Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-37

முகில் அலரிய அலரலிலே குழப்பத்திலும் அச்சத்திலும் மூழ்கியிருந்த நாயகர்களை மீண்டும் அச்சத்தில் முக்கி எடுத்தது ஒவீயின் கோர அலரல்... சட்டென ஒவீ முகில் இருவரும் ஒரே நேரத்தில் அலர.... இதை புரிந்துக்கொள்ள முடியாமல் அனைவரும் தவிக்க... சட்டென இருவரும் பொத்தென கீழே விழுந்தனர்.... அடுத்த நொடி ஒவீவின் ஆவி அவள் உடல் மேல் மிதந்தது... அதை கண்டு அனைவரும் அதிர்ச்சியிலே நோக்க....

வீனா : ஒவீ... என்ன டி ஆச்சு உனக்கு... ஏன் இப்டிலாம் நடந்துக்குர.... முகில் க்கு என்ன ஆச்சு...

ஆவியாய் இருந்தவள் இவள் கூறுவதை கேட்காமல்... முகில் அருகில் ஓடியவள்... அவன் அருகில் அமர்ந்து... முகி முகி என அழத் தொடங்கினாள்... அனைவருக்கும் குழப்பமே மிஞ்சியது.... சட்டென மீண்டும் ஒவீ அவள் உடலுக்குள்ளே புகுந்துக் கொண்டாள்... அதே நேரம் முகில் அதே அலரலுடன் எழுந்தான்.... அவனறியாமல் அவன் தலையை பலமாய் முட்டிக் கொண்டான்.... சில நொடிகள் கடக்க.... ஒவீயும் அதே போல் எழுந்து அலர தொடங்கினாள்... அவளின் கூந்தல் நாழாப்பக்கமும் விரிந்து... அசைந்தது... மெல்ல மெல்ல... அவளின் உடல் பழைய நிலையை அடைந்தது.... அதே போல் முகிலும் சிறிது சிறிதாக தன் நிலையை அடைந்தான்....

நாயகன்கள் அவன் கீழே விழும் முன் சென்று பிடித்துக் கொள்ள... ஒவீயோ மயங்கி கீழே விழுந்தாள்.... அதிர்ச்சியில் எவரும் அவளை கவனிக்காமல் இருக்க... தான் நிலையில்லாமல் நிற்பதை மறந்து... அவள் விழும் சமயம்... நவீ என கத்திக் கொண்டே... மற்றவர்களை உதறிவிட்டு அவளை பிடித்துக் கொண்டான் முகில்...

அனைவரும் அவர்களையே கண் கொட்டாமல் பார்க்க.. தன்னை ஒன்றி நின்ற மது நிருவை விலக்கி விட்டு.... சேவன் என குரல் கொடுத்தான் அர்ஜுன் .. முகிலை தவிர்த்து அனைவரும்... இவனுக்கு சேவனை எப்படி தெரியும் என்பதை போல் நோக்க.... அவனோ மீண்டும் மீண்டும் சேவன் எனவே அழைத்துக் கொண்டிருந்தான்... பின்பு இந்திரன் அவனை வீட்டிலல்லவா இருக்க கூறினான் என்பது நினைவு வந்து... மண்டபத்தை நோக்கி யோக்யா என குரல் கொடுத்தான்.... அடுத்த நொடியே நம் யோக்யா.... ஊர்ந்தவாறு வந்து நின்றது... நாயகன்கள் அனைவரும் அதை பிரம்மிப்புடன் நோக்க.... நாயகிகளோ இவனுக்கு எப்படி தெரியும் என்று குழம்பினர்....

வெளியே வந்த யோக்யா.... அங்குமிங்கும் நோக்கி விட்டு... அப்படியே நிற்க... ச என தலையில் அடித்த அர்ஜுன் அவன் முகத்தில் இருந்த மாஸ்க்கை கலட்டினான்.... அச்சு அசல் முகிலின் மறு உருவமாய் நின்றவனை அனைவரும் கண் கொட்டாமல் பார்க்க... நிரு மற்றும் மது அவன் முகிலின் முகத்தை அச்செடுத்து மாஸ்க் அனிந்திருக்கிறான் என உணர்ந்து அமைதி காக்க.... அவனோ... யோக்யாவின் அருகில் சென்று...

அர்ஜுன் : யோக்யா... இதற்கு என்ன காரணம்... இவ்விருவருக்கும் இப்படி நடப்பதன் காரணத்தை கூறு... என கட்டளையாய் வினவ...

யோக்யா : அவள் இப்படி இருப்பதற்கு காரணம்... சிலரின் சதியாக இருக்களாம்.....
அவன் சர்ப்பத்திடம் பேசுவதை கண்டே அதிர்ச்சியில் இருந்த நாயகன்கள்... அதன் பதில் தங்களுக்கு புரிகிறதே என இன்னும் அதிசயித்து போயினர்.....

அர்ஜுன் : அப்படியெனில் இவன் அப்படி நடந்துக் கொண்டதன் காரணம் என்ன...

யோக்யா : மன்னித்துவிடு... நண்பா... அதை நான் அறியேன்...

அர்ஜுன் : யோக்யா.... நீ அறியாமல் எதுவும் நடந்திருக்காது...

யோக்யா : இல்லை நண்பா... உண்மையிலே இதன் காரணத்தை யான் அறியேன்....

இந்திரன் புறம் திரும்பியவன்....

அர்ஜுன் : உன் கட்ட விலக்கீட்டு... சேவன இங்க வர சொல்லு டா....

அவனும் சரி... என அப்படியே செய்ய... அடுத்த நொடி அங்கு ஓடோடி வந்தான் சேவன்....

சேவன் : மன்னியுங்கள் மன்னியுங்கள்... தாமதத்திற்கு மன்னியுங்கள்...

அர்ஜுன் : சேவா.... இங்கு நடந்ததன் காரணம் என்ன???

சேவன் : மன்னியுங்கள்... அதை பற்றி யான் அறியேன்...

நிரு : டேய் என்ன டா நடக்குது இங்க.... ஏன் முகிலும் ஒவீயும் இப்டி நடந்துக்குட்டாங்க... நீ எப்டி வந்த.... எதுக்காவது பதில் சொல்லு டா...

அர்ஜுன் : சொல்றேன் டி.... மொதல்ல முகில் ஏன் இப்டி நடந்துக்குட்டான்னு தெரியனும்....

" அதை யான் கூறலாமா??? " என்னும் குரல் கேட்டு... குரல் வந்த திசையை அனைவரும் நோக்க.... அங்கோ திரும்பி நின்ற அர்ஜுனை பார்த்தவாறு நின்றாள் மாயா.... இறுதி வரை மோகினி தயக்கத்தால் ஒத்துக்ககொள்ளவில்லை... ஆதலால் மாயாவே வந்திருந்தாள்....

தன் பின் குரல் கேட்டு திரும்பிய அர்ஜுன் மாயாவை கண்டு அதிர்ச்சியுற்றான்... மாயாவும் தான்... மாயா தன்னையும் அறியாமல் " அடுத்த வாரிசு " என உச்சரித்தாள்.... அர்ஜுனோ.... டக்கென திரும்பியவன்... அந்த மாஸ்க்கை மாட்டிக் கொண்டு திரும்பினான்....

நாயகர்கள் அனைவரும் அவளை கண்டு அதிர்ச்சியுற... பவி நிரு மது மூவரும் மாயாவை கண்டிருந்ததால்... அச்சமில்லாமல் இருந்தனர்.... தன் அதிர்ச்சியிலலிருந்து வெளி வந்தவள்....

மாயா : தாங்கள் யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்... யான் மாயா.... மோகினியின் சரிபாதி.... தங்களுக்கு உதவவே வந்துள்ளேன்...

தான்யா : இத எப்டி நாங்க நம்புறது...

அனு : அன்னைக்கு மாரி தாக்கீட்டன்னா....

திவ்யா : நீ ஏன் இங்க வந்த???

மாயா : பொருமை பொருமை...

க்ரிஷ் : Girls... அவங்கள நீங்க நம்பலாம்... பிரச்சனை இல்ல....

ரக்ஷா : என்ன டா திடீர்னு கச்சி மாறீட்ட...

சத்தீஷ் :லூசு அப்டிலாம் இல்ல... நாங்க உணர்ரத தான் சொல்றோம்...

இந்திரன் : அவங்க நல்லவங்கனு தா தோனுது...

சேவன் : ஆமாம் ஆமாம்... மாயா உங்களின் அன்பர்....

பவி : ஏ மாயா நல்லவ தான் டி.. அன்னைக்கு இவ தான் என்ன காப்பாத்துனா... என உண்மையை போட்டுடைக்க....

மது : யார்கிட்ட இருந்து டி...

பவி : ஒரு பிசாசு கிட்ட இருந்து டி... நம்ம கூட மண்டபத்துல ஒரு ஓவியம் பாத்தோம் ல... யோகனான்னு பேரு போட்டு... அவ தான்.... என அன்று நடந்ததை கூறினாள்....

ப்ரியா : ஏன் டி எங்கள்ட்ட சொல்லல....

பவி : இன்னோறு பவி தான் டி சொல்ல வேணாம் னு சொன்னா.....

அர்ஜுன் : சரி அத விடுங்க... கொஞ்சம் முகில் ஏன் இப்டி நடந்துக்குட்டான்னு சொல்ல முடியுமா....

மாயா : ம்ம்ம் கூறுகிறேன்.... அதற்கு முன் நீர் தான் அந்த இரண்டாவது வாரிசென ஒத்துக்கொள்....

அர்ஜுன் : வாரிசா... அதல்லா எனக்கு தெரியாது... நீ இத மட்டும் சொல்லு....

மாயா : மறைக்க வேண்டாம்.... யான் ஒன்றும் செய்திட மாட்டேன்.... முதல் வாரிசு முகிலர்ஜுனன் என்றால்.... அடுத்த வாரிசு அவன் சகோதரன் நகுலர்ஜுனன் ஆன நீ தானே... என எவரும் அறியா உண்மையை வெளியிட....

நாயகர்கள் : முகிலர்ஜுனனா???? சகோதரனா??? என அதிர்ச்சிடைய
சுற்றி பார்த்த அர்ஜுன்.... முகிலை பார்த்துக் கொண்டே... அவன் முகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாஸ்க்கை கலட்டினான்....

நிரு : அஜ்ஜு... முகிலோட பேஸ் மாரி இருக்க மாஸ்க்கையும் கலட்டு.... மாயா தப்பா நெனச்சிட்டு பேசுறா... ஏன் உன் பேஸ் மாரி ஒரு மாஸ்க் செஞ்ச??? என்று அவன் கலட்டி எரிந்த மாஸ்க்கை பார்த்துக் கொண்டே கேட்டாள்....

அர்ஜுன் : இதுக்கு மேல எந்த மாஸ்க்கும் இல்ல டி.... இது மாஸ்க் இல்ல... இதான் நான்... நீங்க யாருமே பாத்திராத நான்..... நகுலர்ஜுனன்.... முகிலர்ஜுனன் ஓட கூடப்பிறந்த... ட்வின்.... ஹார்ட் அட்டக் வராத குறையாக நின்றனர் நம் கதாநாயகர்கள்... ஒவீயின் அலரலில் சிக்குண்டிருந்ததால்... தற்போதே இவையெல்லாம் கவனித்த முகில்... பேரதிர்ச்சியுடன் எழுந்து நின்றான்....

மாயா : இதை தான் யானும் எதிர்பார்த்தேன்....

அர்ஜுன் : நின் எதிர்பார்த்தது கிடைத்து விட்டதல்லவா... பதில் கூறு...

மாயா : இப்போது உன் சகோதரன் மனிதன் கிடையாது???

அனைவரும் : மனுஷன் இல்லயா??பின்ன....???😲😲

மாயா : மனிதபிறவி மட்டுமல்லாது... பாதி உயிரிழந்த... ஆத்மா....

அஷ்வன்த் : என்ன சொல்றீங்க... கொஞ்சம் புரியிர மாரி சொல்லுங்க... ஒன்னுமே புரியல...

மாயா : கூறுகிறேன்.... முகிலா... என அவனை அழைக்க.... ஏற்கனவே கடலளவு அதிர்ச்சிக்குள் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்த முகில்.... அவளின் அழைப்பில்.... நிலை அடையாது.... அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்க....

அர்ஜுன் : டேய் நா இனி எங்கையும் போய்ட மாட்டேன் டா... இப்போ மாயா வ பாரு... என திருப்பி விட....

மாயா : இவளை எங்கேனும் கண்டிருக்கிறாயா... என அவளின் கைகளை காட்ட.... அதில் பச்சையாக ஒரு ஒளி பரவி..... மேகலாயாவின் வதனத்தை காட்டியது.... அவ்வதனத்தை கண்டவன் ஏதோ யோசிக்க.... அன்று அவன் கண்ட கனவில்... ஒவீயை போல் பாவித்து வந்தவள்... இவள் தானே என நினைவு வந்தது அவனுக்கு....

முகில் : ஆமா பாத்துர்க்கேன்.... என் கனவுல... நவீ மாரி... என தினர.... (காதல் -9 இல் வந்த கனவு)

மாயா : ம்ம்ம் இவள் தான் என் தங்கை மேகலாயா... அவள் காதலித்தது முகிலனை... ஆனால் அதை நிராகரித்ததால்... சினம் தாளாமல்... முகிலனுக்கு " என்று உன் வாழ்க்கை பயணிப்பினும்... எவளுக்காய் என்னை நிராகரித்தாயோ... அவளை உன் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் முன்னே பார்க்கவில்லை எனில்... அடுத்த நாள் முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாதி மனிதனாகவும்.. மீதி ஆத்மாவாகவும் வளம் வருவாய்.... நீ வளம் வரும் சமயம்... உயிர் போகும் வலியை அனுபவித்து... வேதனையிலே... என் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என தவிப்பாய்... அதை யான் கண்குளிர கண்டுகளிப்பேன்...." என சாபமிட்டாள்... சென்ற பிறவியில்... அவள் கூறியதை போலவே இருபத்திஐந்து வயது வரை அவன் காதலை அவன் காணவில்லை.... அதன் பின்பே கண்டான்.... போர் தொடுக்கும் தக்க நேரத்தில் அவனின் ரூபம் மாறி இதே போல் நடந்துக் கொண்டான்.... அன்றைய நேரத்தில் அவனை காக்க வேண்டி அவனை காதலித்த அவன் காதலி... உயிரை மாய்த்துக் கொண்டாள்.... அவனின் சாபக்கட்டு அவளுடனே மடிந்தது... காதலி மரணத்தை தாங்க இயலாதவன்... போர்களத்திலே அவள் பிராணத்தின் மேல் வாக்களித்தான்.... " இன்று என்னை காக்க வேண்டி உயிரை நீத்த உனக்காய்... என்றும் வலி அனுபவிக்க நான் தயாரடி... அடுத்த பிறவி ஒன்று இருப்பின்.... உனக்காய் எவ்வலியையும் தாங்கிட முன் வருவேன்.... இதே வலியை உனக்காய் வாங்கிக் கொள்வேன்... உன் வலி தீரும் வரை... இதே சாபம் நீடிக்குமடி.... இதை உயிராய் நினைக்கும் என் காதலியான உன் மீது ஆணையாய் கூறுகிறேன்.... இதுவே என் வாக்கு..." என வாக்களித்தான்.... கடந்த ஆறு மாதமாக... இவ்வலியை உணர்ந்து வருகிறாய் அல்லவா... என்று முகிலனை நோக்க.... அவனோ ஆம் என தலையாட்டினான்....

திவ்யா : இத சரி செய்ய வேற வழியே இல்லையா....

மாயா : இருக்கிறது... ஒரு வழி இருக்கிறது.... அவன் காதலுக்கு உரிமையானவளால் முடியும்.... அனைரும் நிருவை நோக்க.... அவளோ மாயாவை நோக்கி கொண்டிருந்தாள்....

மாயா : அவன் காதலியின் குறுதி என்று இவனுள் இறங்குகிறதோ... அன்று இவனின் சாபம் விமோசனம் அடையும்... அது மட்டும் இல்லாமல்.... அவளின் வலிகள் முழுவதும் தீர்ந்தாலே ஒழிய... இவன் முழு மனிதன் ஆவான்... அவள்... முழு மனிதி... என கூறி முடிக்கும் முன்னே....

ப்ரியா : அப்போ நிரு ப்லட் குடுக்கனுமா...

நிரு : ங... நா ப்லட் குடுக்கனுமா... என குழம்ப... அப்போதே அனைவரும் தன்னை நோக்குவதை கண்டாள்....

இந்திரன் : அவன் லவ் பன்ற பொண்ணு நீ தான டி... அப்போ நீ தான் குடுக்கனும்....

நிரு : என்னது அவன் என்ன லவ் பன்றானா??? இது எப்பொத்துல இருந்து???😲😲😲

மது : அடியேய்... நீங்க போட்ட ட்ராமாவ நம்பீட்டு பேசுறானுங்க டி...

நிரு : ஓஹ்... நா கூட பயந்துட்டேன்... டேய் நாங்க இரெண்டு பேரும் ஜஸ்ட் நடிச்சோம் டா... அந்த பரமேஷ்வரன ஏமாத்த...

முகில் : ஆமா டா....

அனு : அப்போ இவன் லல்லருக்கு எங்க போறது???

மாயா : என்னையும் சற்று கூறவிட்டால் நன்றாக இருக்கும்....

ரவி : சரி சொல்லுங்க...

மாயா : அவன் காதலியை அவன் 25 வயதிற்கு முன்பே கண்டுவிட்டான்.... அவளின் குறுதி இவனில் என்றோ கலந்துவிட்டது....

ரக்ஷா : ஹா... என்னமா என்னென்னமோ சொல்ற....

மாயா : ஆம்... என்றோ இருவரின் குறிதியும் கலந்துவிட்டது... தற்போது இவன் அவளின் வலியை தான் போக்க வேண்டும்.... வலி நீங்கினால் இருவருமே நலமடைவர்....

ரனீஷ் : ஆனா அவள தேடி நாங்க எங்க போறது???

அர்ஜுன் : எங்கையும் போக தேவை இல்ல டா...

ரித்விக் : என்ன டா சொல்ற....

அர்ஜுன் : அவன் மடியிலையே கெடக்குரவள தேடி எங்கையும் போக தேவையில்லை.... என உரக்க கூறினான்... அனைவரும் முகிலை நோக்க... அவனோ அமைதியுடன்... தன் மடியில் மெல்ல மெல்ல மயக்கத்திலிருந்து விடுப்பட்டு கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தான்....

அனைவரும் : ஒவீயா????

மாயா : ஆம்.... ஆனால் அவள் தற்போது மிக ஆபத்தான நிலையில் இருக்கிறாள்.... இதுவரை கேட்ட எதற்கும் உணர்ச்சிகளை காட்டாத முகில்... இதை கேட்டு பதறிபோய்.... மாயா அருகில் வந்தான்....

முகில் : என்ன சொல்றீங்க என்ன ஆபத்து.... என் நவீய எப்டி காப்பாத்துறது... ப்லீஸ் சொல்லுங்க....

மாயா : அவளை காப்பாற்ற இயலாது....

முகில் :நோ என்ன விட்டு என் நவீ போக மாட்டா... ப்லீஸ் வேற வலியே இல்லையா....

மாயா : இல்லை.... அவள் காப்பாற்றப்பட்டு என்ன செய்யப்போகிறாள்....

முகில் : பைத்தியம் மாரி பேசாதீங்க.... ஐ லவ் ஹெர்... அவ தான் என் உயிர்... அவள விட்டுட்டு என்னால இருக்க முடியாது....

மாயா : நீ தவறாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய்... நான் கூற வருவதை கேட்டால்... நீ அவளை முழுதாக விட்டுவிட்டு திரும்பி பாரமல் சென்றுவிடுவாய்....

முகில் : என்னவா இருந்தாலும்.. நா என் நவீய விட்டு போக மாட்டேன்.... எனக்கு அவ வேணும்... நா அவக்கூட வாழனும்... ப்லீஸ்....

மாயா : அவள் மனிதியே இல்லை.... உயிரிழந்த ஆன்மா.... என கூற.... நாயகன்கள் அதிர்ச்சியடைய.... அவள் கூறி முடித்து ஒரு நொடி தாளாமல் ஒலித்தது முகிலின் குரல்....

முகில் : எனக்கு தெரியும்.... என கத்த.... மண்டபமே ஒரு நொடி நிசப்தத்தில் ஆழ்ந்தது....

நாயகன்களுக்கு ஒவீ ஆவியா என அதிர்ச்சியில் மூச்சே நின்றுவிட்டது....

மாயா : தெரியுமா....

முகில் : ஆமா... தெரியும்...

மாயா : உண்மையாகவா....

முகில் : அவ மனுஷி கிடையாது... ஆவின்னு முன்னாடியே எனக்கு தெரியும்... தெரிஞ்சு தான் நா அவள அளவில்லாம காதலிச்சேன்...காதலிக்கிறேன்... காதலிப்பேன்.... போதுமா... இப்போ சொல்லுங்க... அவள எப்டி காப்பாத்துரது....

மாயா : இப்பதிலைத் தான் எதிர்பார்த்தேன்.... மன்னித்து விடு முகிலா... உன் காதலை சோதித்ததற்கு... வழியை கூறுகிறேன் கேள்.... இங்கிருந்து தொலைவில் தெரியும் மலை தான் ஷேஷ்வமலை... அங்கு கரநல்லி என்ற தாவரம் வளர்கிறது.... பார்க்க மஞ்சள் நிறத்தில்... பசையாய் இருக்கும்....

பவி : அது இதுவான்னு கொஞ்சம் பாருங்க.... என ஒரு இலையை காண்பித்தாள்... அதை கண்டு கண்களை விரித்த மாயா....

மாயா : இதே தான்... இது எப்படி... உன்னிடம்...

பவி : லாஸ்ட்டைம் காட்டுக்கு போய்ர்ந்தப்ப... அந்த மலைகிட்டதா ஒலிஞ்சிர்ந்தோம்... அப்போ இந்த இலை வித்யாசமா இருந்துச்சேன்னு பரிச்சிட்டு வந்தேன்....

மது : எவ்ளோ பிரச்சனைல இருந்தாலும் உன் வேலைல கரெக்ட்டா இருந்துர்க்கியே டி....

பவி : ஹிஹி

மாயா : சரி... அந்த இலை ஆற்று நீரில் ஒரு குவளை நீரில் கலந்து... நன்கு நிறம் மாறியதும் அதை நீ அருந்த வேண்டும்....

வீர் : அவனா... அவன் குடிச்சு என்ன பிரயோஜனம்....

மாயா : அவன் உடலில் இருக்கும் அவளின் குறுதிக்கு வலு ஏறும்.. அதன் படி.... அவளின் உடலுக்கும் வலு ஏறும்... இவன் அருந்திய அதே நீரின் பாதியை சொட்டு மிச்சம் இல்லாமல் அவளும் அருந்த வேண்டும்.... அதன் பின் இருவரும் அவர்களின் மனதை வெளிப்படுத்தினாலே போதும்....

அஷ்வன்த் : ஆனா இதனால ஒவீ மனுஷியாகமாட்டாளே... அவ ஆத்மாவாச்சே.... அதுக்கப்பறம் முகிலோட காதல் என்ன ஆகுரது...

மாயா : அவள் ஆத்மா அல்ல.... எட்டு வருடம் முன் என்று இறந்தாளோ... அன்று ஆன்மானாவள்... என்று அவளவனை சந்தித்தாளோ... அன்று அவளின் அலுகாத உடலை அடைந்து.... அன்று முதல் பாதி மனிதபிறவியாகவும் மீதி ஆத்மாவாகவும் வாழ்ந்து வருகிறாள்.... இறந்தவளின் உடல் மீண்டு எழுந்தற்கு கூட அவன் சென்ற ஜென்மமிட்ட வாக்கே காரணம்.... அவன் கூறியதை போலவே அவளின் வலியை முன்பே வாங்கி அனுபவித்ததன் பிறகே... அவள் வலியை அனுபவித்து இறந்தாள்....

பவி : ஒன்னுமே புரியல....

மாயா : விரைவில் புரியும்... ஆற்று நீரை யாரேனும் எடுத்து வாருங்கள்...

க்ரிஷ் ரவி : நாங்க போய் எடுத்துட்டு வரோம்... என அங்கிருந்து கிளம்பினர்....

சிறிது நேரத்தில் இருவரும் நீருடன் வர... அதில்... இலையை கலந்து... அந்நீரை முகிலிடம் அருந்த தந்தனர்.... அவன் அதில் பாதியை அருந்திவிட்டு.... மீதியை ஒவீக்கு புகட்டினான்.... மெல்ல அவனுள் சில பல மாற்றங்கள் ஏற்பட்டது... அவனுள் கலந்திருக்கும் ஒவீயின் குறுதிக்கு புது வலு சேர்ந்து... சீராய் ஓடியது... முகிலின் மூச்சுக்குழாய் திடீரென அடைக்க..... தன் நெஞ்சில் குத்தினான் அவன்... அனைவரும் அவனையே நோக்க... அவன் அருகில் நெருங்க போன அனைவரையும் தடுத்து நிருத்தி நடப்பதை மட்டும் பாருங்கள் என கூறினாள் மாயா....

அவன் இதயவழி இரத்த ஓட்டம் சீராய் ஓடி... அவன் மூச்சை எளிதாய் வெளியேற வழி வகுத்தது... அப்போதே அவனுக்கும் புரிந்தது... இத்துனை நாட்களாய்... அவள் குறுதியே தன் உடல் உள் எந்த தீங்கும் நடந்தேராமல் தன் உயிரை பாதுகாக்கிறதென்று.... சில மணிதுளிகள் கடந்ததும்... ஒவீயின் உடல் பச்சை நிறத்தில் ஒளிரத்தொடங்கியது... அதில் சற்றே கலக்கமுற்ற முகில்.... நவீ என அழைத்தவாறே அவள் கன்னத்தை தட்டினான்.... சொருகிய கண்களை... மெல்ல திறந்தாள் ஒவீ.... பெருமூச்சை இழுத்து விட்டனர் அனைவரும்..... அவன் புன்னகையுடன்... அவளை காண.... அவளோ ஒரு நொடி கண்களை சிமிட்டி பார்த்தவள்... அடுத்த நொடி முகி என கத்திக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டாள்....

முகில் சற்று அதிர்ந்தாளும் அதை வெளிகாட்டாமல் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.... ஆனால் மற்றவர்கள் தெள்ளத்தெளிவாய் தங்கள் அதிர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டினர்... அப்போதே வீனாவின் மூளையில் ஏதோ க்லிக் ஆனது... முகி என்னும் அழைப்பை கேட்டு....

ஒவீ : உனக்கு ஒன்னும் ஆகலல்ல... உன.க்கு....உ.னக்.கு... அன்னை.க்..கு.. என தினர....

முகில் : என்ன சொல்ல வர நவீ???

ஒவீ : உனக்கு எதுவும் நியாபகம் இல்லையா...

முகில் : இல்ல....

வீனா : ஒவீ.... முகில் தான் முகி யா.??? என தன் சந்தேகத்தை கேட்க... கண்ணீருடன் ஆமென தலையாட்டினாள் ஒவீ...

க்ரிஷ் : அப்போ உனக்கு முகில முன்னாடியே தெரியுமா ஒவீமா...

ஒவீ : தெரியும்... எனக்கு பதினஞ்சு வயசு இருக்கப்பவே தெரியும்....

சத்தீஷ் : என்ன டி சொல்ற...

ஒவீ : ஆமா...

முகில் : அப்ரம் ஏன் எனக்கு எதுவும் நியாபகம் இல்ல...

அர்ஜுன் : அத நா சொல்றேன்....

ரனீஷ் : டேய் உன் புதிரே இன்னும் விலங்காம இருக்கு... நீ இன்னோறு புதிர விலக்க போரியா....

அர்ஜுன் : கேட்டா கேளு... கேக்கலன்னா... நீ தான் தலைய பிச்சிட்டு இருக்கனும்....

வீர் : டேய் டேய் இருக்குரது பத்தாதுன்னு இன்னோன்னு வேறையா... எங்க ஹார்ட்டு தாங்காது டா.... நீயே சொல்லிடு...

அர்ஜுன் : முகில்க்கு... அந்த ஒரு வர்ஷம் நடந்த எதுவுமே நினைவுல இல்ல....

ரக்ஷா : உனக்கு எப்டி டா தெரியும்....

அர்ஜுன் : அதல்லா அப்ரமா சொல்றேன்... இன்னும் தெளிவா சொல்லனும் னா... ஒவீ தான் நடந்தத சொல்லனும்... அனைவரும் ஒவீயை நோக்க.... அவளோ முகில் மேலே ஒன்றியவாறு... கூற தொடங்கினாள்...

பத்து வருடங்கள் முன்பு....

நோட் : உங்களுக்கு இன்னும் நல்லா புரியனும் னா... நீங்க என் ஃபர்ஸ்ட் ஸ்டோரியும் படிச்சிர்க்கனும்....

அப்போது நம் நாயகன்களுக்கு 17 வயது முடியும் சமையம்... நம் ஒவீக்கு 15 ஆரம்பமான சமயம்... நாயகன்களில் முகில் NCC இல் இருப்பதால்... அன்றைய வருடத்தின் NCC CAMP இல் அவனும் கலந்திருந்தான்.... இது சற்றே வித்யாசமாக அமைக்கப்பட்டிருந்தது... இரு நாட்கள் தொடரும் கேம்ப்... அதுவும் மலைபிரதேசத்தில்... அதே போல் தன் பள்ளி NCC இல் இருந்த ஓவீ... அதே கேம்ப்பிர்க்கு... கோவையிலிருந்து வந்திருந்தாள்... அங்கு பல பள்ளிகள் கூடியிருந்தது.... ஒரு முக்கியகூட்டனி நடந்த பின்... மாணவர்கள் அவரவர் ஆசிரியருடன் அவர்களின் பணியில் இறங்கினர்.. அப்போது சுட்டியாய் சுற்றிக் கொண்டிருந்த ஒவீயின் பாவனைகளை எல்லாம் கண்டு... அவளிடம் பேசும் என்னும் வந்து... அவள் முன் வந்து நின்றான் முகில்.... முதலில் அவனை கண்டவள்... பேசாமல் ஒதுங்க... அதன் பின்... ஏதோ தோன்றவும் அவனிடம் பேசினாள்....

ஒவீ : ஐம் ஒவீனா...

முகில் : ஐம் முகி... என கூறி முடிக்கும் முன்னே... யாரோ அழைக்கவும்... இருவரது உரையாடலும் தடைப்பட்டு போனது...

அதன் பின்... அன்றைய இரவு.. யாருக்கும் தெரியாமல் கெம்ப்பை விட்டு வெளியேறி ஐஸ்க்ரீம் சாப்பிட வந்தான் முகில்... ஆனால் நம் ஒவீயிடம் கையும் களவமாய் மாட்டிக் கொண்டான்.... அதன் பின்... அவளை ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாய் கூறி சமாளித்தான்... இருவரும் திருட்டுத்தனமாய் கேம்ப்பில் இருந்த ஐஸ்க்ரீமை உண்டனர்... அதன் பின் வெளியேவே அமர்ந்து இருவரும் நேரங்காலமில்லாமல் கதை கதையாய் பேசினர்.... இருவரும் அடித்துக் கொள்வது சிரித்துக் கொள்வது என செல்ல.... குருகிய காலத்திலே நெருங்கிய தோழர்களாயினர்... ஒவீக்கு முகிலை மிகவும் பிடித்துப்போனது... கண்ட சிறிது நேரத்திலே இவ்வளவு ஒற்றுமையா என இருவரும் கூறி கூறி பிரம்மித்தனர்.... அங்கேயே விளையாண்டு... அழகழகான நினைவுகளை சேமித்தனர்... அப்போது அவர்களே எதிர்பாராமல் மழை பேய... அதில் ஆட்டம் போட தொடங்கினாள் ஒவீ.... முகிலுக்கும் மழையில் நனைய ஆசை எழ... அவளுடன் சேர்ந்து விளையாடினான்....

இல்லாத சேட்டையெல்லாம் நடுராத்திரியில் செய்துக் கொண்ருந்தனர்... இருவரும் கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருக்க.... மிக மகிழ்ச்சியான அத்தருணத்தை கெடுக்கவே கேட்டது ஒரு பெரும் இடி... அதில் பயந்து போன... ஒவீ... அருகிலிருந்த முகிலை இருக்கி கட்டிக் கொண்டாள்... அவனும் அவளை அணைத்தவாறு சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருக்க.... முதல் முறையே... ஒரு அந்நிய ஆடவனின் ஸ்பரிசத்தில் தந்தையின் பாதுகாப்பை உணர்ந்தாள்.... புதுவித உணர்வில் சிக்குண்டிருந்த பேதையவள்.... மெதுவாக அவனை விட்டு விலகி நின்றாள்....

முகிலோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன்.... திடீரென கத்தினான்... பதறிபோய் நிமிர்ந்த ஒவீ.... மரத்தின் வேர் தடுக்கி.... கீழே விழப்போன முகில்... பாராங்கல்லில் தலையை இடித்து இரத்த வெல்லத்தில் மூச்சற்று மிதந்தான்... பாராங்கல் சரியாய் அவன் பின் மண்டையை பதம் பார்த்திருந்தது.... பதறி போன ஒவீ.... உடனடியே கத்தி அனைவரையும் அழைத்தாள்..... அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆப்ரேஷன் தேய்ட்டரில் இருந்தான் முகில்....

அவனிற்கு இரத்தம் வெகுவாய் சென்றாதாக கூற.... அவன் ப்லட் க்ரூப்பை அறிந்து.... அது தன் க்ரூப்பை ஒத்திருக்கிறதென உடனே தான் கொடுப்பதாய் முன் வந்தாள் ஒவீ... முதலில் அனைவரும் தயங்க.... பின் வேறு வழி இல்லை என அவளின் இரத்தத்தை முகிலுக்கு செழுத்தினர்...

விடாமல் அழுதுக் கொண்டு தான் இருந்தாள் ஒவீ.... சில மணி நேரம் களித்து வந்த டாக்டரை சூழ்ந்துக் கொண்டனர் அனைவரும்....

காதல் தொடரும்....

Hiii idhayangale.... konjo kolapathaan seium... konjo kaathurunga.... ni8 mudinja oru ud kudukuren... tatta

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro