கேட்கிறேன்.. நீயேன் கிருஷ் உங்கிட்ட லவ் சொல்லியும் அதை ஏத்துக்காம அவனை அவாய்ட் பண்ற.. அவனுக்கு என்ன குரைச்சல் " என்றாள் கோபமாக..

" இதென்ன கொடுமையா இருக்கு .. எனக்கு பிடிக்கலைனா நான் என்ன பண்ண முடியும் " என கடுப்புடன் கூறியவளிடம்,

"ரொம்ப பண்ணாத..நீ ஒன்னும் அவ்ளோ அழகொன்னும் கிடையாது.. கலர்கூட மாநிறம் தான்.. ஆனா உன்னை போயி கிருஷ் லவ் பண்றான் பாரு அதக்கூட நான் தாங்கிக்குவேன்.. ஆனா அழகா உன்னைவி்டக் கலரா பணக்காரனா இருக்குற கிருஷ நீ வேண்டானு சொன்ன பாரு அதைத் தாண்டி என்னால தாங்க முடியல .. சீன் போடாம ஒத்துக்கோ " என்றாள் மேகா..

அவள் கூறியதில் எரிச்சலை உணர்ந்தவள்
" தாங்க முடிலைனா கிணத்துல விழுந்திடு. என்னை வந்து தொல்லை பண்ணாத.. " என்று அவள் முகத்துக்கு நேராக கூறியவள் " அவன் பிரண்ட்ஷும் அவனை மாறி லூசு தான் போல " என எண்ணிக் கொண்டாள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என எண்ணியவள் தனக்கே ஆபத்தாய் வரும் என்பதை உணராமல் ஒரு முடிவினை எடுத்தாள்.

அப்படி  மீரா என்ன முடிவு எடுத்திருப்பாள் ?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro