Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-9

அழகிய இரவு ஆபத்தையும் அழகையும் பகிர்ந்தளித்தவாறே கடக்க....நடுநிசி இரவு மணி 1.... அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்... நம் நண்பர்கள் ஆறு பேரும் உறவுகளும் நட்பும் மீண்டும் கிடைத்ததில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தனர்...

இந்திரனின் அறையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் அவன்....அவனின் மூடிய இமைகளுக்குள்... ஒரு பெண்ணின் குரல்.... இந்தர் இந்தர் என விடாமல் அழைப்பதாய் கேட்டது... புரண்டு புரண்டு படுத்தவன் நிம்மதியாய் உறங்க தொடங்கினான்...

திவ்யாவும் அனுவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.. இருவரின் கணவிலும் அவரவரின் துணை வந்து போய் கொண்டிருந்தனர்...

ப்ரியா வீனாவை கட்டிக் கொண்டு உறக்கத்தில் இருந்தாள்... பவியும் ரக்ஷாவும் ஒரே அறையில் உறங்கி இருக்க... தான்யா தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்...

முகிலின் அறையில் தலையனையை அனைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனின் கனவில் ஒரு திடீர் காட்சி.... இருள் சூழ்ந்த காட்டில் ஒரு பெண் காயங்களுடன் ஓடிக் கொண்டிருந்தாள்... அவளை பின் தொடர்ந்து சிலர் ஓடி வந்துக் கொண்டிருந்த சலசலப்பு... அமைதியான காட்டில் மூலை முடுக்கெங்கிலும் ஒலித்தது.... மூச்சை பிடித்தவாறு ஓடியவள்.... தடுக்கி விழுந்தாள்... அடுத்த நொடி காட்சிகள் மறைந்து... பச்சை பசேல்லென இருந்த வயல்வெளி தெரிந்தது... கண்கெட்டும் தூரம் வரை வெரும் பனி மூட்டம்... அதில் மெல்லிய ஒலி சினுங்களாய் அவன் செவிகளை எட்டியது... தொலைவில் ஒரு பிம்பம்... ஓடி வருகிறது.... கருங்கூந்தல் தாண்டவாமாட... மைவிழிகள் இதயத்தை கிழிக்க... ஒயிழாய் ஓடிவந்தாள் அவள்... பனி மூட்டம் அவளின் முகத்தை மறைத்து விழிகளை மட்டும் தெரியும் படி விளையாடிக் கொண்டிருந்தது... ஓடி வந்தவள்... இவன் அருகில் வருவது போல் வந்து அவனை தாண்டி ஓடினாள்... எதை பற்றியும் சிந்திக்காமல் அவளை துரத்த தொடங்கினான்.... ஒரே எட்டில் அவளை பின்னிருந்து அனைத்தவன்... மூச்சு வாங்கவும் காற்றோடு காற்றாய் மறைந்தாள்.... திடீரென காட்சிகள் மாறி... ஒரு போற்களம்... அதில் பலர் குறுதி வெல்லத்தில் மிதந்து கிடக்க... தொலைவில் ஓர் பெரிய உருவம் நடந்து வந்தது... அதை சரியாய் பார்க்கும் முன்னே அவன் கண்களுக்கு அகப்பட்டது அதே மை விழி....

ஆனால் அது அவளின் விழியே தவிற... அது அவளில்லை... அதே விழி... வேறு தோற்றத்தில் அவனை பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டே முன் வந்தது... அவ்விழியின் கூந்தல் காற்றில் படர்ந்திருக்க.... அதன் கால்கள் காணாமல் போயிருந்தது.... காட்டெறியாய் அலரிய அப்பெண்... நொடியில் வலிமை குறைந்து கிழவியை போல் மாறினாள்.... முகிலுக்கு புரிந்தது... இவள் தான் முன் வந்த அதே பெண் ஆனால் என்னை ஏமாற்ற வேறு ஒரு வேடத்தில் அப்போது வந்திருக்கிறாள்... என யூகித்ததும் நொடியில் சினம் கொண்ட அவள்... அவளின் நீண்ட கூந்தலை அவனை நோக்கி அதிவேகமாய் செலுத்தினாள்.... திடுதிடுபுவென கனவில் இருந்து எழுந்தான் முகில்....

............

அதே நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அஷ்வன்த்தின் கனவில் சில பல நிழல்கள் வந்து வந்து மறைய.... புருவங்களை சுருக்கி கொண்டு உறக்கத்தில் இருந்தான்.... அவன் அருகிலே ஒரு சிறிய உருவம்... குடுகுடுவென ஓடுவது போல் தெரிந்தது... திடீரென அந்த உருவம்... அதன் கைகளை தட்ட... ஒரு ஒளி பரவி.. அது துருவன் என வெளிகாட்டியது... அந்த ஒளி... அறையின் மேல் குதிக்கு சென்றதும்... மெல்ல கருப்பாய் மாற தொடங்கியது... துருவன் அங்கிருந்து மறைந்தான்.... அவ்வொளி மெல்ல மெல்ல அஷ்வன்த்தின் அருகில் நெருங்கியது.... அப்போது சரியாக... உறங்கிக் கொண்டிருந்த நம் நாயகிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் கண் முளித்தனர்... முதலில் எழுந்த ப்ரியா... அறையை சுற்றி கண்களை சுழலவிட்டாள்... ஒரே இருட்டு தான்... கை லேசாய் நடுங்க... அடுத்த நிமிடமே வீனாவும் எழுந்து கொண்டாள்... ப்ரியாவின் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்வதை கண்டு... அவளும் நடுங்க தொடங்கினாள்....

ப்ரியா : மச்சி....

வீனா : சொல்லு மச்சி....

ப்ரியா : நம்ம ரூம் ரொம்ப பெருசா இருக்குள்ள???

வீனா : ஆமா டி... நம்ம இரெண்டு பேர்க்கு எதுக்கு இவ்ளோ பெரிய ரூமு??? அதனால...

ப்ரியா : அதனால...

இருவரும் : அதனால அவளுங்க ரூம்க்கு போய்டலாம் என ஒரே போல் கூற... திடீரென்று காற்று வீசவும் பயந்து போய் பரபரப்பாய் கதவை திறந்து வெளியே வந்தனர்... அதே போல் தான் அவர்ளின் அறையின் இடதிலும் வலதிலும் இருந்த அறைகளிள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள்... திடீரென எழுந்து இருட்டை கண்டு பயந்து ஒரே நேரதில் கதவை திறந்து வெளியே வந்தனர்... ரக்ஷா பவி அனு திவ்யா தான்யா.... ஏழு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வலிய சிரித்துவிட்டு...

நாம ஒன்னாவே தூங்கலாம்... என கை போட்டுக் கொண்டு கும்பலாய் அனுவின் அறைக்குள் நுழைந்தனர்... அறைக்குள் நுழைந்த பவி... எதர்ச்சியாக அஷ்வன்த்தின் அறையில் அந்த ஒளியை லைட் எறிவதாய் நினைத்து.. இவன் ஏன் இப்போ முளிச்சிர்க்கான்... என இவள்களிடம் கூறாமல் அவனின் அறையை நோக்கி நடந்தாள்...

அந்த ஒளியில் இருந்து... மெல்ல... ஒரு கை வெளிவந்தது... தளர்ந்த தோல்.... நீண்ட நகங்கள்.... என இருந்தது அக்கை.... மெதுமெதுவாய்... ஒளி மெல்ல மறைய... மோகினி அவளின் தடியுடன் தோன்றினாள்.... அஷ்வன்த்தின் அருகில் நின்ற சிறிதே நொடிகளிள் அவளின் தோற்றம் மாற தொடங்கியது... 90 வயது மூதாட்டியை போல் தெரிபவள்.... நொடியில் 20 வயது பெண்ணின் தோற்றத்திற்கு மாறினாள்.... வெளுத்த தோல்... நறநறவென தேய்க்கும் பற்களின் சத்தம்.... கை விரலில் வலியும் இரத்தம்...துளி துளியாய் சொட்டியது... அஷ்வன்த்தை நெருங்க நெருங்க அவனின் மெத்தையில் எல்லாம் ஒரு ஒரு துளி இரத்தம் கோடாய் விழுந்தது... அவனை கொல்ல வேண்டி பரபரக்கும் இடது கை.... இடது கையில் நடுவிரல் இல்லாமல்... மற்ற நான்கு விரல்கள் மட்டுமே இருந்தது.... நகமெல்லாம் கருத்துபோன நிறத்தில் கன்னங்கரேல் என்று காட்சி அளித்தது... மெல்லிதாய் ஒரு சத்தம் மட்டுமே அது அஷ்வன்த்தின் மூச்சு காற்று.... மெல்ல அவனின் முகம் நோக்கி குனிந்தாள் அவள்... அவனின் முகத்திற்கு அருகே அவளின் மூச்சுக்காற்று துர்நாற்றமாய் பரவியது.... அவன் உறக்கம் கலைய முனைந்தாலும் எழ முடியா நிலையில் தள்ளப்பட்டான்.... பவி அஷ்வன்த்தின் அறையை நோக்கி வர....மோகினிக்கு காலடி சத்தம் கேட்டது... .. மெதுமெதுவாய் காலடி சத்தம் மட்டுமே கேட்ட அறையில் அதனுடன் சேர்த்து யாரோ சலங்கை சத்தமும் கேட்டது... தூரமாய் ஒளித்த சலங்கையின் ஒலி... மெல்ல மெல்ல அருகே கேட்டது... அஷ்வன்த்தை இன்னும் நெருங்க நினைத்த மோகினி இச்சலங்கை சத்ததில் பட்டென பின் நோக்கி வீசி எறிந்ததைப் போல் கீழே போய் விழுந்தாள்.... அறை கதவை குரோதமாய் முறைக்கத் தொடங்கியவள்... அது திறக்க உள்ளதை அறிந்து அடுத்த நொடி காற்றில் மறைந்து போனாள்...

பவி கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர.... அஷ்வன்த் பட்டென எழுந்து லைட்டை போட்டான்.... வேர்த்து விருவிருத்து போய் அமர்ந்திருந்தவனை கண்டு பதறியவள்... அவனின் அறையை சாத்தி விட்டு அவனின் கட்டில் அருகில் ஓடினாள்.... மூச்சடைத்தது அஷ்வன்த்திற்கு... துர்நாற்றம் இன்னும் தன் அருகில் உள்ளதை போல் உணர்ந்தான்... பவி அருகில் வர... துர்நாற்றம் மறைந்ததை உணர்ந்து சட்டென அவளை இருக்கி அனைத்துக் கொண்டான்...அஷ்வன்த்தின் முதுகில் ஆறுதலாய் தட்டி கொடுத்தாள்... அவனுக்குள் பவியை யாரோ தன்னிடமிருந்து பிரிப்பதைப் போன்ற உணர்வு கன நேரத்தில் குடி ஏறி இருந்தது.... அவளின் பதில் அனைப்பு நான் உனக்கானவள்... உனக்காக மட்டுமே பிறந்தவள் என நினைவு படுத்தியது.... கொஞ்சம் கொஞ்சமாக இருக்கத்தை தளர்த்தான்.... அவளை அனைப்பதை மட்டும் விட்டவன்... அவளின் கைகளை அவனின் மார்பின் அருகில் வைத்துக்கொண்டே அவளின் மடியில் தலை வைத்து படுத்து அவள் அவனின் கேசத்தை நிர்மலாய் வருடவும் எந்த வித குழப்பமும் இல்லாமல் நித்ரா ஆகிய பவிநித்ராவின் பிடியில் சிக்கினான்..... ஏன் அனைத்தான் என அவனும் கூறவில்லை... அவளும் கேட்கவில்லை....

சிறிது நேரத்திலே உறங்கியவனை கண்டு புன்னகைத்தவள் அவனின் தலையை தலயனையில் சாய வைத்து எழுந்துக் கொண்டாள்... நகரப் போனவளின் கைகளை இருக்கி பிடித்தவன் போகாத நித்ரா... என உறக்கத்திலே பேசினான்... அவனின் சொல்லை மீற முடியாதவளாய்.... கட்டிலின் கீழ் அவனின் கைகளை பிடித்துக் கொண்டே உறங்கியிருந்தாள்....

இங்கே அறையில் நுழைந்த ஆறு பேரும் பவியை காணாமல் திரும்பி பார்க்க... அஷ்வன்த்தின் அறையில் எறிந்த விளக்கின் ஒளியை கண்டு அங்கு தானே இருக்கிறாள்... வந்துவிடுவாள் என விட்டு விட்டனர்... நான்கு பெட் இருக்கும் அவ்வறையில் நான்கையும் ஒன்றாய் ஒட்டி போட்டு தூங்கலாம் என அவ்வேலையில் அனைவரும் ஈடுப்பட்டிருக்க... இந்த மாரி நாம எல்லாம் தள்ளி போடுரத நான் கணவுல பாத்தேனே... என யோசித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் பின் தோன்றினாள் மோகினி... தன் பின் யாரோ நிற்கிறார்கள்... இவள்களாக தான் இருக்கும் என நிமிர்ந்தவளின் முன் அனு ரக்ஷா திவ்யா தான்யா வீனா ஐவருமே படுத்திருக்க... இவள் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தாள்....

ப்ரியா : அப்போ நம்ம பின்னாடி யாரு??? என ஆமையை விட மெதுவாய் திரும்பி பார்த்தாள்... அங்கு ஒன்றும் இல்லை... ஹப்பா என மூச்சை விட... அடுத்த நொடி அவளின் தோலில் யாரோ ஒருவர் சுரண்ட பதறி அடித்து அலர தொடங்கினாள்... அவளை தொடர்ந்து ஐந்து அலரல்கள் வெளி வந்தது... டப்பென கண்களை திறந்த ப்ரியாவின் முன் நின்றனர் நம் ஐந்து நாயகிகளும்....

ப்ரியா : பிசாசுங்களா.. பிசாசுங்களா... இப்டியா டி பின்னாடி வந்து சொரண்டுவீங்க??? கூப்டா திரும்ப மாட்டேன்...???

வீனா : நீ நான் டி பிசாசு... அஞ்சு பேரும் மாத்தி மாத்தி கூப்ம் அப்டி என்னத்த தேதாக்குரன்னு கேக்க தான் கிட்ட வந்து கூப்டோம்... அதுக்கு போய்... கொலை பன்ன வந்தமாரி கத்துர??

ப்ரியா : கூப்டீங்களா???

திவ்யா : அடிங்க... தொண்ட தண்ணி வத்த கத்தி... நீயும் திரும்பல... தூங்கீட்டு இருக்குற மத்த யாருமே இங்க வரல...

தான்யா : மரியாதையா வந்து தூங்கீடு ஆமா...

ப்ரியா : அங்க யார்ட்ட டி தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க??? நான் தூங்க ஆம்பிச்சு அரமணி நேரமாவவது என்று போர்வையால் தன் முகத்தை மூடிக் கொண்டே கூறினாள்...

ரக்ஷா : உண்ண.... என அவளை அடிக்க ஓட.... தீடிரென மேலிருந்து விழுந்தது ஒரு பூ ஜாடி.... பதறிய பெண்களை ஒருவரை ஒருவர் இருக்கி அனைத்துக் கொண்டனர்.... அப்போது தீரை சேலை ஒதுங்கி தென்றல் காற்று வேகமாய் வீச... ச காத்தால தானா என சலித்துக் கொண்டள்கள்... அதை புறம் தள்ளிவிட்டு.... வீட்ட இடத்திலிருந்து ஓட்டத்தை தொடர்ந்தனர்.... மற்றவள்களும் இணைந்துக் கொண்டனர்... இப்படியே ஓடிப்பிடித்துக் கொண்டே சற்று நேரத்தில் உறங்கியிருந்தனர்... கீழே விழுந்த பூ ஜாடியில் இருந்து சிவப்பு நிற திரவம் ஒலுகியதை எவரும் கவனிக்காமலே உறங்கிவிட்டனர்....

காலை அழகாய் விடிய.... தன் வெண்ணிற மேகங்களை சற்று பரப்பி விட்டதைப் போல் காட்சி அளித்தது பறந்து விரிந்த அவ்வாணம்.... தன் கை மேல் ஏதோ மென்மையாக இருப்பதை உணர்ந்து மெதுவாய் கண்களை திறந்த அஷ்வன்த்திற்கு அந்நாளின் முதல் தரிசனமே அவனின் அவளின் குழந்தை முகம்....

அவள் நெற்றியில் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்த கற்றை முடியை காதின் புறம் ஒதுக்கி விட்டான்.... அவனின் வருடலில் மெல்ல தூக்கத்திலே புன்னகைத்தாள்....

பூக்குவியலாய் அவளை கையில் ஏந்தியவன்... யாரும் அறியாமல் அவளின் அறையிலே படுக்க வைத்துவிட்டு வெளியேறினான்... அஷ்வன்த்...

இருள் நிறைந்த மண்டபம்... அதன் முன் நம் ஏழு நாயகிகளும் நின்று கொண்டிருந்தனர்.... பல வருடமாய் சுத்தம் செய்யாமல் கைவிடப்பட்டதென தெரிய...அதன் கோலம் அவர்களின் மனதில் வலியை மூட்டியது... அதன் பாதை நீலும் வேகத்தில்... அங்கிருந்த ஓர் தூணின் முன் யாரும் எதிர்பார்க்காத வகையில்.... யாரோ ஒருவன்.... திருமண அலங்காரமென்றும் கூறாமல்... மிகவும் எழிமை என்றும் கூறமுடியாத ஒரு ஒப்பனையில் நின்ற பெண்ணின் நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு தன்னவள் ஆக்கினான் அவன்... அடுத்த நொடி அவனே அவளின் வையிற்றில் கத்தி ஒன்றை இறக்கினான்... அப்பெண்ணின் முகம் தெரியாத போதிலும்... அதிர்ச்சி அவளின் கண்கச் பிரதிபளித்தது.... சரக் சக் என மீண்டும் இரு முறை குத்த... தான் ஏமாற்றப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அப்பெண் அவனின் கழுத்தை பிடித்து நெறித்தாள்... அவள் கண்களிளே அப்பட்டமாய் தெரிந்தது... அவள் நினைத்தவன் அவள் முன் இல்லை என்று.... ஆனால் அவளின் தாக்குதல் எடுபடும் முன்னே மீண்டும் அவளை அதே கத்தியால் குத்தினான்.... இரத்தம் பீரிட்டு கொண்டு வர... இதற்குமேலும் தாங்க முடியாதென்பதாய் கீழே விழுந்தாள் அவள்... .. யாரவன் என இவர்கள் பார்க்க முயல அவன் திரும்புகையில் தெளிவாய் தெரிந்தான்... அவனை கண்டதும் அவன் உருவம் மாற தொடங்கியதை அறியாமல்...பேரதிர்ச்சியில் கணவிலிருந்தே எழுந்து விட்டாள் ப்ரியா....

அவன் வேறாரும் இல்லை நம் முகிலன்....திடீரென எழுந்து அமர்ந்தவள் ஆ வென வாயை பிளந்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ட அனு...

அனு : எழுந்தது லேட்டு... இங்க எப்போ இவ எந்திருப்பான்னு நாம இருந்தா.... வாய திறந்துக்குட்டு உக்காந்து கிடக்குது பாரு....என தலயனையை தூக்கி ப்ரியா மேல் எறிந்தாள்....
அதிர்ச்சியிலிருந்து எழுந்துக்கொண்ட ப்ரியா..... பதட்டத்தில் ஒலர தொடங்கினாள்.....

ப்ரியா: அடியேய்... அவன்.... பொண்ண அவன்.... குங்குமம்.... நா...

தான்யா : ஏன் டி ஒலர்ர

திவ்யா : தெளிவா சொல்லு டி

வீனா : இந்தா தண்ணீ குடி அப்ரமா சொல்லு....

மடமடவென மொத்த தண்ணீரையும் குடித்து தன்னை தேத்தினாள்....

ரக்ஷா : ம்ம் சொல்லு...

ப்ரியா : நம்ம முகில்... யாரோ ஒரு பொண்ண கல்யாணம் பன்னீட்டு வந்துட்டான் டி....

ரக்ஷா : என்னது கல்யாணமா???? 😱😱

ப்ரியா : ஆமா டி... அவ யாருன்னு தெரியல... அவன் பாட்டுக்கு குங்குமத்த வச்சிவிட்டுட்டான்...

அனு : மை டியர் உடன் பிறப்பே..

ப்ரியா : எஸ் மை டியர் உடன் பிறப்பே...

தான்யா : கனவு தான கண்ட???

ப்ரியா : ஆமா டி...

வீனா : அடிங்க மவளே... கனவக் கண்டுட்டு வந்து ஏன் டி எங்களுக்கு ஹார்ட் அட்டக் வர வக்கிற??

ப்ரியா : ஏ நம்புங்க டி... ஏன் கணவுல வர்ரதுலாம் வேர நடக்குது டி...

திவ்யா : ஏன் டி அவனே சன்யாசி மாரி சுத்திக்கிட்டு இருக்கான்... அவன் ஒரு பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்டான்னு சொன்னா பொறந்த குழந்த கூட நம்பாது டி...

அப்போதே உறக்கத்தில் இருந்து எழுந்திருந்த பவி இவள்களை நோக்கி வரும்போது... திவ்யா வின் கூற்றை கேட்டு யாரென கூறாமலே...

பவி : என்னது முகில் ஒரு பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்டானா??? என்ற கேள்வியோடே உள்ளே வந்தாள்...

திவ்யா : நா முகில்னு சொல்லவே இல்லையே டி...

பவி : அதான் சன்யாசின்னு சொன்னியே... அப்போ கன்பார்ம் அது அவன் தான்....

ரக்ஷா : கனவு கண்டுட்டு அந்த எரும ஒலருது டி...

பவி : அதான... இப்போதா முகிலும் சத்தீஷும் வனிமா பின்னாடியும் காவியா அத்த பின்னாடியும் சோறு போடுங்கன்னு சுத்திக்கிட்டு இருந்தானுங்க...

ப்ரியா : அவனுங்க அதுக்கு தா லாயிக்கு... அய்யையோ... பலென்ஸ் கனவ விட்டுட்டேன்... கல்யாணம் பன்னவன்....லூசு மாரி அவனே அவள குத்தி கொண்ணுட்டான் டி... பாவம் அந்த பொண்ணு...

அனு : அப்போனா அது நம்ம முகிலே இல்ல டி லூசு....

தான்யா : அத விடுங்க.... விஞ்ஞானி மேடம்... நைட் எங்க போனீங்க???

பவி பேந்த பேந்த முளிக்க...

அனு : ம்ம் கேக்கனும் னு நெனச்ச... நல்லவேளை நியாபகப்படுத்துன மச்சி... என தான்யாவின் கையுடன் அவளின் கையை அடித்துக் கொண்டாள்....

பவி : அதுவா.... அது...

திவ்யா : நாங்க வர்ரது இருக்கட்டும்... நீங்க சொல்லுங்க...

பவி : அது வந்து...

ரக்ஷா : வந்தாச்சு வந்தாச்சு...

பவி : நடுவுல நடுவுல வர்ரதீங்க டி... நான் நேத்து ஏன் ரூம்லையே படுத்து தூங்கீட்டேன்....

வீனா : நீ உன் ரும்ல??? அதுவும் தனியா???

பவி : ஆமா டி.... மலுப்ப வழியில்லாமல் முளித்த சமயம்.... தெய்வானை சாப்பிட அழைத்து பவியை காப்பாற்றினார்...

ப்ரியாவும் பவியும் ப்ரெஷ்ஷாக செல்ல... மற்றவள்கள் கீழே இறங்கினர்...

டைனிங் டேபிலில் தட்டை பிடித்தவாறு அமர்ந்திருந்தான் சத்தீஷ்.... அவன் தோலில் கைப் போட்டு போனில் எதையோ நோன்டிக் கொண்டிருந்தான் ரனீஷ்... ரவியும் அஷ்வன்த்தும் மருத்துவமனையை பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்... வீர் இந்திரனுடன் தங்களின் கதையை பற்றி கூறிக் கொண்டிருந்தான்.... க்ரிஷ் அனுவுக்காக காத்துக் கொண்டே மாடியை பார்ப்பதும் ரூமை பார்ப்பதும் சட்டென பார்வையை மாற்றுவதுமாய் இருந்தான்.... க்ரிஷின் முகத்தில் தானாய் புன்னகை அரும்பியதிலே அனைவரும் வந்துவிட்டனர் என்று புரிந்துக் கொண்ட சத்தீஷ்...சமையலரை நோக்கி கத்தினான்...

சத்தீஷ் : அத்தமா... அத்து... பாட்டி...எல்லாரும் வந்தாச்சு... சாப்பாட எடுத்துட்டு வாங்க...

பாட்டி : அட வரோம் இரு டா... கத்தி கத்தி உசுர வாங்குர...

சத்தீஷ் : நானா??? நீங்க தான் எனக்கு சாப்பாடு குடுக்காம உயிருக்கு டாட்டா காமிச்சிட்டு இருக்கீங்க...

இலக்கியா : சரி சரி... இந்தா ..... பசங்களா எல்லாரும் வாங்க என குரல் குடுக்க...

அனைவரும் டேபிலில் கூடினர்... தங்களுக்கு வைத்த உணவை அனைவரும் அமைதியாய் உண்பதை கண்ட சத்தீஷ்...

சத்தீஷ் : மைன்ட் வாய்ஸ் : (இது நம்ம பேமிலி மாரி தெரிலயே... இவ்ளோ அமைதி ஆகாதே) அப்டி என்ன யோசனைல எல்லாரும் இருக்கீங்க ன்னு தெரிஞ்சிக்கலாமா மக்களே...

சங்கரன் தாத்தா : மக்களே வா???நீ எப்போ டா ராஜா வான...???

சத்தீஷ் : ஜஸ்ட் 5 செக்கென்ட்ஸ் பிஃபோர் 2 பாண்டி...

வேலு தாத்தா : டேய்....

சத்தீஷ் : நோ எமோஷன்ஸ் 1 ஸ்ட் பாண்டி...

மாதவன் அவனை முறைக்கவும்...

சத்தீஷ் : ஆஹா வாய கன்ட்ரோல் பன்னுடா.... சரி சரி சொல்லுங்க....

முகில் : நம்ம ஊருல நடக்குற கொலை கடத்தல பத்தி தான் டா யோசிச்சிக்கிட்டு இருக்கோம்...

சத்தீஷ் : முகிலா... நோ " டா ".... இங்கு நான் மன்னன்...

முகில் : ஓஹோ... அந்த கேஸை பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன் மன்னா.... அவங்க எல்லாரும் ஒரு வாரம் முன்ன காணாப் போன ஒரு சின்ன பொண்ண பத்தி யோசிச்சிக்குட்டு இருக்காங்க....

இந்திரன் : சின்ன பொண்ணா??? ஏன் டா எங்கள்ட்ட சொல்லவே இல்ல???

முகில் : உங்கள எதுக்கு கொலப்பனும் னு தான் டா....

அனு : எந்த பொண்ணு??? நம்ம ஊருல என்ன கடத்தல் லாம் நடக்குது???

பவி : எங்களுக்கு ஒன்னும் தெரியாதே...

வேலு தாத்தா : ஏன்னே தெரியல மா... நம்ம கிராமத்துல பல வர்ஷமா இது நடக்குது... மாசத்துக்கு மூணு பொண்ணுங்க காணா போய்டுராங்க... இல்லையா... குழந்தைங்க காணாப் போய்டுராங்க... கொலையும் சில வர்ஷமா நடந்துக்குட்டு வருது டா...

ரித்விக் : கேஸ யார் ஹன்டில் பன்றது??

முகில் : இந்த கேஸ் ஏன்ட்ட இருந்தப்போ நான் நம்ம ஊர் காட்டுல தான் நடக்குது ன்னு கண்டுப்புடிச்சேன்.... பட் நம்ம ஊர்லையே வேற ஒரு எடத்துலையும் நடக்குது... அது எங்கன்னு கண்டுப் புடிக்கிறதுக்குள்ள... கேஸ மேலிடத்துலேந்து வேற ஒரு போலீஸுக்கு மாத்தீட்டாங்க....

அஷ்வன்த் : இப்போ ஒரு பொண்ணு காணாப் போய்ர்க்காலே அவ யாரு???

முரளி : மானிக்கம் இருக்காருல அவரு வீட்டு பக்கத்துலையே ஒரு தாத்தாவும் அவரு பேத்தியும் இருந்தாங்க... அந்த பொண்ணுக்கு அவரு தாத்தா வ விட்டா யாரும் இல்ல... நம்ம மானிக்கத்துக்கிட்ட தான் வேல பாதத்துர்க்காரு... அந்த தாத்தா... ரொம்ப ஏழ்மையான குடும்பம்...அன்னைக்கு வெள்ளி கிழமை பள்ளி கூடத்துக்கு போன புள்ள திரும்ப வரல...அந்த தாத்தா போய் விசாரிச்சப்ப....

தான்யா : சொல்லுங்க மாமா.... விசாரிச்சப்ப???

இரமனன் : உன் பேத்தி யார் கூடையாவது ஓடி போய்ருப்பான்னு சொல்லி தொரத்தீர்க்கானுங்க... 8 வயசு குழந்தை எப்டி ப்பா இந்த மாரி பன்னுவா??? சின்ன பொண்ணு...

இலக்கியா : மூணு நாள் ஆச்சு... எங்க இருக்காளோ தெரியல... அவள அவளாலையே காப்பாத்திக்க முடியுமான்னு கூட தெரியல... நம்ம ஊர்லையும் அந்த மாரி தப்பு நடந்துடுமோன்னு பயமா இருக்க... இறைவா நீ தான் அவள பாதுகாக்கனும்...

இதனை கேட்ட நம் நாயகன்களுக்கு மனம் கொதிக்க தொடங்கியது.... ப்ரியாவின் மனக்கண்ணில் ஒரு பெண்ணை சிலர் நெருங்குவதைப் போல் வந்து போக.... டப்பென கண்களை மூடிக் கொண்டாள்.... ப்ரியாவின் எதிரே அமர்ந்திருந்த சத்தீஷ் அவளின் கண்கள் இருக்கி மூடியதைக் கண்டு... பேச்சை மாற்ற தொடங்க...ரனீஷுக்கு கையில் இடித்து சிக்னல் கொடுக்கவும்....அவனும் புரிந்துக் கொண்டு...

சத்தீஷ் : சரி இப்போ எல்லாரும் சாப்டுட்டு கெளம்புங்க... அந்த பொண்ண சீக்கிரமே கண்டுபுடிச்சடலாம்...

ரனீஷ் : மன்னா...

சத்தீஷ் : என்னா???

ரனீஷ் : உன்னோட சப்பாத்தில உப்பே இல்ல மன்னா.... உப்பு போட்டு சாப்டரவன் இல்லையா நீ...

சத்தீஷ் : உனக்கு எப்டி அது தெரியும்??? நாலா உப்பு போட்டு தான் டா சாப்புடுவேன்.... சரி என் சப்பாத்தில உப்பு இல்ல ன்னு உக்கு எப்படி டா தெரியும்...

ரனீஷ் : அததானே நா ரொம்ப நேரமா சாப்ட்டுட்டு இருக்கேன்... என கூறவும்... சத்தீஷ் குனிந்து அவனின் தட்டை நோக்க... அங்கோ சப்பாத்தி இல்லாமல் வெறுமையாய் இருர்தது...

சத்தீஷ் : தீன்னமுட்டி... உப்பு இல்லன்னு சொல்லிட்டு அதையும் தின்னுருக்க.... உன் தட்டுல உள்ளத சாப்ட்டா கொரஞ்சா டா பொய்டுவ???

ரனீஷ் : ஏன் தட்டுல சப்பாத்தி கொரஞ்சிடுமே...

சத்தீஷ் : இப்போ உன் உடம்புல இரத்தம் கொரயப் போது பாரு... என அவனை அடிக்க கை ஓங்க... அவன் எழுந்து ஓடிவிட்டான்.... சத்தீஷ் எழும் முன்னே அவன் தட்டில் காவியா ஒரு சப்பாத்தியை வைக்க...

சத்தீஷ் : சாப்பாட வைட் பன்ன வைக்க கூடாது ன்னு ஏன் தாத்தா சொல்லீர்க்காரு... நான் சாப்டுட்டு வரேன்... என சாப்பிட தொடங்கினான்...

இவர்களின் செயலில் அனைவரும் சிரித்து விட...பழய நிலை திரும்பியது...

காதல் தொடரும்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro