Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 42

"என்ன இவன் மயக்கம் போடாம அப்படியே நிக்கறான். மறுபடியும் அடிப்போம்.." என தனக்குத்தானே பேசியவன் மீண்டு கட்டையை ஓங்கி நிற்க "ஏய் தீரன் என்ன பண்றீங்க.. ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நன்சென்ஸ்..." எனக் கூறியவன் அவனிடமிருந்த கட்டையை பிடுங்கி தூரத்தில் ஏறிய அதில் கோபமடைந்த தீரன் அவனின் சட்டைக் காலரை இறுக்கி பிடித்தப்படி நேருக்கு நேர் நின்றான்.

"தீரன் பிலீஸ் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. நான் வேணும்னு அப்படி பண்ணலை.நம்புங்க. பிருந்தா மேல நான் உயிரையே வைச்சு இருக்கேன். என்னை நம்புங்க..."என பூபதி பார்த்திக்  கூற அவனின் சட்டைக் காலரை விட்டவன் அவனைப் புரியாமல் பார்க்கப் பார்த்தியே தொடர்ந்தான்.

"என்னோட சூழ்நிலை காரணமா தான் பிருந்தாவை விட்டுட்டு வர வேண்டியாதப் போச்சு. எனக்கு தெரியும் அவ என்மேல வெறுப்பா தான் இருப்பா. என் பிருந்தா நல்லா இருந்தா போதும்..." என கூறிக்கூற  பிரம்மை பிடித்தது போல் இருந்தது தீரனிற்கு. "அப்போ இவன் பூபதியா. இந்த அயோக்கியன் தான் என் மச்சி நிலைமைக்கு காரணமா. அப்போ அந்த ஹேக்கர், என் மச்சியை என் நம்பர்ல இருந்து பிளாக்மெயில் பண்ணது இவனா.. அப்போ இரண்டு பேரு இல்லையா..." என தவறாக நினைத்தவன்  அவனை அடிக்கக் கை ஓங்க அதை சரியாகப் பிடித்தான் பூபதி.

"தீரன் நம்புங்க..."

"என்ன டா நம்ப சொல்ற பொறுக்கி, என் மச்சி இப்போ இப்படி இருக்க காரணம் நீ தான். அவ எப்படி இருந்தா தெரியுமா டா ஆனா இப்போ அவ இருக்கற நிலைமை என்னன்னு தெரியுமா டா உனக்கு..." என ஆவேசமாக கூற பார்த்திபனிற்கு உள்ளுக்குள் பூ பூத்தது "அப்போ என் பிருந்தா இப்ப ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்காளா. நான் அப்பா வா ஆயிட்டேனா..." என நினைத்தவனின் மனம் குத்தாட்டம் போட அவனின் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது  அடுத்தடுத்து தீரன் சொன்ன வாக்கியங்கள்.

"அவ எப்படி இருந்தா தெரியமா டா உனக்கு. எவ்ளோ சந்தோசமா இருந்தா தெரியுமா. ஆனா ஒரே ஒரு நாள் நீ பண்ண இந்த கேவலமான விஷயத்தில என் மச்சி என் பிருந்தா இப்போ எப்படி இருக்கா தெரியுமா உனக்கு. தெரியுமா டா சொல்லு தெரியமா.  என் பிருந்தா நடக்க முடியமா படுத்தப் படுக்கையா இருக்கறது உனக்கு தெரியுமா டா. அவளை லவ் பண்ணறன்னு  சொல்லி பின்னாடியே வந்து அவளோட போன் நம்பரை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு என்னை மாதிரியே பேசி அவகிட்ட என்னவெல்லாம் கேட்டு இருக்க ச்சீ உன்னை..." எனக் கூறியவன் ஆவேசமாகப் பார்த்தியை அடிக்க இதழ் கிழிந்து இரத்தம் வழிய நின்றவனின் கண்களில்  அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

"இது தான் நீ.. லவ் பண்ண லட்சணமா சொல்லு டா. ச்சே பொறுக்கிக்கிட்டப் போயி நியாயம் கேட்கறேன் பாரு, என் தப்பு தான்.உன்னை இப்படியே விட்டா
என் மச்சிக்கிட்ட பண்ண மாதிரி எல்லாருக்கிட்டடையும் பண்ணுவ டா. உன்னை இத்தனை நாள் விட்டு வைச்சதே தப்பு டா, எப்போ உன்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டேனோ அப்பவே உன்னை ஏதாவது பண்ணி இருக்கணும், என்னோட சந்தேகத்தில முதல்ல வந்தது நீ தான் டா, அதன் உன் வீட்டு புள்ளையை துரத்த ஆள் வைச்சேன். ஆனா நீ உன் வீட்டு புள்ளைக்கு ஓன்னுன்னு துடிச்சப் பாரு அப்போ தான் டா உன்னை நின்னு காண்பார்ம் பண்ணேன். உன் வீட்டு புள்ளைக்கு ஒன்னுனதும்  அடுத்த நிமிஷமே வேற ஒருத்தனுக்கு கால் பண்ணி மிரட்டி விட்டயே அப்போ தான் தெரிஞ்சுது இதுக்கு பின்னாடி நீ மட்டும் இல்லை. இன்னும்  நிறையா இருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன், உன்னை மட்டுமல்லாம எல்லாரையும் கூண்டோட பிடிக்கணும் நினைச்சு பொறுமையா இருந்தேன் டா ஆனா நீ என்னோட பொறுமையை ரொம்ப சோதிச்சுட்ட டா..." எனக் கூறியவன் அவனை சரமாரியாக அடிக்க இரத்தம் வழிய வழிய நின்றவனை பார்த்த தீரனிற்கு இன்னும் வெறி அடங்கவே இல்லை.  மேலும் மேலும் அடிக்க அவன் அடியில் உடலில் வலிமை அதிகம் இருந்தாலும் மனதால் சோர்ந்தவனாய் தரையில் விழ அவனின் தொலைபேசியும் பட்டென்று தரையில் விழுந்து திறந்துக் கொள்ள  தொலைபேசியின் தொடுத்திரையில் தெத்துப்பல் தெரிய அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. தொலைபேசியை கவனிக்காத தீரன் கீழே விழுந்து கிடந்த பார்த்தியை தூக்க குனியும் போது தொலைபேசியில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்த பிருந்தாவை பார்த்ததும் கோபம் மட்டுப்பட பார்த்தியைப் பார்க்க அப்போது தான் கவனித்தான் அவனின் கண்கள் எதையோ வெறித்து பார்த்து கொண்டிருப்பதை.. எந்தவிதமான எதிர்ப்பையும்  அவன் வெளிப்படுத்தாமல் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் இருக்க
தயக்கத்துடன் அவனை நெருங்கிய தீரன் அவனின் தோள் தொட்டு அவனை அழைக்க அவன் பதில் பேசவில்லை. 

"பூபதி... பூபதி..." அவனின் கன்னத்தில் தட்டியப்படி பார்த்தியை அழைக்க. பதில் பேசாமல் ஏதோ வெறித்து நோக்கியவனை கண்டு மீண்டும் கன்னத்தில் ஓங்கி அடித்து அவனை அழைக்க இம்முறை தெளிவு பெற்றவன் தீரனிடம் திரும்பி அவனின் கையை பற்றிக் கொண்டு

"என் பிருந்தா.. என்.. பிருந்தா. என் பிருந்தாக்கு என்ன ஆச்சு. நான் தான் காரணம். நான் அவன் சொன்னதை செஞ்சு இருக்கணும். அதான் இப்படி பண்ணிட்டான். என் பிருந்தா. அவ அவ..."என ஏதோ பைத்தியம் போல் பிதற்ற

"டேய்.. என்ன நடிக்கிறயா. சீப்பா ஒரு பொண்ணை போன்லயே செ*** லெவல்கு டார்ச்சர் பண்ணி அவளோட எல்லாத்தையும் பறிச்சுட்டு அவளை கொன்னு போட்டுட்டு போற உன்னோட நடிப்பு எல்லாம் எங்கிட்ட காட்ட வேண்டாம்..." என வாய்வரை வந்த வார்த்தைகள் அனைத்தும் பூபதியின் கண்ணீரை கண்டதும் சட்டென நின்றது.

"தீரா சொல்லு. என் பிருந்தா.. என் பிருந்தாக்கு ஒன்னுமில்லை அவ நல்லா இருக்கான்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லு போதும். என்னோட இந்த மூணு வருஷ ஜெயில் வாழ்க்கை எல்லாமே என் பிருந்தாக்கும் என் குட்டிகும் தான். ஆ...னா ஆனா நீ சொல்றத பார்த்தா.. என் பிருந்தா.. என் பிருந்தாவை நான் பாக்கணும் அவளுக்கு என்ன ஆச்சு.. என் பிருந்தாவை எதுவும் பண்ண மாட்டேன்னு தானே சொன்னாங்க. ஆனா என் பிருந்தாவை இவனுங்க என்னமோ பண்ணிட்டாங்க. தீ..ரா ப்ளீஸ் தீரா.. நான் என் பிருந்தாவை ஒரே ஒரு தடவை பாக்கணும். ப்ளீஸ் தீரா."என அவனிடம் சிறுப் பிள்ளையாய் மாறி கெஞ்ச விதிர்விதிர்த்து போனான் தீரன்.

பார்த்தியின் இதழில் வழிந்த இரத்தத்தை அவரசமாக துடைத்தவன்
"பூபதி. ஜஸ்ட் ரீலேக்ஸ்.. இங்க பாரு. பூபதி..." என அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மாயமாய் மறைந்துப் போனது அவனின் பிதற்றலில், 'ஐயோ.. இவன் இந்தளவுக்கு பிருந்தா மேல உயிரையே வைச்சு இருப்பான்னு நினைக்கவே இல்லை. அப்போ இவன் ஏன் அவளை பிரிஞ்சு இருக்கணும், அப்போ பிருந்தாகிட்ட பேசனது யாரா இருக்கும். இவன்கிட்ட கேட்டா மட்டும் தான் இதுக்கு பதில் கிடைக்கும்...' என நினைத்தவன் பூபதியைப் பார்க்க அவனின்  கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோட அதில் தீரனின் கோபம் முழுவதும் கரைந்து தான் போனது. 

அவனை பிடித்து உலுக்கியவன் "இங்க பாரு.பூபதி. நான் சொல்றதை ஒரே ஒரு நிமிஷம் கேளு. என அவனை உற்று நோக்கியவாறு கேட்க என்ன என்பதை போல் தீரனை பார்த்தான் பார்த்தி.

"இங்க பாரு பூபதி நான் கேட்கறதுக்கு நீ பதில் சொன்னா இப்பவே இந்த நிமிஷமே நம்ம இரண்டு பேருமா பிருந்தாவைப் பாக்க போலாம் என்னன்னு சொல்ற..." என கூற

"முதலில் புரியாது விழித்தவன் "இல்லை வேண்டாம் .. நீ இங்க இருந்து போ.. எனக்கு யாரும் வேண்டாம். நீ போ உன்னையும் ஏதாவது பண்ணிடுவா அவன் நீ போ.." என விரட்டியப்படி சொல்ல அவனை பிடித்தவன் "ஏய்.. பார்த்தி இங்க பாரு யாருக்கும் ஒன்னும் ஆகாது நம்ம இருக்கோம். நம்ம பாத்துக்கலாம். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் டா. இங்க பாரு நானும், நீயும் இருக்கோம். நம்ம துணையா இருக்கலாம். நீ பயப்பட வேண்டாம்..." என அவனிற்கு தைரியம்
சொல்ல முதலில் யோசித்தவன் தீரனின் பேச்சில் புது நம்பிக்கை பிறக்க தன் கடந்த காலத்தை நோக்கி பயனித்தான்.








Bạn đang đọc truyện trên: Truyen247.Pro