Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்-15

" கண்ண திற "" கண்ண திற " என கேட்டுக் கொண்டே இருக்க... கடினப்பட்டு இமைகளை பிரித்தாள் அனு... அவள் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அனைத்து நாயகிகளும் அமர்ந்திருந்தனர்.... அவள் கண் திறந்ததை கண்டதும் நிம்மதி பறவியது அவர்களின் முகத்தில்.... நடப்பது புரியாமல் முளிக்க தொடங்கினர்.... இருப்பினம் பயம் சிறிதும் இல்லாமல் இருந்தனர்... அவர்களை இன்னும் அதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் தினிக்க... சில குள்ளநரிகள் அவர்களை நோக்கி நடந்து வந்தது... நாயகிகள் லேசாய் கண்களை மூடி வேவு பார்த்துக் கொண்டிருந்தனர்.... நொடியில் அனைத்து குள்ளநரிகளும் ... குள்ள மனிதர்களாய் மாறியது... அதிர்ச்சியை காட்ட முடியாத நிலையில்... இருந்த சமயம்... நடந்து வந்த குள்ளமானிடர்கள்... முதலில் கிடந்த ஒவீயை தூக்கிக் கொண்டு நகர்ந்தனர்....அவள் காலருகில் கிடந்த திவ்யா காலால் அவளை தொட்டு அவர்களை தடுக்க முனைந்தாள்... ஆனால் தோழ்வி.... அனைவரின் முகத்திலும் குழப்ப இரேகை கூடியது....ஒவீயை என்ன செய்யபோகிறார்கள் என தெரியாமல் பதற..வீனா ரக்ஷா மற்றும் தான்யா பதறிபோயினர்... இவள் ஆத்மா என தெரிந்துவிட்டால் என்ன செய்வது இறைவா காப்பாற்று... என மனதிலோ வேண்டிக் கொண்டிருக்க... மூவரும் விடாமல்.. மனதில் " ஒவீ ஆத்மா ன்னு தெரிய கூடாது " என ஜெபிக்க தொடங்கினர்..... தன் செவிகளை எட்டிய இச்சொற்களை உள் வாங்கிய அனு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து மூவரையும் நோக்க... அதே நேரம் ஒவீயை தொட்டதும் உருவான உணர்வால் இமைகளை மூடிய திவ்யா அதிர்ச்சியுடன் கண்களை திறந்து அவள்களை நோக்கினாள்....

அனு மற்றும் திவ்யா தங்களை அதிர்ச்சியோடு நோக்குவதை கண்டு சற்று மிரண்டனர் மூவரும்... மெல்ல நாயகிகள் அனைவரும் அருகருகில் வந்து அமர்ந்து தங்களுக்குள் பேசுவது யாருக்கும் கேட்காத அளவில் நெருங்கி அமர்ந்துக் கொண்டனர்... இவள்களின் முளி மாரியதை கண்டு மற்ற நாயகிகளும் ஒரு கண்ணை ஒவீ மேல் வைத்தவாறு மற்றொரு கண்ணை இவள்கள் மேல் வைத்து கவனிக்க தொடங்கினர்....

அனு : ஒவீ மனுஷி இல்லையா? ???? "என கேட்க....

வீனா : அவ அ.வ மனுஷி இல்லன்னு எப்..டி..டி தெரியும்???

நிரு : என்ன டி சொல்ற??? அப்போ உண்மையாவே நம்ம ஒவீ மனுஷி இல்லையா???

வீனா : இல்ல....என்று தலை குனிந்தவள்.... அவ எட்டு வர்ஷத்துக்கு முன்னாடி....

திவ்யா : உங்க சித்தி சதியால எறந்துட்ட.....

அனு : உனக்கு???

திவ்யா : அவள தொட்டதும்.....ஏன் கண்ணுல அவளோட சாவு தெரிஞ்சிச்சு டி....கடைசியா அவ சித்திய அவ சாவடிச்சதும் தெரிஞ்சிது....

நிரு :அனு உனக்கு எப்டி டி தெரியும்...

அனு : இவளுங்க மூணு பேரும் திரும்ப திரும்ப அதையே தான் டி சொன்னாளுங்க....

வீனா ரக்ஷா தான்யா : நா மனசுல தான் டி நெனச்சேன்.... என ஒரே நேரத்தில் கூற....

அனு : அப்போ வீனா ரக்ஷா தான்யா மனசுல தெனச்சது எனக்கு கேட்டுச்சா???.

பவி : ஆமா டி.....

மது : இதல்லா எப்டி உங்களுக்கு தெரியுது...

நிரு : ஐ தின்க்... இந்த குகைல இருக்க அந்த பொண்ணு பன்ற பூஜை னால ஒவீயோட வீக்னெஸ் லாம் வெளிவருதோ....

வீனா : அப்டியும் இருக்கலாம்.....

ரக்ஷா : நாங்க ஏன் மறச்சோம் னு வெளக்கமா அப்ரம் சொல்றேன்.... இப்போ என்ன பன்றது???

மயங்கியதை போல் பாவித்துக் கொண்டிருந்த ஒவீக்கு இவர்களின் உறையாடல் அவளின் ஆத்ம சக்தி மூலம் தெளிவாய் கேட்டது... கண்ணீர் சுரந்த கண்களை லேசாய் திறந்து நாயகிகளின் புறம் தலையை திருப்பினாள்.... மனதிலே " அனு " என அழைக்க...ஒவீ கனித்ததைப் போலவே அவளின் குரல் அனுவிற்கு கேட்டு அவளை திரும்பி நோக்கினாள்... மற்ற நாயகிகளும் அனு திரும்புவதை கண்டு அவளை திரும்பி நோக்க...மனதிலே பேச தொடங்கினாள் ஒவீ...

ஒவீ : என்ன மன்னிச்சிடுங்க டி... நா ஆத்மா ன்னு சொல்லாததுக்கு காரணம்...

அனு : அதல்லா தேவை இல்ல டி.... நீ பேயா இருந்தாலும் எங்க ப்ரெண்டு தான்... நீ கவல படாத... உனக்கு கண்டிப்பா இங்க என்ன நடக்குது ன்னு எதாவது தெரிஞ்சிர்க்கும்.. உன்ன எப்டி காப்பாத்துரது... என்ன நடக்குது தெரிஞ்சத சொல்லு... என இவளும் மனதிலே கூற... அதை கேட்டுக் கொண்ட ஒவீ தனக்கு தெரிந்தவைகளை மனதிலே கூற தொடங்கினாள்..

ஒவீ : அனு இங்க உக்காந்துருக்கவ பேரு மோகினி... இவ சாத்தான் னு நெனக்கிறேன்... அவ நம்மள பலி குடுக்க தான் கடத்தி வரவச்சிருக்கா... நம்மள லி குடுத்தா தா அங்க இருக்குர கன்னாடி ல தெரியிர... அந்த புகைக்கு விடுதலை கெடைக்கும்.. அவளுக்கு அவ இளமை கெடைக்கும்... இது நா இங்க வந்த இரண்டர மணி நேரத்துல மயங்கி இருக்க மாரி இருந்து கேட்டு தெரிஞ்சிக்கிட்டது... நா ஊருக்க வந்த நாள்ளேந்தே இங்க ஏதோ தப்பா இருக்குரத உணர்ந்தேன்... அப்போ தா நீங்க எல்லாரும் மண்டபத்துக்கு அழச்சிட்டு போனீங்க... பட் அங்க கால் வச்ச அடுத்த செக்கென்ட் என்ன யாரோ ஏதோ ஒரு சக்தி யால இழுத்துட்டாங்க... நா ஒரு பாட்டி முன்னாடி இருந்தேன்... அவங்க தா அவங்க தா நா ஆவியா இருக்க காரணம் இருக்குன்னு சொன்னாங்க..நம்ம போன மண்டபத்துல அஇதல்லா பாப்பன்னு சில ஒவீயங்களோட உருவத்தை சொன்னாங்க... அதே மாரி நா மண்டபத்துலையும் பாத்தேன்... திரும்ப அவங்கள்ட்ட கேட்டப்ப... உண்மை வெகு தொலைவில் இல்லை னு அனுப்பி வச்சிட்டாங்க....நம்மள யாருக்கோ... இல்ல சிலருக்கோ இவளுக்கும் அந்த புகைக்கும் சம்மந்தம் இருக்கு... என வேகமாய் கூறினாலும் அவளுக்கு புரியும் படி கூறினாள்...

நிதானமாக அனைத்தையும் கேட்ட அனு...

அனு : அப்போ நீ?? .உன்ன எப்டி காப்பாத்துரது???

ஒவீ : என்னப்பத்தி கவலபடாத அனு.. நா இருக்குரதும் இல்லாததும் கிட்டதட்ட ஒன்னுதான்... எனக்கு என் அழிவ நெனச்சி பயம் இல்ல...என் மரணத்த நா எப்பவோ சந்திச்சிட்டேன்... அவங்க மொதல்ல என்ன பலியிட நெனச்சத நமக்கு நல்லதா போச்சு... இந்த இடத்துல இருந்து இருவது கிலோ மீட்டர் தூரத்துல தான் எல்லாரும் இருக்கானுங்க... இன்னும் கொஞ்ச நேரம் தாக்கு புடிச்சா போதும்...அவனுங்க வந்துருவாங்க... என கூற....

அனு : பைத்தியம் மாரி பேசாத ஒவீ...எங்களுக்கு நீ வேணும்...

ஒவீ : எனக்கு உன் கிட்ட பேச நேரம் இல்ல அனு... நா திரும்ப செத்தாதான் உங்க எல்லாருக்கும் வாழ்க்கை ன்னா... உங்களுக்காக நா என்னவேணா செய்வேன்....

அனு : ஒவீ... ப்லீஸ்...இமை மூடிய கண்களிள் கண்ணீர் முட்ட தொடங்கிவிட்டது....

ஒவீ : அனு..ப்லீஸ் டி... என்ன இந்த நெருப்புக்கு பக்கத்துல போட்டுட்டாங்க... இனிமேலும் நா உன்ட்ட பேசுனா நா மயக்க மா இல்லன்னு அந்த மோகினி கண்டுபுடிச்சிடுவா.... சோ ப்லீஸ்.... என த்தோடு பேசுவதை நிருத்திக் கொண்டாள்.... அனு மீண்டும் மீண்டும் ஒவீ ஒவீ என அழைக்க... அவள் கண்ணீருடன் கண் திறந்ததை கண்ட மற்ற நாயகிகளுக்கும் அவள் இப்படி தான் கூறியிருப்பாலோ என யோசனை வர... அனு கூறியதும் வீனா கண்களை மூடி பேச தொடங்கினாள்...

வீனா : ஒவீ...ஒவீ....ப்லீஸ் என்ட்ட பேசு டி...

தன் தங்கையின் குரலை கேட்ட ஒவீயால் வீராப்பாய் பேசாமல் இருக்க முடியாமல்... பேசினாள்... ஆனால் வீனாவிற்கு கேட்க வில்லை... மாறாக அனுவிற்கு மட்டுமே கேட்டது... தன் கையை பிடித்த அனுவின் கைகளை வைத்து ஒவீ தனக்கு பதிலளிக்கிறாள் என்பதை உணர்ந்து மேலும் தொடர்ந்தாள் வீனா....

வீனா : ஒவீ...எனக்கு தெரியும்... நா பேசுரத நீ கேக்குரன்னு... நா சொல்றத நல்லா கேட்டுக்கோ... நீ நல்லா யோசிச்சு தான் இந்த முடிவ எடுத்துர்ப்ப... ஐ நோ அபௌட் யூ... நீ பயப்படமாட்ட ன்னு எனக்கு தெரியும்... உனக்கு தோன்றத செய்... நீ நிச்சயம் எங்கள்ட்ட திரும்பி வரனும் இருந்தா வருவ... உன் முடிவுல என்னைக்குமே நா எதிரா நின்டது இல்ல... அதா இன்னைக்கும் எதிரா பேச முடியல...டி... என்று கண்ணீருடன் முடித்தாள்.... வீனா இமைகளை பிரிக்க... ஒவீ கண்ணீரின் ஊடே தலையை மட்டும் லேசாய் அசைத்தாள்...

திடீரென கேட்ட பெண்களின் அலரலில் எதிர் திசையில் இருந்த நாயகன்கள் அங்கு வரும் முன்னே அங்கிருந்து மறைந்திருந்தனர் நம் நாயகிகள்...

அஷ்வன்த் : இந்த திசைல தான வந்தாளுங்க...எங்க காணும்...

ரித்விக் : ஷிட்...நாம அவளுங்களையும் தொழச்சிட்டோம்...

இந்திரன் : இல்ல டா....வழிய கண்டுபுடிச்சிர்க்கோம்.... என கூற... அவன் பார்த்த திசையிலே இவர்களும் பார்க்க... அங்கு பாதை நான்காய் பிரிந்திருந்தது... நான்கு பாதையின் தொடக்கத்திலும்... மினுமினுப்பதை போல் ஏதோ கிடந்தது... அவர்கள் அந்நாழையும் எடுத்த நோக்க...ஒன்று வீனாவின் காதில் ஆடும் கல் ஜிமிக்கி... இரண்டாவது அனுவின் சிறிய மோதிரம்... மற்ற இரு பாதைத்திலும் கொலுசின் முத்து கிடந்தது... நான்கு பாதையிலும் எப்படி தேடுவது... என யோசித்து விட்டு... இரண்டிரண்டாய் பிரிந்து சென்றனர்... ஆனால் இதை நம்பாத சத்தீஷ் மட்டும் மூன்றாம் பாதையின் நடுவில் வரும் ஒரு வழியில் தனியாய் நுழைந்தான்....

முதல் பாதையில் முகில் ரித்விக்... இரண்டாம் பாதையில் ரவி ரனீஷ்...மூன்றாம் பாதையில் வீர் அஷ்வன்த்... நான்காவது பாதையில் க்ரிஷ் இந்திரன்.. என பிரிந்து சென்றனர்.... சத்தீஷ் மூன்றாம் பாதையின் நடுவில் பிரிந்த பாதையில் தனியே சென்றான்.... அவர்களை திசை மாற்ற வேண்டுமென்றே சில அணிகலன்களை போட்டுவிட்டு போன துருவனின் சதி திட்டத்தை அறியாமல் வெவ்வேறு திசைகளிள் நுழைந்திருந்தனர் நம் நாயகன்கள்....

யாக குண்டத்தின் அருகில் ஒவீயை குள்ளமானிடர்கள் கிடத்தியதும்... தன் மந்திரசக்தியால் நெருப்பின் மேல் அவளை மிதக்க வைத்தான் துருவன்.... நெருப்பின் மேல் மிதந்த ஒவீயின் உடல் மெல்ல அவளிள் ஆத்மரூபத்திற்கு மார தொடங்க.... செய்வதரியாமல் இருந்த ஒவீ... அவளரியாமல் கீழ் விழப் போக... தன் இரண்டாம் மரணத்தை தைரியமாய் எதிர்த்து நின்றவள்... அடுத்த நொடி நெருப்புவில் விழுந்து கருகிப் போனாள்.... வெரும் ஆத்மா என்றாளும்.... வளின் ஆத்மாவிற்கு இருக்கும் சக்தி ஒரு உடலுக்கு சமமானது..... ஆதலாலே இத்துனை நாட்களும் மதபிறவியை போலவே நடமாடினாள்... இன்று நெருப்பில் கருகினாள்.ரரரர இதனை கண்ட நாயகிகள் மனதிற்குள் கதறினர்... கத்தி அழ வேண்டும் என்னும் உணர்வை மிக கடினப்பட்டு தங்களுக்குள்ளே புதைத்தனர்.... ஒவீ யாக தீயில் கருகிய சில நொடிகளிளே... அதிலிருந்து வெளிவந்த ஒரு பச்சை நிற ஒளி வட்டம்... மோகினியை சென்றடைய.... அவளின் நரைத்த கூந்தல் யாவும்.. நிறம் மாரி கருமையான நீண்ட கூந்தலாய் மாறியது... ஒவீ மீண்டும் வரவே மாட்டாள்... என்பதை உணர்த்தியது அந்த பச்சை ஒளி... துருவன்... அக்கன்னாடியை நினைவு கூர்ந்தவன்... குள்ள நரிகளை அழைத்து.... ப்ரியாவை தூக்கி வர சொன்னான்....

தன்னை நோக்கி வருவதை கண்டு கண்களை இருக்கி மூடிக் கொண்டாள் ப்ரியா.... ப்ரியாவை தொட்ட அடுத்த நொடி காற்று வீச தொடங்க.... தன்னை தீண்டிய காற்றின் விசையில்...மனம் லேசாக.... அமைதியாய் இருந்தாள் ப்ரியா.... செய்வதறியாது கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது நம் நாயகிகளாள்.... ஓர் முடிவெடுத்த நாயகிகள் எழ போக.... திடீரென மோகினி யாக தீயில் போட்ட ஒரு பொடியினால் எழ முடியாமல் அப்படியே விழுந்தனர்....

ப்ரியாவின் உடல் தீ மேல் மிதக்க... அவளை கண்ட துருவனின் உடல் சற்று நடுங்கியது... கை தட்டி திரும்பி பார்த்தான்... ப்ரியாவின் உடல் அருகிலே அனு மற்றும் திவ்யாவின் உடலும் தானாய் மிதந்து வந்து மிதக்க தொடங்கியது... அடுத்ததாக உயிரற்ற ஓர் பெரிய மனிதன் நடந்து வந்தான்.... அவனிடம் ஒரு வாளை கொடுத்த துருவன்... கண்களை மூடிக் கொள்ள... ஒரே ஒரு சீவு தான் சீவினான்.... சரியாக ப்ரியாவின் வலது கையில் விழுந்தது வெட்டு.... இரத்தம் வழிய தொடங்க... அவன் வாள் திவ்யா மற்றும் அனுவை தொட்ட அடுத்த நொடி இரண்டாய் உடைந்தது.... துருவன்.... திவ்யாவின் குறுதி சிறிதாய் வழிந்ததை கண்டு பெருமூச்சு விட்டான்.... திவ்யா மற்றும் ப்ரியாவை கீழே அதே இடத்தில் படுக்க வைத்தவன்...அனுவை தீயிலிட முடிவிட்டான்....

தனி வழியில் சென்றுக் கொண்டிருந்த சத்தீஷின் வலது கையில் திடீரென அதீத வலி எடுக்க.... கையை அழுத்தி பிடித்தான்... அடுத்த நொடி அவன் கண்கள்... நிறம் மாரியது... " மோகினி " என வெறி பிடித்தவன் போல் அக்காடே அதிரும் வன்னம் அலரினான்... அஷ்வன்த் மற்றும் வீர் அதே மூன்றாம் வழியில் சென்றதால்... இவன் குரலை கண்டுக் கொண்டு அதே பாதையில் திரும்பி ஓடினர்... க்ரிஷ்ஷுடன் சென்ற இந்திரனுக்கு கோவம் தலைக்கேறியது...க்ரிஷ்ஷிற்கு ஏதோ தாவறு நடந்துவிட்டது என அபாய ஒலி ஒலிக்க தொடங்க... அதே நேரம் சத்தீஷின் அலரல் இவர்களின் செவியை வந்தடைந்தது.... தனக்கு ஏற்பட்ட கோவத்தை அருகில் இருந்த மரத்தின் மீது காட்டினான் இந்திரன்.... அவன் குத்திய வேகத்தில்... அது அருகிலிருந்த மரம் மீது சாய... இப்படியே ஒன்று ஒன்றாய் சாய்ந்துக் கொண்டே இருக்க.... தன் சகோதரன் செய்ததில் மிரண்ட க்ரிஷ் அவனை இழுத்துக் கொண்டு சத்தீஷின் புறம் ஓடினான்...மற்ற இரு வழிகளிள் சென்ற நாழ்வரும் இவனின் அலரலை கேட்டு ஓடி வந்தனர்.... சத்தீஷின் அலரல் மோகினியின் செவியையும் அடைய... ஏதோ தவறாய் நடந்து விட்டது என்பதை உணர்ந்தவளாள் கண்களை திறக்க இயலவில்லை... ஏனெனில் கண்களை திறந்தால் மொத்த யாகமும் கெட்டுவிடும்....

ஒன்றோடொன்று விழுந்நு சாய்ந்துக் கொண்டே வந்த மரங்களின் வேகத்தை தாண்டி அதிவேகமாய் ஓடி வந்தனர் நாயகன்கள்....

அனு மட்டும் தீ மேலே மிதக்க.... துருவன் அவளை தீயில் தள்ள போகிறான் என புரிந்துக் கொண்டவளுள் ஏனோ ஒரு தைரியம்.... தீயால் தனக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பிறந்தது....

துருவன் காணும் முன்னே ப்ரியாவின் ஒரு துளி இரத்தம் தீயில் கலந்து விட.... மாபெரும் சத்தத்துடுன் ஒரு மிகப்பெரிய மின்னல் அபாயகரமான ஒலியுடன்.... ஓர் ஆலமரத்தை தாக்க.... அதன் முன்னே இரு திசையிலும் ஓடி வந்த ரித்விக் முகில் ரவி ரனீஷ் மேலே விழப் போக.... தீ பிடித்து எறிந்த ஆலமரம் தங்கள் மேல் விழப் போவதை உணர்ந்து இவன்கள் அப்படியே நிற்க....

சத்தீஷின் அருகில் சென்ற அஷ்வன்த்தும் வீரும் அவனை கண்டு அரண்டு போயினர்....சத்தீஷோ கண்கள் இரண்டும் வெள்ளை நிறத்தில் மாறி இருக்க.... உள்ளிருக்கும் கரு மணி மறைந்து கழுத்தில் நரம்பு புடைக்க அக்காடே அதிரும் வன்னம் கத்தி அவனறியாமல் ஏதேதோ செய்துக் கொண்டிருந்தான்....

அதிர்ச்சி என்ன வென்றால் அவனின் கை அசைவிற்கு காற்றும் ஒத்துழைத்திருந்தது.... காற்றின் வேகத்தில் மரங்கள் வெவ்வேறு திசையில் ஆடியது...அஷ்வன்த் அவனை நெருங்க நினைத்தாலே அவனையும் காற்றால் பின் தள்ளினான்.... அவனே அறியாமல் நடக்கிறது என கண்டுக் கொண்ட அஷ்வன்த்....மற்றும் வீர்....

அவனை தடுக்க அவன் அருகில் செல்ல... தன்னருகில் வந்த அஷ்வன்த்தும் வீரும் சத்தீஷிற்கு ஏதோ ஒரு வில்லன்களை போன்று தெரியவும்.... ஆத்திரம் தாங்காமல் தன் இரு கைகளையும் காற்றில் சுழற்றி.... அருகில் பல வருடமாய் இருக்கும் ஒரு மாமரத்தினை காற்றின் வீச்சுடன் அதிவேகமாய் அவர்களின் மேல் வீசினான்.... அவனையும் அறியாமல் கண்களை மூடிய அஷ்வன்த்.... 5 நொடி கடந்தும் ஏன் தன் மேல் அது விழவில்லை என்ற குழப்பத்துடன் கண்களை திறக்க....வீரோ பேரதிர்ச்சியுடன் நடக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.... சத்தீஷின் வேகத்தில் பறந்து சென்ற அம்மாமரம்.. அஷ்வன்த் வீரின் தலையை தாண்டி ....ரித்விக் முகில் ரவி ரனீஷின் மேல் விழப்போன மரத்தை இடிக்க... மின்னல் பட்டதால் தீ யுடன் அம்மரம் மறுபக்கத்தில் விழ.... சத்தீஷ் வீசிய மாமரம்... விழப்போகும் நேரம்.. திடீரென அதன் மேல் பட்ட அதீத நெருப்பினால் எறிந்து சாம்பலானது..... தீயுடன் விழுந்த மரத்திலிருந்து காட்டு தீ பறவ..... மரம் சாம்பலானதிலே அதிர்ச்சியடைந்தவர்கள் திரும்பி நோக்க.... அங்கோ க்ரிஷ் கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்தில் மார கோவத்தின் உட்சியில் நின்றுக் கொண்டிருந்தான்..... இந்திரனின் கோவமும் எல்லைலை கடக்க... எறிந்த மறத்தின் மேல் அவன் கைகளை வீச.... அவன் கை வழி பாய்ந்த நீர் அத்தீயை அனைக்க.....

க்ரிஷ் அவன் இரு கைகளையும் சுற்றி உதற..... சுற்றி எறிந்த காட்டு தீ தானாய் அனைந்தது.... யாக தீயில் விழப்போன அனு... சற்று தள்ளி விழ... குகையிலிருந்து அனைத்து தீப்பந்தமும் அனைந்து போனது.....

சகோதரன்கள் மூவரும் ஒரு ஒருவரின் நிறம் மாரிய விழிகளை கண்ட பின்பே மெது மெதுவாய் அமைதியடைந்தனர்....

மற்ற நாயகன்கள் மூவரையும் நெருங்க... மூவருக்குமே அவர்கள் செய்தது எதுவும் புரியவில்லை....

தீ அனைந்த வேகத்தில் அதை மீண்டும் பற்ற வைத்தான் துருவன்.... அதே நேரம் தீயிலிருந்து வந்தது சிரிப்பலை.... அவன் மோகினியை நோக்க.... அவளோ அதே கருப்பு சேலையில்.... வெளுத்த தோலுடன்.... நீண்ட கூந்தலுடன்... அவளின் இழமை திரும்பி அழகிய மங்கையாய் அமர்ந்திருந்தாள்... ஆனால் இன்னும் தேவையான பலி இடவில்லையே... என அவன் கைகளை நோக்க... அவன் கையில் வைத்திருந்த கின்னத்தில்... திவ்யா மற்றும் ப்ரியாவின் இரத்தம் அப்படியே இருந்தது....

சிரிப்பலைகள் நின்றபாடில்லாமல் இருக்க..... சுற்றி முற்றி பார்த்த துருவன்.... மூன்று பெரும் நிழல்களை கண்டு அதன் காலடியில் தலை வணங்கினான்.... சிரிப்பொலிகளை கேட்ட மோகினி.... யாகம் முடிந்ததை அறிந்து மெல்ல கண்களை திறக்க.... நிழல்களை கண்டு மகிழ்ச்சியுற்ற அவளின் கண்கள்... தீயின் அருகில் கிடந்த அனுவை கண்டு பேரதிர்ச்சியுற்றது.... ஆனால் அனுவின் உடலில் வெட்டு காயம் ஒன்றே இருப்பதை கண்டு... இவளை மட்டுமா காயப்படுத்தினான்... என திரும்பி நோக்க....அங்கோ மற்ற நாயகிகள் அனைவரும் சுயநினைவற்று கிடக்க... அனைவருக்கும் முன்... கையில் இரத்தம் ஆறாய் வலிந்தவாறே மயங்கி கிடந்தாள் ப்ரியா.... அவள் அருகில் அதே நிலையில் திவ்யா...அதிர்சியிலும் பயத்திலும் அவள் உடல் நடுங்க தொடங்கியது... சத்தீஷின் அலரலின் காரணத்தை உணர்ந்துக் கொண்டாள்....

மோகினி : துருவா... என்ன காரியம் செய்திருக்கிறாய்??? யான் இருவரை தானே பலியிடுவதாய் கூறினான்... நீ ஏன் இவர்களை கடத்தி வந்தாய்???என கோவத்தில் கத்த....

துருவன் : என்ன கூறுகிறீர்கள் தாயே... நீங்கள் காட்டிய ஒவ்வொரு கன்னாடி துண்டுகளிளும் இவ்வனைத்து பெண்களின் வதனம் தான் தெரிந்தது... முதலில் ஒரு பெண் தெரிந்தாள்... அவளை தீயில் இட்டு பலியிட்டேன்... இரண்டாவது இவள்(ப்ரியா) மூன்றாவது அவள்.(திவ்யா).. நான்காவது இவள்....என அனுவை காட்டினான்....

மோகினி : இவள்கள் மூவரும் யாரென நீ அறிவாய் தானே...என சற்று காட்டமாய் கேட்க...

துருவன் : அறிவேன் தாயே... இருப்பினும்.... இவர்களை பலியிட்டால் பிரச்சனை வருவதானால்... அக்கன்னாடியில் இவர்கள் முகம் வந்தே இருக்காதே... அது மட்டுமா.... மூன்றாவதாக தெரிந்தவளையும் நான்காவதாக தெரிந்தவளையும் அவ்வளவாக எதுவும் செய்யவில்லை.... அவர்களின் தோற்றத்தில் கூட பிறந்திருக்கலாம் அல்லவா.... என அறிவாய் பேச...

மோகினி : முட்டாள்...முட்டாள்... இவளை என்ன டா கூறுவாய்... என ப்ரியாவை சுட்டி காட்ட....

துருவன் : அவளுக்கும் தான் எந்த சக்தியும் கிடையாதே... தோற்றம் மட்டும் தான் அவளுடையது....

மோகினி : அவளுக்கு சக்தி இல்லையென எந்த மடையன் கூறியது உனக்கு.???

நிழல்களில் ஒன்று : நான் தான் கூறினேன்...

மோகினி : தங்களை யார் இதை எல்லாம் செய்ய சொன்னது... தாங்கள் மூவரும் அடைப்பட்டதும்.... அங்கு நடந்ததை அறியாமல் முட்டாள் காரியம் செய்துள்ளீர்கள்.... இவள்கள் அன்று இறக்கவில்லை.... கோவன்களின் துளி கண்ணீரும் உயிர் காதலும் இவர்களை காப்பாற்றியது..... இம்மூவரும்.... அதே மூன்று இளவரசிகளின் மறுபிறவி.... என கூறி முடிக்கவும் அக்குகை முழுவதும் தீ பறவவும் சரியாய் இருந்தது.... யாகத்தின் தீ அனுவின் வலது கையில் பட.... மனிக்கட்டில் ஓடிய நரம்பின் அருகில்.... ஒரு சிறிய வளைவான கோடு லேசாய் தெரிய தொடங்கி.... தீயில் தெளிவாய் மிளிர்ந்தது.... ஒரு அச்சு.... குகையின் செவுற்றிலிருந்து சொட்டிய ஒரு துளி நீர் திவ்யாவின் கழுத்தில் படர..... அவளின் கழுத்தின் வலது பக்கம்... அதே வளைவான அச்சு தென்பட்டது.... காற்று வீச தொடங்க.... காற்றால் அங்குமிங்கும் ஆடிய ப்ரியாவின் கூந்தல் விலக... அவளின் நெற்றியின் வலது கண் அருகிலே இருந்த அதே வளைவான அச்சு தென்பட்டது... மூன்று அச்சுக்களையும் கண்ட நிழல்கள் அதிர்ச்சியுற.... தீயை கண்ட துருவனின் இதயம் ஆட்டம் கண்டது... கோவன்கள் வந்து விட்டனர் என முனுமுனுத்தது அவனின் இதழ்.... இதே தீயால் தான் அனுபவித்தது எல்லாம் நியாபகம் வர.... நடுங்கிக் கொண்டே திரும்பியன்... தன்னை தீயில் காயப்படுத்திய அவனே வருவதை கண்டு மிரண்டான்.......

உடல் முழுவதும் சிகப்பு ஒளியில் மிளிர.... தீயை கண்களிள் தேக்கி... கரமிரண்டிலும் தீ பந்துகலை சுழற்றிக்கொண்டு... அசல் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் யுவக்ரிஷ்ணன்..... அவன் அருகிலே நீல நிற ஒளி உடல் முழுவதும் ஒளிர நின்றான் இந்திரஜித்..... இன்னோறு பக்கத்தில்....உடலை சுற்றிய புயல் காற்றுடன்..... நின்றான் சத்தீஷ்வரன்.... ஒரே நேரத்தில் ருத்ரமூர்த்தியின் கோவத்தையும் பல மடங்கு அதிக சினத்தை கொண்ட மூன்று கோவன்கள் நிற்பதை கண்டு நடுங்கி போயினர் அனைவரும்.....

சத்தீஷ் அவன் கைகளை முன்னோக்கி காட்ட.... காற்று பலமாய் வீசி அனைவரையும் கீழ் தள்ள.... இவர்கள் உள் நுழையும் போதே மறைந்தாள் மோகினி..... அதனால் யாரும் மோகினியை காணவில்லை....

அந்நிழகள் கோவன்களையும் அவர்கள் பின் நின்ற மற்ற நாயகன்களையும் பார்த்து விட்டு அவர்கள் காணும் முன்னே மறைந்து போயினர்.... அந்த குகைக்குள் இருந்த குள்ளமானிடர்கள் செய்வதறியாது தினர.... உயிரற்ற பிணங்கள் கூட அவர்களை தாக்க தயங்கியது....

சத்தீஷ் தன்னவளை தேடி கண்களை சுழல விட.... குறுதி வலிந்தவாறு கிடந்தவளை கண்டு ஆக்ரோஷம் பொங்க..... அவன் கைகளை முன் நோக்கி அழுத்தவும் அவனின் அசைவில்
புயல் ஒன்று உருவாகியது.... அதில் அங்கிருந்த குள்ளமானிடர்கள் சிலர் சிக்கி சிதறி மடிந்தனர்.... துருவன் தப்ப முயல.... இந்திரன் அவன் கையை துருவனின் புறம் வீச.... துருவனை சுற்றி நீரால் ஒரு வலையம் ஏற்பட்டு.... அது பந்தாய் மாறி அவனை அதில் சிறை வைத்தது....

மூச்சு விட சிரமப்பட்டவனை குரோதமாய் முறைத்த க்ரிஷ் இந்திரனை நோக்கி கண் அசைக்கவும்.... இந்திரனின் கை அசைவில் நீர் விலக.... ஒரு நொடி தாளாமல் அவனை சூழ்ந்தது தீ.... அவனை சுற்றி தீ கொளுந்து விட்டு எறிய.... துடித்துடித்து போனான் துருவன்....

மற்ற நாயகன்கள் நாயகிகளை நோக்கி ஓடினர்.... சத்தீஷோ ஆக்ரோஷமாய் துருவனை தீ யில் துன்பப்படுத்திக் கொண்டிருந்த க்ரிஷிடம் திரும்பியவன்.... அவனை விடு டா என கூறவும்....க்ரிஷ்ஷின் கண்ணசைவிலே தீ அனைந்து போனது.... அடுத்ததாக இந்திரனால் துருவன் மேல் நீர் இரைக்கப்பட.... எரிச்சல் நின்று சற்று மூச்சு விட்டான்.... அவன் முன் அமைதியாய் வந்து நின்ற சத்தீஷ்.... அவனை நோக்க.... சத்தீஷ் அவன் சக்தியால் உருவான புயலை துருவன் புறம் நீட்ட... அதில் சிக்கி தவித்து விழுந்த துருவன்.... இந்திரனின் நீரில் மூழ்கி மூச்சுவிட தவிப்பாய் தவித்து.... க்ரிஷ்ஷின் தீயில் தாங்க மாட்டாமல் கீழே விழுந்தான்..... விழுந்தவன் நொடியில் மறைந்து போனான்....

கோவன்கள் மூவரும் அவர்கள் இமைகளை மூடி திறக்க...கண் மணிகள் பழைய நிலைக்கே வந்திருந்தது.... நாயகிகளை தட்டி எழுப்ப.... மெல்ல கண் விழித்தவர்கள் நாயகன்களை கண்டு அழுக தொடங்கினர்...

ஒவீ மட்டும் இவர்கள் இடையில் காணாமல்...அவள் எங்கே என கேட்க.... அவளை கொண்றுவிட்டனர்... என கதறி அழுதனர் நாயகிகள்... கேட்டதை நம்பமுடியவில்லை நாயகன்களால்... கண்ணீர் தானாய் திறையிட தொடங்க....அவர்களின் வலியை மறைத்து எப்படியோ சமாதனம் செய்து வீட்டிற்கு கூட்டி வந்தனர்...

ஒவீயின் இழப்பை எப்படி கூறுவது என நொந்தபடி வந்தவர்களுக்கு குடும்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியே அமர்ந்திருந்தது.....

காதல் தொடரும்....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro