Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-25

அதே இடத்தில்..... சில அடர்ந்த மரங்களின் பின்.... துருவனை ஏந்தியவாறு மோகினி நிற்க... அவள் அருகில் கைகளிள் கருப்பு தீயுடன் நின்றாள் மாயா.... அவர்களுக்கு முன் மேகலாயா மற்றும் மதுசூதனா நின்றனர்.... இந்நாழ்வரை கண்ட அந்த இரு உருவங்களும்... மாயா மற்றும் மோகினி ஒரே போல் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்....

மேகலாயா : கூறுவதை கேள் மாயா.... அத்தான்களுக்கும் என் பிரபுவிற்கும் எங்களுக்கும் உதவி செய்.... எங்களின் சாபக்கட்டை அழித்த நீ... அதே போல் உம்மை அழித்தால் நாங்களும் அழிவோம் என்னும் வாக்கை அழித்திடு... என கூற...

மாயா : எம்மை அழித்தால் தாங்கள் இருவரும் அழிவர்... என்றது எழுதி வைத்த உயில் இல்லை தங்கையே.... கோவன்களிட்ட வாக்கு.... என கூற... அவளின் குரலில்... பாதி கோபமும்... மீது குரும்பும் இருந்தது....

மதுசூதனா : தங்கையா??? இவ்வழைப்பை கேட்டு எத்துனை யுகங்கள் கழிந்துவிட்டது... இத்திடீர் மாற்றத்தின் காரணம் என்ன??? அது மட்டமல்லமல்.... உம் குரலில் தெரியும் குரும்பு... இது எப்படி சாத்தியம்???

மாயா : ஒரு மாற்றமும் இல்லை தங்கையே.... எப்படியும் இன்னும் சில தினங்களிள் என் ஆருயிர் தங்கைகள் அழியப்போகிறீர்கள்... ஆதலால்... அதுவரை ஆசை தீற தங்கை என அழைத்துக் கொள்வேன் அல்லவா????

மேகலாயா : போதும் மாயா.... இகழாதே.... உம் மரணம் நெருங்கவில்லை... என்னும் அகம்பாவத்தில் பேசுகிறாயா???

மாயா : ஹாஹா...அகம்பாவமா??? வேறு வார்த்தை கிடைக்கவில்லையோ என் தங்கைக்கு... மீண்டும் கூறுகிறேன்.... மரணத்தை பற்றி துளியும் கவலை இல்லை எமக்கு.... உங்கள் மரணத்தை காண முடியாதே என்னும் சிறு ஏக்கம் இருந்தது... ஆனால்... இன்று அதுவும் மறைந்துவிட்டது... உங்கள் மரணத்தை யான் காணத்தான் போகிறேன்...

மதுசூதனா : அதையும் காணலாம் தமக்கையே... என கோபமாய் கூறிவிட்டு... மேகலாயாவுடன் அங்கிருந்து மறைந்தாள்....

தன்னை நிலை படுத்திக் கொண்ட மாயா... அமைதியாய் நின்ற மோகினியின் அருகில் சென்று... துருவனின் கேசத்தை வருடியவாறே....

மாயா : என்னவானது மோகினி??? முன் கூட்டியே உன் அமைதி கலைந்திருக்க கூடும் என என்னினேன்....

மோகினி : ஒன்றுமில்லை மாயா....

மாயா : உன் அமைதியின் பின் காரணம் இருப்பது புரிகிறது... தயங்காமல் கூறு...

மோகினி : உன்னிடம் எமக்கென்ன தயக்கம் மாயா??? என்ன கூறுவதென்றே தெரியவில்லையடி...

மாயா : எதை பற்றியம்மா கூறுகிறாய்... சற்று தெளிவாய் தான் கூறேன்...

மோகினி : யான் தீயவள்... ஆனால் நீயோ... எமக்கு எதிரானவள்... நாம் ஏன் மாயா இரண்டாய் பிரிக்கப்பட்டோம்.... பிரிக்கப் படாமல் இருந்திருக்கலாம்... நாம் இருவரும் அவர்களுக்காகவே இருந்திருக்கலாம்..... என தன் உண்மையான குழப்பத்தை மறைமுகமாக தெரிவித்தாள்....

மாயா : விதியை மாற்ற இயலாதே மோகினி.... நம் விதியை மாற்ற அத்துனை கடினப்பட்டு இறுதியில்... என்னை மீட்டனர்... என ஒரு வருத்ததத்தில் இது நாள் வரை கூறாததை கூறிவிட...

மோகினி : என்ன கூறுகிறாய்??? யார் கடினப்பட்டது???

தான் உலரியதை உணர்ந்து.. மாயா சமாளிக்க முயலும்.. முன்பே அவளின் கரத்தை துருவனின் தலையில் வைத்து... உண்மையை கூறு என கட்டளையாய் கூறினாள் மோகினி...

மாயா : வேறார் நமக்காக கடினப்பட போகிறார்கள்???? கோவன்களே நம் விதியை மாற்ற போராடினர்.... எவ்வளவு முயன்றும்... உன்னை அவர்களால்.... நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.... அதன் பின்பே மீண்டும் ருத்ரபோர் தொடங்கி... நாம் இருவரும் சாபத்தில் வீழ்ந்தோம்....

மோகினி : இதை பற்றி ஏன் மாயா என்னிடம் முன்பே கூறவில்லை???

மாயா : கூற தோனவில்லை மோகினி....

மோகினி : ஏனினும் அவர்களே நம் காதல் பிரிந்ததற்கு காரணமாய் இருந்தவர்கள்.... என பிடித்த பிடியிலே நிற்க....

அடப்போடி என சலித்துக் கொண்டவாறே அங்கிருந்து மறைந்தாள் மாயா....

தீரா : ஆமா அப்ரம் கடுப்பாகாதா....

மோகினியும் மாயா மறைந்ததை கண்டு... சுற்றி முற்றி பார்த்துவிட்டு... அங்கிருந்து மறைந்தாள்.....

இவை அனைத்தையும் கண்ட இரு உருவங்களும்... ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள... பின் இருந்து வந்து நாசியில் போர்த்தப்பட்ட மயக்க (தூக்க) மருந்து கலந்த கைக்குட்டையால் இருவரும் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்தனர்.....

காலை விடிய தாங்கள் காட்டில் தானே இருந்தோம்... பின்பு வீட்டிற்கு எப்படி வந்தோம்.... என குழம்பியவாறே ..... தங்கள் குழப்பத்தை வெளிகாட்டது.... வேலையை தொடங்க வெளியேறியது பெண் உருவமும்.... ரெட்டி ஐ உருவமும்....
.
.
இரவு மூணு மணிக்கே வந்து உறங்கிய க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் மூவரும் தலையணையை கட்டி அணைத்தவாறு உறங்கி கொண்டிருந்தனர்... அவர்களை தொந்தரவு செய்யாமல் அனைவரும் கீழே சென்றனர்... அங்கோ நம் நாயகிகளும்... பெரியோர்களும்... எங்கோ அவசர அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தனர்....

வீர் : என்ன பா நடக்குது இங்க??? ஏன் இவ்ளோ அவசரம்???

காவியா : நாங்க ஷாப்பிங் போறோம் டா....

அஷ்வன்த் : ஏன்??

இலக்கியா : மக்கு...  இன்னு அஞ்சு நாள்ள கல்யாணம்.... இரெண்டு நாள்ள.... மெஹந்தி..... மூணு நாள்ள... ரிஸப்ஷன்....

ரித்விக்கிற்கு தேனாய் வந்து பாய்ந்தது இவ்வார்த்தைகள்....

ரனீஷ் : அதனால...

தெய்வானை : என்ன டா தெரியாதமாரி யே கேக்குரீங்க???

ரவி : தெரியாதது னால தான பாட்டி கேக்குறோம்....

காவியா : டேய் ட்ரெஸ்ஸு எடுக்க வேணாமா டா???

முகில் : அட அப்டி ஒன்னு இருக்குல்ல....

ரக்ஷா : இருக்குத்தான்.... வெட்டி பேச்சு போதும்... போ போய்.... இவனுங்க எல்லாரையும் கெளப்பு....

முகில் : நாங்க எதுக்கு டி???

வீனா : அப்ரம் யாரு டா... உங்களுக்கு ட்ரெஸ் சூஸ் பன்றது???

ரித்விக் : மது வருவாளா??? ட்ரெஸ் வாங்க???

பவி : கல்யாணப் பொண்ணு அவ இல்லாமயா???

ரித்விக் : ஈஈஈஈஈ

அனு : இளிக்காத டா... பாக்க சகிக்கல.....

ப்ரியா : சரி சரி போய் கெளம்புங்க.....

அஷ்வன்த் : எங்களுக்கு வேலை இருக்கு டி... நீங்க போய்ட்டு வாங்க...

திவ்யா : அப்டி என்ன கொலம்பஸ் ஷிப்ப கடத்துர வேலை???

ரவி : அதல்லா சொல்ல முடியாது... நீ கெளம்பு.... நீங்களும் தான் டி...

அப்போது.....

நிரு : எவ்ளோ நேரம் தான் டி நா தெருவுல நிக்கிறது.... நீங்க வருவீங்கன்னு.... மனுஷி வெயில்ல எவ்ளோ நேரம் நிப்பா... என கத்திக் கொண்டே உள்ளே வந்தாள் நிரு..... வெள்ளை சுடி..... தோலில் தொங்கிய ஷால்..... காதில் கத்தக்களி ஆடிக் கொண்டிருந்த வெண்ணிற ஜிமிக்கி.... வெள்ளை வளையல்.... வெள்ளை டாலரிட்ட செயின்.... என முழுதும் வெள்ளை நிறத்தில்.... தேவதையாக நடந்து வந்தாள்..... அவளின் அழகில்.... கண்களை விரித்த முகில்...

முகில் : என்ன டி... வெள்ள கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வர???? நீ மட்டும் தனியா போட்டுட்டா சுத்துவ.....???

தான்யா : ஹலோ... எக்ஸ்க்யூஸ் மி.... போலீஸ்கார்.... கொஞ்சொ இந்த பக்கம் திரும்புங்கோ....

முகில் : என்ன டி... என அவள் புறம் திரும்பி கேட்க....

தான்யா : நாங்கள்ளாம் உன் கண்ணுக்கு தெரியலையா என்ன???

முகில் : ஏன் டி.... எல்லாரும் தெரியிரீங்களே...

அவனின் அருகில் மற்ற நாயகன்கள்.... வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தனர்....

ப்ரியா : ஏன் டா.... கண்ணுத்தெரியாத கபோதி..... நாங்க எல்லாருமே வெள்ள கலர்ல ட்ரெஸ் போட்ற்றுக்குரது உனக்கு தெரியல..... நாயகிகள் அனைவரும் ஒரே போல்... ஒரே நிறத்தில்.... தேவலோக மங்கைகளாக மிளிர்ந்துக் கொண்டிருந்தனர்.....

அதே நேரம்.... திடீரென கயல்.... " ப்லீஸ்... ப்லீஸ் " என கெஞ்சும் சத்தம் கேட்டு அனைவரும் அங்கு நோக்க.... மாடி படியின் பிடியை இருக்கி பிடித்துக் கொண்டு வர மாட்டேன்... என அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் கயல்.... அவளை பிடித்து இழுக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள் நம் ஒவீ..... கூந்தலை க்லிப் போட்டு.... வெள்ளை ஸ்டட்டுன்.... மெல்லிய வெள்ளை நிற செயின் அணிந்து.... வெள்ளை நிற சுடிதாரில்.... தோலில் இருந்து...இடை வரை மறைத்த வெள்ளை துப்பட்டாவுடன்....  வளையல் சினுங்க.... அழகோவியமாய் நின்றாள் ஒவீ..... நம் கயல்... இன்று பள்ளி செல்ல மாட்டேன் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாள்.... ஆதலாலே இந்த ஆர்ப்பாட்டம்....எப்படியோ அவளை கெஞ்சி கொஞ்சி அழைத்து வந்தாள் ஒவீ....

அப்போதே அனைவரும் வெள்ளை நிற ஆடையில் இருப்பது புரிந்து.... நம்மை கலாய்ப்பதற்கு முன் ஓடி விட வேண்டும்... என வராத காலை வந்ததாய் பாவித்து... ஒரே ஓட்டமாய் ஓடி விட்டான் முகில்.... அவன் ஓடுவதை கண்டு அனைவரும் சிரிக்க.... ஆனால் ஒரு விழிக்கு சொந்தக்காரியோ... தன்னை கண்டும்... கேள்வி கேட்டும்.... அவன் பாட்டிற்கு சென்று விட்டானே... என கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தாள்....

தீரா : அது யாருன்னு... சீக்கிரமே போலீஸ் கம்ப்லைன்ட் குடுத்து தேட சொல்றேன் பா.....

சிறிது நேரம் களித்து வந்த முகில்.... அனைவரையும் போனில் ஓர் க்லிக் எடுத்துக் கொண்டான்.... அப்போட்டோவில்.... அவன் பார்வை நம் நிருவை காதலாய் வருட நொடிக்கூட தவறவில்லை.... ஆனால் சில நொடிகளிளே.... ஏதோ தீவிரமான ஒரு விஷயத்தை பற்றிய யோசனையில் மூழ்கி வீட்டை விட்டு வெளியேறினான்.....

நாயகிகளும் பெரியவர்களும்.... கிளம்பி... வீட்டை விட்டு வெளியேற... நாயகன்கள்.... காலை உணவை உண்ண அமர்ந்தனர்.....

சோம்பல் முறித்தவாறே எழுந்த க்ரிஷ்ஷின் இமைகள் பிரியும் நேரம்.... கருநீல நிற விழியுடன்.... பண்டைய கால உடையில்.... அழகாய் நடந்துவந்தாள் ஒருவள்.... வந்தவள்..... அவன் நெற்றியில் இதமாய் முத்தமிட.... அவன் கண்களை விரித்து அதிர்ச்சியில் இருக்கும் போதே... தன் முகத்தை மறைத்திருந்த திரை விலக்கி.... " நான் உன் ரது வே தான் " என சொல்லாமல் சொல்லிவிட்டு மறைந்தாள் நம் அனு....

திடுக்கிட்டு கண்களை கசக்கி திறந்தவன்.... பிரம்மை போல என அவனின் சகோதரன்களின் புறம் திரும்ப.... அவ்விருவரும் இவனை போலவே... அதே முக பாவத்துடன்.... " பிரம்மை போல " என கூறிக் கொண்டே திரும்பினர்.... மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு.... சிரித்துக் கொண்டனர்...... ஆம் இந்திரனுக்கு நீல நிற விழியுடன் அதே போல் திவ்யா வந்தாள்... சத்தீஷிற்கு ப்ரியா வெள்ளை நிற விழிகளுடன் அதே போல் வந்து சென்றிருந்தாள்.... அதன் பின் காலை வேலைகளை முடித்து... நேற்று இரவு அவர்கள் கண்டெடுத்த பொருட்ளுடன் கதவருகில் வர... அதே நேரம் மற்ற நாயகன்களும் உள்ளே நுழைந்தனர்.... நேராக விஷயத்திற்கு வந்தனர்...

ரித்விக் : நைட்டு எங்க டா போனீங்க???

சத்தீஷ் : அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டீங்களா டா??

அஷ்வன்த் : ஆமா கண்டுபுடிச்சாச்சு சொல்லு...

க்ரிஷ் : கமிஷினரோட ஆபீஸ் க்கு தான்.... இந்த கேஸ பத்தின சில ஆதாரங்கள் அங்க கிடைச்சிது.... சோ சுட்டுட்டு வந்துட்டோம்.... நா நெனச்ச மாரி... இந்த கேஸ எங்க கைக்கே வரக் கூடாது ன்னு தான் ப்லன் பன்னீர்க்காங்க...

இந்திரன் : கெடச்ச ஆதாரங்கள் மூணு.... அதுல ஒன்னுதான் இந்த டைரி.... வாங்கபாப்போம்... என திறக்க.....

அதன் முதல் பக்கத்தில்.....

ARJUN ... JOURNALIST.....
என எழுதி.....

ஹாய்.... நான் தான் அர்ஜுன்... எனக்கு சொந்தம் னு சொலிக்கிர அளவு யாரும் இல்ல.... ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்.... எனக்கு வாழ்க்கையிலே இந்த உலகத்துலையே ரொம்ப புடிச்சது.... என் ப்ரெண்ட்ஸ்... அப்ரம் என் வேல.... இன்னைக்கு நா ஃபர்ஸ்ட் டே வேலைக்கு போ போறேன்.... என முடிந்தது அப்பக்கம்.... அடுத்த பக்கத்தில்.... வேறு தேதியுடன்...

ஹாய்... எனக்கு எங்க சீஃப சுத்தமா புடிக்கல.... இங்க நடக்குரதும் புடிக்கல.... ஒரு உண்மைய காமிக்க நா பட்ரபாடு எனக்கு தான் தெரியும்... இது தெரிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்.... எப்டி தான் மனசு வருதோ.... என அப்பக்கம் முடிய....

அடுத்த பக்கத்தை திருப்பியவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது....
அந்த தாளை கண்ட இந்திரன்.... அப்படியே அமர்ந்திருந்தான்... இவன் ஏன் அடுத்த பக்கத்தை வாசிக்காமல் இருக்கிறான்... என மற்றவர்கள் அவனையே நோக்க... கடுப்பான சத்தீஷ்... டைரியை பிடிங்கி நோக்கினான்.... அதில் ஏதோ ஓவியம் போல் வரையப்பட்டிருந்தது....

தீரா : சாரி கிருக்கப்பட்டிருந்தது....

அதை கண்டவன்... குழம்பி தான் போனான்.... மற்றவர்களிடமும் காட்ட... அவர்களும் அதே ரியாக்ஷனை தந்தனர்.... அந்த தாள் முழுதாக கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது.... அங்கங்கு ஏதோ குச்சியால் சுரண்டியதை போல் இருந்தது.... அந்த தாளின் கீழே ஒரு சிறிய தாள்.... கொலை என சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது... அதை கண்டுக் கொண்டவர்கள் அதிர்ச்சியடைய.... அப்பக்கத்தை ஆராயாமல் மறு பக்கத்தை திருப்பினர்.... ஆனால் தொடர்ந்து.... இன்னும் ஆறு பக்கங்கள் அதே போல் கருப்பு நிற பெயின்ட்டே பூசப் பட்டிருந்தது... மற்ற பக்கமெல்லாம் சாதாரணமாகவே இருந்தது.... இதில் ஒன்றும் கிடைக்கவில்லையே... என சோர்ந்து போன நாயகன்கள்... அதை ஓரமாய் எடுத்து வைத்தனர்....

அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கினர்....
.
.
.

GK TEXTILES

கடைக்கு செல்லும் முன்னே ராணி ( மது நிருவின் சித்தி) மதுவுடன் வந்து இணைந்துக் கொண்டார்..... உள்ளே நுழைந்த நம் வேலுதாத்தாவின் குடும்பத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க.... அதை எல்லாம் ஒதுக்கிய நாயகிகள்... இவர்களுடன் சென்றால்... இதை போல் பலர் வந்து மரியாதை என்னும் பெயரில் நம்மை வெளியாலாய் ஆக்குவர்... என யோசனையோடு.... தனியே செல்ல திட்டமிட்டனர்.....

இவர்கள் இதை போல் தான் ஏதேனும் செய்வர் என உணர்ந்ததால்.... அவர்களை அவர்கள் போக்கில் விட்டனர் பெரியவர்கள்....

மதுவை இழுத்துக் கொண்டு.... மூன்றாம் தளம் சென்றனர்.... அதுவோ மென்ஸ் ஸெக்ஷன்..... நாயகிகள் அவரவருக்கோ அல்ல.... மணமகளுக்கோ ஆடை எடுக்காமல் அவரவர் துணைக்கு எடுக்க தொடங்கினர்....

மதுவோ தலையில் கை வைத்து அமர்ந்தவள்.... திடீரென....

மது : ஆஹா... நமக்குன்னு ஒரு ஜீவன்... இருக்கே... ஃப்ரக்ஷன் ஆஃப் செக்கென்ட் (Fraction of second) ல மறக்க வச்சிட்டாளுங்களே... என புலம்பியவாறு தன் மனதை களவாடிய தன் மண்ணவனுக்காய் உடையை தேட தொடங்கினாள்.....

நிரு மது ஒவீயை தவிர்த்து மற்ற ஏழ்வருமே தங்களின் துணைகளுக்கு திருமணமன்று ஆடை உடுத்த வேஷ்ட்டி சட்டை எடுக்கலாம் என முடிவெடுத்து அலசிக் கொண்டிருந்தினர்.... மதுவும் அவர்ளுடன் இணைந்துக் கொண்டாள்.... நிரு அவர்களுக்கு உதவ சென்று விட... இதிலெல்லாம் ஆர்வம் இல்லாத நம் ஒவீ... தாடையை கையில் தாங்கியவாறு அமர்ந்துவிட்டாள்....

அஷ்வன்த்தை மனக்கண்ணில் முன் வர வைத்த பவி... அவனுக்கு ஒவ்வொரு உடையாய் வைத்துவைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.... இறுதியில்.... வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த வேஷ்ட்டியையும் சிகப்பு நிற சட்டையையும் அஷ்வன்த்திற்காய் தேர்வு செய்தாள்....

திவ்யாவும் தான்யாவும் ஒரே சட்டையை பார்த்துக் கொண்டிருக்க.... இருவரில் யாருக்கு சிரியாக இருக்கும்... என சிந்தித்து கொண்டே இருந்தவள்களுள் நடுவில் புகுந்த ஒரு ஆன்ட்டி.... அந்த சட்டையை அபேஸ் பன்னிவிட்டு போய்விட்டார்....

வேறு வழி இன்றி இருவரும் வேறு பக்கம் திரும்ப.... அதே நேரம் சில பல ஆடைகளின் அடியில்... மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஒரு க்ரே நிற சட்டையை தன் மென்கையால் எடுத்தாள் ப்ரியா.... இமை மூடி நின்றவள்... இது சத்தீஷ்ஷிற்கு பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்து... அதற்கு பொருத்மான வேஷ்ட்டியையும் தேர்ந்தெடுத்தாள்....

வீனாவின் கண்களில் பட்ட பச்சை நிற சட்டையை நன்கு அலந்தவள்.... தன்னவனுக்காய் அதை தேர்ந்தெடுத்தாள்.... அதற்கேற்றார் போல் கோல்டன் பார்டர் இட்ட வேஷ்ட்டியை அலசி ஆராய்ந்து கண்டிப்பிடித்தாள்...

ரக்ஷாவோ கருப்பா சிகப்பா... என மாற்றி மாற்றி இரு நிறங்களை பார்த்துக் கொண்டிருந்தவள்... அப்படியோ போட்டுவிட்டு.... அவ்விரு நிறங்களின் நடுவிலே இருந்த நீல நிற சட்டையை எடுத்தாள்.... ரனீஷிற்கு நீலம் பொருத்தமாக இருப்பதை அறிந்ததால்... அதையே தேர்வு செய்தாள்....

தான்யா இறுதியில்... எப்படியோ பல தேர்வுகளின் பின்.... கரு நீல நிற சட்டையையும் பாடரிட்ட வேஷ்டியையும் தேர்வு செய்தாள்.....

திவ்யாவின் கையில் சிக்கியது ஒரு கத்திரிப்பு நிற சட்டை... அதையே ஆராய்ந்துக் கொண்டிருந்தவளின் பார்வை.... ஒரு ஓரத்தில் இருந்த ப்ரௌன் நிற சட்டையை கண்டு பளிச்சிட்டது.... அதை உடனடியாக எடுத்தவள்... இந்திரனுக்காய் தேர்வு செய்தாள்....

அனுவோ பலத்த யோசனையில் இருந்தாள்.... தன் யுவாவிற்கு எது தான் பொருந்தும்... என எல்லா நிறங்களையும்.... முன் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளை ஈர்த்தது... ஒரு ஓரத்திலிருந்து எட்டி பார்த்த கருப்பு நிற சட்டை... அதை எடுத்தவள்... மற்றதை ஒதுக்கினாள்.....

தீரா : அங்க முகில் னு ஒரு பாவப்பட்ட ஜீவன் இருக்குரத எல்லாருமே மறந்துட்டாங்களே....

முகில் மேல் கோபமாய் இருந்த நிரு... அவனுக்கு உடை எடுக்காமல் இருந்தாள்.... ஆனால் அனைவருமாக சேர்ந்து மஞ்சள் நிற சட்டையை தேர்வு செய்தனர்....

மெஹந்தி பங்ஷனிற்கு தொடங்கியது ஆடை விற்பனை.... இதிலும் கூட ஒவீ கலந்துக் கொள்ள வில்லை....

விதவிதமான ஷெர்வாணிகள் நம் நாயகன்களுக்காய் தேர்வு செய்யப்பட்டது....

ஏதோ யோசனையில் இருந்த ஒவீ... திடீரென சுற்றி நோக்கிவிட்டு... ஒரு ஆடையை கண்டாள்.... " இது அவனுக்கு நல்லா இருக்குமே " என அவளின் மனம் கூற.... அடுத்த நொடி அவளின் மூளை " அவன் தான் செத்துட்டானே.... அவனுக்கு வாங்குனா என்ன வாங்கலன்னா என்ன??? " ஏதோ வேண்டா  வெறுப்பாய் கூறி.... பல நாள் கழித்து எழுந்த மனதை குத்தி கீழே தள்ளியது....

அதன் பின் எதை பற்றியும் யோசிக்காமலே இருந்தாள் ஒவீ... சில நினைவுகள் அவளை வாட்டி கொண்டிருந்தது.... இவளின் முக வாட்டத்தை கண்ட நாயகிகள் குழப்பமடைந்தனர்.... அவளின் பார்வை அதே ஆடையில் தான் நிலைத்து இருந்தது... யோசனையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவளை தடுத்தது " வீ " என்னும் அலரல்.... பட்டென அவள் திரும்பி நோக்க.... அவள் தோளை தொட வந்த முகில் அப்படியே நின்றுக் கொண்டிருந்தான்....

இவனை எதிர்பார்க்காதவள்.... அவனுக்கு பின் யாரேனும் இருக்கிறார்களா என நோக்க... அவளுக்கோ ஏமாற்றம்....

முகில் : என்ன டி... ரவி ய தேடுரியா???

இவன் ஏன் திடீர்னு இப்டி கேக்குரான் ????? என யோசித்தவாறு...

ஒவீ : நா ஏன் அவன தேட போறேன்???

முகில் : நீ தேடாம உன் அக்கா ஒவீயா தேடுவா??? என கேட்டவனின் கேள்வியில் முதலில் முளித்தவள்... பின் தன்னை அவன் வீனா என நினைத்துவிட்டான் என புரிந்துக் கொண்டாள்....

ஒவீ : ஆமா முகில்... அவன தான் தேடினேன்.... என்ன நீ மட்டும் வந்துருக்க???

முகில் : வீட்ல சும்மா இருந்தோம் டி.... அதா நாங்களும் வந்துட்டோம்.... அவனுங்க அப்பாம்மா மாமா பாட்டி தாத்தாஸ் கூப்ட்டாட்டாங்கன்னு போனானுங்க... நா உங்கள தேடி வந்தேன்... என கூறிவனின் பார்வை.... பெண்களில் யாரையோ தழுவி வந்தது.... அதை புரிந்துக் கொண்டவள்....

ஒவீ : சாரு... எங்கள தேடி வந்த மாரி இல்லையே.... யாரையோ ஒருத்தர தேடி வந்த மாரி ல தோனுது...

முகில் : அப்டிலாம் இல்லையே டி... என தடுமாறாமல் கூறினான்....

தீரா M.v: சம்த்திங் ராங்... நம்ம பய இந்நேரம் இந்த கேள்விக்கு தெரிச்சு ஓடிர்ப்பானே.... அவ்ளோ பெரிய நடிகனா மாரீட்டியா டா நீயு....

ஒவீ : ஓ அப்டியா... அப்ப நிரு உனக்கு செலெக்ட் பன்ன ட்ரெஸ்ஸ வாங்காம வர சொல்லிடவா...

ஒரு நொடி அவள் கூற்றில் அவன் முகம் சில உணர்வுகளை தத்தெடுத்து.. பின் நிலையானது....

முகில் : ஏன் டி சம்மந்தமே இல்லாம பேசுர???அவ ஏன் எனக்கு எடுக்க போறா???

ஒவீ : அவங்கவங்க ஆலுக்கு அவங்கவங்க தான் எடுப்பேன்னு சொல்லி எடுத்துக்குட்டா இருக்காளுங்க...

முகில் : அப்போ ரவி ஓட ஆலு நீ அவனுக்கு எடுக்கலையா???

ஒவீ : ரவிக்கு ரவி ஆலு எடுப்பா....

முகில் : என்ன டி சொல்ற... நீ தான டி அவன் ஆலு...

ஒவீ : வீனா தான ரவி ஆலு...

முகில் : அடியேய்... நீ தான டி... வீனா...

ஒவீ : நா சொன்னனா???

திடீரென வந்த கேள்வியில் அவன் திடுக்கிட... அடுத்த நொடி அவன் அதிர்ச்சியையும் மறைத்துக் கொண்டான்.....

முகில் : அப்போ நீ ஒவீயா..???

ஒவீ : இல்ல பவி...

முகில் ங.. என முளிக்க...

ஒவீ : ஒவீ வீனா ன்னு ஒரே மாரி நாங்க இரெண்டு பேரு தான டா இருக்கோம்... அவ இல்லன்னா... அது நான் தான....

முகில் : ஹிஹி அத முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தான.....

ஒவீ : ம்... அதா இப்போ சொல்லிட்டேனே....

முகில் : சரி சரி.... தோ வந்திடுறேன்... என கூப்பிட கூப்பிட கேக்காமல் எங்கோ சென்று விட்டான்....

சில நொடிகளின் பின்... மற்ற நாயகன்களும் அவனுடன் சேர்ந்து வந்தனர்.... முகில்... அவன் காலை தூக்கி தூக்கி பார்த்துக் கொண்டிருந்தான்.... ஒவீ அவனை எதர்ச்சையாய் பார்க்க... ஈஈஈ என இழித்து வைத்தான்.... அவளோ " என்னாச்சு இவனுக்கு " என்று யோசித்தாள்....

அனு : ஓய்... எப்பொடா வந்தீங்க???

திவ்யா : சர்ப்ரைஸ் மச்சி....

பவி : நல்ல பாஸ்மத்தி ரைஸ்ஸு.... வீட்ல வெட்டி யா இருக்க புடிக்காம இங்க வந்துட்டு... சர்ப்ரைஸாம்....

க்ரிஷ் : குட்டிமா... என்ன தான் இருந்தாளும்... அண்ணாஸ இப்டி டேரக்ட்டா இன்ஸல்ட் பன்ன கூடாது டா....

தான்யா : அப்போ இன்டேரெக்ட்டா பன்னலாமா டா அண்ணா???

ரனீஷ் : அடிங்கடா அந்த ஈ ய.... என தலையில் கொட்ட.... அவன் தலையில் கொட்டு வைத்தான் வீர்... தன் தலையில் தேய்த்தவாறே....

ரனீஷ் : டேய்.... உன் லவ்வர் காக இப்டி ப்ரெண்ட கொற்றியே...

வீர் : அவ சின்ன புள்ள டா... நீ தா எருமையாட்டம் வளந்துருக்கியே....

சத்தீஷ் : அவ சின்னபுள்ள... இவன் எரும??? இவன எருமன்னு சொல்லு... நா உனக்கு ஓட்டுப்போடுறேன்... ஆனா அவள சின்னப்புள்ள ன்னு சொல்லி பூகம்பத்த உண்டாக்காத...

வீர் : போங்கடா... எனக்கு என் தனு எப்பவுமே சின்னபுள்ள தான்...

ஒவீ : ஐய்யொடா.... டாப்பிக் சேன்ஞ் ஆனாலும் நாங்க விட மாட்டோம் டா... என கூற... நாயகன்கள் ஒருவரை ஒருவர் பார்த்து முளித்துக் கொண்டனர்...

திவ்யா : சரி சரி பொழச்சு போங்க.... என கூற.... அடுத்ததாக... நாயகிகள் அவரவர் நாயகன்களுக்கு தாங்கள் தேர்வு செய்த ஆடைகளை காட்ட...

முகில் : என் ட்ரெஸ் எங்க டி???

தான்யா : அதோ அங்க இருக்கே... என காட்ட....

முகில் : மெஹந்திக்கு.???

பவி : அங்க இருக்கு பாரேன் மச்சான்....

முகில் : காணுமே டி....

நிரு எடுத்த அந்த ஷெர்வாணி அங்கு எங்கையுமே இல்லை.... அதை பற்றி விசாரிக்க... அதை யாரோ வாங்கி விட்டார்கள் சாரி... என கூறி... வேறு டிசைன்களை காண்பித்தனர்....

அதன் பின்.... பழைய யோசனைக்கே சென்ற ஒவீ... அதே ஆடையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க... அவளை அழைக்க வந்த ப்ரியா அவள் பார்க்கும் இடத்தை கண்டு விட்டு.... முகிலை கத்தி அழைத்தாள்.... அவனும் அங்கு வர... ஒவீ பார்த்த அதே ஷெர்வாணி அருகில் இருந்த ஷெர்வாணியை காட்ட... அதை கண்டவன்.... நொடியில் தன் முகத்தை சுளித்தான்....

அவ்வாடைகளின் அருகில் சென்றவன்.... ஒவீ பார்த்தை ஆடையை கையில் எடுக்க.... அதை கண்ட ஒவீ " நோ " என கத்த முற்பட்ட மனதை அடக்க பெரும்பாடு பட்டாள்....

ப்ரியா : இது உனக்கு செலெக்ட் பன்னது இல்ல டா... அது பக்கத்துல ஒன்னு இருக்குள்ள... அது மாரி இருக்கும்..... என வேறு ஆடையை கை நீட்டி காட்ட....

அவனோ அதை கவனியாமல்... தான் கையில் வைத்திருந்நதை தான் கூறிகிறாள் என நினைத்து.... இது ரொம்ப நல்லா இருக்கு நா இதையே போட்டுக்குறேன்.... என டார்க் க்ரீனில் இருந்த ஒவீ பார்த்த அதே ஷெர்வாணியை பில் போட்டான்.... மற்றவர்களும் அவன் விருப்பதிற்கேற்ப விட்டுவிட.... ஒவீக்கோ மனம் ரனமாய் வலித்துக் கொண்டிருந்தது....

என்னவனுக்காய் நான் பார்த்த உடையை வேறு ஒருவன் எப்படி.... என்னும் சிந்தனையே அவள் மனதில் சுழன்றுக் கொண்டிருந்தது.....

காதல் தொடரும்.....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro