Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 13


தனது அறையில் கண்மூடி அமர்ந்து  செழியனின் வருகைக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததையும் அவ்வப்பபோது அவனின் நினைவு தன்னை வாட்டும் நேரம் அவனது நிழல்படத்தை கண்டு அமைதியுற்றதையும் எண்ணிய வண்ணமிருந்த பூங்குழலி கதவு தட்டப்படும் ஓசையில் சுயநினைவு கொண்டாள்.

" யெஸ் கம்மின் ,"என்று கூறியவள் உள்ளே நுழைந்த செழியனை கண்டு சிலையானாள்.அவனது வரவை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகத்திலிருந்தே தெரிய அவளை பார்த்து அழகாக சிரித்த செழியன்," உள்ள வரவா??அப்படியே போய்டவா??" என்று வினவினான்.

" ஐயோ...சாரி உள்ளே வாங்க நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்கலை அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன், ப்ளீஸ் உட்காருங்க," என்று உபசரித்தவள் செழியனின் பின்னே வந்த ராமை கவனிக்கவில்லை.

அவன் அவளின் எதிரிலுள்ள நாற்காலியில் கம்பீரமாக அமர அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பாவை.காக்கி நிறத்தில் பேன்ட் அணிந்து மெரூன் வண்ணத்தில் ஃபுல் ஹான்ட் சர்டையை சிறிது மடக்கி விட்டிருந்தான். அலை அலையான கேசம் காற்றில் ஆடி அவளின் கையை வந்து வருடும்படி அழைப்பு விடுக்க கூர்மையான அவனின் கண்களில் கடுமைக்கு பதில் சாந்தம் நிலவ அவளின் பார்வையை காந்தமென கவ்விக்கொண்டது. ஆண்மைக்கே உரித்தான அழகிய கரிய மீசை அவனின் இறுகிய உதட்டின் மேலே சிம்மாசனமிட்டு அவளை இம்சித்தது.

தன்னிலை மறந்து செழியனை நோக்கி கொண்டிருந்த குழலியின் பார்வை செழியனை இம்சிக்க அமைதி காக்க முடியாதவன் அவளை ஆராயத்த தொடங்கினான்.

பாலில் சந்தனம் கலந்த நிறத்தில் வட்டமுகத்தையுடயவளின் புருவங்களின் நடுவில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு அமர்ந்திருக்க  வேல்போன்ற கூர்மையான விழிகளில் செழியனை விழுங்கி விடுவது போல பார்தவள் ஆகாய வண்ணத்தில் நேர்தியாக அயர்ன் செய்த காட்டன் புடவையில் தேவதையென மிளிர்ந்தாள் அவளை காண செழியனுக்கு தெகிட்டவில்லை.

இருவரும் தங்களது தனி உலகில் மூழ்கியிருக்க ராமின் செருமல் கேட்டு சுயநினைவு கொண்டவர்களின் நிலை சங்கடமாகவே இருந்தது.

முதலில் தன்னை நிலை படுத்திய செழியன் ," கொஞ்சம் மாலினி விஷயமா உங்ககிட்ட பேசலாம் னு வந்தோம்," என்று கூறினான்.

" ம்... மாலினி விஷயமாவா??" என்று கேட்டவளிடம்," ஆமா எனக்கு மிஸ் மாலினியோட கேஸ் டீடெய்ல்ஸ் தெரியனும் , ஐ நோவ் இட் இஸ் கான்ஃபிடென்ஷியல் பட் கேஸ் நீட்ஸ் திஸ்," என்று கூறினான்.

" புரியுது கமிஷனர் சார் பட் என்ன கேஸ் அப்படீனு நான் தெரிஞ்சுக்களாமா??"என்று வினவியவளை அமைதியாக நோக்கியவன்  பிறகு," சுதீப் இஸ் மிஸ்ஸிங் அன்ட் ஐம் ஹான்டுலிங் திஸ் கேஸ்," என்று கூறிவிட்டு ராமை அர்த்தத்துடன் நோக்கினான்.அந்த பார்வையில் சுதீபின் மரணத்தை தெரிவிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்ததை உணர்ந்து கொண்ட ராம் தன் கண்களை மூடி தன் சம்மதத்தை தெரிவித்தான்.

" ஒரு வாரத்துக்கு முன்னாடி சுதீபும் மாலினியும் என்னை பார்க்க வந்தாங்க..., " என்று கூறி நிறுத்தியவள் சிறு அமைதிக்கு பிறகு ," மாலினிக்கு அடிக்கடி மயக்கம் வருது காரணம் தெரியலை னு சொல்லி சும்மா செக் அப் பண்ண  வந்தாங்க, நான் எல்லா டெஸ்டும் எடுத்து பார்ததுல அவங்க  கன்சீவா இருக்கிறது தெரியவந்தது, அப்போதான் அவங்க கல்யாணத்துக்கு காத்திருக்கும் தம்பதிகள் அப்படீனும் இன்னும் ஒரு வாரத்தில அவங்க கல்யாணம் இருக்கிறதும் தெரியவந்தது ,"என்று கூறினாள்.

" மாலினி கன்சீவா இருக்கிறது அவங்க ரெண்டுபேருக்குமே பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு னு அவங்க முகமாற்றத்தை வச்சு தெரிஞ்சுகிட்டேன், அதுக்கு ஏத்த மாதிரி மாலினி அழ ஆரம்பிச்சுடாங்க அவங்களை சுதீப் சமாதானப்படுத்திறதா சொல்லி வெளிய கூட்டிட்டு போய்டாரு," என்று கூறி நிறுத்தினாள்.

" ஓ....அப்ப போனவங்க திரும்ப வந்தாங்களா??" என்ற செழியனின் கேள்விக்கு ," ஆமா  நான் அடுத்த பேஷன்டை பார்த்து முடிச்சதும் திரும்ப உள்ள வந்தாங்க, இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா மாலினிக்கு மனகஷ்டம் கொடுக்கும் அதனால இந்த விஷயத்தை ரகசியமா வச்சுக்க சொல்லி கேட்டுகிட்டாங்க, கல்யாண த்திற்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்குனு நானும் சம்மதிச்சுட்டேன்." என்று கூறினாள்.

ஒரு சிறு அதிர்வுடன் செழியன்," ஓ....அப்ப மாலினி கர்பமா இருக்குறது யாருக்குமே தெரியாதா??"

"சுதீப் மாலினி தவிற யாருக்கும் தெரியாது, "

" ஓ....அதுக்கப்பறம் அவங்களை நீங்க மீட் பண்ணீங்களா??"

" இல்லை நேத்து காலையில மயக்கமான நிலையில மாலினியை இங்க கொண்டுவந்த போது தான் பார்த்தேன்,"

"இப்ப எப்படி இருக்காங்க வாட் இஸ் ஹெர் கன்டிஷன் நவ்??"

" நேத்து கல்யாணம் நின்னுபோச்சு அப்படீனு செய்தி கேட்டதும் அவங்களுக்கு பயங்கர அதிர்ச்சி பிளட் சுகர் , பிளட் ப்ரஷர் எல்லாம் ஷீட் அப் ஆகி மயக்கமாகிட்டாங்க அவங்க கெட்ட நேரமோ என்னமோ கீழ விழுந்த இடத்துல கூர்மையான ஏதோ ஒரு பொருள் மேல மோதி பின்னந்தலையில நல்ல அடி அதுனால ரத்தம் நிறைய.போயிருக்கு,"

" ஓ....அதனால தான் நினைவு இல்லாம இருந்தாங்களா??

" அப்படியும் சொல்லலாம் ஆனால் அவங்களோட மயக்கத்திற்கும் நினைவு இல்லாதததுக்கும் அதிர்ச்சி தான் காரணம், எல்லாதுக்கும் மேல அவங்களோட  கரு கலைஞ்சிடுச்சு," என்று கூறி நிறுத்தினாள்.

அங்கே அமைதி மட்டுமே நிலவியது அதை கலைத்த செழியன்," இந்த அபார்ஷன் பத்தி மாலினிக்கு??"என்று நிறுத்தினான்.

" தெரியாது இன்னொரு அதிர்சியை தாங்குற சக்தி அவங்க மனசுக்கு இல்லை, அதனால தான் எங்க அதை நீங்க வெளிப்படுத்திடுவீங்களோனு பயந்து உங்ககிட்ட கொஞ்சம் அதிகப்படியா பேசிட்டேன் மன்னிச்சிடுங்க," என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள்.

" பரவாயில்லை அதுல தப்பில்லை நான் முதல்லயே உங்ககிட்ட அனுமதி  கேட்டுட்டு விசாரிச்சிருக்கனும் தப்பு என்னுடயது தான்," என்று கூறினான்.

" பரவாயில்லை ....ஆமா உங்களுக்கு எப்படி மாலினி கர்பமா இருக்கிற விஷயம் தெரியும்??இதுவரை யாருக்குமே தெரியாதே??" என்று கேள்வியுடன் இருவரையும் நோக்கினாள்.

அந்த கேள்விக்கு பதில் கூறாத செழியன்," நாங்க மாலினிகிட்ட விசாரனை செய்யனும் நாங்க யாரு னு அவங்களுக்கு தெரியாது அவங்க மனசுல சந்தேகம் எழாத மாதிரி நாங்க பாத்துக்கிறோம்.எங்ஙளுக்கு வேற வழி இல்லை, " என்று கூறினான்.

ஒரு சிறு யோசனைக்கு பிறகு ," ம்...சரி ஐ டிரஸ்ட் யூ ," என்று கூறினாள்.

" தாங்க்ஸ் டாக்டர்...நாங்க அப்ப கிளம்புறோம் ," என்று கூறி விடைபெற முயன்ற செழியனை தடுத்தது ஒரு குரல்.

"இளா..அத்தான்......."

அந்த அழைப்பை கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவன் திரும்பி குழலியை நோக்கினான்.

மொத்த சோகத்தையும் தன்வசம் கொண்டவளை போன்று தோன்றம் கொண்ட குழலி விழிகளில் கண்ணீர் நிரைந்திருக்க ," நான்.உங்களுக்கு வெறும் டாக்டர் மட்டும் தானா??? " குரலில் நடுக்கமும் அதிர்வும்  வெளிப்பட பரிதாபமாக கேட்டவளை கண்ட செழியனின் மனம் அவளுக்காக பாகாய் உருகியது அவளை அள்ளி தோளில் சாய்த்து ஆறுதல்படுத்த துடித்த மனதை அடக்கிய செழியன்," குழலி நம்மளோட அத்தியாயம் முடிஞ்சு எத்தனையோ வருஷங்கள் ஆகிடுச்சு அதை எக்காரணம் கொண்டும் புதுப்பிக்க முடியாது,  உங்க.குடும்பத்துல திரும்ப வந்து சேர்ரது என் மரணத்திற்கு சமம்," இறுகி குரலில் கூறியவன்.அவளை திரும்பியும் பாராமல் வெளியேறினான்.

போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் ," எத்தனை வருஷம் ஆனாலும் உங்க வருகைகாக நான்.காத்திருப்பேன்.அத்தான்.....," என்று கூறி கண்களை துடைத்துக்கொண்டு தன் வழக்கமான வேலைகளை கவனிக்க சென்றாள்.

********

அந்த பைக் மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தது , எதிரே.வந்த வாகனத்தின் மீது மோதும் அளவு அந்த ஓட்டுனரின் நிதானம் சிதறிக்கிடந்தது , பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராம்," டேய் வண்டியை கொஞ்சம் ஓரமா நிப்பாட்டு ," என்று கத்தியும் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத செழியனை குறித்து கவலை கொண்ட ராம் பின் அமைதியாக அவன் பின்னே அமர்ந்து விட்டான்.

முயல்.வேகத்தில் வாகனத்தை செழுத்திய செழியன் அந்த கடற்கரை யில் தன் வாகனத்தை நிறுத்திய.பின் தான் சுய உணர்வு கொண்டு திரும்பி நன் நண்பனை நோக்கினான்.

கண்களை இறுக மூடி.பயத்தில் அவன்.அமர்ந்திருந்த நிலையை பார்த்த செழியனால் தன் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை , சிரிப்பு சத்தம் கேட்டு கண்களை திறந்த ராமிற்கோ செழியன்.மேல் கோபம்.வர அவனை அடிக்கத்துவங்கினான். சரமாரியாக அவன் அடியை இஷ்டப்பட்டு வாங்கிய.செழியன்," ,சாரிடா நான் பின்னாடி இருக்கிறதையே மறந்துட்டேன்.அதான் இவ்ளோ வேகமா வந்தேன்," என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

" சே...சே....அப்படி இல்லை மனசுல குழப்பம் இருக்கும்போது நீ இப்படிதான் வண்டி ஓட்டுவ அப்படீனு தெரியும் அதனால தான்.அமைதியா வந்தேன் , சரி.இப்ப என்ன குழப்பம் உனக்கு," என்று.கேட்டான்.

" குழப்பமில்லை  மாலினியோட வாக்குமூலத்தை பத்தி யோசிச்சுகிட்டே வந்தேன், அதான் இவ்ளோ வேகம்," என்று கூறி நிறுத்தியனின் மனம் மீண்டும் மாலினியுடனான  அவர்களின் சந்திப்பை நினைத்தது.

***********

குழலியிடமிருந்து விடைபெற்ற இருவரும் மாலினியின்.அறைக்குள் நுழைந்தனர்.இவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்த  மாலினியிடம்," நாங்க சுதீபோட ப்ரெண்ட்ஸ் ," என்று அறிமுகம்.செய்தான் ராம்.

" சுதீபோட ப்ரெண்ஸா.....ஆனால் உங்களை நான் இதுவரைக்கும் சுதீப் கூட பார்த்தது இல்லையே....,"என்று வினவினாள்.

" ஆமா...நாங்க வெளிநாட்டுல இருக்கிறதால ஃபேஸ்புக் வாட்ஸ்அப் ல பேசிப்போம் நேர்ல சந்திக்கிர வாய்ப்பு கிடைக்காது, அதான் உங்க கல்யாணத்துக்கு வரலாம் னு நினைச்சிருந்தோம் ஆனால அதான் தடைபட்ருச்சு னு.கேள்விபட்டு ரொம்ப அதிர்ச்சி," என்று கூறிய செழியன் மாலினியின் முகத்தை ஆராய்ந்தான் அதில் வருத்தமும் ஏமாற்றமும் நிறைந்திருந்தது.

நினைவு வந்தவளாக திடீரென்று ," சுதீப் எங்க நான் அவரை பார்க்கவே இல்லை நான் கண்ணு.முழிச்சதுல.இருந்து. கேட்டுட்கிட்டு இருக்கேன் யாருமே பதில் சொல்ல மாட்றாங்க," என்று எதிர்பார்புடன் செழியனை நோக்கினாள்.

" அவனை இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வீட்டுக்கு அனுப்புனோம், நேத்து நீங்க மயங்கிட்டீங்க.னு தெரிஞ்சு துடிச்சு போய் வந்தான் நேத்து முழுசும் உங்க பக்கத்திலயே தான் இருந்தான்.அதான் ரொம்ப கலைப்பா இருக்கானு அவனை வீட்டுக்கு அனுப்புனோம், " என்று தடுமாறாமல் கூறிய செழியனை நன்றியுடன் பார்த்தாள் மாலினி.

" உங்களுக்கு எப்படி சுதீப் பழக்கம் ?"செழியன்.

" நான் அவங்க ஆட் கம்பெனியில மாடலா வேலை.பார்த்தேன் அப்ப தான் சுதீப தெரியும்," என்று கூறி அமைதியானாள்.

"சுதீபோட மத்த ப்ரெண்ஸெல்லாம் யாரும் வரலையா???"

" எனக்கு தெரியலைங்க அவருக்கு க்ளோஸ் னா ரித்தீஷ் தான் அவரு வந்திருப்பாரே??? சுதீப விட்டு ஒரு நொடி கூட அவரு பிரியமாட்டாரு," என்று கூறியவளின்.குரலில்.ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.

" ரித்தீஷா????அப்ப உதய் சுதீப் கூட ரொம்ப க்ளோஸ் இல்லையா????"என்ற செழியனின் ஆச்சரியத்தை பார்த்த மாலினி ஒரு.வறண்ட புன்னகையுடன் சுதீபின் நண்பர்கள். பற்றி கூறத்துவங்கினாள் .அதை கேட்ட செழியன் மற்றம் ராமின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது.

     






















Bạn đang đọc truyện trên: Truyen247.Pro