Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 44

"என்ன டி புருஷன் அடிபட்டு பெட்ல கிடைக்கிற கொஞ்சம் கூட அக்கறையில்லமா நீ பாட்டுக்கு ஜூஸ் குடிச்சுட்டு இருக்கறவ..." என ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த
இலையினியைக் கேட்க அவளோ அங்கு ஒருவன் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் பழச்சாறை அருந்துவதில் குறியாக இருந்தாள்.

அவளை முறைத்தவாறேப் படுக்கையிலிருந்து எழுந்து சாய்ந்து அமர்ந்தான்.... 

       
"அவன் எழுந்து அமர்ந்த நேரம் பார்த்து தீரன் உள்ளே வர அவனை பார்த்தவள் "தீரா ஜூஸ் குடிங்க ஆப்பிள் ஜூஸ் செமையா இருக்கு..."என அவனை அழைக்க அவனோ அவளை பார்த்து சிறுபுன்னகையுடன் "நீ குடி
மா..." என கூறிவிட்டு மகேஷ்யிடம் திரும்ப இழை தன் கோர்ட்டை எடுத்துக் கொண்டு வெளியில் புறப்பட்டாள்.

"சார் வர சொன்னீங்கலாம்..." என கேட்டவனிடம் "அது வந்து தீரன்..." என மகேஷ் ஆரம்பிக்க... தீரனே பேச்சை தொடர்ந்தான்.

"சார் அன்னிக்கே என்ன பத்தி சொன்னல, இன்னும் என்மேல உங்களுக்கு இருக்கற சந்தேகம் போகளையா..." என கேட்டவனிடம் சற்றே சிரிப்புடன்

"அதெல்லாம் ஒன்னும் இல்ல தீரன் நா அன்னிக்கு நீங்களும் அண்ணாவும் பேசும்போதே உங்களைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்.

உங்களோட பேச்சு  எதுல  இருந்து ஆரம்பிச்சுதுன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் பார்த்தப்ப என் அண்ணா ரத்த கரையோட நிற்கும்போது உங்கமேல எனக்கு அத்தனை கோபம் வந்துச்சு.  ஆனா நீங்களும் அண்ணாவும் பேசறதக் கேட்கவே என்னோட பொறுமையை இழுத்து பிடிச்சுக்கிட்டு இருந்தே.. என் அண்ணா உங்ககிட்ட பேசனதக் கேக்கும்  போதுதா எனக்கு எல்லாம் புரிஞ்சுது. உங்க மேலயும் எந்த தப்பும் இல்லை, என் அண்ணன் மேலயும் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன். எனி வேஸ்.. ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்த ஒரு கேஸ் இப்போ முடியப் போகுது.. இப்போதா  நிம்மதியா பீல் பண்ற.. அடுத்தடுத்து என்ன பண்ணனும்னு சொல்லிட்டேன்..  என் சிஷ்யன் அண்ட் என் சிஷ்யை பார்த்துக்குவாங்க.." (உங்க யாருக்கும் சிஷ்யன்&சிஷ்யை யாருன்னு தெரியாதுல இனிமே செமயா வருவாங்க பாரு..) எனக் கூறியவனின் கண்கள் ஏதோ முடிவு செய்து விட்டதைக் கூறியது.

"நான் பூபதியை அடிச்சு இருக்கக் கூடாது தான். பட் என் மச்சி நிலைமைக்கு அந்த போன் ஹேக்கர் தான் காரணம் அதான் பூபதின்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கோபம் வந்துருச்சு. முதல்ல பூபதி இல்லைன்னு தெளிவா இருந்த எனக்கு பூபதி சொல்லும் போது ஆத்திரம் கண்ணை மறச்சு இப்படி பண்ணிட்டேன்.." என தான் செய்த செயலுக்கு விளக்கம் கூற

"பரவால்ல தீரன்.. உங்க இடத்தில நான் இருந்தாலும் இது தான் பண்ணி இருப்பேன். ஆனா நீங்க ரொம்ப க்ரேட்..  உங்களை மாதிரி ஒருத்தர் இருக்க வாய்ப்பேயில்லை.. தன்னோட தோழிக்காக எத்தனை பண்ணி இருக்கீங்க.. மூணு வருஷம் ஆகப் போகுதுல நைஸ்.. அவங்கள பார்த்துக்கிட்டே அந்த ஹேக்கரையும் தேடிகிட்டு எங்க ஊருல வந்து  இரண்டு வருஷம் வேலை பண்ணி  அவனை இவனை பிடிச்சு கண்டுப் பிடிக்கறது ரொம்ப கஷ்டம்.. உங்க நட்பை நினைச்சா புல்லரிக்குது.." என சிலாகித்து கொண்டான் மகேஷ்

சிரித்த தீரன்.. " உங்க அம்மாக்கு இப்படி நடந்து இருந்தா என்ன சார் பண்ணுவீங்க.." என கேட்டவனை புரியாமல் பார்த்தான் மகேஷ்..

"எனக்கு பிருந்தா அம்மா சார், அம்மா, அப்பா பாசம் என்னன்னு தெரியாத எனக்கு முழு பாசத்தையும் கொட்டினா, எனக்கு அவ சின்னவளா இருந்தாலும் என்னை அவ பையன் மாதிரி பார்த்துகிட்டா சார்..அப்படி இருந்த என் மச்சியை ஒரே நாள்ல ஒன்னுமில்லாம பண்ணிட்டாங்க சார். ரொம்ப ஹெவி டோஸ் சாப்பிட்டு இருக்கா.. கடைசி நேரத்தில நான் பார்த்தேன் இல்லைன்னா என் மச்சியை பார்த்து இருக்க முடியாது சார். அவ வேற யார் என்ன சொல்லி இருந்தாலும் அப்படி பண்ணி இருக்க மாட்டா சார். நான் பேசன மாதிரி பேசி அவளோட மனசை கேவலமா கலைச்சு இருக்காங்க சார். அதை தாங்கிக்க முடியமா தான் விஷத்தை குடிச்சுட்டா சார். இப்போ அவ நிலைமையே தலைகீழா இருக்கு, அதை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியல சார்..  நான் அவளுக்கு ஏதாவது பண்ணனும் நினைச்சே.." என நிமிர்வுடன் கூறியவனை பார்த்து சிநேகிதப் புன்னகை சிந்தினான் மகேஷ்.

"உங்களோட எண்ணம் தப்பில்லை தீரன், கண்டிப்பா உங்களோட உதவி எனக்கு தேவைப் படும். அப்போ உங்களை கூப்பிட்டுக் கிறேன்.  தென் நான் உங்ககிட்ட பேசன விஷயம் எனக்கு தெரியும்னு என் அண்ணாகிட்ட சொல்லிட வேணாம்.. அதேமாதிரி என் பொண்டாட்டிக்கும் இது தெரிய வேண்டாம்.. என் அண்ணா உடம்புல இருந்த ரேகார்டர நா எடுத்துட்டேன்..

நீங்க தள்ளி விட்டதுனால என்
அண் ணாவோட கை பிராக்ச்சர்(fracture)  ஆகிடுச்சு அதா கட்டுப்போடுருக்குன்னு சொல்ல சொல்லிட்டேன்..சோ இதையும் நீங்க அவன்கிட்ட சொல்ல வேணாம். தென் உங்களை கொல்றதுக்கு கூட ஆள் வரலாம் சோ பீ ஷேப்...ஏன்னா உங்க கிட்ட தானே அவனை பத்தின உண்மைய சொல்லி இருக்கா சோ உங்களை அழிச்சுட்டா என் அண்ணன் தன்னால அடங்கி போயிடுவான்னு ஒரு எண்ணம்.. சோ கேர் ப்புள். அவன் உங்க கிட்ட தானே இருக்கா. ஒரு மணி நேரத்தில என் சிஷ்யர்கள் வந்துருவாங்க அவங்க கிட்ட தள்ளி விட்டுருங்க.." என கூறியவனிடம்

"கண்டிப்பா சார்..." என கூறியவன் செல்ல நினைத்து மீண்டும் திரும்பி 

"தென் உங்க கிட்ட சொல்லியே ஆகணும் உங்க ஓய்ப் செம மாஸ் சார்...கரெக்டான சமயத்துல வருவாங்கன்னு  நா எதிர் பாக்கல சார்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் முதலுதவி செஞ்சுட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தாங்க பாருங்க சான்ஸே இல்ல செம.. அது மட்டுமில்லை சார்..ரொம்ப ஆச்சரியமா நான் பார்த்தது அவங்களோட தைரியம் தான் சார், ரத்த கரையோட இருந்த பூபதியையும் உங்களையும் தனியா ஹாஸ்பிடல் சேர்த்தி வெரி வெல்..."என தீரன் கூறக் கூற இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தையே மகேஷின் நினைவுகள் சுற்றி வர அன்றைய தினத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தனர் இருவரும்.

**************

தன் அண்ணனின் வார்த்தைகளை கேட்டவனிற்கு அத்தனை அதிர்ச்சி.  செடியின் மறைவில் இருந்தவன் தன் அண்ணனின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அதுவும் அந்த கேடுகெட்ட பொறுக்கி தன்னவளையா நினைத்து கொண்டிருக்கிறான். என நினைத்தவனின் உள்ளம் கோபத்தில் மிதந்து கொண்டிருக்க அதை போக்கும் வண்ணமாக தன் தலைமுடியை கோதிக்கொண்டவன் சுற்றும் முற்றும் பார்க்க நேர் எதிரில் இருந்த புதரில் ஒருவன் நின்றுகொண்டு இருந்ததைக் கூர்ந்து கவனித்தான்.

பார்க்க வெளியால் போல இருந்தவனின் காதில் ப்ளூடூத்  இருக்க பின் ஏதோ ஒளித்து வைத்து இருப்பது போல் தோன்றியது.. அதை என்னவென்று சுதாரிப்பதற்குள் நிமிட இடைவெளியில் அவனின் கையிலிருந்த துப்பாக்கி பார்த்தியின் மேல் பாய்ந்து இருந்தது..

அடுத்த குண்டு பாய்வதற்குள் அதை தன் தோள்பட்டையில் வாங்கி இருந்தான் மகேஷ்.. மகேஷியின் திடீர் வரவால் முதலில் அதிர்த்தவன் பின் ஓட ஆரம்பிக்க அதை கவனித்த மகேஷ் கீழே உள்ள கல்லை எடுத்து அவனின் முட்டியை குறி பார்த்து அடிக்க வேகமாக ஓடியவனின் நடை சற்றே தளர்ந்தது..

தீடீர் தாக்குதலில் விதிர்விதித்து நின்றுக் கொண்டிருந்த தீரனை பார்த்து "தீரா அவன போய் புடி..." என கத்த

நிமிடத்தில் நடந்த கலவரத்தில் அதிர்ச்சியில் இருந்த தீரன் மகேஷியின் குரலில் தன் நிலைக்கு வந்தான்.. மீண்டும் ஒரு முறை "தீரா அவனை போய் புடி..." என அழுத்தி சொல்ல தன் நிலைக்கு மீண்டவன்

"சார் பூப்ப்.....பூபதி..." என திக்கி திணற

"நா அண்ணாவை பாத்துகிற. நீ போ அவன் தப்பிக்க கூடாது..." என மகேஷ் கத்த அவனை நோக்கி ஓடினான் தீரன்...

"அடியே குந்தாணி.. அவசரம் இல்லாமல் பொறுமையாக் கேளு..ஐஞ்சு நிமிஷத்துல நம்ம தோட்டத்துக்கு வா.. ப்ர்ஸ்ட் ட்ரீட் (முதலுதவி)பாக்ஸ் அண்ட் இன்ஜெக்ட்சன் எடுத்துக்கோ.. என்னால மூச்சை பு..டி..ச்சு எப்பவும் போல பேச முடியல டி.. நீ பயப்படாம வா மோட்டார் ரூம்ல நானும்,அண்ணாவும் இருக்கோ. வேற யாருக்கும் சொல்ல வேணா  பயந்துடுவாங்க.. பிளட் ஸ்மெல்னால எனக்கு மயக்கம் வருது... நீ வா.. எனக்கு.. என்னமோ... என்னமோ பயமா இருக்கு. கையில அடிபட்டா உயிர் போயிடுமா டி.. எனக்கு ஏன் டி மயக்கம் வருது.." என மகேஷ்  பேச பேச முதலில் விளையாட்டு என நினைக்க அவனின் குரலில் மாறுபட்டை உணர்ந்தவள் அவனிடம் பேச்சுக் கொடுத்தப் படியே முதலுதவி பெட்டியை எடுத்தவள் தன் காரை எடுத்தாள்.

"மாமா.. எப்படி இருக்காரு..."

"புருஷன் முடிலன்னு சொல்றேன் நீ உன் மாமாவை கேட்கற.அவன் மயங்கிட்டான்.. அவனுக்கு ரத்தம் அதிகம் போகுது.. பட் ந..ல்லா இரு....க்கான்.." என வலியை அடிக்கியவாறு பேசியவனைக் கண்டுக்கொண்டவள் காரை ஓட்டியவாறே மீண்டும் தன் பேச்சைத் தொடர அவனின் பதில் வரவில்லை.. சில நிமிடங்களில் தன் தோட்டத்துப் பக்கத்தில் இருந்த மொட்டை (வெற்று நிலம்) காட்டில் காரை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடினாள்..

**********

தோட்டத்தில் நுழைந்தவள் நேராக சென்றது மோட்டார் இருக்கும் அறைக்கு தான். ஐந்துக்கு நான்கடி என்றளவிற்கு இருக்கும் அறையில் பார்த்தியின் கால் வெளி வரை நீண்டு இருந்தது. உள்ளே சென்றவள் அமர்ந்தபடி கண்மூடி கிடைந்த மகேஸைப் பார்க்க "டேய்... டேய்.. நடிக்காத..டா.. எழு.." என சாதாரணமாகத் தட்டி எழுப்ப..அவன் அசைந்தப்பாடு இல்லை..

"சற்றே அதிர்ச்சியடைந்தவள் அவன் கையை பிடித்தவளிற்கு அவன் உள்ளங்கை வரை ரத்தம் வழிந்து இருக்க அதைக் கண்டு கண்கள் கலங்க "மாமா..மாமா.. எழு டா..." என அவனை உழுக்க "ஷ் ஆஹ்..." என்ற முக சுழிப்பைக் காட்டியவாறே மகேஷ் கண்விழிக்க கலங்கிய கண்களுடன் அவனைப் பார்க்க அவனின் வலியின் முணுமுனுப்பு அவளிற்கு நன்றாகவே கேட்டது.

சட்டென்று சுதாரித்தவள் தன்னைத் தானேத் திட்டிக் கொண்டு அவன் மடியிலிருந்த பார்த்தியைத் தூக்க தட்டுத்தடுமாறி மகேஸ் எழுந்து கொண்டவன், அவளிற்கு உதவி செய்ய கண்களில் கண்ணீருடன் காருக்குள் படுக்க வைத்தவள் பார்த்தியின் இரத்தத்தை துடைத்து இரத்தம் நிற்காமல் வர முதலுதவி செய்தவள் மகேஷின் கையை துடைக்க கைகள் நடுங்க அவன் முகத்தை பாராமல் கைகளை துடைத்தவள் வண்டி எடுக்க நிமிர தீரன் இரத்தக் கரையுடன் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.

அவனை யாரென்று புரியாமல் பார்க்க அவளை பார்த்து தலை குனிந்தவன் மோட்டார் அறையில்  அவனை தள்ளிவிட பொத்தென்று விழுந்தான் அவன். தீரன் அடித்த அடியில் கிட்டதட்ட மயங்கி விழுந்து இருந்தான் அவன். அவனை பூட்டிவிட்டு திரும்பிப் பார்க்க கார் செல்ல தாயராக இருக்கக் காரின் அருகில் சென்றவன் அவளைப் பார்த்தான்.

மகேஷ் கையசைக்க முன் சீட்டில் அமர்ந்தவன் பூபதியும்,மகேஷியையும் பார்த்தவாறே வர இழையினி காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தவள் தீரனின் செய்கையில் தீரனிடம் திரும்பி

"அவங்களுக்கு ஒன்னுமில்லை அண்ணா.. நல்லா தான் இருக்காங்க. பெரிய அத்தானுக்கு ரத்தம் கொஞ்சம் அதிகம் போயிருக்கு.. இவருக்கும் தான் நான் இப்போதைக்கு முதலுதவி பண்ணிட்டேன். இப்போதைக்கு ரத்தம் அதிகம் போகாது ஹாஸ்பிடல் போயிட்டு குண்டை வெளிய எடுத்தா போதும்..." என்றவளின் குரல் தெளிவாக இருக்க சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டான் தீரன்.

பத்து நிமிடங்களில் மருத்துவமனை அழைத்து வந்தவள் தீரனின் உதவியுடன் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தாள். பார்த்திக்கு அவள் பார்த்துக்கொள்ள மகேஸிற்கு பாரதி தான் சிகிச்சை அளித்தார்..(பாரதி என் முதல் கதையின் முக்கிய கதாபாத்திரம்)

***

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இருவரும் கண்விழித்து விட பார்த்தியைப் பார்த்து ஆறுதல் கூறியவளாள் மகேஸை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை. இரண்டு நாட்கள் வீட்டில் உள்ள அனைவரையும் சமாளித்தும் மருத்துவமனைக்கு வந்த சொந்தக்காரர்கள் பார்த்து வீட்டில் கூறிவிட அதை சமாளிக்கவே போதும் போதுமானது இழையினிக்கு. ஆனாலும் அன்னத்தின் சுடும் வார்த்தைகள்  அவளை எரிச்சலை மூட்டியது இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பதில் அளித்தாள். இருவரும் பைக்கில் சென்று கீழே விழுந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நன்றாக இருப்பதாகவும் பதில் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தவள்  இராப் பகலாக இருவரையும் பார்த்துக் கொண்டாள்.

இதற்கிடையில் தீரன் மகேஸை சந்தித்து பேசிக் கொண்டது என பல நடந்தது அதில் முக்கியமாக அவனின் வேலைகளில் கவனமாக இருந்தான். மகேஷின் உதவியாளர்கள் மூலமாக அத்தனையும் செய்தான். இவனின் வேலை மறைமுகமாக செய்தவதால் அவனின் உதவியாளர்கள்
யாரென்று இதுநாள் வரை அவன் வெளிக்காட்டாமல் இருந்தான்.

இவன் ஓரிடத்தில் இருந்தால் அவர்கள் வேறொரு இடத்தில் பணிப் புரிய  அவர்களிடம் கேவலமாக மாட்டிக் கொண்டவன் தான் ஆதி...

*****

சிஸ்யர்களைப் பற்றியும்....
இவர்களின் செயல்களை பற்றியும்..
ஹேமாவைப் பற்றியும்...

இனி வரும் அத்தியாயத்தில் காணலாம்...

முக்கிய குறிப்பு : (மித்தரன் மட்டும் தான் உதவி செய்கிறான் என நினைப்பவர்களுக்கு கூறிக் கொள்கிறேன். அவனின் வேலை டாக்டர். நித்யமதியை தவிர்ப்பதற்காகவே மட்டுமே மகேஷிடம் சேர்ந்து அவனிற்கு உதவியாக இருந்தான். அதனால் அவனை இதில் சேர்க்க வேண்டாம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro