Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 15

மதிய வேளை என்பதால் காலேஜ் கேன்டீனில் மாணவர்கள் ஆங்காங்கே கும்பலாக கூட்டம் கூடியப்படியே அமர்ந்துகொண்டு இருக்க.. சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படியே அனைவரையும் தன் கண்களால் சலவையிட தனக்கு எதிர் திசையில் அமர்ந்த இருவரை பார்த்தவள் அவர்களின் மௌன நிலையைக் கண்டு சட்டென்று ஒரு பாடல் தோன்ற பாடினாள்.

"கண்கள் இரண்டும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்..." எனப் பூவிழி (இழையின் தங்கை) பாடவும்

"தீரனை சைட் அடித்தால் காதல் என்று தான் அர்த்தம்.." என தன் பின்னால் ஒரு குரல் கேட்க.. "யாரோ" என நினத்தவள் "ஐயோ இல்லை.." என கூறியவாறே அவசரமாக பின்னால் திரும்பி பார்க்க நித்தியமதி(மகேஷின் தங்கை) நின்றுகொண்டிருக்க அவளை முறைத்துக் கொண்டே அவளின் கையில் இருந்த பப்ஸ்யை வெடுக்கென்றுப் பிடிங்கி வாயில் வைத்தவாறே "ராகமா படற ராகம் கொன்றுவேன் டி...." எனக் கூறி பப்ஸை விழுங்குவதில் கூறியாக இருந்தாள்..

"லைன் நல்லா இருந்துச்சுன்னு பாடன பூமா" என நித்தியா கூறவும்..

"ஜஸ்ட் சைட்டிங்க் தான் ஓகே யா... லவ் எல்லாம் இல்லை..." எனக் கூறியவள் பப்ஸ் சாப்பிடுவதில் கவனமாக இருக்க

"நானும் ஜஸ்ட் சைட் தானே பாடன.. நீயேன் ஏன் லவ் பத்தி சொல்ற... "என நித்தி கூறவும்

வாயில் வைத்து இருந்த பப்ஸை வாயில் வைத்தப்படியே அவளை முறைத்து கொண்டே

"இ...ரு.. நித்தி ஏதாவது சாப்பிட இருக்கானு பார்த்துட்டு வரேன்' எனக் கூறி எழுந்து சென்றவளை சிரிப்புடன் பார்த்தாள் நித்தியா....!!!

***************************

மதிய வெயிலில் வேப்பமர நிழலில் நின்றவனின் கன்னத்தில் வேப்பஇலைகள் முத்தமிட்டு கீழே விழ.. அவனின் கேசத்தை வெப்பக் காற்று தடவி செல்ல தன் கேசத்தை வலது கையால் அடக்கியவாறே நுழைவுவாயிழையே பார்த்தவனின் எதிர்பார்ப்பே கூறியது.
'யாருக்கோ காத்திருக்கிறான்." என்று தெளிவாக தெரிந்தது....
ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளத்தவன் போல் சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தாலும் அவ்வப்போது அவனின் பார்வைக் நுழைவாயிழை நோக்கியவாறே இருந்தது..!அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கமால் நுழைவுவாயிலிருந்து ஒரு இளைஞன் வந்துகொண்டிருந்தான்..!! பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட இருபது வயது வாலிபனாக தான் இருக்க முடியும்.. தலையில் சந்தன நிறத்தில் எதையோ அப்பி இருந்தான்.. கருப்பாக இருந்தான்.. எதையோ வாயில் வைத்து அடைத்து இருந்தான்... அவனின் அருகில் சென்றவன் "நீங்க அந்த போன் கடையில வேலை பாக்கற தம்பி தானே..!! நீங்க இந்த காலேஜ்ல தான் படிச்சதா கேள்வி பட்டேன்.."

"ஆமா சார்.. எதுக்காக வர சொன்னிங்க.."

"எனக்கு ஓரு ஆஃப்(app) ஓபன் பண்ணனும் உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா.."

"எனக்கு அதெல்லாம் ஓபன் பண்ண தெரியாது சார்..." எனக் கூறியவனின் குரலில் நடுக்கத்தைக் கண்டவன்

"ஐயோ பயப்படாதா..!! நான் நார்மலா தான் கேட்கிறேன்..!! ஜஸ்ட் ஹெல்ப் மட்டும் பண்ணுங்க போதும்... எனக்கு அந்த மாதிரியான போட்டோஸ் எடிட் பண்ணறது..!! அப்பறம் அடுத்தவங்க போன் எல்லாம் ஹேக் பண்றது... ஒரு பொழுது போக்கான விஷயம் நானும் இது மாதிரி ஆஃப் எல்லாம் உருவாக்கி இருக்கேன்.!! பொண்ணுங்களை ஹேக் பண்ணி பிளாக்மெயில் பண்ணி காசு வாங்கி இருக்கேன்.. ஆனால் வேற மாதிரி எனக்கு வேணும்" எனக் கூற ..

"எனக்கு இது மாதிரியான விஷயம் எல்லாம் தெரியாது சார்.." ஏதோ தெரியாதவன் போலக் கூற

"அப்போ உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட"

"அப்படி எனக்கு யாரும் தெரியாது.. நீங்க போன் ரிப்பேர்னு சொல்லி வர சொன்னதா சொன்னாங்க ஆனா நீங்க இப்படியெல்லாம் கேட்கறீங்க.. நான் கிளம்பறேன் சார்..." என கூறியவன் நில்லாமல் சென்றான்..

'ச்சே..."என தரையில் காலை உதைத்தவன் தன் முகத்தில் கோபத்தை ஏந்தியவாறே அவ்விடத்தை விட்டு வெளியேறியவனை பார்த்தவளின் இதழ்கள் தன்னாலே "தீரா... நீயா இப்படி" என வாயோ முணுமுணுத்து கொள்ள பூவிழியின் கண்களோ கண்ணீரை சுரந்தது !!

முட்டைபோண்டா வாங்குவதற்காக கேன்டீனை நோக்கி சென்றவளின் பார்வையில் தூரத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கும் தீரனை பார்க்க அவனிடம் எப்படியாவது தனியாக பேசிட வேண்டும்" என நினைத்தவள் அவன் அருகில் செல்ல.. அவனோ தூரத்தில் வந்துகொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டு இருக்க.. ஏதோ முக்கியமான விஷயம் என நினைத்தவள் அவனிற்கு பின்னாடியே நின்றுகொண்டாள்..

தீரன் சற்றே வளர்த்தி என்பதால் பூமா நின்றது அந்த பையனிற்கு தெரியாமல் போனது..

**********

" வாட்" என ஒரு நிமிடம் அதிர்ச்சியானவன் அடுத்த நிமிடமே நிறுத்திய காரை ஸ்டார்ட் செய்தான்..

"எதுக்கு இப்படி ஷாக் ஆகற...!! நீ தானே அன்னைக்கு அப்படி பேசன" எனக் கூறியவளைப் பார்த்து முறைத்தவன்

"ஒழுங்கா வந்துடு டி... ஏதாவது சொல்லிட போறேன்..."

" ஏன் அப்படித்தான் சொல்லுவேன்.. ஏன் குற்றம் உள்ள நெஞ்சு குறுக்குறுக்குதா...!!" என இழை கூற

"அடிங்க ஒழுங்கா வாடி.. நீ மட்டும் இப்ப வாயை மூடலை.. நானா வாயை மூட வெச்சிருவேன்.."என கோபத்தில் கத்தவே செய்தான் மகேஷ்..

"பொறுக்கி பொறுக்கி...!! என்ன பேசறான் பாரு.. ச்சி..!! இவன் பேசன எல்லாத்தையும் மறந்துட்டு இவனை ஏத்துக்கிட்டேன் பாரு என்னை சொல்லணும்... இரண்டு நாளைக்கு சின்ன பையன்னு தெரிஞ்சும் உருகி உருகி லவ் பண்ணேன் பாரு என்னை எதுல வேனா அடிச்சுக்கலாம் ச்சே.." என மனதில் அவனை வறுத்தெடுத்தவள் பின் திரும்பி அமர்ந்து கொண்டாள்..!

ஆனால் மகேஷின் மனதிலோ ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்தப்படியே இருந்தது... "அப்போ என் வினிமாக்கும் (இழையினி) ஏற்கனவே இது மாதிரி நடந்து இருக்கா.. நான் தான் லேட்டா தெரிஞ்சு இருக்கேனா..இவ ஏன் இதைப்பத்தி எங்கிட்ட கேட்கல..!! இவ இதை பெரிய விஷயமாவே எடுத்துக்கலயா...!! இதை எங்கிட்ட அப்பவே கேட்டு இருந்து இருக்கலாமே.. ஏன் எங்கிட்ட இவ கேட்கலை...!! இவ ஏன் மத்த பொண்ணுங்க மாதிரி எந்த தப்பான முடிவுக்கும் போகலை.!! ஆமா அவங்க தப்பா எடுத்துக்க காரணம், தான் அப்பா, தான்னோட அண்ணா இவங்க பேசனதுனால தப்பான முடிவு எடுத்து இருக்காலம் என அவனே விடையும் கூறிக்கொண்டான்..!!

ஆனால் மத்த எல்லா பொண்ணுங்களுக்கு அவங்க அண்ணா, அப்பா ..நம்பர்ல இருந்து தானே கால் வந்து இருக்கு.. ஏன் இவளுக்கு மட்டும் என் நம்பர்ல இருந்து கால் போயிருக்கும்..!! அப்படி பார்த்தா ப்ரியாஸ்ரீக்கும் லவ்வரோட நம்பர்ல தானே அந்த கால் வந்திச்சு அப்போ அதுவும் இதுவும் ஒன்னு தானே..!! இல்லை இல்லை அதுவும் இதுவும் ஒன்னு இல்லை..!! நான் விரும்புறன்னு அவகிட்ட மட்டும் இல்லை வேற யார்கிட்டையும் சொல்லவே இல்லை..!! தென் எப்படி சம்பந்தமே இல்லாம என் நம்பர்ல இருந்து கால் போயி இருக்கும்.. ஒருவேளை இவ என்னை லவ் பண்ணி இருப்பாளோ.. என அவளை திரும்பி பார்த்தவன் "ச்சே இருக்காது.. அப்பறம் எப்படி.. ஐயோ மகேஷ் கடைசில அங்க இங்கன்னு தேடி இப்போ என் வீட்டிலயே இது நடந்து இருக்கே.. இவ லூசுங்கறதுனால எந்த தப்பான முடிவுக்கும் போகல. இல்லைனா என்ன நடந்து இருக்குமோ.. எவன் இதெல்லாம் பண்றது..." என யோசித்தவனிற்கு விடை தான் கிடைக்கவில்லை..!!

இந்த பிரச்சினையின் அடித்தளமே இவனின் காதலிருந்து தான் ஆரம்பமானது என இவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

ஐந்து நிமிடத்தில் ஹாஸ்பிடலில் இருந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள்..

எப்படி விட்டு சென்றார்களோ அதே நிலையில் தான் இருவரும் இருந்தார்கள்...!!

படுக்கையில் இருந்தவாறே விட்டத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தவளின் அருகில் சென்று அவளின் தோளை தொட்ட இழையினியை பார்த்தவள் எழுந்து அமர்ந்தாள்...

உள்ளே வந்த மகேஷ் அவளிடம் போனை நீட்டி "பாஸ்வோர்ட்"என கேட்க
பாஸ்வேர்ட்டை அவனிடம் கூறியவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்..

"பிரியா சொன்னது போல் தப்பான போட்டோஸ் மட்டுமல்ல சபரியின் கால் கூட இருந்தது..அதில் ஆட்டோமட்டிக் ஆட்டோ இருந்ததையும் அறிந்தான்.. அதை அனைத்தும் கிரீன்ஸ்ட் எடுத்துக்கொண்டவன் தன் தொலைபேசிக்கு அனுப்பி வைத்துவிட்டு சபரியிடம் கொடுத்தான்..

"என்ன"என்பதை போல் சபரி பார்க்க...

"பாருங்க" என்பதை போல் பதில் பார்வை பார்த்தான்..அதை வாங்கி பார்த்தவனின் மனதில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது..

அதேபோல் சபரியின் போனை வாங்கி ப்ரியாவிடமும் கொடுத்துப் பார்க்க சொல்ல அதில் சபரி கூறியதைப் போல் ஒன்றுமில்லை...!! பிரியா விழிவிரித்து மகேஸை பார்க்க.. சபரியும், மகேஸை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

"ஆமா ப்ரியா.. சபரி உனக்கு கால் பண்ணலை...சபரி மேல எந்த தப்பும் இல்லை... "

"அதே மாதிரி சபரி... ப்ரியா ஏன் சந்தேகப்பட்டான்னு உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்க நம்பர் ஹேக் பண்ணி இருக்காங்க..."

"ஹேக் பண்ணா கால் எப்படி போகும்.."
என சபரி கேட்க...

"அதான் எனக்கும் தெரியல.." என நினத்தவன் "சொல்றேன் சபரி... இப்போதைக்கு இந்த விஷயத்தை விட்ருங்க...அப்பறம் உங்க போனை மாத்திடுங்க.. ப்ரியா நீங்களும் தான்... உங்களுடைய உதவி எனக்கு தேவைப்படும் கூப்பிடும் போது இந்த போனை கொண்டுவாங்க... என கூற

சரி என்பதை போல் இருவரும் தலையை ஆட்டினர்..!!

"அப்பறம் பிரியா.. யார் கால் பண்ணி இருந்தாலும் உங்க சபரியோட வாய்ஸ் கூடவா உங்கனால கண்டுபிடிக்க முடியல..." என கேட்டவனின் பார்வையில் "இது தான் உங்க காதலா... இது தான் அவரு மேல நீங்க வெச்ச நம்பிக்கையா..." என கேட்காமல் கேட்டது..

அவனின் பார்வை பிரியாவிற்கு புரிந்ததோ இல்லையோ இலையினிக்கு புரிந்தும் புரியாத பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"அப்பறம் ப்ரியா நீங்க உங்க வீட்டுக்கே போங்க.. உங்க ஹாஸ்பிடல் டீன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.." என கூற அதுவே சபிரிக்கும் சரியென பட தானே இன்றே அழைத்து சொல்வதாக கூற... பிரியாவும் சரியென தலையை ஆட்டிட தன்னவளை தன்னுடன் அழைத்து சென்றான் பிரியாவின் வருங்கால கணவன்...!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro