Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

23

அன்று காலையிலிருந்து பல முறை அழைப்பு விடுத்தும்.. "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்" என வர.. தன் கைப்பேசியை தூக்கி போட்டு உடைக்க நினைத்தவள்.. "வடை போயிருமே" என அமைதி காத்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள் நிலா..

"என்ன ஆச்சி நிலா" என்றபடி வந்த ரேனுவிடம்.. ஏதும் சொல்ல தோன்றாமல் விலகி சென்றவளை.. "சாரி நிலா.. என்னை மன்னிச்சிரு.."என்ற ரேனுவை பார்த்தும் பார்க்காமல் நகர.. "ப்ளீஸ் நிலா.. நான் தான் அப்போ அப்போ உன் கிட்ட ஒவ்வொரு மாதிரி நடந்துக்குறேன்.. என்னால நடந்தத மறக்க முடியலை டி.. அதுக்காக நான் உன்னை வெறுக்கலாம் இல்லை டி.. ப்ளீஸ் டி.. இப்படி பார்த்தும் பார்க்காத மாதிரி போகாதே.. இனி அப்படி நான் நடந்துக்க மாட்டேன்" என கண்கலங்கிய ரேனுவிடம்.. "ப்ளீஸ் ரேனு.. நான் கொஞ்சம் தனியா இருக்கனும்னு நினைக்கிறேன்" என்றவளிடம்.. "சிவ் வந்திருக்காங்க" என கூறவும் வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள்..

"ஏன் சிவ்.. நீங்க இப்போ போய் தான் ஆகனுமா??" என மித்ரன் கேட்க.. "ஹ்ம்ம்.. ஆமா மித்ரன்.. நான் அங்க  வொர்க் பன்னலாம் இருக்குறேன்.. நல்லா யோசிச்சி எடுத்த முடிவு தான் இது.. எந்த மாற்றமும் இல்லை.. எல்லாம் ரெடி.. நான் ஈவ்னிங் ட்ரைன்ல கிளம்புறேன்.. இதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்" என சிவ் கூறவும்.. "என்ன அண்ணா.. என்ன சொல்லுறாங்க??" என புரியாமல் விழித்த நிலாவிடம்.. "ஹ்ம்ம்.. சார் திருநெல்வேலில ####காலேஜ் ல வொர்க் பன்ன போறாங்களாம்.. அத சொல்ல வந்திக்கிறாங்க" என நிலாவிடம் கூறியவன்.. தன் தங்கையின் கண்களில் தெரியும் வலியை பார்த்து.. "ஏன் சிவ்?? உங்க மேரேஜ் முடிச்சிட்டு நீங்க போகலாம்லே" என கேட்டான்..

அவனின் கேள்வியில் சிறிது நேரம் அந்த இடமே அமைதியில் நிலவ.. "சாரி மித்ரன்.. எனக்கு கல்யாணம் பன்னிக்கிற ஐடியா இல்லை" என கூற.. "காலத்துக்குமா??" என கேட்ட நிலாவை ஒரு நிமிடம் பார்த்தவன் மித்ரனிடம் திரும்பி.. "தெரியாது மித்ரன்.. ஆனா, இப்போதைக்கு மேரேஜ் மேலே இன்ட்ரஸ்ட் இல்லை" என கூற.. "மேரேஜ் மேலே இன்ட்ரஸ்ட் இல்லையா?? என் மேலே இன்ட்ரஸ்ட் இல்லையா??" என நிலா கண்ணீருடன் கேட்கவும்.. அவளின் தாய் பாக்கியா,.

"நிலா" என அதட்ட.. "நான் வரேன் மித்ரன்" என திரும்பி சென்றவனின் கையை பிடித்தவள்.. "நான் கொஞ்சம் பேசனும்" என கூற.. அவளின் கையை உதர எண்ணியவன்.. அனைவர் மத்தியில் அவளை அவமானம் படுத்த வேண்டாம் என நினைத்து.. "ஹ்ம்ம்" என கூறியவன்.. அவளின் பின்னே தோட்டத்திர்க்கு சென்றான் ..

"பேசனும்னு சொல்லிட்டு இப்படி பல சைலன்ட்டா இருந்தா என்ன அர்த்தம்.. சீக்கிரம் சொல்லு... டைம் ஆச்சி" என சிவ் கூற.. சிறிது நேரம் அமைதியாக பார்த்தவள் "ஐ லவ் யூ" என்க.. "ஓஓஓஓ.. சரி.. வரேன்" என நகர போனவனை.. "ப்ளீஸ் சிவ்.. என்னை மன்னிச்சிரு.. என்னை விட்டு போகாதே டா.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்... நான் தெரியாம பன்னிட்டேன் டா.. சாரி டா ஆன்ட் லவ் யூ லாட் டா.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ சோ மச் டா.. சாரி" என சிவ்வின் கையை பிடித்து இழுத்து அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டே புலம்பியவளை தள்ளி நிறுத்தியவன்.. பின் வாங்கி செல்ல.. மறுபடியும் சிவ்வை இழுத்து.. இழுத்த வேகத்தில் அவன் இதழில் இதழ் பதித்தாள் நிலா..

இவர்களின் இந்த இதழ் போராட்டம் நீண்டு கொண்டே செல்ல.. ஒரு கட்டத்தில் சுதாரித்த சிவ்.. அவளை விளக்கியவன் அதே வேகத்தில் அவள் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான்..
கண்ணீருடன் சிவ்வை பார்த்தபடி இருக்க.. அவனோ,. "சாரி நிலா.. என்னால உன்னை மன்னிக்க முடியலை.. நீ அன்னைக்கு என்னை ஒரு பார்வை பார்த்தியே.. அந்த பார்வை இன்னும் என் கண் முன்னாடி நிக்குது டி.. ஏன் டி அன்னைக்கு அப்படி பார்த்தே.. அப்பவே நான் செத்துட்டேன் டி.. இதுக்கு மேலே உன்னை பார்த்தா ரெண்டு மனசோட வாழ்ற மாதிரி இருக்கும் டி.. பயமா இருக்கு டி.." என மனதில் நினைத்த படி திரும்பி சென்றவனின் கண்கள் கலங்கி இருந்தது..

நினைவுகளை விட்டு செல்ல நினைத்து திருநெல்வேலிக்கு போக முடிவெடுத்தவனுக்கு தெரியவில்லை.. காதல் கொண்ட மனது எந்த திசைக்கு சென்றாலும் தன்னவளுடைய நினைப்பு மொத்தமும் தனக்குளையும் தன்னை சுற்றியுமே வட்டமடிக்கும் என்று..

"ஆமா அண்ணா.. தீப்தி எங்கே?? ஆளையே காணோம்" என சுற்றி தேடியபடி கேட்ட ரேனுவிடம்.. "என்னனு தெரியலே.. கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருக்குனு சொன்னா.. அதான் ரெஸ்ட் எடுக்க சொல்லிக்கிறேன்" என மித்ரன்  கூறவும்.. "அது ஒன்னும் இல்ல மா ரேனு.. புது பொண்ணுலே.. எதையும் தாங்குற சக்தி வேணும்.. இன்னும் அவ சாப்பிடவும் இல்லை மா.. இந்தா மா.. இந்த தோசைய அவள சாப்பிட சொல்லு" என பாக்கியா எதையோ நினைத்து  கூறி ரேனுவிடம் குடுக்க.. தன் தாய் சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்..
"ஹுஹும்.. நினைப்பு தான் பொலைப்ப கெடுக்கும்" என வாய்க்குள் முனுமுனுத்தப்படி சென்றான்..

"ஏதோ இடிக்குதே" என யோசித்தபடி தீப்தியின் அறைக்கு சென்ற ரேனு.. கதவை மூடியவள்.. தோசையை அருகில் இருக்கும் மேஜையில் வைத்துவிட்டு தீப்தியின் அருகில் சென்று அமர்ந்தாள்..

"என்ன ஆச்சி தீப்தி? ? ஏன் அழுகுறா??" என தீப்தியின் கண்களில் வடியும் கண்ணீரை துடைத்தபடி கேட்ட ரேனுவை கட்டி பிடித்தவள் மொத்தமாக உடைந்து அழுதாள்..

"ஏன் ரேனு?? ஏன்?? என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சுமே மித்ரன் என் கிட்ட அப்படி நடந்துக்குறாங்க??" என கேட்கவும் அதிர்ச்சியானவள்.. "என்ன சொல்றா தீப்தி??" என புரியாமல் விழித்தவளிடம்..
"என் கிட்ட.. என் கிட்ட" என வரும் அழுகையை உதடை கடித்து நிறுத்தியவள்..
"அது.. என்னை முழுசா.. அது வந்து.. என்னையே எதிர்ப்பார்க்குறாங்க" என அழுதவளை.. இவளுக்கு எப்படி புரிய வைப்பது என யோசித்த ரேனு.. "என்ன தீப்தி.. ஏன் புரியாம பேசுறா?? அவுங்க உன் ஹஸ்பண்ட் டி.. இது எல்லோருக்குள்ளையும் நடக்குறது தான்.. நீ ஏதோ சின்ன வயசுல நடந்தத லூஸு மாதிரி நினைச்சிட்டு இருக்கிறா" என கத்தினாள் ரேனு..

"என்ன சொல்லுறா ரேனு?? ஹான்.. சின்ன வயசுல உள்ளது.. ஹ்ம்ம்.. நீ அசால்ட்டா சொல்லுவா டி.. உன்னை பொருத்த வரை.. இல்லை உங்களை பொருத்த வரை அது ஒரு நியூஸ் டி.. அதை அனுபவிக்குறவங்களுக்கு தான் டி தெரியும்... அதோட வேதனை.. இதோ, இப்ப சொல்லுறாங்களே.. புது பொண்ணு ஓய்வு எடுக்கனும்.. நல்லா சத்தான சாப்பாடு சாப்டனும்னு சொல்லுறாங்களே.. ஏன்?? ஏன்?? ஏன் டி அப்படி சாப்பிட சொல்லுறாங்க?? சொல்லு.. ஏன்னா இந்த தாம்பத்ய உறவுல அந்த அளவுக்கு சக்தி வேணும்னு தானே" என கூறி அழுதவள்..

"அந்த வயசுல அந்த பிஞ்சு வயசுல இந்த உடம்புல என்ன டி இருந்துக்கும்.. சொல்லு டி.. அப்போ எந்த சத்தும் இல்லாம எதுவும் தெரியாம எந்த பக்குவமும் இல்லாம அந்த நாய்ங்களுக்கு இரையானானே டி.. அந்த வலி எப்படி இருக்கும் தெரியுமா?? நான் ஒவ்வொரு பக்கம் பயந்து ஓடும் போதும்.. என் அப்பா வந்து காப்பாத்த மாட்டாங்களா?? மாமா வரமாட்டாங்களா?? சித்தப்பா வரமாட்டாங்களா?? பெரியப்பா வரமாட்டாங்களா?? யாராவது வந்து காப்பாத்த மாட்டாங்களா?? ஒரு தெரு நாய் வந்தாவது அவுங்களை கடிச்சி என்னை காப்பாத்தாதா??னு பயந்து ஓடுனேன் னு.. பச்சை மண்ணா இருந்த என் கிட்ட.. இல்லை என்னை மாதிரி இன்னும் எத்தனை குழந்தைங்க கிட்ட இப்பிடி எதிர்ப்பார்க்குறாங்க டி.. ச்சீ.. அவுங்களுக்குளாம் என்ன டி தண்டனை குடுக்கனும்.. சொல்லு.. இந்த உலகத்திலே இருக்குற மொத்த தண்டனையை அவுங்களுக்கு குடுத்தாலும் அது ரொம்ப அற்பம் டி" என அழுதவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் விழித்தாள்...

"ஹேய்.. ப்ளீஸ் டா.. அழாதே.. அதை ஒரு கெட்ட கனவா நினைச்சி மறந்துரு.. இப்போ நீ வளர்ந்து ஒருத்தனுக்கு பொண்டாட்டி ஆகிட்டா.. இனி அந்த கடமைய நீ செய்யனும்" என கூறியவளிடம்.. "எப்படி டி.. என்னால முடியல டி.. மித்ரன் என் கிட்ட நெருங்கும் போதுலாம் அந்த சின்ன வயசுல திக்கு தெரியாம ஓடினது தான் டி என் கண் முன்னாடி வந்து வந்து நிக்கிது" என கூறி அழுதவளிடம்..

"அதை விடு மா.. அதை மறக்க ட்ரை பன்னு மா.. அண்ணாவ நினைச்சி பாரு.. அவுங்க எந்த அளவுக்கு உன்னைய லவ் பன்றாங்க.. நீயும் அண்ணனை எவ்வளவு லவ் பன்றா?? அப்புறம் ஏன் டி.. அதை மறந்துட்டு உன் லைஃப்ப ஸ்டார்ட் பன்னு டி.." என கூறியவளிடம்.. "ஆமா டி.. உன் அண்ணா எந்த அளவுக்கு என்னை லவ் பன்றாங்கனு தெரியும்.. அப்படியும்" என திணறியவள்..
"எப்படி டி என் பாஸ்ட் ஃபுல்லா தெரிஞ்சிம் என் கிட்ட  இப்படி நடந்துக்குறாங்க.. அப்போ அவுங்களும் மத்த ஆம்பளை மாதிரி தானா??" என விழித்தவள்..

"ஹேய்.. உண்மைய சொல்லு டி.. என் மித்தூ க்கு என் பாஸ்ட் தெரியும்லே??" என சந்தேகமாக கேட்டவளிடம்.. "ஹான்.. ஆமா டி.. தெரியும் தெரியும்" என பதறியவளை சந்தேகமாக பார்த்தவள்.. " நிஜமாவா?? அப்புறம் ஏன் டி.. இதை பத்தி என் கிட்ட எதுவுமே கேட்கலை??" என்றவளிடம்.. "அது.. அது.. அது வந்து டி.. ஹான்.. உன் கிட்ட அதை பத்தி கேட்டா உனக்கு ஒரு மாதிரி இருக்கும்லே டி.. அது மட்டும் இல்லாம அண்ணா நீ பழைசலாம் மறக்கனும்.. உன் கூட சந்தோஷமா வாழனும்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அப்படி இருக்கும் போது எப்படி டி உன் கிட்ட உன் பாஸ்ட்ட பத்தி  பேசுவாங்க.. கேட்பாங்க.. சொல்லு" என ஏதேதோ சமாதானமாக கூறினாள்..

"ஹான்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டி.." "அப்புறம்,. நீ அண்ணாவ புரிஞ்சி நடந்துக்க டி.. அந்த நாய்ங்கள யோசிச்சி உன் லைஃப்ப கெடுத்துக்காதே டி.. உனக்கு எங்க சந்தோஷம்  முக்கியமா?? அந்த நாய்ங்களோட கெட்ட எண்ணம் முக்கியமா??..
உனக்காக மித்ரன் அண்ணா, நான், சுஜா பெரியம்மா, ரவி பெரியப்பா.. அப்புறம் நம்ம மொத்த குடும்பமும் நீ சந்தோஷமா வாழனும்னு ஆசை படுறோம் டி..
ஆனா, நீ அந்த கெட்ட எண்ணம்கொண்டவங்களுக்கு முக்கியத்துவம் குடுக்குறா டி.. உனக்கு நாங்க தான் முக்கியம்னா நீ பழைச மறந்துட்டு உன் காதல் கணவன மட்டும் நினைச்சி பாரு டி" என்றவள் அவளை ஓய்வு எடுக்க கூறிவிட்டு நகர்ந்தாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro