Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயவன் 1

ஆயிரம் பேர் கூடி இருக்கும் மண்டபத்தில் இவள் கத்தும் சத்தம் தனியாக கேட்டது..!!!

இவளின் கத்தலுக்கு காரணமானவனோ அவளையே இமைக்காது இல்லை, விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்...

"அம்மா என்னால இவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது மா..இருபத்திரண்டு வயசுலயே கல்யாணம் பண்ண தெரியுது ..இப்பவே ஒரு பொண்ணை லவ் பண்ணி அந்த பொண்ண ச்சி சொல்லவே வாய் கூசுது.. என்னலை முடியாது மா இவனை கல்யாணம் பண்ண!!.." என சத்தம் போட்டு பேசியவளை பார்த்தவன்

"அடியே ரொம்ப ஸீன் போடற...தாலியை கட்டிட்டு அப்பறம் இருக்கு டி உனக்கு...உன் இலை, தலை எல்லாத்தையும் உடைச்சு வைக்கற" என மனதில் அவளை அர்ச்சனை செய்தபடி அவன் இருக்க..

"நான் பாங்கிணாத்துல விழுந்து செத்து போனாலும் போவனே தவிர இவனை கல்யாணம் பண்ண முடியாது மா.. "

"நீ மட்டும் கிணாத்தில் விழுந்தா மொத்த தண்ணிலையும் பாயிசன் கலந்த மாதிரி டி குந்தாணி..யோ சீக்கரம் பேசி கல்யாணத்தை பண்ணுங்க டா எவ்ளோ நேரம் இவ பேசறது கேட்கறது...'

'இப்போ நீ ஒத்துக்காமா இருந்தன்னா   இந்த நிமிஷம் என்னை என்ன பண்ணுவனு தெரியாது. போ டி மணமேடையில் உட்காரு போ" என அவளின் தாய் கூற...

"அட்றா சக்கை அட்றா சக்கை செமையா பேசற அக்கா.. தாலிக் கட்டிட்டு வந்து உனக்கு உம்மாவே தர.."

என அவன் மனதில் நினைக்க...

"ஏன் மா ஏன் இப்படி பண்ற இது என்னோட வாழ்க்கை மா ... நீ என்கூட வந்து வாழ மாட்ட மா நான் தான் வாழனு பிளீஸ் மா.. இந்த ஒரே ஒரு முடிவை மட்டும் நான் எடுக்கற மா, என்னோட படிப்பை கூட நீயும் இங்க நிக்காறாரே, உன் சித்தப்பா இவரும் தான மா எடுத்திங்க பிளீஸ் மா என்னால உன் தம்பியைக் கல்யாணம் பண்ண முடியாது மா..." என கெஞ்ச

"ஜஸ்ட் பாஸ் மட்டும் ஆனா இதுக்கு பாரேன் எவ்ளோ ஸீன்னு.. மக்களே நம்பாதிங்க.. பொய் பொய்யா சொல்ற"

"இருபத்திரண்டு வயசுலயே இவனுக்கு கல்யாணம்.பொண்ணுன்னு கேட்குது.அதுவும் இருபத்தி மூணு வயசாகார என்னைய கல்யாணம் பண்ணனுமாம்.!! பொறுக்கி நாய்..." என அவள் வாயில் முணுமுணுக்க...'"

'இவ வேற அடிக்கடி இதை சொல்லியே வெறுப்பேத்தி விட்டுட்டு இருக்கா...இவ

30.12.97 பொறந்தா, நான் 2.1.98 ல பொறந்தேன் முழுசா நாலு கூட மூத்தவ இல்லை பேசறது பாரு..!" என மனதில் நினைத்து கொண்டு இருக்கவும்

"ஏய்ய இங்க பாரு டி என அவளின் தாய் பழனி கத்தவும் சரியாக இருந்தது..

"காது சவ்வு பிஞ்சுடும் போல இருக்கு மெல்லமா கத்துக்கா.." என காதை துடைத்து கொண்டவன் எதிரில் இருந்தவர்களை பார்க்க

கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு 'போ போயி உட்காரு...' எனஅவளின் தாய் கூற இதற்கு மேல் நம் பேச்சு செல்லாது என நினைத்தவள் எதுவும் பேசாமல் மணவரையில் அமர்ந்தாள்..

"ஐயோ அக்கா செம என் அக்கான்னு அடிக்கடி நிறுப்பிக்கற.." என தமைக்கையை மனதில் மெட்சியவன்... அவள் அவனின் அருகில் செல்லவும் 'வா டி என் செல்லக்குட்டி...பட்டுக்குட்டி... என் கண்ணுக்குட்டி மாமா பக்கத்தில் உரசி உட்கார்ந்துக்கோ"

என மனதில் நினைத்து அவளை ரசிக்கும் பார்வைப் பார்த்தான்....

அவனை எரித்துவிடும் பார்வை பார்த்துவிட்டு தலையை தாழ்த்தி அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.!!..

'

பட்டு பாவாடையில் மண மேடையில் உட்கார்ந்த முதல் ஆளு நீ தான் டி

என் செல்லம்...'" என அவன் நினைக்க.. அவளின் நினைவோ அவனை அர்ச்சனை செய்து கொண்டு இருந்தது

உன்னை மாதிரி ஒரு பொறிக்கியை கல்யாணம் பண்ணிக்க நான் என்ன முட்டாளா இப்போ நான் தோத்துட்டேன் ...கண்டிப்பா நான் ஜெயிச்சு காட்டுவேன் டா...உன் பொறிக்கி தன்னத்த கேவலமான உன் கிரிமினல் புத்தியை  நான் ஊரு உலகத்துக்கு காட்டி கண்டிப்பா உன்னை பழி வாங்கல என் பேர நான் மாத்தி வைச்சுக்கற...".என சவால் விட்டப்படி அமர்திருந்தாள்

என்ன அப்படி நடந்துச்சு  நம்ம ஹீரோயின் இப்படி சவால் விட காரணம் வாங்க அப்படியே பின்னாடி போயி பாக்கலாம்.. நம்ம ஹீரோ,ஹீரோயின் சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் ஒரு குட்டி  flashback....

^^^^^^^

நாங்க ரெண்டு பேரும் 90 கிட்ஸ்ங்க...

என் பொரிப்பா பொண்ணு தான் என் அக்கா படிக்கதவ என்ன ரொம்ப கோபம் வரும் என் அக்காக்கு 16 வயசுலயே கல்யாணம் பண்ணிட்டாங்க..அதான் இவ என் வயசு, என்ன 3 நாளைக்கு பெரியவள்..😏..

என் அப்பாக்கும், அம்மாவுக்கு, இரண்டாவது பையன் நான்.. 10 yeaers அப்பறம் நான் பொறந்தேன்..
ஐயோ இல்லை எனக்கு முன்னாடி ஒரு புளி மூட்டை பொறந்துச்சு அது இங்க தான் எங்கயோ சுத்திட்டு இருக்கும்.. என் பேரு அதே நானே சொன்ன நல்ல இருக்காதுல என் கிர்ஸ் சொல்லட்டும் அது வரைக்கும்  அந்த குந்தாணி யை பத்தி சொல்றேன்...

எங்கே அவ இங்க தான் இருப்பா. நான் எங்க இருப்பனோ அங்க தான் இருப்பாளே. ஹும்ம்ம் இதோ  அவ தான் அங்க குட்டியா இருக்காளே  வெள்ளை சட்டை , ப்ளூ பாவடை போட்டுட்டு இருக்காளே அவ பெரு தழையினி சாரி இழையினி... ரொம்ப திமிர் பிடிச்சவ எனக்கு இவளை பிடிக்காது சரியான கிறுக்கி..'

மகேஷ்.. மகேஷ் பூபதி... என இரண்டு முறை அழைத்துவிட்டார் அவனின் ஆசிரியர் தீபா..

இவங்க தான் என்னோட கிர்ஸ்  தீபா மிஸ்😍😍😍😍...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro