Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 40

"என் பொண்டாட்டி எங்க மாமா.. தனியா தானே படுத்து இருக்கா.." எனக் கேட்க கொட்டாவி விட்டவாறே "ஆம்" எனத் தலையை ஆட்டி ஏதோ சொல்ல வர அதை கண்டுகொள்ளாமல்  ஒரே ஜம்பில் சோபாவைத் தாண்டி அதற்கு அடுத்த தன்னவளின் அறைக்குள் சத்தமில்லாமல் சென்றவன் கதவை மூடும் முன் தன் மாமனைப் பார்த்து பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு அறைக் கதவை தாழிட்டு திரும்பியவன் சிலிர்த்து நின்றான்.

"அடி ஆத்தி...." என நெஞ்சில் கை வைத்து தேய்த்து கொண்டவன் உறங்கி கொண்டிருந்த தன்னவளையே பார்த்தான்.

படுக்கையின் நுனியில் பட்டுப் போல் உறங்கி கொண்டிருந்தாள். அழகியப் பட்டு தாவணியில் இரவில்  ஜொலிக்கும் நிலவு தேவதையாய் மின்னியவளின்  பட்டு பாவாடை மூட்டிக் கால் வரை ஏறி இருந்தது, கைகளை இடுப்பில்  வைத்தவாறே படுத்து இருந்தவளை கண் இமைக்காமல் பார்த்தனின் உடல் சிலிர்த்தது. 'கொஞ்சம் திரும்பிப் படுத்தாலும் கீழே விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது நிச்சியம்' என நினைத்தவன் அவளின் அருகில் சிரித்தவாறே சென்றான்.

அவளின் பாவாடையைக் கீழிறக்கி விட்டவன் அவளின் அருகில் படுத்து அவளை தன் மார்ப்போடு அணைத்துப் படுத்துக் கொண்டான். அவனின் பிடி அவளை மேலும் இறுக்கி கொண்டே போனது. ஏதோ அவளை தொலைத்து விடுவதுப் போல் அவளை இறுக்க  அணைத்துக் கொண்டவனிற்கு உறக்கம் தான் வர மறுத்தது.

(ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவன் அல்லவா. அவளைவிட்டு பிரியப் போகிறோம் என்று தானே இல்லாத தில்லாலங்கடி, சொல்லாத பொய் என அனைத்தும் செய்து அவளைக் கரம் பிடித்தான். மூன்று வருடப் பிரிவில் அவளிற்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்து விட்டால் என்ன செய்வது என்ற ஒரே காரணத்திற்காக தெரிந்த ஜோசியரை வைத்து திட்டத்தை தீட்டினான்.

இழையினியின் விஷயத்தில் அவனின் காதல் சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை அவனிற்கு இல்லை. நீங்கள் கேட்கலாம் உன் காதலின் மேல் நம்பிக்கை இல்லையா என்று  ஆம் இல்லை என்று தைரியமாக கூறுவான். ஏனென்றால் காதல் சிலருக்கு மட்டுமே வெற்றி எனும் கனியை அளிக்கும் மற்றவர்களுக்கு அது தீராத வலியை தான் தரும். அந்த வலி தரக்கூடிய  காதலின் மேல் மகேஸிற்கு நம்பிக்கை இல்லை.

என்று தன் காதலை இழை மேல் உணர்ந்தானோ அடுத்தடுத்து வந்த நாட்களில் அவளை மறைமுகமாக ரசிப்பது, அவளின் செய்கையை அவளிற்கு தெரியாது புகைப்படம் எடுப்பது, என இருந்தாலும்   நேரில் கண்டால் விலகி சென்று விடுவான். சில நேரங்களில் அவளின் பார்வை இவனை ஏதோ செய்தது, சில சமயம் காதல் கசியும் பார்வை பார்ப்பாள், சில சமயம் கண்ணில் லாவா வழிந்தோடும், இப்படி அவள் இருக்க  எங்க கண்டுபிடிப்பது அவளிற்கு தன் மேல் காதலிருப்பது., அவள் தன்னை காதலிக்கிறாளா என தெரியாது குழம்பி தவித்தவன் ஒரு நாள் இவள் உறங்கும் போது இவளின் இடது கையில் கருப்பு கயிறுகளுக்கு மத்தியில் இத்தாலிக் பாண்டீல் m' என்ற எழுத்தைப் பார்த்தான். அவளின் உறக்கம் களையாதவாரு அவளின் கையில் இருந்த கயிறுகளை பிரித்தான்.அந்த கயிற் இருந்தது ரெண்டு செண்டி மீட்டர் நீளத்திற்கு. கயிறைப் பாதி அவிழ்த்த உடனே அறிந்துக் கொண்டான் அது இவனின் பெயர் தான் என.. அதைப் பார்த்தவனிற்கு முதன் முதலில் அவளை அள்ளி அணைக்கத் துடித்த கைகளை  அடைக்கி கொண்டவன் அதே சந்தோசத்துடன் அவளின் கையில் கயிறைக் கட்டியவன் அவள் அறியாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றிலிருந்து அவளும் தன்னை காதலிக்கிறாள். என அறிந்தவன் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அவனின் வயதும் இவளின் வயதும் இடித்தது. என்ன தான் இருவரும் ஒரே வயது என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன்னாள் பிறந்து விட்டாளே. என்ன செய்வது பெரும்பாலும் கிராமங்களில் ஒற்றை வயதுடையவர்களை திருமண பந்தத்தில் இணைக்க மாட்டார்கள். அப்படி இருக்க இரண்டு நாட்களுக்கு மூத்தவளை எப்படி கல்யாணம் செய்து வைப்பார்கள் வாய்ப்பில்லை என நினைத்தவனின் மூளையில் உதிர்த்த  ஐடியா தான் ஜோசியம். அதை வைத்து தனக்கேற்றார் போல் மாற்றிக்கொண்டான்.

ஆனால் அதில் பெரிய சிக்கலாக வந்தது பார்த்தியே  முதலில் பார்த்தியை திருமணம் செய்ய சொல்ல அவனிடமும் கூறிவிட்டான் நானும், இழையும் விரும்புகிறோம் என்று ஆனால் அவனோ அவள் எனக்கு குழந்தைப் போல்  என பார்த்திக் கூற சுலபமாக மகேஸே அவளை திருமணம் செய்து கொண்டான்.

திருமணத்தின் போது அவள் நடந்து கொண்டது இவனிற்கு குழப்பத்தை கொடுக்க அதை யோசிக்க விடாமல் இவனின் வேலை தடைச் செய்ய.. மனத்தில்லாமல் வெளிநாடு புறப்பட்டான் மகேஷ்.

ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள் வைத்து காதலித்த தன்னவளை எப்படி பிரிவான். எப்படி தனியாக விடுவான். மற்றொரு ஆணவனின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் அப்படி இருப்பவனிடம் உன்னவளை ஏதாவது செய்தாலும் செய்யலாம் எனக் கூறினால் விடுவானா இவன். அடுத்த நிமிடமே தன்னவளிடம் வந்து விட்டவனின் காதல் பெரியது தான்.)

அவனின் இறுகப் பிடியில் அவளிற்கு வலி எடுக்க லேசாக தூக்கம் தெளிய கண்விழித்தவளின்  மிக அருகில் அவனின் முகம் இருக்க முதலில் திருத்திருவென விழித்தவள் அவனை ஏறெடுத்துப் பார்க்க அவன் விழித்து தான் இருந்தான் ஆனால் உறங்கவில்லை. ஏதோ வெறித்துப் பார்த்து இருந்தான் அவனின் கண்ணில் தெரிந்த குழப்பம், இவளை ஏதோ செய்ய சற்றே எம்பி அவனின் கன்னத்தை வருடிவிட குனிந்து அவளைப் பார்த்தான் மகேஷ்.

"என்ன டி தூங்கமா என் கன்னத்தை தடவி பார்த்துட்டு இருக்க.." எனக் கேட்டவனை முறைத்தவள் அவனிடமிருந்து துள்ளி எழப் பார்க்க அவளால் எழத்தான் முடியவில்லை. அவள் முயற்சிக்கும் ஒவ்வொரு  அவனின் பிடி இறுகிக் கொண்டே சென்றது.

"ஓவரா துள்ளாத டி..நான் சொல்றது செய்.. உன்னை விட்ருவேன்..." என மகேஷ் சொல்ல அவனை மேலும் முறைத்தாள் இழையினி.

"சரி முறைக்காத. நான் சொல்றதை மட்டும் திரும்ப சொல்லு..." என கூறியவன் அவளின் முகத்தையே ஆர்வத்துடன் பார்க்க

அவளோ அவனை முறைத்தவாறே இருந்தாள்.

"நீ சொல்லு டி...இல்லைன்னா இப்படி தான் பண்ணுவேன் உன்னை எனக்குள்ள இன்னும் இறுக்கி வைச்சுக்குவேன்..." எனக் கூறியது மட்டுமல்லாமல் செயலிலும் காட்டினான்.

திமிறிக் கொண்டே  இருந்தவளிடம் லவ் யூ மாமான்னு சொல்லு டி.. இப்பவே விட்றேன்.."என கூற

"மாட்டேன் என்பதை போல் தலையை ஆட்டிட..

"சரி நீ சொல்ல வேண்டாம்.." என கூறியவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவாறே

"வினிமா.... லவ் யூ டி.. இப்போ இல்லை சின்ன வயசுல இருந்து உன் மேல எனக்கு அத்தனை லவ் டி.. எப்படி சொல்றதுன்னு தெரில டி.. உன்னை மட்டும் தான் டி பிடிக்கும். உன்னை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும். எப்போ இருந்து லவ்வுன்னு கேட்டா தெரியாது டி.. சொல்லப் போனா..." எனப் பேசிக் கொண்டே சென்றவனினை  இடைமறித்தாள் இழையினி

"டேய் கொஞ்சமா புளுவு டா புளுகு மூட்டை. எப்படி, எப்பிடி.. நீ என்னை சின்ன வயசுல  இருந்தே லவ் பண்ண.. இதை நீ சொன்னதும் நான் நம்பனும். அப்படி தானே நம்பிட்டேன் டா  நம்பிட்டேன். சின்ன வயசுல இருந்து நீ எத்தனை பொண்ணுங்களை லவ் பண்ணன்னு சொல்லவா பொறுக்கி.. லிஸ்ட் போட்டா போயிட்டே இருக்கும். விடறான் பாரு ரீள. விட்டா நான் பொறந்ததுல இருந்தே லவ் பண்றன்னு சொல்லுவான் போல விடு டா புளுகு மூட்டை...." என கன்னாபின்னாவென கத்தி கொண்டிருத்தவளின் காதில்
இதழ் உரச

"ஏய் குந்தாணி...நீ எங்கிட்ட பேசிட்ட டி..." என ஹஸ்கி குரலில் கூறியவனை மேலும் முறைத்தவள்

"ஹிம்மம்ம்.." என உதட்டை சுளித்தவள் தலையை திருப்பி அவனின் மார்பில் தலை வைத்துக் கொண்டாள்.

அவளைத் தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து "இன்னும் எத்தனை நாளைக்கு பிரம்மச்சாரியா இருக்கப் போறேன்னு தெரில டி...எப்போ டி தப்பு பண்ணலாம்.."  எனக் கேட்டவனின் முகத்தை பார்க்கக் கூட வெட்கம் வந்தது இவளிற்கு தன்னவனின் மார்ப்பில் அடித்தவள் அவனின் டீ சார்ட்டை கொத்தாக பிடித்துக் கொண்டே  மீண்டும் அவனின் மார்ப்பில் சாய்ந்துக் கொள்ள அவளைப் பார்த்து சிரித்தவன் "சும்மா.. தான் டி கேட்டேன் ஓவரா வெட்கப் படாத பார்க்க முடியல.." என கூற அதைக் காதில் கூட வாங்கி கொள்ளதவள் அவனின் மார்ப்பில் முகம் புதைத்தாள். அவளை தன்னுடன் அணைத்தவன் எப்போது உறங்கினான் என தெரியாது உறங்கி போனான்.

*********

ஆள் உயர கண்ணாடியின் முன் நின்று தன் இடதுப் பக்க நெற்றியில் வழிந்த இரத்ததைத் துடைத்துக் கொண்டு இருந்தான் தீரன்.

அந்த ஹேக்கரை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் அவனின் இல்ல முகவரியையும் அறிந்து வைத்து இருந்தான் அவன். பகலில் அவனை பின் தொடர்ந்துப் பார்த்து விட்டான். சந்தேகப்படும்படி அவனிடம் எந்த வித மாற்றமும் இல்லை. அதனால் இரவில் ஏதாவது செய்யலாம் என நினைத்தவன் இரவில் வர அவனின் அறைக்கு செல்லாமல் வெளிச்சம் இருந்த அறைதான் பார்த்தியின் அறை என எட்டிப் பார்க்க அவனின் தம்பியும் ஏதோ ஹேக்கிங் விஷயங்களை தான் பேசிக் கொண்டிருந்தான். அவனின் பேச்சில் ஏதாவது ஐடியா கிடைக்கும் என நினைத்து தான் அவன் பேசுவது அனைத்துமே கேட்க அந்த அறையில் உள்ளவன்(மகேஷ்) தீரன் நின்றதை கவனித்து அவனின் மேல் பேப்பர் வைட்டை தூக்கி எறிய அது தீரனின் இடது நெற்றியை பதம் பார்த்து இருந்தது. திருடனிற்கு தேள் கொட்டின்னால் கத்த முடியாத சூழ்நிலை தான் இன்று இவனிற்கும் மகேஷ் வெளி வருவதற்குள் அருகில் இருந்த செடி புதருக்குள் தன்னை மறைத்து கொண்டவன் மகேஷ் சென்ற பிறகு சிறிது நேரத்தில் கிளம்பி விட்டான் தீரன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro