Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

5

இதுவரை: ஸ்ரேயா-குணால் பிருத்வியின் சுயரூபத்தை வெளிப்படுத்தியதால், கைது செய்யப்படும் பிருத்வி. ரேஷ்மா-கௌதம் திருமணம் இனிதே நடைபெறுகிறது. குணாலை assistant manager ஆக்கும் ஸ்ரேயா..

______________________________________

ஸ்ரேயா: யூ are appointed as assistant manager.

குணால்: என்னால நம்பவே முடியல ஸ்ரேயா.

குணாலின் கையில் வேகமாக கிள்ளினாள் ஸ்ரேயா..

குணால்: ஆஆஆஆஆஆஆ

ஸ்ரேயா: இப்ப நம்பறியா?

குணால்: நம்பறேன்!! (மனதிற்குள்: ரவுடியா இருப்பாளோ?)

ஸ்ரேயா: சாயந்திரம் தயாரா இரு.. நம்ம டி நகர் போறோம்..

குணால்: சரி ஸ்ரேயா.. போலாம்.

காசியில், ஒரு தம்பதியினர் நதிக்கரையில் மூழ்கி வேண்டிவிட்டு கரைக்கு வந்தனர்.

அப்பொழுது அந்த பெண்மணி,

பெண்மணி: என்னங்க அங்க பாருங்க. அந்த ரிஷி(சித்தர்) தான் நந்தர்.. அவர் சொல்றது அப்படியே நடக்கும்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க.

அவள் கணவர்: சரி மா.. அதுக்கு?

பெண்மணி: அவர் கிட்ட போய் ஒரு தடவை நம்ம பொண்ணுங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு கேக்கலாம்ங்க.. தயவு செய்து எனக்காக வாங்க.

அவள் கணவர்: சொல்லிட்டல்ல சரி வா.. போய் அவர் என்ன தான் சொல்றார்னு கேப்போம்!

ரிஷி இவர்களை பார்த்ததும்,

ரிஷி: மூத்த பெண் திருமணம் நின்று போயிடுச்சு. அதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணலாம்னு காசி வந்திருக்கீங்க. உண்டா இல்லையா.

பெண்மணி: ஆமாம் சுவாமி.. ஏன் கல்யாணம் தடைப்பட்டுதுனு தெரியல.. ஆனா என் பொண்ணு வாழ்க்கை இனிமே நல்லபடியா இருக்குமா?

ரிஷி: உன் பெரிய பொண்ணு ஜாதகத்துல இப்ப அங்காரகன்(செவ்வாய்) சாதகமான நிலையில இல்லை. அந்த நிலை மாற இன்னும் மூனு வருஷம் ஆகும். அதுவரை பெரிய பொண்ணுக்கு கல்யாணம் கைகூடி வராது.

பெண்மனி: ஐயோ என்ன சாமி சொல்றீங்க.. அவளுக்கு ஏற்கனவே 26 வயசு.. இதுக்கு மேலேயும் தள்ளி போனா!

ரிஷி: அதுக்கு ஒரு வழி இருக்கு. முதல்ல இளையவளுக்கு மணமுடித்து வைத்தால் பெரியவளின் திருமண வரன் கைகூடி வரும். இதன்படி நடக்காம சின்னவளுக்கு முன்னாடி பெரியவளுக்கு கல்யாணம் பண்ணா தாரம்(கணவன்) இறக்கலாம்! இது விதி. விதியை மாத்த முடியாது!

பெண்மனி: ஜயோ. அப்படி நடக்க மாட்டோம். முதல்ல சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்றோம். நன்றி சாமி.. நாங்க வர்றோம்!

ரிஷி: போய் வாருங்கள்.

அவள் கணவன்: இதுக்கு தான் அப்பவே சொன்னேன். தேவையில்லாததை சொல்லி நம்மளை பயமுறுத்திட்டார் பாரு..

பெண்மணி: ஏங்க அவர் சரியா தான் சொல்லிருக்கார்.. மறந்துட்டீங்களா?

கணவர்: என்னத்தை?

பெண்மணி: நம்ம சிந்து வோட ஜாதகத்தை குடும்ப ஜோசியர் கிட்ட காமிச்ச அப்ப அவரும் செவ்வாய் சாதகமான நிலையில இல்லைனு சொன்னார்.. இப்ப இந்த ரிஷியும் அதையே தான் சொல்றார்..

கணவர்: ஆமாம்ல சொன்னார்! சரி அதுக்காக ஸ்ரேயாவுக்கு எப்படி  முதல்ல கல்யாணம் பண்ண முடியும்? அவ சின்ன பொண்ணு..

பெண்மணி: வேற வழியே இல்லைங்க..சரி இதப்பத்தி நம்ம சென்னை போய் பேசிப்போம்.. வாங்க..

கணவர்: உத்தரவு மேடம்.

ஸ்ரேயா: குணால்...குணால்..ரெடி ஆயிட்டியா?? பொண்ணு நானே குளிச்சு மேக்கப் போட்டு சீக்கிரம் ரெடி ஆயிட்டேன்..நீ என்ன பண்ற இன்னும்? கதவு வேற திறந்தே இருக்கு.. இவன் எங்க இருக்கான்?

குணால்: ஸ்ரேயா நான் பாத்ரூம்ல குளிச்சிட்டிருக்கேன்..

ஸ்ரேயா: அட அரைலூசு😒கதவ கூட மூடாம குளிக்க போய்ட்டான்..எவனாச்சு வீட்டுக்குள்ள வந்தா...இப்படி இருக்கானே இவன்!!!

குணால்: ஸ்ரேயா ஒரு உதவி..

ஸ்ரேயா: என்ன முதுகு தேச்சி விடனுமா..அதுக்கு வேற ஆள பாரு சடாமுடி..

குணால்: அய்ய்யோ நான் அப்படி  பட்ட பையன் இல்லை ஸ்ரேயா..

ஸ்ரேயா: ஏதோ நீ ஓரினச்சேர்க்கையாளன்னு சொன்ன மாதிரி "நான் அப்படிபட்ட பையன் இல்லை" னு சொல்ற😂 சரி என்ன உதவி?

குணால்: துண்டை எடுத்திட்டு வர மறந்துட்டேன்..கொஞ்சம் அத எடுத்து என்கிட்ட கொடு ஸ்ரேயா...

ஸ்ரேயா:இந்தா..சீக்கிரம் வா..

குணால்: அப்படியே கூட வர நான் ரெடி...

ஸ்ரேயா: கொன்னுடுவேன்..என்ன நக்கலா லாம் பேச தெரியுமா உனக்கு?

குணால்: பேசுவேன் பேசுவேன்..பழகிட்டா நல்லாவே பேசுவேன்😜ஸ்ரேயா இன்னொரு உதவி..

ஸ்ரேயா: இதுக்குமேல லாம் எதுவும் பண்ண முடியாது....

குணால்: அந்த உதவி பண்ணலனா நீ தான் மயங்கி விழுவ😂

ஸ்ரேயா: என்ன உளர்ற குடுமி🙄

குணால்: நான் டிரஸ் போடனும்.. நீ உள்ளே இருக்கணும்னா....

ஸ்ரேயா: அடச்சீ இரு நான் வெளியே போயிடறேன்..

குணால்: அது😂இத முதல்லயே பண்ணிருக்கலாம்ல...

வெளியே சென்று கதவை சாத்திவிட்டாள் ஸ்ரேயா..

ஸ்ரேயா(மனதிற்குள்): அப்பாடா.. இவன் bore னு நினைச்சேன்..பரவாயில்லை நல்லா பேசறான்.. அதான இந்த ஸ்ரேயாவால யார வேணா பேச வைக்க முடியும்.. இந்த குடுமி எம்மாத்திரம்..

கதவை திறந்தான் குணால்..

நனைந்த  நீள முடியோடு, டீ ஷர்ட் அணிந்து கவர்ச்சியாக அவன் நிற்க ஒரு நிமிடம் கண்ணசைக்கவில்லை ஸ்ரேயா..

குணால்:(மனதிற்குள்) என்ன கண்ணை கூட அசைக்க மாட்றா? டேய் குணால் அவ உன்னை சைட் அடிக்கப்போறா டா.. பாத்து..

குணால் சிட்டிகை போட, ஸ்ரேயா நினைவுக்கு வந்தவளாய்,

ஸ்ரேயா: ஹம்ம் ரெடி ஆயிட்டியா ? போலாமா?

குணால்: போலாம் ஸ்ரேயா.. இரு முடியை குடுமி போட்டுகிட்டு வரேன்..

ஸ்ரேயா: ஏய் ஏதாச்சு சொல்லிட போறேன்.. ஆறடி கூந்தல் வெச்சிருக்க நானே loose hair ல வரேன்.. குதிரைவால் உனக்கு என்ன😏

குணால்: சரி சரி.. உன் முடியை விட என் முடி silky ஆ இருக்கே னு உனக்கு பொறாமை..சரி இப்படியே வரேன்..

ஸ்ரேயா: டேய் டேய் அடங்குடா😏கதவை பூட்டிட்டு வா.. இல்லைனா எவனாச்சு வந்து இருக்கிற டிரஸ்ஸை ஆட்டையபோட்டு போயிடுவான்..😂அப்புறம் நீ இதே டீ ஷர்ட் லயே தான் திரியணும்😂

குணால்: எவ்ளோ நல்லெண்ணம்🙄

ஸ்ரேயா: நான் ஏதோ அக்கறைல சொன்னேன்..அப்புறம் உன் இஷ்டம் பா😏

குணால்: சரி தோ பூட்டிட்டேன்☺வா ஸ்ரேயா போலாம்..

ஸ்ரேயா வண்டி ஓட்ட இவன் பின்னால் அமரந்து வந்தான்..

குணால்: ஸ்ரேயா..ஏன் இதுவும் பேசாம வர?

ஸ்ரேயா: நான் வண்டி ஓட்டறதா இல்லை உன்கிட்ட பேசறதா..

குணால்: பேசிட்டே ஓட்டு ஸ்ரேயா.. இப்ப நம்ம ஏன் டி நகர் போறோம்?

ஸ்ரேயா: ஹான்.. உனக்கு ஒரு மார்வாடி பொண்ண பாத்து பேசி முடிக்க தான்..

குணால்: ஐயோ அவசரப்படாத ஸ்ரேயா.. வண்டிய திருப்பு.. நான் என் அம்மா கிட்ட பேசிட்டு முடிவு பண்றேன்..

ஸ்ரேயா: டேய் நீ தெரிஞ்சு பேசறியா? நான் உன்னை கலாய்ச்சேன்..

குணால்: அப்படியா? நாளைக்கு சிரிக்கிறேன்🙄🙄

ஸ்ரேயா: அய்ய..சரி அடுத்து ஒரு ஜோடி க்கு கல்யாணத்தை நடத்தி வைக்க போறோம்.. அதுல மாப்பிள்ளை வீடு டி நகர்ல இருக்கு.. அந்த வீட்டுக்கு தான் போறோம்..

குணால்: Oh i see I see😯 சரி ஸ்ரேயா.. இதுக்கு மேல பேசாத..traffic police இருக்காங்க.. வண்டியோட தூக்கிட்டு போய் ஜெயில்ல உக்கார வச்சிட போறாங்க😂

ஸ்ரேயா: குடுமி மாடு.. யாரு முதல்ல பேச்சு குடுத்தது.. உனக்கு இருக்கு இரு😒

என வண்டி கண்ணாடியில் அவனை பார்த்து முறைக்க, அவன் சிரித்தான்..

குணால்: இதான் மாப்பிள்ளை வீடா.. பெரிசா தான் இருக்கு..

ஸ்ரேயா: மாப்பிள்ளையோட அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாரு.. மாப்பிள்ளை பேரு அர்ஜூன்.. உள்ளே நீ தான் அவங்களுக்கு என்ன தேவை னு கேட்டு சொல்ல போற..

குணால்: ஐய்யய்யோ ஸ்ரேயா.. ஏதோ உன்கிட்ட பழக ஆரம்பிச்சதால உன்கிட்ட நல்லா தமிழ்ல பேசறேன்😂 அவங்க கிட்ட போய் நான் பேசினேன்னா அவங்க இந்த contract ஏ வேணாம்னு உன்னை தூரத்திடுவாங்க 😂

ஸ்ரேயா: சரி வா..நான் பேசறேன்..

ஸ்ரேயா உள்ளே செல்லும் போது, hall க்கு அருகே இருந்த ஒரு அறையில் இரண்டு பெண்மணிகள் பேசிக்கொண்டிருந்தனர்..

ஸ்ரேயா கவனிக்காமல் உள்ளே செல்ல, எதேச்சையாக அந்த அறையை பார்த்த குணால், அறையை கடந்து செல்ல முற்பட்டான்.. அப்போது,

பெண்மனி 1:  விடக்கூடாது.. நடக்க விடக்கூடாது..

பெண்மனி 2: இதுவரைக்கும் எத்தனை தடவை நிச்சயத்தை தடுத்திருக்கோம்.. அவ்ளோ பண்ண நம்மளால இத பண்ண முடியாதா... கவலையை விடு.. என்கிட்ட அருமையான திட்டம் இருக்கு..

குணால்: யார் இந்த ஆண்ட்டிஸ்🤔 முகத்தை அந்த பக்கம் திருப்பி வைச்சிருக்காங்களே.. எப்படி பாக்கறது?

ஸ்ரேயா: ஏய் குடுமி.. அங்க வராம இங்க என்ன பண்ற?

குணால்: ஸ்ரேயா அது வந்து..

ஸ்ரேயா அவன் கையை பிடித்து தர தர வென இழுத்துச்சென்றாள்..

சிந்து: ஏன் அண்ணா.. கால் கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், கால் கிலோ உருளைக்கிழங்கு.. இதுக்கு பில் போட இவ்ளோ நேரமா? எப்ப வந்தேன்.. எனக்கடுத்து வந்தவங்க லாம் போறாங்க.. ஏன் இவ்ளோ லேட் ஆக்கறிங்க?😠 எனக்கு எதுவுமே வேண்டாம்னு கிளம்பிடவா?

கடைக்காரர்: கோச்சிக்காத மா.. இதோ போட்டுடறேன்..

கடையில் காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சிந்து..

திடீரென குளியல் shower போல் நீர்த்துளிகள் மேலே விழ, வானத்தை பார்த்தாள்..

கார்மேகம் கருத்து தூறல் ஆரம்பித்தது⛆

சிந்து: (மனதிற்குள்) நல்லவேளை.. குடை எடுத்திட்டு வந்தேன்.. இல்லைனா காய் எல்லாம் மழையில நனைஞ்சி வீணாயிருக்கும்!

குடையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சிந்து..

எதேச்சையாக சிந்து ஊனமுற்ற ஒரு நாயை பார்த்தாள்..

நடக்க முடியாததால், மழையில் நனைந்து குளிரில் தவித்துக்கொண்டிருந்தது அந்த நாய்..

சிந்து: ஜயோ பாவம் இந்த நாய்.. நம்ம கிட்ட குடை மட்டும் தான இருக்கு! என்ன பண்ணலாம்? ஆஆ நம்ம shawl ஜ கிழிச்சு போர்த்தி விடலாம்!

என shawl ஜ கிழிக்க போனாள் சிந்து.

அப்போது அங்கே வந்த கார் ஒன்று சிந்து அருகே வந்ததும் நின்றது.

அதிலிருந்து அழகான ஒரு இளைஞன் இறங்கினான்.

இறங்கியவன் தான் அணிந்திருந்த coat ஜ கழற்றி அந்த நாய்க்கு போர்த்தி அதனை தூக்கி சாலை ஓரத்தில் இருந்த கூடாரத்தில் வைத்தான்..

நாய் நன்றியுடன் அவனை பார்த்து வாலாட்டியது.

சிந்து:(மனதிற்குள்) ரொம்ப நல்லவனா இருப்பான் போல.. நாய்க்கு coat போட்டு அதை பத்திரமா கொண்டு போய அந்த கூடாரத்தில படுக்க வைச்சு அதுக்கு பிஸ்கட் கொடுக்கிறானே.. ஹம்ம் இந்த காலத்துல இப்படிபட்ட பசங்களை பாக்கறதே அதிசயம்.. இவனை பாராட்டியே ஆகனும்.😊

சிந்து: ஹலோ மிஸ்டர்..

சிந்து அழைக்க அந்த இளைஞன் திரும்பினான்.

😍😍


........................................................................

தாமதத்திற்கு மன்னிக்கவும்.. நடுவுல உடம்பு சரியில்லை.. அதுவும் இல்லாம கொஞ்சம் பிஸி..

நான் அப்டேட் பண்ண லேட் ஆணா தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க... வேற வழி இல்லை!!!🙁🙁 எப்பவும் போல என் கதைக்கு நீங்க ஆதரவு தரனும்னு எதிர்பாக்கறேன்😊☺

நன்றி... "யாரடி நீ மோகினி" உங்க ஆதரவால 1000 votes ஜ தாண்டி கலக்குது😍😍😍

ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே மாதிரி இந்த கதைக்கும் ஆதரவு கொடுங்க😊☺


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro