13
"காலேஜ் ஆரம்பிச்சதுமே அந்த புக்ஸ் எடுங்க...இந்த புக்ஸ் எடுங்கனு உயிர வாங்குராங்க" என ரேனு புலம்ப ஆரம்பிக்க..."சொல்லி ரெண்டு நாளாச்சி டி...நீ தான் இன்னும் எடுக்காம சுத்திட்டு இருக்குறா" என தீப்தி கூறவும்..."நீ படிப்ஸ் மா..சொன்னத செய்வா...நாங்க அப்டியா...போர் அடிச்சா தான் புக்ஸ பார்ப்போம்...பார்க்க மட்டும் தான் செய்வோம்" என ரேனு கண்ணடிக்க.."போ டி போ..சீக்கிரம் எடுத்துட்டு வா... நான் இங்கேயே உட்கர்ந்திக்கிறேன்" என தீப்தி கூறி சென்றாள்...
"ஹ்ம்ம்..நீ இங்கேயே இருந்துகோ...நான் போய் லைப்ரரில புக் எடுத்துட்டு வரேன்" என தீப்தியிடம் ரேனு கூறி சென்ற நேரம்...அந்த பக்கம் ராஜ் வர...அவன் வரும் திசையை பார்த்தவளுக்கு பயம் அதிகரிக்க...அவன் தன்னை தான் நோக்கி வரான் என புரிந்து கொண்டவள்...பயத்திலேயே மயங்கி சரிந்தாள்....
தீப்தி மயங்கி சரிந்ததும்...மற்றொரு பக்கமாக வந்த மித்ரன்..."ஹேய்...தீப்தி...என்னாச்சி... எந்திரி" என எழுப்ளியவன்...அவள் அசையாமல் இருக்கவும்...அவளை தூக்கி சென்று அருகில் இருக்கும் ஓய்வு எடுக்கும் அறையில் சென்று பலகையில் படுக்க வைத்த நேரம்...யாரோ கதவை அடைக்கும் சத்தம் கேட்டு வேகமாக திரும்பி பார்த்தவன்...ஓடிச்சென்று.."ஹலோ..யாரு.. கதவை திறங்க..ப்ளீஸ்...ஓப்பன் பன்னுங்க...நாங்க உள்ளே இருக்குறோம்" என கதவை தட்டிக்கொண்டிருந்தான்...
அவன் கதவை தட்டிய சத்தத்தில் விழித்த தீப்தி...அறையில் தானும் மித்ரனும் மட்டும் இருப்பதை பார்த்து பயத்தில்..."போ...வெளியே போ...ப்ளீஸ்...என்னை எதுவும் பன்னிராதே..." என தீப்தி கத்த ஆரம்பிக்க...அவளின் கத்தலில் அரண்டவன்...அவளை சமாதானம் படுத்துவதா?? இல்லை கதவை திறக்க முயற்சி பன்னுவதா??என தவித்தவன்..
"ஹேய்...ப்ளீஸ்...கத்தாதே...ஒன்னும் இல்லை" என மித்ரன் தீப்தியின் அருகில் வர..."ப்ளீஸ்...பக்கத்துல வராதே...பயமா இருக்கு" என அழுதபடி கூறியவள் சுற்றி ஓடி கதவின் அருகில் சென்று இழுக்க...கதவு திறந்து கொண்டது..
"தேங் காட்...ஓப்பன் பன்னியாச்சி" என்றபடி தீப்தியின் பின்னால் வந்த மித்ரன் உறைந்து நின்றான்...அறையின் வெளியே அநேகம் பேர் இருக்க...
"என்ன மித்ரன்...உன் நாடகம்லாம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேனு அதிர்ச்சியா இருக்கா" என்று ராஜ் கேட்டு கொண்டே சிரித்தான்...
மித்ரன் சுற்றி முற்றி பார்க்க...ஒவ்வொறுவரும் ஒவ்வொறு மனநிலையில் மித்ரனை பார்த்தனர்..
"என்ன...மித்ரன் தான் சேர்மேனு தலை மேல தூக்கி வச்சி ஆடுனீங்க...இப்ப தெரிஞ்சிச்சா?? இவன் இலட்சணம்...இந்த பொண்ணு அழுகைலயே தெரிஞ்சிருக்கும்...இவன் எவ்வளவு கேடுகெட்டவனு" என சரன் கூற...தான் என்ன சொல்வதென்று தெரியாது மித்ரன் நிற்க..என்ன நேர்ந்தது என புரியும் நிலையில் தீப்தியும் இல்லை..
சிலர்.,"ஹ்ம்ம்...யார நம்புவது..யார நம்பாம இருப்பதுனு கூட தெரியமாட்டிக்குது" என கூற...மற்றொரு பிரிவினர்..."இவங்கள்ள ரெண்டு பேருல யாரு நின்றாலுமே நமக்கு நிம்மதி இல்லை போலே" என கூறி கொண்டு போக...அங்கே வந்த ப்ரின்ஸிபால்..."கம் டூ மை கேபின் மித்ரன்" என கூறி சென்றார்...
"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று கூறி உள்ளே சென்ற மித்ரனை...பார்த்தவர் பார்வையில் என்ன இருந்ததோ அதை அவரே அறிவார்..
"வாட் இஸ் திஸ் மித்ரன்?? என்ன இது..இந்த மாதிரிலான் நீ பன்னுவானு நான் சத்தியமா எதிர் பார்க்கலே" என ப்ரின்ஸிபால் கூற..
"சார்...அது" என சொல்ல வந்தவனை சொல்ல விடாமல் தடுத்தவர்.."நீ எதுவும் சொல்ல தேவையில்லை...நீ செய்ஞ்ச அசிங்கத்தை நம்ம காலேஜ பாத்திருக்கு..இப்பவே உன்னை டிஸ்மிஸ் பன்னா தான்.. இந்த மாதிரி தப்ப யாரும் செய்ய மாட்டாங்க...இத காலேஜ்னு நினைச்சீயா?? வேற எதுவும்னு நினைச்சீயா?? எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி காலேஜ்ல வச்சி பன்னிறுப்பா??" என்று ஏனோ தானோ என கத்தி கொண்டிருந்தார்...
"சார்...ப்ளீஸ் சார்...நான் சொல்றத" என கூற வந்தவனை..."அவர் மறுத்து பேசி கொண்டிருந்த நேரம் அவருக்கு அழைப்பு ஒன்று வரவும் அதை பார்த்தவர்...
"நீ வெளியே போகலாம்" என்று கூற..
"சார்" என இழுத்தவனை..."இம்பார்ட்டன்ட் கால்.." என கூறி செய்கை செய்ய...அவன் வெளி சென்றான்...
நண்பர்கள் கூட்டமாக யோசனையில் அமர்ந்திருக்க..."ப்ரின்ஸிபால் கூப்பிடுறாங்க தம்பி" என அங்கே வேலை செய்பவர் வந்து கூறவும்...நண்பர்கள் அர்த்தமாக பார்வையை பரிமாற்றி கொன்டனர்..
மித்ரன் உள்ளே நுழைந்ததும் நாற்காலியில் அமர்ந்து சிரிக்க..."சரி...நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்...நீ அவுங்க கிட்ட சொல்லிடு" என ப்ரின்ஸிபால் கூற..."சார்...சாரி சார்...இது எனக்கு போதாது" என மித்ரன் கூறவும்..."அப்டினா...என்ன செய்ய சொல்லுறா??" என கேட்க...
"இந்த எலக்ஷன்ல நான் நிற்கனும்...அதுக்கு நீங்க ஒத்துக்குட்டீங்கனா எந்த ப்ரச்சனையும் வராது" என மித்ரன் கூறினான்...
"நீ என்ன ரௌடியாடா??...ஏன் இப்படி நடந்துக்குறே" என ப்ரின்ஸிபால் கேட்க...
"சார்...இப்படிலாம் நடந்துக்கனும்னு எனக்கு விருப்பமே இல்லை...நீங்க தான் என்னை இப்படிலாம் பன்ன வைக்குறீங்க ஆன்ட் உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா அதுக்கே தெரியும்...இங்கே என்ன நடந்தது..யாராலா நடந்தது...அதுக்கு காரணம் யாருனு" என மித்ரன் கூறி கொண்டே போகவும்..."சரி...நான் தான் மேனேஜ்மெண்ட்ல பேசனும்னு சொன்னேன்லே" என ப்ரின்ஸிபால் கேட்க..
"மேனேஜ்மெண்ட் கிட்டயா?? மினிஸ்டர் கிட்ட இல்லை??" என நக்கலாக கேட்டான் மித்ரன்...
அவர் அமைதியாக இருக்கவும்..."நீங்க யாரு கிட்ட வேணா பேசுங்க சார்...பட் நான் எலக்ஷன்ல நின்டா மட்டும் தான் உங்களுக்கு நல்லது ஆன்ட் இது எதுவும் உங்களை விட்டு வெளியே போகலனா உங்களுக்கு இன்னும் நல்லது...புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என மித்ரன் கூற...அதை ஆமோதிப்பதாய் ப்ரின்ஸிபால் தலையசைத்தார்...
மித்ரன் நண்பர்களுடன் அறையின் வெளியே அமர்ந்திருக்க...உள்ளேயோ ப்ரின்ஸிபால் தலையில் துண்டு போடாத குறையாக அமர்ந்திருந்தார்...
வேகமாக அவரின் அறையின் உள்ளே நுழைந்த ராஜ்..."சார்...என்ன சார் இது...நீங்க தானே அவனை காலேஜ விட்டு ஓட வைக்கலாம்னு சொன்னீங்க...நானும் எல்லா ஏற்பாடும் செஞ்சி கச்சிதமா முடிச்சேன்...இப்ப என்னன்னா அவனை எலக்ஷன்ல நிக்க வைக்க போறதா அண்ணன் கிட்ட சொல்லிக்குறீங்களாம்...என்ன சார் நடக்குது" என ஆக்ரோஷமாக கேட்க...
"இங்க பாரு ராஜ்...இப்ப எதுவும் கேட்காதே...என்னால எதுவும் சொல்ல முடியாது" என ப்ரின்ஸிபால் கூறினார்..
"அதான் சார் ஏன்...அப்படி அவனுக்கு நீங்க பயப்புடுற அளவுக்கு என்ன நடந்துச்சி" என ராஜ் கேட்க..."நான் தான் சொல்லுறேன்ல ராஜ்...எதுவும் கேட்காதானே ஆன்ட் எலக்ஷன்ல நிக்கிறனாள அவன் ஜெய்ப்பானு நீ எப்படி நினைக்கிறே...நீ செய்ஞ்சி வைச்ச காரியத்துக்கு..அவனுக்கு ஒரு ஓட்(vote) கூட விழாது" என கூறவும்...அதை பற்றி யோசித்து கொண்டிருந்தான்...
"என்ன ராஜ்...யோசனைலாம் பலமா இருக்கு...என் மேலே அவ்வளவு பயமா??" என கேட்டபடி வந்த மித்ரனை...அலட்சியமாக பார்த்து..."உன் மேலயா?? உனக்கா???" என கேட்டு சிரித்தவன்.."மோத நான் ரெடி" என்று அறையிலிருந்து வெளியேறினான்...
"என்ன சார்...அவனே ஓகே சொல்லிட்டான்லே...நீங்க என்ன யோசிக்கிறீங்க??" என மித்ரன் கேட்க.."ஒன்னு இல்லை மித்ரன்...ஒன் வீக்ல அன்னௌன்ஸ் பன்னிருரேன்" என ப்ரின்ஸிபால் கூறவும்..
அவர் சொன்னதை கேட்டு..."ஹாஹாஹா" என சிரித்தவன்..."அப்ப அந்த ஒன் வீக்கு அப்புறம் நான் அவுங்க கிட்ட சொல்லுறேன்...அது வர நீங்க வொர்ரி பன்னிக்காதீங்க" என கூறி சென்றவனை...
"இல்லை...இல்லை..நான் இப்பவே அன்னௌன்ஸ் பன்ன சொல்லுறேன்" என கூறியவர்...அந்த நிர்வாகத்தில் உள்ள உறுப்பினரை அழைத்து பேசினர்....
அவர்.,
"Attention to all the students.. college election will be on 5th of july elected candidates Raj and Mihtran canvassing the students before the election date And the results will be announced on day after the day of election ballot results is final for the college chairman" என அறிவித்தார்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro