Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-28

மது : உனக்கு எப்டி டா தெரியும்???

ரித்விக் : அவங்க மேல ஒரு சின்ன சந்தேகம் திடீர்னு மதியம் வந்தது .. நம்பர் வேதபுரத்துல தான் இருக்குன்னு சொல்லவும்... அவங்க தான்னு கன்ஃபார்ம் பன்னேன்....

மது : ஆமா... அந்த நம்பர் பரமேஷ்வரன் ஓடது தான்....

க்ரிஷ் : பன்ற வேலையல்லாம் பன்னிட்டு.. இன்னைக்கு வேதபுரத்துக்கே வன்ட்டாரா... இருக்கு அவருக்கு...

முகில் : நா அவரு என்ன என்னலாம் பன்றாருன்னு மொதல்ல கண்டுபுடிக்கிறேன் டா...

ப்ரியா : சரி நீங்க வேலைய பாருங்க... நாங்க மண்டபம் வர போய்ட்டு வரோம்...

சத்தீஷிற்கு ஏனோ மனம் நெருடலாக இருந்தது... அவர்களை தடுக்க என்னிய நினைவை விட்டுவிட்டு... ப்ரியாவை தவிப்புடன் நோக்கினான்.... அவனின் பார்வையிலே அவன் எதற்காகவோ தவிப்பதை உணர்ந்த ப்ரியா... இமை மூடி அவனை ஒரு நிலை படுத்தினாள்....

அஷ்வன்த் : சரி பாத்து போய்ட்டுவாங்க....

நம் நாயகிகளின் பயணம் ராஜ்ஜியமர்வதன மண்டபத்தை நோக்கி தொடங்கியது.... அனைவருக்குள்ளும் பல உணர்வுகள் அலைந்துக் கொண்டிருந்தது.... வந்த இரு வாரங்களிள்.... பல அதிர்ச்சிகள்... ஆச்சரியங்கள்.... பல பொக்கிஷங்களை கடந்து வந்திருந்தனர்... அவைகளிள் இம்மண்டபமும் ஒன்றே.... மண்டபத்தை அடைந்தவர்களை வரவேற்றது என்னவோ அனு திவ்யா மற்றும் ப்ரியாவின் தோழன்... யோக்யா வே.... தன் நாவை சீரியவாறே.... கண்களை அலைமோதவிட்டு காத்திருந்தது... அதனை கண்ட நாயகிகள் ஒரு நொடி நெருங்க தயங்கி.... அதன் பின் பாம்பாய் என்னாமல்... ஒரு உறவாய் நினைத்து நெருங்கினர்....

அனு திவ்யா ப்ரியா மூவரும் அதன் அருகில் ஓடினர்.... மூவரையும் கண்ட யோக்யா.... கனிவான பார்வையுடன் அருகில் நெருங்கியது....

திவ்யா : ஹாய்...யோக்யா... எங்கள நியாபகம் இருக்கா....

யோக்யா : ஸ்ஸ்ஸ்ஸூஸௌஸௌஸோஸூ ( தங்களை மறக்க தாங்கள் ஒன்றும் கடந்து போகும் மேகமில்லையம்மா... )

மூவரும் கண்களை திறந்து திறந்து நோக்கினர்.... அவர்களின் காதை அவர்களாளே நம்ப முடியவில்லை... ஒரு சர்ப்பத்தின் பாஷை மனிதபிறவியான தங்களுக்கு புரிகிறதா??? என அதிர்ச்சியுடன் நோக்க.... அவர்களின் அதிர்ச்சியை புரிந்ததைப் போல....

யோக்யா : குழப்பிக்கொள்ள வேண்டாம் தங்கைகளே... நாம் நாழ்வருமே ஒரே இணத்தவர்கல் ஆதலால்... என் பாஷயை தங்கள் அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும்....

பவி : நாழு பேருமா???என்ன சொல்றீங்க யோக்யா???

யோக்யா : ஆமம்மா.... ஒரே இணம்....கலிங்க வம்சம்....

அனு : அதப்பத்தி எதாவது சொல்லேன்...

யோக்யா : உலகில் மனித இணம் தோன்றிய சில வருடங்களிள் தோன்றிய உயிரிணமே சர்ப்ப இணம்... சர்ப்பத்தில் பல வம்சம் இருக்கிறது... முதல் வம்சம்... உலகில் தோன்றிய மாபெரும் வம்சம்... நாகதாரணி வம்சம்... இரண்டாவது வம்சம்.... கலிங்க வம்சம்... இன்னும் பல.... இதில்.... இம்முவரும் ( அனு திவ்யா ப்ரியா )நாகதாரணி வம்சத்தின் முதல் அவதாரங்கள்.... மற்றும் இறுதி அவதாரங்கள்....

ப்ரியா : யோக்யா... போதும் போதும்....

யோக்யா : ஏனம்மா... இப்போது தானே தொடங்கினேன்....

ப்ரியா : நீ இன்னும் இத பத்தி சொன்னா... கண்டிப்பா... எங்க மூளைய கலட்டி வைக்கிற நிலமையும் வரும்... இன்னும் எங்கல கொழப்பும்...

நிரு : ஆமா ஆமா... ப்ரியா சரியாதான் சொல்றா...

யோக்யா : சரி சரி... தாங்கள் வந்த வேலையை கவனியுங்கள்.... அனைவரும் மண்டபத்தினுள் நுழைய... இறுதியாக நுழைய போன நிரு மீண்டும் வந்து... யோக்யாவின் தலையை வருடினாள்.... அவளின் வருடலுக்கு இனைந்து கொடுத்த யோக்யா.... அவளை உள்ளே அனுப்பிவைத்தது.... அப்போது அங்கே வந்த பெண் உருவம்.... உள்ளிருந்த நாயகிகள் வெளியேறுகின்றனரா... என கண்காணித்துக் கொண்டே.... யோக்யாவை தோக்கி....

அப்பெண் : யோக்யா.... ஏதேனும் தகவல் வந்ததா???

இல்லை என இடவலதாய் தலையை ஆட்டியது யோக்யா....

அப்பெண் : என் துணைக்கு ( ரெட்டி ஐ ) எமக்கு உன்னை முன்பே தெரியும் என்பதை பற்றி எதுவும் தெரியாது.... அது தான் நமக்கு தற்போது நல்லது.... நாளைக்குள் நிச்சயமாக தகவல் வந்துவிடும்... நீ ஜாக்கிரதையாக இரு... என்று வேண்டுமானாலும்.... ஆபத்து நேரலாம்....

யோக்யா : நீரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிகிறேன்.... என தலையை குனிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது....

உள்ளே நுழைந்த நம் நாயகிகள்... அன்று கண்ட அந்த மாபெரும் புகைப்படத்தை தாண்டி அடுத்தவைகளை கவனிக்க தொடங்கினர்....

அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில்....

அழகென ஊரினாள் பெண்ணவள்.... மாயவனின் வலையென அறியாமல்.... அறிந்ததும் தெரிந்தது தூயவளின் புது ரூபம்... குறுகியவனின் தோற்றம் கண்டு அவள் துணுக்குர... உண்மை அறியமல்... வீழ்ந்தாள் கயவனவனின் வலையில்.... என சரிவான தமிழ் எழுத்துக்களிள்.... அதை படித்துவிட்டு... அருகில் நோக்கியவர்கள்... பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.... அதில் இருந்தது என்னவோ.... பலாயிரம் வருடம் முன் அழகு பதுமையாக.... அமைதியின் உருவமாக.... நல்லவையின் தோற்றமாக இருந்த அவளே... துணியால் சுற்றப்பட்ட ஓர் சின்னஞ்சிறு பச்சிளம் குழந்தையை ஏந்தி நின்றாள் மாயமோகினி.....

இவ்வோயியத்தை கண்ட அனைவரும் அதிர்ச்சியுற... பவி மட்டும் நேற்று இரவு நடந்த அந்த நிகழ்வை பற்றி சிந்திக்கலானாள்.... அனு திவ்யா ப்ரியா காலத்தை மாற்றும் சமயம்... பவி மாத்திரம் அவளின் அறையில்... ஒரு ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தாள்....

வாருங்கள் நாமும் காணலாம்...

இரவு மணி ஒன்றரை....

நேரங்காலத்தை கவனியாது... தன் ஆராய்ச்சியால் மிக தீவிரமாய் ஈடுப்பட்டிருந்தாள் நம் பவி.... டெக்ட்ரான் பற்றிய ஆராய்ச்சி தான்... ஆனால் இரவு குளிர் காற்றில் நின்றவளை பால்கெனி அருகில் இருந்த மரத்தின் இலை தீண்டி தீண்டி செல்ல.... அதை பிடித்தவளின் கைகள் நீரில் நனைந்ததை போல் காட்சி அளிக்கவே... அதை பிய்த்து.... ஆராய தொடங்கினாள்.... அதை நீரிலே நனைத்தவளுக்கு... நொடியில் நீர் வேறு நிறத்தில் மாறுவது தென்பட்டது... அதையும் சிரஞ்சியையும் சேர்தே ஆராய்ந்துக் கொண்டிருந்தவளை.... ஏதோ ஒன்று தாக்கியதை போல் உணர... தடுமாரி... கதிரையை விட்டு கீழே விழுந்தாள்.... அதிர்ச்சியுடன் எழுந்து நோக்கியவளின் முன் நின்றாள் ஒருவள்... கண்களை கசக்கிவிட்டு நோக்க... அங்கோ எவரும் இல்லை... என்ன நடக்கிறதென புரியாமல் அவள் நோக்க... அனைத்து பொருட்களும் ஆட தொடங்கியது... பலத்த ஒலிகளிள் காதுகளை மூடிக் கொள்ள.... எதுவாயினும்.... தன்னை எதுவும் செய்யாது என நம்பியதால்... மெல்ல எழுந்து நின்றாள்.... மின் விழக்குகள் அனைத்தும் அனைந்து இருள் படர அப்போதே நேரம் இரவு ஒன்றரைக்கு மேல் தாண்டிவிட்டதை புரிந்துக் கொண்டாள் அவள்....

பவி : என்னது இது??? மணி இரெண்டாக போகுதா??? இவ்ளோ வா ஆராய்ச்சில மூழ்கி இருந்தேன்... இதுக்கு தான் தீரா.... ஆராய்ச்சி பன்னாலும்... அளவா பன்னுன்னு சொல்லிக்கிட்டே இருக்காளோ...

தீரா : இப்பயாவது புரியிதே....

பவி : சரி வெளிய போவோம்.. என நகரப்போனவளின் முன் வந்து விழுந்தது ஏதோ ஒன்று.... பவி திடுக்கிட்டு... அதே இடத்தில் உறைந்திட.... தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டு... அச்சத்தில் வரண்ட நாவை ஈரப்படுத்திக் கொண்டாள்... காலால் அருகில் துளாவியவளுக்கு எதுவும் அகப்படாமல் போக.... பெருமூச்சுவிட்டவளின் அருகில் வேறொரு மூச்சுக் காற்று.... கப்பென இழுத்துப் பிடித்துக்கொண்டாள் மூச்சை.... ஏதோ அருகில் இருப்பதை உணர்ந்து... மனமும் மூளையும்... " திரும்பாதடி.... ஓடிடு " என கட்டளை விதித்தும்... ஆர்வத்தில் அவள் கண்கள் அதனை கண்டு.... மூட மருத்தது...

கருத்த தோல்.... சாதாரண உயரத்தை விட சற்று உயரம்... கலை இழந்த கூந்தல்... கழுத்தின் முன் தவழ.... வெட்டப்பட்ட இதழ்கள்.... வெண்மை இழந்த கண்கள்.... கருவிழி அடைத்திருக்க.... காதுகள் இரண்டும் மடக்கப்பட்டு.... நீண்டு இருந்தது.... முன் கழுத்தின் நடுவில்.... ஒரு வௌவாலின் அச்சு... ஒரு திருத்தம்.... பின் கழுத்தில் தான் வௌவாலின் அச்சு.... தலை மட்டுமே பின் திரும்பி இருந்தது....

ஆரடி உயரத்தில் தலையை மட்டும் திருப்பி... உடலை அப்புறம் காட்டியவாறு நின்ற அப்புதியவளை கண்கள் வெளிவரும் அளவு அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தாள் பவி.....

பவி : இவ யாரு... புது அட்மிஷனு.... இந்த தீரா இவளப்தேதி சொல்லவே இல்லையே...

தீரா : சொல்லிட்டா... உனக்கு அதிர்ச்சி இருக்காதே....

பவி : அடிப்பாவி... இந்த பிசாசோட என்ன விட்டு ஓடீட்டியே... அப்ரம் பாத்துக்குறேன் உன்ன... என தீராவை அர்ச்சித்வாறு... முன் நின்ற புதியவளை எதிர் நோக்கினாள்.....

தலையை கவிழ்ந்து நின்ற அவள்... அதிர்ச்சி அகலாமல் அவளையே பார்த்து நின்ற பவியை நொடி தாளாமல் தாக்கினாள் .... வந்து தாக்கிய மந்திரத்தின் அதிர்வில் இரண்டடி பின் நகர்ந்தாள் பவி.... நடப்பிற்கு வந்தவள்... தனக்கு எவ்வித காயமும் இல்லாததை உணர்ந்து.... அதே அதிர்ச்சியுடன் நிமிர்ந்து நோக்கியவள்.... அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றுவிட்டு வந்தாள்.... அவள் முன் அவளுக்கு அரணாய் நின்றாள் மோகினி...

பவி : அன்னைக்கு நம்மள சாவடிக்க பாத்த... அதே மோகினி... இன்னைக்கு என்ன காப்பாத்துரா.... ஒரு வேள... அவளத்தவிற வேற யாரும் நம்மள சாவடிக்கக் கூடாதுங்குர நல்ல என்னத்துல காப்பத்துராளோ.... என தனக்குள்ளே கூறிக் கொண்டிருந்தவளை மீண்டும் அப்புதியவள் தாக்க.... நடுவில் எங்கிருந்தோ வந்த ஒரு பிராகசமான ஒளி அதை தரைமட்டமாகியது.... அவ்வொளியை கண்டு அப்புதியவள்.... அறையே நடுங்கும் வகையில் அலர.... அவள் அலரலில் அரண்டு போன பவி.... காதுகளை இருக்கி மூடிக் கொள்ள.... மோகினியோ " அலருவதை நிருத்து... யோகனா " என கர்ஜித்தாள்.....

யோகனா என நாமம் கொண்ட அவள்..... மோகினியை வெறிப்போங்க நோக்கி....

யோகனா : உமக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே ..... இது எமக்கும் அவளுக்கும் உள்ள பகை மாயா... என கத்த....

ஆம் வந்தது மோகினி அல்ல.... மாயா தான்...

தீரா : வில்லிக்கு கூட தெரியிது.... ஹீரோயின்க்கு தெரியல....

பவி : மாயா வா...??? அவ யாரு??? என கத்த....

இருவரும் அவளை திரும்பி நோக்க...

மாயா : நீ நினைப்பதை போல் நான் மோகினி அல்ல... மாயா.... தற்போது இதுவே போதுமானது... என பவியிடம் கூறிவிட்டு.... யோகனாவின் புறம் திரும்பினாள்....

மாயா : இவர்களுக்கு பகையென்கையில்.... துணை நிற்க... யான் அங்கு வருவேன் என்பதை நீ அறிவாய் யோகனா..... ஆனால்... என இழுக்க...

யோகனா : என்ன உன் தந்தையின் கட்டை விட்டு எப்படி நான் விடுதலை அடைந்தேன் என குழம்புகிறாயோ???? இன்று தீயசக்திகள் அனைத்தும் அதற்குரிய இடங்களை அடைந்துவிட்டதல்லவா.... உன் தந்தையான தந்திராவின் மோக்ஷன நாளான இன்று.... அவரின் கட்டுக்கள் எதற்குமே வலு இல்லையடி.... ஆதலால்... இன்று விடுதலை அடைந்தேன்....

( மோக்ஷன நாள் : என் கற்பனையில்... ஒருவரின் சக்தியும்... உயிரும் கிடைத்த தினத்தை இப்படி கூறுவர்)

மாயா : யோகனா.... தந்தையை பற்றி உறையாடும் முன் அவர் உமக்கும் தந்தையென மறவாதே.... நான்காயிரம் வருடங்களாக அடைந்து கிடப்பினும்.... தீயலோகத்தின் தலைவியான உம்மை... அடைத்தே வைத்திருந்தார் என்பதையும் மறவாதே....

யோகனா : அதை பற்றி எல்லாம் எமக்கு கவலை இல்லை... இவ்விடத்தை விட்டு அகல்ந்திடு... அல்லவே....

மாயா : அகலவில்லை எனில் என் செய்வாய்??? என்றாள் திமிராக....

அவளை ஒன்றும் செய்ய இயலாதென அறிந்ததால் யோகனா உடனே அங்கிருந்து மறைந்துவிட... மாயா பவியிடம் உரையாட திரும்பும் முன்.... விகாஷ் அவளை கோழை என அழைப்பதை உணர்ந்து.... அவர்களை சந்திக்க இங்கு மீண்டும் யோகனா வருவாள் என்பதை அறிந்தும் அப்படியே விட்டுவிட்டு மறைந்தாள்... நடப்பது புரியாது முளித்துக் கொண்டிருந்த பவி... மாயா மறைந்ததில் சுதாரிக்கும் முன்பே மீண்டும் தோன்றினாள் யோகனா....

பவி நகர என்னும் முன்னே... அவள் கரத்திலிருந்து பாய்ந்த ஒரு கருப்பு வட்டம் அவளை தாக்க வர... முன்பே வந்த ஒரு ஒளியிலிருந்து வந்த கரு நீல நிற வட்டம்... அதை யோகனாவின் புறமே திருப்பி... அவளை தாக்கியது... அதிர்ந்த யோகனா... பின்பே கவனித்தாள்... அவ்வொளி அவ்விடத்தை விட்டு அகலாமல் இருப்பதை... அப்போதே அவளுக்கும் புரிந்தது.... மாயா தான் வருவேன் என அறிந்தும்... இங்கு இந்த ஒளி இருக்கும் தைரியத்திலே மறைந்தாள் என்பது.....

மீண்டும் அவள் எழுந்து.... கத்த.... அதிவேகத்தில் வந்த கருநீல நிற ஒளி வட்டத்தால்.... தூக்கி வீசப்பட்டாள் யோகனா... இதனை கண்டு.... பவி ஆ வென வாயை பிளந்துக் கொண்டு நிற்க.... அவளை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாய்..... அவ்வொளியிலிருந்து பண்டையகால ராஜ உடையில்.... மிடுக்கான பார்வையுன்... இருகிய வதனத்துடன்.... விழிகள் இரண்டும் கருநீல நிறத்தில் மிளிர... சினத்துடன் வெளியே வந்தாள் அனு.....

வெளியேறிய அனு....

அனு : எத்துனை தைரியம் இருந்திருந்தால்.. என் தோழியை தாக்க முயல்வாய்.... மாயா எச்சரித்தும் கவலை இல்லயோ??? எம் தோழிகளை என்றும் நெருங்க நினைக்காதே என எத்துனை முறை உம்மை தடுப்பது....

யோகனா : நிறுத்து தாரா... என தள்ளாடியவாறே எழுந்தவளை மீண்டும் அவளின் சக்தி கொண்டு பலத்த காயத்துடன் கீழே தள்ளினாள் அனு....

அனு : எம்மை அப்படி அழைக்காதே... என கூறியிருக்கிறேன் அல்லவா.... எந்த உரிமையில்... அந்நாமத்தை குறிப்பிட்டு அழைக்கிறாய்????

யோகனா : வேண்டாம்... என் சினத்தை கிளராதே... எம் பகையை முடித்துக் கொள்ளவே வந்திருக்கிறேன்....

அனு : பகை தொடங்க காலம் இருக்கிறது யோகனா... தற்போது இங்கிருந்து செல்...

யோகனா : முடியாது... இவளை அழிக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்... எம்மை வேண்டுமானால் நீ அடக்கலாம்... ஆனால் அம்மூவரை உம்மால் ஒன்றும் செய்ய இயலாது....

அனு : யான் இருக்கும் வரை... இவளை நீ அழிப்பது இயலாத சரித்திரம் யோகனா..... அம்மூவரை அழிக்கவே பிறப்பெடுத்த கோவன்கள் இருக்கையில்... யான் ஏன் அவர்களை பற்றி கவலை படபோகின்றேன்....

யோகனா : கோவன்களா... உம் மகிழ்ச்சியெல்லாம் சில தினங்கள் மட்டுமே.... உம் கோவன்கள் அழிய போகின்றனர்... எங்கள் காலடியில் இப்புவி கிடக்கப்போகிறது.... சாம்ராஜ்யமே எங்கள் கையில்.... என கத்த....

அவளை அதி வேகத்தில் வந்து தாக்கியது நீலநிற ஒளி மற்றும் வெள்ளை நிற ஒளி.... பவி இது எங்கிருந்து வந்ததென நோக்க.... அங்கோ அனுவை போலவே அதே பண்டையகால ராஜ ஆடையில்... சினத்துடன்.... வதனம் இருக... கரத்தில் நீலநிற பந்து சுழன்றவாறு திவ்யாவும்... வெள்ளை நிற பந்து சுழன்றவாறு ப்ரிமாவும் நின்றனர்...

ப்ரியா : உம் கனவிலும் அது ஈடேராது யோகனா.... வீன் மணல் கோட்டை கட்டாதே... இறுதியில்... எங்களாளே.... தரைமட்டமாக்கப்படும்.... கோவன்களை அழிப்பது சாத்தியமற்றது.... அம்மூவர் இன்னும் எத்துனை பிறவி எடுப்பினும்.... மறுபிறவி எடுப்பார்களே ஒழிய... அழிந்து இப்புவியை உங்களின் கரங்களிள் அடைய என்றும் அனுமதிக்கமாட்டார்கள்.... உங்களின் அழிவே நெருங்குகிறது...

திவ்யா : நாங்கள் மூவர் இருக்கும் வரை... எங்களின் பாதுகாப்பை தாண்டி.... புவியை தங்களாள் அசைக்க கூட முடியாத டி.... எங்களை தாண்டியே தாங்கள் புவியை அடைய முடியும்.... அதற்கு ஒரு துளி கூட சந்தர்ப்பம் இல்லை.....

யோகனா : அது நிகழும்... அதே போல்... இவளையும் நான் அழிப்பேன்... என் காதலை என்னிடமிருந்து பறித்ததற்கு காரணமாய் இருந்த இவளை அழிக்காமல் நான் ஓயமாட்டேன்... என்னவரை அடைவேன்....

அப்போது திடீரென தன் உடலில் அதிர்வெழுந்து தள்ளாடிய பவி... தன் உடலிலிருந்து வெளிவந்த இன்னோறு பவியை கண்டு இருக்கும் அதிர்ச்சி பத்தாதென இன்னும் அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டாள்....

பவியின் நகல் : இந்துவினவரை அடைவது கடினம் யோகனா... அதை முன்பே அவர் நிரூபித்தும் காட்டிவிட்டார்.... என் தமையன்கள் இருக்கும் வரை உண்மை காதல் அழியாது...

யோகனா : வசனம் விடாதே.... யான் என்னவரை கரம்ப்பிடிப்பேன்.... அதை நிரூபித்துகாட்டுகிறேன்....

பவியின் நகல் : அவர் என்னவர்... எனக்கானவர்... எனக்காய் மட்டுமானவர்.... என்றாள் தீர்மானமாக....

திவ்யா : புரிந்ததல்லவா.... இனிமேலும் இங்கிருந்தாய் எனில்... யானே உன்னை அழித்துவிடுவேன்....

யோகனா : அழிக்க வேண்டியது தானே... ஏன் நேரம் தாழ்த்துகிறாய்??? பதில் வராதே.... நான் கூறவா... அச்சம்... என் மீதிருக்கும் அச்சம்...

ப்ரியா : முட்டாள்... நாங்கள் பதிலளிக்கும் ஒரு நொடி முன்... நீயே பதில் என உன் மூடத்தனத்தை குறிப்பிட்டால்... அது எங்களது அச்சமாகிவிடுமா??? உண்மை காரணத்தை கூறவா???

திவ்யா : உம்மை அழிக்க நான் ஒருவளே போதும் தான்... ஆனால் நம் பகை அப்படியல்லவே....

அனு : எம் சகோதரிகளுடன்... உம் மரணசாசனத்தை எழுதிடுவேன் யோகனா.... உம் மரணம்... எங்கள் மூவராலே....

இதனை கேட்டு ஆத்திரமடைந்தவள்....

யோகனா : நன்கு செவியை தீட்டிக் கொள்ளுங்கள்.... கோவன்கள் அழிவர்... இப்புவியை தீயசக்தி ஆளும்... என கூற... அனு திவ்யா ப்ரியா மூவரும் அவளை தாக்க போக.... அதற்குள் பவி புறம் திரும்பியவள்... ஏதோ கூற வர அதற்கு முன்னே..

பவியின் நகல் : உன்னையும் அழிப்பேன்.... என்னவரையும் அடைவேன்... என யோகனாவை போலவே கூறி... இதை தானே கூற போகிறாய்... என நக்கலடிக்க...

கோவமாய் முறைத்துவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.... அனு திவ்யா ப்ரியாவும் மறைந்துவிட.... பவியின் நகல் மட்டும் அப்படியே இருந்தது....

பவி : யார் நீ???

பவியின் நகல் : யான் உன் நினைவின் நகல்....

பவி : நகலா??? யு மீன் க்லோன்.... ஆனா என் நினைவு தான் எனக்கு தெரியுமே... ஆனா இங்க வந்த அந்த பிசாச நா பாத்தது இல்லையே...

பவியின் நகல் : நான் உன் நினைவுகளின் நகல் தான்... ஆனால் இப்பிறவி நினைவுகள் அல்ல... சென்ற பிறவியின் இந்துமதியான உன் நினைவுகளின் நகல்...

பவி : இந்துமதி யா.???

பவியின் நகல் : ஆம்....

பவி : அப்போ அனு திவ்யா ப்ரியா பழையகாலத்து ட்ரெஸ் ல இருந்தாளுங்களே... அவளுங்களுக்கு கூட அந்த பிசாச தெரியாதே....

பவியின் நகல் : அவள்கள் மூவரும் கூட... நினைவுகளின் உருவங்கள் தான்.... உண்மையான உன் தோழிகள்... உறக்கத்தில் இருக்கின்றனர்....

பவி : ஏன் இதல்லா நடக்குது????அந்த பிசாச பத்தி உனக்கு தெரியுமா???

பவியின் நகல் : அனைத்தும் விதி... அவள் யோகனா... முன் வந்தாளே மாயா அவளின் சகோதரி....

பவி : மாயா வா??? ஆமா இதையும் கேக்கனும் னு இருந்தேன்... அவ பேரு மோகினி தானே... நீயும் அந்த பிசாசும் என்ன மாயா ன்னு சொல்றீங்க????

பவியின் நகல் : அவளின் முழு நாமம் மாயமோகினி... சிலரின் சதியால் இரண்டாக பிரிக்கப்பட்டாள்... மாயாவாகவும்... மோகினியாகவும்.... இருவரும் வெவ்வேறு துருவங்கள்... ஒருவள்... நல்லவையை மட்டும் அறிந்தவள்... மற்றவள் தீயதை மட்டுமே அறிந்தவள்.... இதில் உன்னை காப்பாற்றிய மாயா நல்லவள்...

பவி : ஆனா இந்த யோகனா பிசாசு யாரு??? அது ஏன் என்ன அழிக்கனும் னு சொல்லுது???

பவிவின் நகல் : அவள் காதல் செய்தவர்... அவளை விட்டு செல்ல காரணமாய் இருந்தது நீ... அதனால் தான்...

பவி : நானா?? நா ஏன் அவ காதல பிரிக்கபோறேன்???

பவியின் நகல் : இருவரும் காதலித்தால் தானே பிரிக்க இயலும்... அவள் மட்டும் தான் அவரை காதலித்தாள்... அவரல்ல...

பவி : அவ லவ் பன்னவரு இவள லவ் பன்னலன்னா... நா எப்டி காரணாமாவேன்???

பவியின் : நீ காதலித்தவரையல்லவா அவள் காதலித்தாள்... அதாவது உன் காதலரை தான் அவள் காதலித்தாள்... உன் காதலர் உன்னை காதலிக்கும் பொழுது வேறு ஒருவளை எப்படி பார்ப்பான்???

பவி : வாட்??? என் அஷ்ஷ அந்த பிசாசு லவ் பன்னுதா??? ஹவ் டர்.... நா இருக்கும் போது எப்டி அவ.???... காட்டெரும அவளுக்கு என் அஷ் கேக்குரானா??? என கோவத்தில் அவளை கண்டபடி பேச.... பவியின் நகலுக்கே சிரிப்பு வந்தது...

பவியின் நகல் : சரி சரி... யான் சென்று வருகிறேன்... இன்னும் சில தினங்களிளே... அனைத்து உண்மைகளையும் அறிந்துக்கொள்வாய்... அதுவரை இங்கு நடந்ததை யாரிடமும் கூறாதே... என கூறிவிட்டு... அவளும் மறைந்தாள்.... இவை எல்லாம் என்னியவாறே உறக்கதின் பிடியில் சிக்குண்டாள் நம் பவி....

தற்போது....

அவ்வோவியத்தை கண்டு இவள் தான் பிரிக்கப்பட்டிருக்கிறாள் என புரிந்துக் கொண்டாள் பவி.... மற்றவள்கள்... இவளின் மோகினி முகத்தை மட்டுமே கண்டதால்... அவளா டி இவ??? என பேசிக் கொண்டிருந்தனர்.... அவ்வோயித்தை பார்த்தவாறே... மற்றதை பார்க்க திரும்பினர்... அப்போது கொடூரமான சத்தத்தை கேட்டு அனைவரும் வெளியில் ஓட.... அங்கு அவர்களின் கண் முன் ஏதோ ஒரு பெரிய கருப்பு துணி விழ... அதன் பின் நடந்தவை அனைத்தும் மாயமானது....

நம் நாயகிகள் பரமேஷ்வரனின் அடி ஆட்களாள் கடத்தப்பட்டனர்....

அக்கூட்டத்தின் தலைவன்.... உடனே பரமேஷ்வரனுக்கு போன் போட்டு கடத்தியதை தெரிவிக்க....

மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற பரமேஷ்வரன்.... அவுட்டவுஸ் தூக்கி வருமாறு கூறி போனை வைத்தார்...

அதே நேரம்..... கந்தர்வமலையின் அடிவாரத்தில்..... மாயா மற்றும் மோகினி ஓரிடத்தில் அமர்ந்திருக்க.... அவர்கள் முன் மதுசூதனாவும் மேகலாயாவும் கத்திக் கொண்டிருந்தனர்.... பூஜைக்கு ஒத்துழைக்குமாறு.... அவ்விருவரோ... துருவன் இந்நிலையில் இருப்பதால்.... சம்மதிக்க மறுத்தனர்....

விகாஷ் ஆகாஷ் நகாஷ்.... பலிமேடையில் அமர்ந்து... யாகத்தில் அதி தீவிரமாய் நுழைந்திருந்தனர்.... மாயா மற்றும் மோகினி இல்லாமல் யாகம் முடியவடைய இயலாதென்பதால்... மதுசூதனாவும் மேகலாயாவும் பெரும் பாடு பட.... அவர்களுக்கு தேனாய் வந்து விழுந்தது... ஒரு குரல்..... " யான் கழந்துக்கொள்ளலாமா??????" என்னும் கேள்வியுடன்....

அக்குரலை அடையாளங்கண்டு.... பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர் அனைவரும்..... இருவரை தவிர்த்து....

காதல் தொடரும்.....
H

iii idhayangel.... hw was the ud... shre ur comments.... thappu iruntha sollunga... stry eepdi pohuthu.....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

Ellarum avangavanga fmily kooda nalla enjoy pannunga... tata...gud ni8

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro