Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்- 10

ஆண்கள் வெளியில் கிளம்பி விட.... இல்லத்தரசிகள் அவர்களின் வேலையை சமையல் அறையில் தொடங்கினர்.... நம் நாயகிகள் என்ன செய்யலாம் என குருக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தனர்.... அவர்களின் பொழுது போக்குக்கும் எதுவும் இல்லாததால் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினர்.... பெரியவர்களை உருட்டி மெரட்டி வீட்டை விட்டு வெளியேறினர்...

ஒரு முக்கிய வேலைக்காக பக்கத்து கிராமத்திற்கு சென்றிருந்த முகிலன்... அவனின் பைக்கில் வேதபுரத்தின் எல்லைக்குள் நுழைந்ததும் ஒரு போன் வரவும்... பைக்கை நிறுத்திவிட்டு போனை எடுத்தவன்... ஆரஅமர அமர்ந்து அங்கு கத்திக் கொண்டிருந்த கமிஷ்னரின் வார்த்தைகளை இன்னோறு காதை அடைத்தவாறு கேட்க தொடங்கினான்.... பத்து நிமிட சுப்ரபதபாடலின் பின் போனை வைத்தவன்... ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டான்..... ஏதோ ஒரு யோசனையில் மூழ்கியவனின் நிலையை கலைத்தது சினுங்கும் ஒரு கொலுசின் ஒலி....

தன் அருகிலே ஜல் ஜல் என்ற ஒலியுடன் யாரோ வருவதை யூகித்த முகில்.. அது கொலுசென தெரிந்தும்... அவளாக இருக்காது என நினைத்து... பின் இருந்து வந்த கையை மடக்கி முன் கொண்டு வந்தான்... முன் இழுத்ததிலே தெரிந்தது அது அவள் தான் என்று... அவன் சுதாரித்து கையை விட்ட அடுத்த நொடி தன் கையை பின் வளைத்து அவனின் இருகைகளையும் தன்னை பின்னிருந்து அனைத்தவாரு வைத்து அவளின் கைகளாள் பூட்டிட்டாள்... அவள்

பச்சை பாவாடை உடுத்தி சிகப்பு நிறத்தில் தாவணி அனிந்து அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் பொட்டிட்டு... நீண்ட கூந்தலை பின்னி முன்னிட்டு... மெல்லிய செயின் அனிந்து... அவளின் வரவை தெரிவிக்க... ஜல் ஜல் என சத்தமிடும் கொலுசு கொண்டு முகிலின் அனைப்பில் நின்றிருந்தாள் நிரஞ்சனா...

நிரஞ்சனா ஊரின் தலைவர் கூட்டனியில் முக்கிய உருப்பினரான ஒருவர் மானிக்கம்... அவரின் இரண்டாவது மகள்... நம் ரித்விக்கின் காதலி மதுரஞ்சனாவின் தங்கை... தாயை சிறு வயதிலே இழந்து... அக்கா மற்றும் தோழிகளின் துணையோடு வளந்தவள்... (தோழிகள் யாருன்னு அப்ரமா சொல்றேன்... ) ஊரையே அவளின் வாய் சொல்லில் வித்துவிடுவாள்... அவளின் சொல்லுக்கு நண்டான் சுண்டான் இல் இருந்து நம் வேலு தாத்தா வரை அனைவரும் தலை ஆட்டுவர்... கிராமத்திற்கே செல்ல பெண்... இவள் கூறுவதை கேட்காத ஒரே ஆல் என்றால் அது சாட்ச்சாத் நம் முகில் தான்... அவனை வம்பிலுப்பதே நம் நிருவின் முழு நேர வேலை... அவனை ஒரு தலையாய் காதலித்து வரும் பாவையவள்...நம் முகில் ஐபிஎஸ் க்கு விளக்கம் தருவதைப் போல் அவள் நான் வீஐபி என்று கூறுவாள்... அர்த்தம் கேட்டாள்... வெட்டியா இருக்கும் பட்டதாரி நான் என கூறுவாள்... கொஞ்சம் கிருக்கு தான்...

முகில் : நிரா... கைய விடு ... எனக்கு வேலை இருக்கு...என சிடுசிடுத்தான்...

நிரு : என்ன மாமா நீ?? நானே ஒரு வாரம் உன்ன பாக்காம ஏன் பாட்டி கூட இருந்தும் தவிச்சி போய்ட்டேன் ... நீ என்னன்னா வந்ததும் வராததுமா என்ன வெறட்டுரியே???

முகில் ; அடியேய் உனக்கு எத்தன தடவ சொல்றது? ?? என்ன மாமான்னு கூப்டாதன்னு??
என்று அவளின் கையை இழுத்து தன் கையை விடிவித்துக் கொண்டான்...

நிரு : அடப்போ மாமா... நீயும் சொல்றத விட்ற மாரி இல்ல.. நானும் அத கேக்குர மாரி இல்ல.. அப்ரம் ஏன் வீனா வேஸ்டிங் யுவர் எனர்ஜி மாம்ஸ்.???

முகில் : யாராவது கேட்டா தப்பா எடுத்துப்பாங்க டி...

நிரு : எனக்கு கவலை இல்ல ப்பா....

முகில் : போடி கிரிக்கி...இனி ஏன் வழில வராத டி...

நிரு : கிரிக்கி தான் டா... உன் மேல கிரிக்கி...என கண்ணடித்து பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தவனைப் பார்த்து கத்தினாள்...அவன் திரும்பி முறைத்தவிட்டு சென்றான்... ஆனால் அவன் கண்களிள் அம்முறைப்பு இல்லை... மாறாக சிரிப்பு இருந்தது....

கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்த நம் நாயகிகள்... நடந்து நடந்து... காட்டு பகுதியின் அருகில் வந்திருந்தனர்... பிறந்ததிலிருந்தே இங்கு வராததால் காட்டிற்கு செல்ல கூடாதென கூறுவதை அறியாமல் சாதரணமாய் த்ரில்லிங்காக இருக்கும் என்ற யோசனையில் காட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்... நீண்ட நெடுந்துயர்ந்த மரங்கள்... பல விதமான செடி கொடிகள்... சுட்டெரிக்கும் வெயில் தனிந்து தென்றல் காற்று இதமாய் மேனியை தழுவி சென்றது... 10 அடி நடந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாய் நடுவில் அமைந்திருந்தது ஒரு பெரிய ஆலமரம்... விழுதுகள் கலை இலந்து தொங்கிக் கொண்டிருக்க... ஆலமரமோ வயதடைந்து காணப்பட்டது.... அந்த ஆலமரத்தை கண்ட அனு மற்றும் திவ்யாவிற்கு மனம் நெருடலாக இருக்க... ஆலமரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்து திட்டு போலான கல்லில் மெதுவாய் அமர்ந்தனர்... அந்த கல்லில் கூட விரசில் விழுந்திருந்தது... அந்த ஆலமரத்தை காணும் போதே அதன் வயது பல ஆயிரத்தை கடந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாய் தெரிந்தது... கண் முன் இருந்த அம்மாபெரும் மரத்தை தன் மனதில் பதித்து கொண்டாள் ப்ரியா.... அந்நொடி எதர்ச்சையாய் திரும்பிய பவி... அதே ஆலமரத்தின் பின் ஏதோ சுவரு போல் இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றாள்.... நொடி தவராமல் அதன் அருகில் சென்றவள்... அதை தடவிப்பார்க்க... அங்கு ஒரு சுவர் இருந்தது நிரூபணம் ஆனது... மற்றவர்களை கத்தி அழைத்தவள்... அதை ஆராய தொடங்கினாள்... அச்சுவரின் அருகில் சென்ற திவ்யா அதன் பக்கவாட்டில் ஒரு சிறிய பூ போன்ற அச்சை கண்டவள்... அதை மெதுவாய் வருட.... ஆலமரத்திலிருந்து ஒரு விழுது கீழே விழுந்தது.... சத்தம் கேட்டு இவர்கள் திரும்ப... அவர்களுக்கு நேராக சற்று தொலைவில்... செடி கொடி மற்றும் மரங்களுக்கு நடுவில் ஏதோ மறைந்திருப்பதை போல் தெரியவும்... மெல்ல அதை நெருங்கினர்... செடிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு இவர்கள் நுழைய... அவர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாய்... மிக பழமையான நிலையிலும் கம்பீரமாய் நின்றது ஒரு கட்டிடம்.... அதை சுற்றி வேற்றிடமும் காணப்பட்டது...

பல நூறு வருடங்களாய் மூடி கிடப்பதனை அதன் தோறத்தை வைத்து உறுதி படித்திக் கொண்டனர்... கட்டிடத்தின் வயது இரண்டாயிரத்தை தாண்டும் போல.... இக்கட்டிடம் ஒன்று மட்டும் தான் வேதபுரத்தில் பலாயிரம் வடங்களாய் நிமிர்ந்து நிற்கும் ஒரே கட்டிடம்... (இன்னோன்னு இருக்கு... அது இப்போ வராது... வரும் போது வரும்) அக்கட்டிடமே ஒட்டடையில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது... அங்கங்கு சிலந்தி வளைகள்.... கரையான் அடித்தும் கரையாமல் இருந்த செவுரு... அதன் கதவருகில் வந்தவர்கள்... சிலந்தி வலைகளும் ஒட்டடையும் மறைத்திருந்த பூட்டை தட்டி வெளியே எடுத்தனர்... பூட்டை திறக்க சாவி வேண்டும் என்பது மூலையில் ஒலிக்க... சிந்திக்க தொடங்கினர்....

ரக்ஷா : இது என்ன இடம் டி... நடு காடு கூட இல்ல... காடோட தொடக்கத்தில கொஞ்சொ தூரத்துல இவ்ளோ பெரிய கட்டிடமா???

பவி : அதான் டி எங்களுக்கும் புரியல... இப்டி ஒரு கட்டிடம் இருக்குன்னே எங்களுக்கு தெரியாது...

அனு : ரொம்ப பழைய கட்டிடம் போல டி...

தான்யா : பழைய பூட்டா தான் இருக்கும்.. தட்டிபாத்தா ஒடஞ்சிடும்... என தான்யா முயற்சிக்க... அதுவோ திறக்க முடியாது என வீராப்பாய் ஆடியது... அதன் அருகில் சென்ற அனு... அங்கு கிடந்த கல்லை எடுத்து ஒரு தட்டு தட்ட தானாய் திறந்து கொண்டது பூட்டு.. கதவை திறக்க ஏழ்வரும் கை வைத்து தள்ள... மிக தடிமனாய் இருந்தது கதவு.... இரும்பால் ஆன கதவல்லவா... அப்படிதான் இருக்கும்... சலிப்படைந்த ஏழ்வரும் ஒரே முயற்சியாய் தம் கட்டி ஒன்று சேர்ந்து தள்ள.... மெதுமெதுவாய் நகர்ந்தது கதவு.... கதவை முழுதாய் திறந்ததும் இடுப்பில் கை வைத்த மூச்சு விட்டனர்...

ப்ரியா : எம்மா என்ன கதவு டி இது... என்றாள் மூச்சு வாங்கிக் கொண்டே...

வீனா : கையல்லாம் வலிக்கிது... இரும்புன்னா இரும்பு அப்படியொரு இரும்பு டி...

திவ்யா : சரி வாங்க உள்ள போவோம்..

ஏழ்வரும் உள் நுழைய... நீண்ட பாதையே தென்பட்டது....
சில பல ஓவியங்கள்... உள்ளே செல்ல செல்ல... இருட்டு மட்மே இருந்தது... பெரிய கட்டிடம் தான்..... சூரிய வெளிச்சம் ஒரு செவுரில் பதிய அதை காணாமல் சென்றவள்களிள் எதர்ச்சையாக அதனை திரும்பி பார்த்த ப்ரியா அதன் அருகில் வந்தாள்... அதில் ஒரு பெண்ணும் ஆணும் நிற்பதை போன்ற லேசாய் தெரிய அதை தட்டிவிட்டு பார்த்தவளின் புருவம் குழப்பத்தில் நெழிந்தது... அதனை விடுத்து மற்றோரு பக்கம் திரும்பியவளை ஈர்த்தது ஓர் ஓவியம்... அது ஒர் அரசனின் ஓவியம்.... அதை லேசாய் தட்டிவிட்டு பார்த்ததில் தெரிந்தது... ஆனால் முகத்தை காண தடை என அதில் முகத்தை மட்டும் ஏதோ மறைத்திருந்தது.... அந்த அரசனின் மார்பில் ஓர் ஈட்டி பாய்ந்திருக்க.... அவனின் ஒரு பக்க தோலில் இரத்தம் விலிந்துக் கொண்டு அவனின் தோலில் இருந்த சின்னத்தை மறைத்துக் கொண்டது... அவனின் முதுகில் ஒரு அம்பு பாய்ந்து குறுதி வடிய அப்போதும் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றான்... எந்த அரசருக்கும் அல்லது மாவிரனுக்கும் இல்லாத ஒரு பழக்கம் அவனுக்கு உள்ளது போல்... வலக்கையிலே சமாளிக்க முடியாத வாளை இடதுக் கையில் பிடித்திருந்தான்....அவன் பிடித்திருந்த வாள்... வெள்ளி நிறத்தில் பல பலத்தது... பாதி குறுதியில் நனைந்திருந்தது... அவ்வாள் அவளுக்கு ஏதோ புக்கில் படித்த ஒன்றை நினைவூட்ட... அவள் சிந்திக்கும் முன்னே அனுவின் குரலால் அவளிடம் இளுக்கப்பட்டாள்...

அனு ஒரு கதவின் முன் நிற்க.... அவளின் பின் அனைவரும் நின்றனர்... அக்கதவில் சில பல ஓவியங்கள் வரயப்பட்டு காய்ந்திருந்தது... அக்கதவின் இரு பக்கத்திலும் பெரிய பாம்புகள் கண்களை மூடியவாறு சீரிக் கொண்டு நின்றது... இடப்பக்கத்தில் இருந்த பாம்பை திவ்யா வருட.... வலப்பக்கம் இருந்த பாம்பு சட்டென கண்களை திறந்து மூடியது... அதை கண்ட தான்யா பிரம்மை என விட்டு விட்டாள்.... அக்கதவை திறக்க இவர்கள் முயல... அதுவோ பூட்டப்பட்டு சிறிதாய் கூட தள்ள முடியவில்லை... ஏழ்வரும் ஒன்றாய் தள்ளவும் அது தோழ்வியவே கொடுக்க... அந்த கட்டிடத்தையே சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்... இன்னும் பல இடங்கள் இங்க காண இருந்தாலும் அங்கே நின்றுக் கொண்டிருந்தனர்... அப்போது ஒரு சிறிய முனகல்.... அது ஒர் பெண்ணின் முனகல்... திடுக்கிட்டு ஏழ்வரும் சுற்றி முற்றி பார்க்க.... அது அக்கட்டிடத்தின் முன் சிறிது தூரத்தில் இருக்கும் கூடாரத்தில் இருந்தென அறிந்து அங்கு ஓடினர்...

தன் ஆபீஸில் இருந்து வெளியே வந்த முகில் முன் வந்து நின்றாள் நிரஞ்சனா... அவளை இங்கு எதிர்பார்க்காதவன் ஏன் இங்க வந்த??? என கண்ணால் கேட்க.... அவளும் கண்ணால் ஏதோ கூறி விடை பெற்று சென்றாள்.... செல்லும் முன் திரும்பி.... மாமா என அழைக்க...ஆரம்ச்சிட்டா என கடுப்பாய் திரும்பி பார்க்க.... போன் பன்றேன் எடு டா.... என கூறிவிட்டு சென்றாள்... இவனும் தலையில் அடித்துக் கொண்டு அவனின் பைக்கில் எங்கோ சென்றான்....

ஒரு இருட்டான அறை... எதிரில் இருந்த செவுரில் மட்டும் வெளிச்சம் படர.... அதன் முன் நின்ற ஒருவரின் நிழல் மட்டும் அச்செவுரில் எதிரொளித்தது.... கையில் இருந்த போனை எடுத்து யாருக்கோ கால் செய்தவர்...

அவர் : ஹலோ... என்ன வேலை ய முடிச்சிட்டீங்களா???

அந்த பக்கம் : முடிஞ்சிதுங்க.. ஆனா ஒன்னு உசுரு போர நிலைமைல இருக்க மாரி இருக்கு... டோஸ் அதிகமாயிடுச்சு போல...

அவர் : உங்களுக்கு எத்தன தடவ டா சொல்றது??? இப்டி பன்னவிடாதன்னு உனக்கு ஆயிரம் தடவ சொல்லீலுட்டேன்... ஆனா அவனுங்க கேக்குர மாரியே இல்ல... என திட்டித்தீர்த்தார்...

அந்த பக்கம் : மன்னிச்சிருங்க... இனி இப்டி நடக்காது... ஆனா உயிர் இருக்குங்க....

அவர் : உயிர் இருக்குள்ள... சரி இரெண்டு நாள் களிச்சு இன்னோன்னையும் சேத்து அனுப்புங்க.... அஞ்சு பத்துக்குள்ள இருந்தா நல்லது.... சரி அப்ரமா கூப்புட்றேன்....
.
.
.
முகிலை பார்த்துவிட்டு வந்த நிரு.... காட்டு பாதையை கடந்தே சென்று கொண்டிருக்க.... யாரோ ஓடுவதை போல் தென்பட... யாரென பார்த்தவள் ஆனந்த அதிர்ச்சியில் " பேபிமாஸ் " என கத்திவிட.... ஓடிய நாயகிகள் இவ்வழைப்பில் திடீரென நின்று திரும்பி நோக்க.... இவளை கண்ட அனைவரும் " நிரு " என அனைத்துக் கொண்டனர்.... மதுவிடம் பேசுகையில்...வீடியோ காலில் நிருவிடமும் பெண்கள் பேசுவர்....

ரக்ஷா : ஹே நிரு எப்போ டி வந்த???

நிரு : இன்னைக்கு தான் டி....

பவி : உங்களுக்கு முன்னாடியே தெரியுமா டி இவள???

வீனா : தெரியும் டி.... மறுவாழ்ப்பேட்டை ல இருந்தப்ப...தோழிகவானோம்....

அவர்களின் உறையாடலை தொடங்க விடாமல்... மீண்டும் அதே முனகல் கேட்க.... அங்கு ஓடியவர்கள்... அக்கூடாரத்தின் முன் கிடந்த... பாய்... தலையணை... கத்தி.. பேப்பர் கப்... மது பாட்டிலை வைத்து நேற்று வரை சிலர் இங்கிருந்திருக்கின்றனர் என உறுதி படுத்திக் கொண்டு... அக்கூடாரத்திற்குள் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்....

தரையில்... உடம்பெல்லாம் சீராய்ப்புகளுடன்.... வலியில் முனகிக் கொண்டிருந்தாள் கீழே கிடந்த.... கடந்த வாரம் காணாமல் போன அதே 8 வயது சிறுமி கயல்....

அவளை கண்ட நிரு " கயல் " என கத்த.... ப்ரியா ஓடிச் சென்று அவள் தலையை தாங்க...நொடி பொழுதில்... முழு கையும் இரத்தத்தில் நனைய.... நிரு தாமதிக்காமல் முகிலுக்கு அழைக்க... போனை எடுத்ததும் விபரத்தை கூறி உடனடியே அவனை இங்கு வர கூறிவிட்டு கயலை நோக்கி ஓடினாள்.... வீனா ரக்ஷா தான்யா அவளை பரிசோதிக்க.... " சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கனும்... ஹாஸ்பிட்டல் போகனும் " என கூறிய சில நொடிகளிளே அங்கு நாயகன்களும் அவர்களுடன் ஒரு அம்புலன்ஸ்ஸும் வந்து நிற்க.... அதில் வேகவேகமாக கயலை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் நாயகன்கள்....

உடனடியாக மருத்துவ நாயகர்கள் ஏழ்வரும் தீவிர சிகிச்சை இல் இறங்க.... கயலோ மிக மோசமான நிலையில் இருந்தாள்.... விஷயம் றிந்த கயலின் தாத்தா மருத்துவனைக்கு ஓடோடி வர... கயலின் நிலையை கண்டு நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார்..... அவருக்கு தனி அறையில் சிகிச்சை தொடங்க..... சிறிது நேரத்தில் தோய்ந்த முகத்துடன் வெளிவந்தர் மருத்துவ நாயகன்கள்....

ரவி : கோமாக்கு போய்ட்டா....

ரனீஷ் : ரொம்ப கொடுமை படுத்தீர்காங்க டா.... குழந்தைன்னு கூட பாக்காம ச....

அஷ்வன்த் : அடிச்சு சித்ரவதை பன்னீர்க்காங்க.... மயக்க மருந்து டோஸ் இரெண்டு மடங்கு அதிகமா கொடுத்துர்காங்க...

வீனா : ரேப் பன்ன ட்ரைப் பன்னி இருக்காங்க.... பட் எதுவும் பன்னாம திரும்ப திபிரும்ப அடிசிருக்காங்க....

தான்யா : ரொம்ப நாளா பச்ச தண்ணி கூட குடோக்காம பட்டினி போற்றுக்காங்க டி... குழந்தை ரொம்ப மோசமா இருக்கா... என கண்ணீருடன் முடிக்க....

அந்த நேரம் கயலின் தாத்தாவை பரிசோதித்த மருத்துவர் அவர்களிடம் வந்து...." அவருக்கு மூனாவது முறையா அட்டக் வந்துருக்கு... போன இரெண்டு முற மைல்ட் அட்டக் னால காப்பாத்தீட்டோம்... பட் நௌ... ஹி ஈஸ் கௌன்டிங் ஹிஸ் ஹார்ஸ்...." என கூறிவிட்டு நகர.... இவர்கள் அனைவரும் அங்கு ஓட... கண் விழித்த அவர்... அனைவரையும் உள் அழைத்து....

தாத்தா " பசங்களா.... என் பேத்திக்கு இந்த உலகத்துல என்ன தவிற வேற யாருமே இல்ல பா.... என் மவன் மருமவ கூட அவ பொறந்தப்பவே தவறீட்டாங்க.... இப்போ நானும் இல்லாம அவ ரொம்ப ஒடஞ்சி போய்டுவா... சின்ன குழந்தைப்பா... அவள நீங்க தான் பாத்துக்கனும்... அந்த இறைவன்... அவள காப்பாத்தீருவாரு.... "

ப்ரியா : தாத்தா பேசாம தூங்குங்க.... அப்ரமா பேசிக்கலாம்...

தாத்தா " அதுக்கப்பரம் பேசவே முடியாம போய்டும் மா.... அவள இந்த நிலைக்கு ஆலாக்குன அந்த அயோக்யனுங்கள நீங்க தா கண்டுபுடிச்சு தத்டிக்கனும் பா.... என் பேத்தி உங்களுக்கு தங்கை னா... நா உங்களுக்கு தாத்தா தான.... இந்த தாத்தா வோட ஆசைய நிறைவேத்துங்க பா.... என் பேத்தியையும் தனியா விட்டுடாதீங்க " என கூற.... நாயகர்கள் அனைவரும் " கண்டிப்பா தாத்தா " என கண்ணீருடன் வாக்கு கொடுக்க.... வாக்கை பெற்றவாறே.... நம்பிக்கையுடன் கண் மூடினார் தாத்தா....

வேங்கையாய் எழுந்த நாயகன்கள்... கயலை நாயகிகளின் பொருப்பில் விட்டு விட்டு அந்த கூடாரத்தை நோக்கி பறந்தனர்....

அங்கு காவலாளிகள் காவல் காத்து நின்றனர்.... அக்கூடாரத்தை அலசி ஆராய்ந்து... இறுதியில் ஒரு மோதிரத்தையும் ஒரு சட்டிலைட் போனையும் கண்டுபிடித்தனர்.... செயலில் அதிதீவிரமாய் இறங்கியதும் அந்த சட்டிலைட் போன் ஊர் கூட்டனியில் முக்கிய உருப்பினராய் இருக்கும் ஜகன்நாதன் மானிக்கத்தின் தம்பி.....அதாவது நம் நிரு மதுவின் சித்தப்பா என கண்டறிந்தனர்....

இதனை அறிந்து உடனே அவர்கள் அங்கிருந்து விரைய.... தன் வீட்டில் டீவி பார்த்துக் கொண்டிருந்த மானிக்கம் வீட்டுக்குள் வருபவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க... இருகிய வதனத்துடன்.... ராயல் என்ஃபில்டுகளிள் இருந்து இறங்கிய நாயகன்கள்... உள் நுழைந்ததும் முகில் " உங்க தம்பி கயல் ங்குர எட்டு வயசு பொண்ண கடத்தி சித்ரவத பன்னதால... அவர அரெஸ்ட் பன்றோம் " என கூற.... இதை கேட்டு அதிரச்சியடைந்தவர்.... " அவன காலை ல இருந்தே காணும் " என கூற.... " அவரு எங்க இருந்தாளும் கண்டுபுடிப்போம் " என கூறிவிட்டு வெளியே சென்றவர்கள்...இறுதியாய் அவரை பார்த்து விஷமமாய் சிரித்துவிட்டு சென்றனர்....

மருத்துவனைக்குள் நுழைந்தவர்களுக்கு அவர்களின் மொத்த குடும்பமும் அங்கு தென்பட்டது.. வேலுதாத்தா குடும்பத்தினருக்கு கயலின் மேல் தனிபாசம் உண்டு.... என்றும் அவளுக்கு சாதகாம இருந்த குடும்பம் இது...அவள் பிழைப்பாலா மாட்டாளா என்று கண்ணீருடன் வெளியிவே காத்து இருந்தனர்... அப்போது " ஐயா " என கத்தியவாறே உள்ளே ஓடி வந்தான் ஒருவன்.....

காதல் தொடரும்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro