Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 12

ஓடிச்சென்று தன்னவனை அணைத்துக்கொள்ள கைகள் இரண்டும் பரப்பரக்க..இழையின் கால்கள் அவளையும் அறியாமல் அவனை நோக்கி முன்னேறி சென்றது...

மனதில் அவன் மீது பலமடங்கு கோபமிருந்தாலும் அவனைக்  கண்டநொடி கண்ணாடிப்போல்  சில்லு சில்லாக சிதறித்தான் போனது  அவளின் கோபம் எனும் பனித்திரை..!!
"இவன் இங்க தான் இருக்கானா??"என அவளினுள் கேள்வி எழுந்தாலும் அதே எல்லாம்  புறம் தள்ளிவிட்டு அவனை நோக்கி சொல்ல.! அதற்குள் அங்கு நடந்த நிகழ்வு அவளை அணி அடித்ததைப்போல் அப்படியே நிற்க வைத்தது...

பார்ப்பதற்கு பளிங்கு பொம்மை போல் இருந்த ஒருத்தி மகேஷின் அருகில் சென்று அவனது கையைப்பற்றி கொண்டாள்.இழையின் விழிகள் அகல விரிந்தது....

"ஹேய் ஹேண்ட்சம். யூ ஆர் லுக்கிங் ஹாட்.யூர் ஐஸ் இட்ஸ் கில்லிங் மேன். ஐ திங்க் ஐம் ஃபாலன்".என்று சொன்னபடி அவனது கன்னத்தில் விரலால் கோலம் போட்டாள் அந்த ஐந்தரையடி அழகி. அவளது கோதுமை நிறமும், நீண்ட கழுத்தும் அவள் தமிழின் வாசனையை நுகராதவள் என்பதைப் பறைசாற்றியது. அவள் அத்தோடு நில்லாமல் அவனை ஒட்டி உரசி நிற்க அது இழையின் காதில் புகையைக் கிளப்பியது...

முதலில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனிற்கு..

தீடிரென ஒருவளின் சீண்டலிலும்,  பேச்சிலும் முழித்து  நின்றவன் அவள் யாரென்று சுதாரிப்பதற்குள் கட்டியணைப்பாள் என அவன் நினைக்கவே இல்லை..!!
பட்டென்று அவளை தன்னிடமிருந்து பிரிக்க எண்ணியவன் அவளின்  தோளைப் பிடிக்க...தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த இழையினிக்கு அவனும் அவளை அணைத்து இருப்பது போல் தோன்றியது.. அவனின் மேல் எல்லையில்லா கோபம் உண்டாக எதையோ தேடியவள் கையில் சிக்கியது என்னவோ  மாஃப் தான். நேராக சென்றவள் அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறி அதை கையில் வாங்கியவள்  தன்னவனை நோக்கி நடந்தாள்...

இதை எதையும் கவனிக்காமல் இருந்த மகேஸோ தன்னை ஒட்டி நின்ற பெண்ணிடம்..! "ஐயோ இந்தம்மா.. யாருமா நீ.. இந்தா இப்படி ஒட்டிட்டு நிக்கமா தள்ளி நில்லு.. ஏதோ கரடி பொம்பையை கட்டி பிடிக்கிற மாதிரி பிடிச்சுட்டு இருக்கற..கொஞ்சம்  தள்ளி நில்லு மா " எனக்கடுப்புடன் பேசிக்கொண்டே தன்னுடன் ஓட்டி நின்றவளை விலகி விட்டவன் முகத்தில் கடுமையை காட்டி ..."ஏன்மா இந்த மால்ல வேற யாரும் உன் கண்ணுக்கு தெரியலையா?? இப்படி வந்து ஓட்டிட்டு  நிக்கற.. தமிழ் பொண்ணு தானே நீ அறிவில்லை" என அவன் திட்டிக்கொண்டு இருக்க..

"ஹே ஹேண்ட்சம்.. ஐ கான்ட் அன்டர்ஸ்டான்ட் யுவர் வேர்ட்ஸ்.. பட் ஐ திங்க் யு ஆர் ஸ்கோல்டிங் மீ ரைட்" அவன் திட்டுவதை சரியாகப் புரிந்து கொண்டாலும்.. வேண்டுமென்றே அவன் மேல் இழைந்தாள்..

"எனக்குன்னு எங்க இருந்து தான் வருதுங்களோ தெரியல..!! எனக்கு ஹிந்தி தெரியாது.. உனக்கு தமிழ் தெரியாது.. நான் பேசற இங்கிலிஷ் எனக்கே புரியாது.!! இதுல உனக்கு எப்படி புரிய வைக்கறது" என புலம்பியவன் சுற்றும் முற்றும்  வேடிக்கை பார்ப்பது போல் மித்திரனை தேடியவன் திகைத்து நின்றான்..!!

ஒரு கையில் வேலையும், இன்னொரு கையில் வாளையும் ஏந்தியவாறு காளியாய் தன்னவள் வந்து கொண்டிருக்க " கண்கள் இரண்டையும் தேய்த்து கொண்டவன் மீண்டும் பார்க்க இப்போது மார்டன் காளியாய்  கையில் மாஃப்பை பிடித்து கொண்டு வந்தவளை விழி  விரிக்க பார்த்தவன் நிமிடத்தில் சுதாரித்து கொண்டு  " ஐயோ ஆத்தாடி..!! இவ எப்போ இங்க வந்தான்னு தெரியலையே..!!!  வராளே..!!  வராளே..!! இப்போ என்ன பண்றது... ஐயோ மகேஷ் ஒடு டா ஒடு...' என மனதில் நினைத்தவன்  தன் அருகில் நின்றவளிடம் "ஏம்மா வெள்ளைபூண்டு கொஞ்சம் தள்ளிக்கோ. என் பொண்டாட்டி வேற கட்டையைத் தூக்கிட்டு வரா நான் இப்போ ஓடனும்" என பேசிக்கொண்டே தன்னவளை பார்க்க  அவளோ கண்களில் அனல் தெறிக்க அவனை நோக்கி ஓடி வந்தாள்

"ஐயோ வந்துட்டா" என கத்தியவன் அங்கிருந்து ஓடப்பார்க்க

"டேய் கருவாயா வெளிநாடு போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு ஏதோ ஏதோ கதை சொல்லிட்டு இங்க வந்து இவக்கூடதா ஊர சுத்திட்டு இருக்கையா..!! ஊரில இல்லாத அழகி...!!! அப்படியே இழிச்சு இழிச்சு பேசற..!!  டேய் நில்லு டா..!!
டேய் போலீஸ் பொறிக்கி.!! இப்போ நிக்கறயா இல்லையா டா...." என கத்தியவள் அவனின் பின்னால் ஓடிக்கொண்டே கையில் இருந்த மாஃப்பை தூக்கி எறிய அவன் அரையடி உயரத்திற்கு துள்ளி குதித்து ஓடினான்..

"ஐயோ நான் எதுவும் பண்ணலை டி..
நான் அவளை திட்டிட்டு தான் இருந்தேன்...ஐயோ...இப்போ எதுக்கு டி இப்படி துரத்திட்டு இருக்க..மீ பாவம் டி" எனக் கத்திக்கொண்டே ஓட...

"என்ன??? எதுவும் பண்ணலையா.??? அப்போ  இவளைக் கட்டிப் பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தது யாரு என் தாத்தாவா...!டேய் ஓடாத...நில்லு டா கேடி டேய்..!!' என அவனைத் துரத்திக் கொண்டே கத்த...

"நான் எங்க டி கட்டி பிடிச்சேன். அந்த வெள்ளைப்பூண்டு  தான் டி வந்து ஒட்டி நின்னுச்சு... நான் எதுவும் பண்ணல டி நம்பு.." என கூறிக்கொண்டே ஓடியவன்  அந்த (ஹிந்திக்கார) பெண்ணையே நாலு முறை சுத்தி இருப்பான்..பாவம் அவள் தான் இங்கு நடக்கும் கலவரத்தை விழி விரித்து வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள்...

"என்ன நம்பறதா??...நான் அந்த நித்தியானந்தாவைக்கூட நம்பிறுவேன் டா...ஆனா உன்னை  நம்பவே மாட்டேன்..என கூறிக்கொண்டே அவனை துரத்த.. " அடிப்பாவி  " என வாய்விட்டே புலம்பியவன் சட்டென்று நின்றான்...!! அவன் சட்டென நிற்கவும் அவனின் மீது மோதி நின்றவளின் கால்கள் காற்றில் மிதந்தது...!!!! அவள் சுதாரிக்கும் முன்பே அவளைத்தூக்கி தன் தோள் மேல் போட்டுக்கொண்டான்..!!

இழையினியோ கால்கள் இரண்டையும் ஆட்டிக் கொண்டே "டேய் விடு டா... என்னை இறக்கி விடு டா காக்கா...." என கால்கள் இரண்டையும் ஆட்டிக் கொண்டே கைகளால் அவனின் முதுகில் நான்கு போடும் போட்டவளை
இறுக பற்றி மேலும் தூக்கிக் கொண்டவன் அந்த ஹிந்திக்கார பெண்ணிடம் சென்று "ஸீ இஸ் மைன்" எனக்கூறியது மட்டுமல்லாமல் சட்டென்று அவளை இடமாற்றி இழையின் கன்னத்தில் தன் முத்திரையை பதித்தான்...!!! ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு போல அனைவரும் இவர்களையே பார்க்க இழையினிக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது.!!! அந்த ஹிந்திக்கார பொண்ணோ ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள்...

அந்த பெண் அங்கிருந்து சென்றதும் இழையினியை இறக்கி விட்டவனின் தலையைப் பிடித்து நான்கு முறை  ஆட்டி.. முதுகில் இலவசமாக சில பல அடிகளை பரிசாக கொடுத்துவிட்டு அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்...

"அடியே குந்தாணி இப்படி முறக்கறதை நிறுத்தறயா. நான் எதுவும் பண்ணலை அந்த பொண்ணு தான் கட்டிப் பிடிச்சா" என கூறியவனை மேலும் முறைத்தாள்.. "அடி ஆத்தி என்ன இவ இப்படி பாக்கறா..!! இன்னும் என்ன கேள்வி கேட்க போறாளோ தெரியலையே.." என நினைத்தவன் வெளியில் அவஸ்தையாக அவளைப் பார்த்தான்..

தன் பார்வையை மாற்றமலே " எப்போ இருந்து இங்க இருக்க.. உண்மையை சொல்லு நீ வெளிநாடு போகவே இல்லை தானே"

'இதோடா அதெல்லாம்  இல்ல இப்போ ஒரு வாரமா தான் என இழுக்க"

"அப்போ ஏன் இண்டியா வந்தத எங்கிட்ட சொல்லல.."

"ஆமா சொல்லி இருந்தா. உடனே வந்து என்னைப் பார்த்துட்டு தான் வேற வேலையே பார்த்திருப்ப..!! சரி தான் போ டி..." என மனதில் கூறுவதாக நினைத்து  வெளியில் முணுமுணுத்துக்கொள்ள அது இவளின் காதில் சரியாக விழுந்தது...

அவனின் சட்டையை இறுகப்பிடித்து தன்னருகில் இழுத்தவள் "என்ன சொன்ன டா..." என கோபத்தில் கேட்க

"அடியே எல்லாம் நம்மலையே பாக்கறாங்க டி கொஞ்சம் தள்ளி நில்லு டி."

"யாரு பாத்தா எனக்கு என்ன டா?? ஒழுங்கா சொல்லு எப்போ இருந்து இங்க இருக்க..!" என மீண்டும் கேட்க

'கொஞ்சம் விட்டுத் தொலை டி சொல்றேன்.. ஏதோ கைதிக்கிட்ட விசாரிக்கற மாதிரி சட்டையைப் பிடிச்சுட்டு நிக்கற.." எனக் கூறிக்கொண்டே அவள் கையை எடுத்து விட்டவன்

"இப்போ சொல்றயா இல்லையா.."

"அது வந்து என்ன நடந்துச்சுன்னா என கூறவும்  பிரியாவும் , மித்திரனும் வரவும் சரியாக இருந்தது ஆரவம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க சட்டென்று விலகி நின்றவள் குற்ற உணர்வுடன் பிரியாவை பார்க்க..!! அவளோ எவரையும் பார்க்காமல் தன் கண்களை நிலத்தில் பதியவிட்டு இருந்தாள்..! தன்னவனை யாரென்று கேட்பாள் என நினைத்தவள் அவள் எதையும் கேட்காமல் அமைதியாய் நிற்க ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள்... நேராக பிரியாவிடம் சென்று 'என்னவென்று விசாரிக்க அவளோ மித்திரனை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ சொல்ல வேண்டாம்!!  என செய்கை செய்தான் அவள் பார்வை போகும் திசையைப் பார்க்க அங்கு மித்திரன் இருக்க.." டேய் சொட்டை நீ எப்போ இங்க வந்த...' என கேள்வி கேட்டவளிடம்

"ஹான் ஹான் நான்..இ..ங்க..வந்து ஒரு வா..ரம் இருக்கும்..." என திக்கித்திக்கி பதில் கூறினான்..

" உனக்கு எப்படி நான் இங்கே இருக்கிறது தெரியும்..!! ஆமா நீ எப்போ இங்க வந்த. எங்கிட்ட ஏன் நீ இங்க வந்ததை சொல்லல..ஆமா நீ ஏன் அவனையே (மகேஸை கை காட்டி) பார்க்கிற  அப்போ  இவனை உனக்கு ஏற்கனவே தெரியுமா.."  என மித்திரனை கேட்டவுடன் மகேஷிடமிருந்து பதில் வந்தது..
"ச்சே ச்சே அதெல்லாம் இவரு யாருன்னு எனக்கு தெரியவே தெரியாது அப்படித்தான டா" எனக்கேட்டவனைப்  பார்த்து தன் தலையிலடித்துக் கொண்டான் மித்திரன்..

என்ன பதில் சொல்வதேன தெரியாமல் விழித்தான் மித்திரன்..
"அது நான் நா..ன்.. தான் பார்த்து நீ இங்க இருக்கேன்னுக் கூட்டிட்டு வந்தேன்..' என  ப்ரியா கூறவும் தான் இவருக்கும் மூச்சே வந்தது...

ப்ரியாஸ்ரீ ஏதாவது தன்னிடம் பேசுவாள் என எதிர்ப்பார்த்தான் மகேஷ். ஆனால் கடைசி வரை அவள் அவனைப் பார்க்க கூட இல்லை.. இழையினி இருப்பதால் பேசாமல் இருப்பாள் என நினைத்து கொண்டான்...

பின் மித்திரனிடம் ஏதோ விசாரித்தவள் "சரி கோபி அண்ணா போயிட்டு வரேன்.." என இழை கூறவும் அவளை முறைத்தான் மித்தரன். அதை கண்டுகொள்ளாமல்  நடந்தவள் பாதி தூரம் சென்று மீண்டும் தன்னவனிடம் வந்து அவன் தங்கி இருக்கும் இடத்தின் விலாசத்தை கேட்டுக்கொண்டாள்...!! "உன்னை அங்க வந்து பார்த்துக்கிறேன்" என மிரட்டி விட்டு தான் நகர்ந்தாள்...!!!

"உஃப்ப் கொஞ்ச நேரத்தில உன் தங்கச்சி என்னைப் படுத்தி எடுத்துட்டா.. என்ன அடி..!!!" என கூறிக்கொண்டே தன் முதுகை தடவிக்கொண்டான்...

அதெல்லாம் கவனிக்கும் நிலையில் மித்திரன் இல்லையே... ஏதோ யோசனையாக இருந்தவனை கவனித்தாலும் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை மகேஷ்...

இன்றே விசாரித்திருந்தால் பின் வரும் பிரச்சினைகளை தடித்திருப்பானோ என்னவோ ..!! விதி யாரை விட்டது...??

********

"ஹாய் டி எங்க இருக்க.. '

'ம்ம் மால்ல இருக்கேன்...ஆமா ஏன் உன் வாய்ஸ் மாறி இருக்கு.."

"அதுவா....உன்னைப் பார்க்கணும் டி..." ஒரு மாதிரியான குரலில்

இதுவரை அவனின் குரலில் இந்த மாற்றம் இருந்தது இல்லை.. சந்தேகம் இருந்தாலும் தன்னவன் அல்லவா. தன் சந்தேகத்தை மறைத்தபடியே
"சரி இரு வீடியோ கால் பண்ற..."

"ஏய் இப்போ வேணா நீ உன் ரூம்குள்ளப் போயி வீடியோ கால் பண்ணு.."

மெல்லியதாக சிரிப்பு வர.. "ஏன்" என கேட்க

"ஏன்னா அப்போ தானே உன்னை நியூடா பாக்க முடியும்.." என கூறி சிரிக்க..

இவளிற்கு தன் காதே நம்ப முடியாமல் "சபரி நீ ஏதோ சொன்ன. பட் எனக்கு வேற மாதிரி கேட்டுச்சு... என்ன சொன்ன மறுபடியும் சொல்லு..."

"உன்னை முழுசா பார்க்கணும் டி' என சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது ப்ரியாஸ்ரீக்கு..."

"அதுக்குள்ள இப்படி ஷாக் ஆனா எப்படி என் செல்லமே உன்னை இதுக்கு முன்னாடி எடுத்தப்போட்டோவைப் பார்க்க வேண்டாமா.." எனக் கூறிய அடுத்த நொடி அவளின் வாட்ஸாப்பில் சில போட்டோக்கள் குவிந்தது..!!

திணறிப்போனாள்...!! தவித்தாள். எவ்வளவு நேசம் வைத்தேன்.. தன் அப்பாவிற்கு இணையாக அல்லவா நினைத்தேன்..  இது நாள் வரை அவனின் பார்வையில் கூட கண்ணியம் காத்தவன் இன்று இப்படி ஏதோ ஏதோ உளரிக்கிறானே.. எது உண்மை, எது பொய்.. என நினைத்தவளின்  நெஞ்சாங்கூட்டை ஏதோ பலமாக தாக்குவது போல் உணர்ந்தாள் கண்கள் இருட்டிக்கொண்டு வர மயங்கியவள் விழிக்கும் போது மித்திரனின் கைகளில் இருந்தாள்..!! அதற்குப்பின் இருவருமாக இழையினியை தேடி வந்தனர்..!!!  ((( இழையின் அண்ணனாக மித்திரனை ப்ரியாஸ்ரீக்கு  தெரியும்)))...

மாலில் நடந்ததை நினைத்தவளின் கண்களில் கண்ணீர் பெறுக படுத்திருந்தாள் ப்ரியா..!!

மீண்டும் அழைப்பு வர அதை கைகள் நடுங்க எடுத்தாள்..!! எதிர்முனையில் சிரிப்புடன் பேசினான் "என்ன யோசிச்சுட்டியா மை டியர்..ஒரே ஒரு நாள் என்கூட இரு.. முடியாதுனா உன்னோட உடம்பை எல்லாரும் பார்க்க வேண்டியது வரும்..." எனக்கூற இவனையா உயிறாக நேசித்தேன் என யோசித்தவளின் கண்கள் மௌனமாக கண்ணீர் வடித்தது..!!
ஒரு முடிவெடுத்தவளாய் எழுந்தவளின் கண்களில் சிக்கியது கூர்மையான கத்திதான்...

******

ஏதோ கீழே விழும் சத்தம் கேட்க... கண்களை பாதி மூடிக்கொண்டே வெளியே வந்தாள் இழையினி..!!

பிரியா மயங்கி கிடக்க.. பதறியடித்து அவளின் அருகில் சென்றவள் "ஐயோ பாப்பா எழு பாப்பா.. ஐயோ என்ன டி ஆச்சு.. ஐயோ கை.. கையை ஏன் டி கட் பண்ண... ஏதாவது பிரச்சினைனா சொல்லிருக்கலாமே டி.."
என அழுதுக்கொண்டே அவளைத் தூக்கி சோபாவில் போட்டவள்  அவளிற்கு முதலுதவி  செய்தாள். அதிகம் இரத்தம் வெளியேறி இருக்க உடனே ஹாஸ்பிடல் அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட உடனே தன்னவனை அழைத்தாள்.

'மகே.ஸ்...ம..கேஸ்.." என திக்கித்திக்கி வார்த்தைகள் வர...

"ஏய் என்ன டி என்ன ஆச்சு.." என  பதறியவனிடம் "பிரியா..பிரியா.. கையை .."என திக்க

"ஓகே இரு இரு .. அழாத வந்துட்டே இருக்கேன்.. நீ வெளிய வந்து நில்லு..." எனக்கூறியவன் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலிற்கு விரைந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro