Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் 12 முகவுரை

இந்த பதிவில் ஆன்மாக்களை கண்டறிய மற்றும் தொடற்புக்கொள்ள பயன்படும் மின் சாதனங்களை பற்றி காணலாம். அதற்கு முன் அமானுஷ்யத்தில்  நம்பிக்கை  கொண்ட சில விஞ்ஞானிகள் பற்றி இதோ...அவர்கள் கூறியதை மொழிப்பெயர்த்து அதன் பொருளை சிதைக்க விருப்பமில்லை, அதனால்அவர்கள் கூற்றை அப்படியே தந்துள்ளேன். 

ஆல்பிரட்  ரஸ்ஸல் வாலஸ்(Alfred Russel Wallace)
வாலஸ் புகழ்பெற்ற  உயிரியல் வல்லுநர். டார்வினின் கோட்பாடும் இவருடைய இயல்புத்தேர்வு சார்ந்த பரிணாமக் கோட்பாடும் ஒரே சமயத்தில் வெளிவந்தவை. இவர் பல ஆவிகள் குழு அமர்விருக்கை (seance) இல் பங்கேற்றுயுள்ளார். ஊடகர்கள் மூலம் ஆன்மாவோடு பேச முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

ALFRED RUSSEL WALLACE, 1823 TO 1913
Zoologist, Evolutionary Biologist
"The so-called dead are still alive. Our friends are still with us. They guide and strengthen us when owing to absence of proper conditions they cannot make their presence known.”

மேரி கியூரி மற்றும் பியர் கியூரி (Marie Curie & Pierre Curie)
நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளான இவர்களும் ஆவிகள் குழு அமர்விருக்கைகளில் பங்கேற்று உள்ளனர். அவர்களின் ஆய்வில் ஒரு கட்டத்தில் கதிரியக்க உறுப்புகளால் வெளியிடப்படும் ஆற்றலுக்கான  ஆதாரம் ஆவிக்குரியது என்று ஊகித்தனர்.

“There is here, in my opinion, a whole domain of entirely new facts and physical states in space of which we have no conception.”
PIERRE CURIE
1905

எடிசன் (Thomas Edison)

இவரை பற்றி அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இவருக்கு ஆன்மா மீது நம்பிக்கை இருந்து உள்ளது, ஆனால் மூட நம்பிக்கை இல்லாமல் அறிவியல் ரீதியாக அதை அவர் சிந்தித்து உள்ளார். ஆன்மாவிடம் பேச ஒரு சாதனத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார். ஆனால் அதை அவர் கண்டுபிடித்தாரா ? இல்லையா என்பது மர்மமாகவே முடிந்து விட்டது. அவர் இறந்த பின் அவருடைய சோதனை கூடத்தில் அப்படி எந்த ஒரு சாதனமும் கண்டறியப்படவில்லை. அவர் ஒரு நேர்முகக்கானளில் கூறியது இதோ

"If our personality survives, then it is strictly logical and scientific to assume that it retains memory, intellect, and other faculties and knowledge that we acquire on Earth. I am inclined to believe that our personality hereafter will be able to affect matter. If this reasoning be correct, then, if we can evolve an instrument so delicate as to be affected, moved, or manipulated by our personality as it survives in the next life, such an instrument, when made available, ought to record something.

அந்த சோதனை பற்றி அவர் கூறியது :
"I have been at work for some time building an apparatus to see if it is possible for personalities which have left this earth to communicate with us . I am engaged in the construction of one such apparatus now, and I hope to be able to finish it before very many months pass". Edison 1920

வில்லியம் க்ரூக்ஸ் (William Crookes)
இவர் தாலியம் ( thallium ) என்ற தனிமத்தை கண்டறிந்தவர் ஆவார். ஊடகர்கள் மூலம் ஆன்மாவோடு பேச முடியும் என்று நம்பிக்கை உடையவர். குக் என்ற இளம் பெண் ஊடகர் மூலம் இவர் கேட்டி கிங் என்ற ஆன்மாவோடு பேசி உள்ளார். அதற்கு சான்றாக அவர் இருவருடைய முடியையும் எடுத்து வைத்து உள்ளார்.

அவர் கூறியதாவது:
“I have the most absolute certainty that Miss Cook and Katie are two separate individuals so far as their bodies are concerned. Several little marks on Miss Cook’s face are absent on Katie’s. Miss Cook’s hair is so dark a brown as almost to appear black; a lock of Katie’s, which is now before me, and which she allowed me to cut from her luxuriant tresses, having first traced it up to the scalp and satisfied myself that it actually grew there, is a rich golden auburn.”
WILLIAM CROOKES
1874

ஆலிவர் லாட்ஜ் மற்றும் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் (Oliver Lodge and Heinrich Hertz)
ஆலிவர் லாட்ஜ் ஒரு இயற்பியல் பேராசிரியராக இருந்தார், 1880 களின் பிற்பகுதியில், சுயாதீனமாக ரேடியோ அலைகளை எவ்வாறு கடத்துவது மற்றும் கண்டறிவது என்று கண்டுபிடித்தார்.இவர் சைக்கிக்கல் ரிசர்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார், இது அமானுஷ்யத்தைப் பற்றி ஆய்வு செய்தது. 1890 ஆம் ஆண்டில் லாட்ஜ் மற்றும் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் அவர்களது வானொலி கண்டுபிடிப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

ஹெர்ட்ஸ்

லாட்ஜ்

ஹெர்ட்ஸும் அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார், அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து எழுந்த ஒரு நிகழ்வு காரணமாக. இவர் லாட்ஜ் இடம் இதை வெளிப்படுத்தினார், பின் அவருடன் இவரும் ஆன்மா ஆராய்ச்சியில் பங்கேற்றுக்கொண்டார். லாட்ஜ் 1915 இல் உலகப் போரில் கொல்லப்பட்ட தனது மகன் ரேமண்ட் , அவரை சந்திப்பில் தொடர்பு கொண்டதாக நம்பினார்.

சார்லஸ் ராபர்ட் ரிச்செட்(Charles Robert Richet)

சார்ல்ஸ் ரிச்செட், 1913 ஆம் ஆண்டில், உடற்கூறியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசை காப்புப்பிறழ்ச்சிகளுக்கு ( Anaphylaxis)
உணவு, மருந்துகள் போன்ற ஒவ்வாமை எதிர்வினையை கண்டறிந்ததற்காக பெற்றார். 1905 இல் பிசிக்கல் ரிசர்ச் பிரிவின் பிரிட்டிஷ் சொசைட்டி தலைவராக ஆனார். அவர் கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் கொண்டுவரும் போது ஆன்மா ஊடகவியலாளர்கள் எக்டோபலசம் ( ectoplasm) உற்பத்தி செய்ததாக அவர் நினைத்தார், அப்பொழுது சில வகையான அதிர்வுகளை அவர்கள் ஏற்படுத்தியாக நம்பினார், இது அவர் ஹென்றிட் ஹெர்ட்ஸ் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ அலைகளுடன் ஒப்பிட்டார். ரிச்செட் பின்னர் பல ஊடகவியலாளர்களால் ஏமாற்றப்பட்டார், பின்னர் அவர்கள் லின்டா காஸெர்ஸா, யூசபியா பல்லடினோ மற்றும் ஈவா கார்ரீயர் போன்ற மோசடிக்காரர்களாக அறியப்பட்டனர்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro