தேடல் 6
ஆவிகளுக்கும் மின்காந்தவியலுக்கும் (electomagnetism) அதிக தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆவிகள் இருக்கும் இடத்தில் மின்காந்தவியல் புலம் ( electromagnetic field) உருவாவதாக சொல்கின்றனர். ஆவிகள் எதனால் ஆனவை? ஆவி ஆற்றலால் ( energy) உருவானது என்று நம்பப்படுகிறது. ஆனால் எவ்வகை ஆற்றல்?
ஆவிகள் நம் எல்லோர் கண்களுக்கும் தெரிவதில்லை மேலும் அவைகளால் திட பொருளை ஊடுறுவ முடிகிறது. அதாவது சுவர் போன்ற பொருட்கள் மூலம் செல்ல முடிகிறது. எனவே அவை அணுவை(atoms) விட மிகச்சிறிய பொருளால் ஆனதாக இருக்க கூடும். எனவே ஆவிகள் மின்மம் (plasma) 4 ஆவது பொருட்கூறால் ஆனதாக இருக்கலாம் என்கின்றனர். நமது சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் இதனால் ஆனவை தான்.
( 4 பொருட்கூறுகள்: திடப்பொருள், திரவம், வாயு மற்றும் மின்மம்)
இந்த மின்மம் மின்னூட்டத் துகள்களால்( charged particles) ஆனது. இதனால் காந்த மின்புலத்தை உருவாக்க முடியும். அதே போல் இது ஒளியை உமிழும் தன்மை கொண்டது. இந்த மின்மத்தின் அடர்த்தி குறைவானதாக இருந்தால் இதனால் சுவர் போன்ற திடபொருட்களை ஊடுறுவி செல்ல இயலும்.
ஆவிகள் இதனால் ஆனவை என்றால் சில நேரங்களில் அவை கண்களுக்கு தெரிந்து மறைவது எப்படி? காந்த மின்மத்தால் அதன் அதிர்வெண்ணை ( frequency) மாற்றி ஒளிபுகும் தன்மையடனோ அல்லது ஒளி புகா தன்மையுடனோ இருக்க இயலும். அதாவது ஆவிகள் தங்கள் அதிர்வெண்ணை மாற்றி நம் கண்களுக்கு தெரிவதோ இல்லை மறைவதோ எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
இன்னொரு மிகப்பெரிய கேள்வி ஆவிகள் ஏன் இரவில் மட்டும் அதிகமாக உலவுகிறது? பகலில் ஏன் வருவதில்லை? இந்த நிகழ்வுகள் எல்லா நேரங்களிலும் நடைபெறலாம், ஆனால் நம் மூலை இரவில் பீட்டாஅலையிலிருந்து ஆல்பா அலைக்கு மாறுகிறது. பீட்டா அலை , நாம் எச்சரிக்கையுடன் இருக்கும் சமயத்தில் செயல்படுகிறது.. அதாவது பகல் நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று விழிப்பாக உள்ளோம். ஆனால் இரவில் நம் மனம் அமைதியாக ஒய்வு நிலையில் இருக்கிறது. இது ஆல்பா அலையை வெளிப்படுத்தும் நேரம் ஆகும். நாம் திறந்த மனதுடன் எந்த பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் இருப்போம்.
இந்த நேரத்தில் நாம் நம் மனதில் நிறைய கற்பனைசெய்து கொள்ள கூடும். நிழலையும் பேய் என்று கற்பனை செய்து பயம் கொள்ள கூடும். ஆனால் ஆன்மா உண்மையாக கூட அங்கு இருக்கலாம். அதை பகுத்தறிய வேண்டும். உதாரணமாக நீங்கள் இரவில் டீவி பார்க்கும் பொழுது உங்கள் மூலை பீட்டா நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும், அந்த நேரத்தில் உங்களை யாரோ தொடுவது அல்லது கவனிப்பது போல் தோன்றினால் அது உண்மையாகவே ஆன்மாவாக இருக்க கூடும். இரவில் நாம் அதீத பய உணர்விற்கு ஆட்படுகிறோம்.
இன்னொரு அறிவியல் விளக்கம்:
நம் எல்லோருக்கும் தெரியும் நம் பூமியை சுற்றி வளிமண்டலம் அதாவது பாதுகாப்பு மண்டலம் உள்ளது என்று. பகலில் சூரிய கதிர்கள் நம் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தை தாண்டி ஊடுறுவும் பொழுது அதன் அணு எலக்ட்ரானை இழந்து அயனிகளாக மாறுகிறது. இது மண்டிலம் ( ionosphere) படுக்கையில் நடைபெருகிறது.
ஆவிகள் மின்காந்த ஆற்றலால் ஆனவை என்பதால் பகல் நேரத்தில் இதனால் ஆன்மாக்கள் வலுவிழந்து காணப்படும். இரவில் சூரிய ஒளி இல்லாததால் இந்த வினை நடைப்பெறாது. எனவே இரவில் அவை பலத்துடன் இருக்கும். இதுவே ஆவிகளை இரவில் மட்டும் அதிகம் காண காரணமாக இருக்கலாம் மற்றும் அமாவாசை , சூரிய கிரகணம் பொழுது நிறைய அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற இது கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro