♦️22♦️
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
ஆர்த்தியின் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் நெருங்கிய உறவில் இருந்து வயதில் மூத்தவர்கள் முதலில் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர ஆரம்பிக்க, இந்தப் பக்கம் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி வழியாகவும் உடனே கமிட்டி உறுப்பினர்களை நேரில் வந்து சந்திக்குமாறு பரத்திற்கு உத்திரவு வந்தது.
எந்த விளக்கமும் இல்லாமல் அதிகாரப்பூர்வமாக வந்திருந்த கடிதத்தை அலட்சியப்படுத்த முடியாமல் தயக்கத்துடன் அம்மாவிடமும், தங்கையிடமும் அவன் விவரம் தெரிவிக்க இருவருமே மிகவும் வருத்தம் கொண்டார்கள்.
"என்னடா இப்பொழுது போய் கிளம்ப வேண்டும் என்கிறாய்? உன் அப்பாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான், அவருக்கு பிடிக்காத மாதிரியே எல்லாம் வந்து அமைந்து தொலைகிறதே!" என்று கோதை புலம்பினார்.
ஆர்த்தியோ, "நீயெல்லாம் ஒரு அண்ணனாடா? என்னவோ ஊரிலிருந்து வந்தவுடன் வாய் கிழிய பொறுப்பேற்றுக் கொள்வது போல் வெற்று சீனெல்லாம் போட்டாய். இப்பொழுது உறவினர்கள் வரும் நேரம் உதவிக்கு இல்லாமல் கிளம்புகிறேன் என்கிறாயே!" என்று குமைந்தாள்.
"நான் என்னடி செய்யட்டும்? எந்த விவரமும் இல்லாமல் நேரில் வந்து சந்திக்கவும் என மட்டும் வந்திருப்பதால் எதுவும் முக்கியமான விஷயமா என்னவென்று தெரியவில்லையே என்று எனக்கே ஏற்கனவே டென்ஷனாக இருக்கிறது!" என்றான் பரத் கவலையுடன்.
சகோதரனின் முகம் பார்த்து சற்றே மனம் இறங்கியவள், "சரி சரி... சீக்கிரம் சென்று வேலையை முடித்துவிட்டு வா. திருமண நேரத்தில் ஏதாவது தாமதமாக்கி அனைவருக்கும் தேவையில்லாத பதற்றத்தை கொடுத்து விடாதேடா!" என வாடிய முகத்துடன் அனுமதி அளித்தாள்.
"ம்... கண்டிப்பாக நான் அவர்களிடம் இங்கிருக்கும் சூழ்நிலையை விளக்கிப் போன வேகத்தில் திரும்பி வரப் பார்க்கிறேன்!" என்று மும்பை கிளம்பினான் பரத்.
பிசிசிஐ-ன் தலைமையகத்தில் அவனுடைய இரத்த மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான அத்தாட்சியாக மருத்துவ அறிக்கையின் முடிவு வந்திருப்பதாக பெரும் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டு அவன் தலையில் மிகப்பெரிய இடியை இறக்கினார்கள் பொறுப்பில் இருப்பவர்கள்.
அதைக் கேட்டு பதறியவன், தனக்கு அதுப்போன்ற பழக்கம் எதுவுமில்லை எனவும், தான் அவ்வாறான போதை மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை எனவும், இது ஏன் வேறொருவரின் அறிக்கையாக இருக்ககூடாது... பெயரோ, ஆள்மாறாட்டமோ நடந்திருக்கலாம் அல்லவா? என கேட்டு தன் தரப்பு நியாயத்தை அவர்களிடம் விளக்கி வாதிட்டான் பரத்.
அதில் சற்று குழப்பம் அடைந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துவிட்டு அதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி என் கூற்றை ஏற்று அவர்களின் முன்னிலையில் மீண்டும் என் உடலில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro