
பொய்யில் புளர்ந்த் புது உறவே -17
காரில் இருந்து இறங்கியவள் வேகமாக சென்றும் வீட்டின் கதவை திறந்து அவனை உட்கார செய்தவள் , யாருக்கோ போனில் அழைத்து காபி மற்றும் காலை உணவு வாங்கி வர சொன்னாள் , பிறகு அவனை பார்த்து இப்போ சாப்பாடு வந்துரும் , நீங்க அந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க என சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள் , அவனோ அவள் செல்வதை பார்த்து விட்டு அப்பிடியே அமர்ந்து விட்டான்
என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை அவனுக்கு தான் காதலில் தோற்றபோது தன் குடும்பம் இருந்தது தன்னை தாங்கிக்கொண்டு , ஆனால் எந்த ஒரு தவறும் செய்யமலே அவளை அவளது மொத்த குடும்பம் சேர்ந்து தண்டித்துவிட்டு இப்போது வீட்டை விட்டு கூட அனுப்பிவிட்டார்கள் என்றால் என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் , அதுவும் ராத்திரி நேரத்தில் அனுப்பிவிட்டார்கள் என்று சொன்னாலே இந்த இடம் இல்லை என்றால் என்னவாகிற்கும் என்று அந்த வீட்டை சுற்றி பார்த்தான் அவ்வளோ பெரிய வீடு என்று எல்லாம் சொல்லிவிட முடியாது , இரண்டு பெரிய படுக்கை அறை , ஒரு மாடுலர் கிட்சேன் , ஹால் என்று ஒரு சிறிய குடும்பம் இருக்கும் அளவிற்கு போதுமானதா இருந்தது அந்த வீடு, அதையும் அழகாய் தான் வைத்து இருந்தாள் சுற்றிலும் புத்தகங்கள் அடிக்கி இருந்தது , வீட்டை நேர்த்தியாக வைத்து இருந்தாள் . தைரியசாலி தான் ஆனால் அவள் மனதளவில் எந்த அளவிற்கு வேதனை படுகிறாள் என்று அவனுக்கு புரிய தான் செய்தது, என்ன செய்தால் அவளின் வேதனை குறையும் என்று யோசித்த படி அமர்ந்து இருந்தான் , எப்பிடி இந்த பிரச்சனையை சரி செய்யலாம் என்று யோசித்தான் , அதற்க்குள் அவள் குளித்து முடித்துவிட்டு வந்து விட இன்னும் அவன் அங்கியே அமர்ந்து இருப்பதை பார்த்து , ஹலோ மிஸ்டர் ஏஜே என்ன இன்னும் இங்கையே உட்காந்து இருக்கிங்க போய் பிரெஷ் பண்ணிட்டு வாங்க என அவனை விரட்ட ,
அவன் நிதானமாக அவளை பார்த்த படி எழுந்து நின்றான் , அதை கவனித்த
ஆராதனா மனதுக்குள் இப்போ எதுக்கு இவன் நம்மள இப்பிடி பார்த்து வைக்கிறான் நாம சரியா தானே எல்லாம் போட்டு இருக்கோம் , என தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டாள் , தலைக்கு குளித்துவிட்டு , பருத்தி உடை அனைத்து இருந்தாள் டீ-ஷர்ட் மற்றும் த்ரீ - ஃபோர்த் பேண்ட் அணிந்து இருந்தாள் , அன்றைக்கு இவனுக்கு முடியவில்லை என்று அவசர கோலமாய் எப்பிடி சென்றாலோ அப்பிடி இருக்க ,
அவனோ , அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட சட்டென்று, லூசு ரொம்ப யோசிக்காத , என சொல்லிவிட்டு மற்றொரு அறைக்கு சென்று விட்டான் .
அவனது லூசு என்கிற வார்த்தையில் அவனை முறைத்துவிட்டு , மனதுக்குள் போடா டேய் என்று சொல்லிவிட்டு , அடுத்த ஹோச்பிடல்க்கு போன் செய்து பேச ஆரம்பித்தாள் , தான் வந்துவிட்டதாக தகவல் சொல்லிவிட்டாள் , அதாற்குள் வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்க அவள் , பிரச்சனை வீட்டை தேடி வந்துவிட்டதா என அவள் யோசிக்க , வந்ததோ அங்கே ஆராதனாவுக்கு உதவியாக இருக்கும் பெண்மணி , அவரை பார்த்து , வாங்க ராணிம்மா , எப்பிடி இருக்கீங்க என அவள் அக்கறையாக கேட்க
அவரோ அவளது அன்பில் மகிழ்ந்து போய்விட்டார் என்று தான் சொல்லவேண்டும் , நல்லா இருக்கேன் கண்ணு , நீ எப்பிடி ராஜாத்தி இருக்க , ஊருக்கு போயிட்டு வர ரொம்ப நாலா ஆச்சு , என்று அவளை நலம் விசாரித்த படி அப்போது தான் கவனித்தார் அவள் கழுத்தில் இருந்த தாலியே ..ஆத்தி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இது எப்போ நடந்தது , அவர் அதிர்ந்து போய் கேட்க
இப்போது அவளுக்கு சங்கடமாக இருந்தது , கடவுளே, இவன் பண்ணின வேலைக்கு இன்னும் எவ்வளோ பேருக்கு நான் பதில் சொல்லணுமோ, இவங்க எல்லாரும் சிவாஜி செத்துட்டாரா ரேஞ்சுக்கு கேள்வி கேட்டா நான் எப்பிடி பதில் சொல்லுறது , என்று நினைத்துக்கொண்டாள் .
அவரோ என்னமா என்ன யோசனை , உனக்கு கல்யாணம் எனக்கு கூட சொல்லவில்லை பாரேன் என அவர் வறுத்த பட, அவளோ , ஹம்ம்கூம் எனக்கு மட்டும் சொல்லிட்டா நடந்தது , பிறகு மன்னிச்சுக்கோங்க , ராணிம்மா அது சூழ்நிலை அப்பிடி யாருக்கும் சொல்ல முடியலை , , அப்போது தான் குளித்து முடித்து அர்ஜுன் வெளியே வந்தான் அவனை பார்த்து ராணிம்மா எப்பிடி இருக்கீங்க தம்பி என கேட்க .
அவனும் , நல்லா இருக்கேன், யார் இவங்க என்பது போல் அர்ஜுன் ஆராதனாவை பார்க்க , அதை புரிந்து கொண்ட அவர் , நான் தனா புள்ளைக்கு துணைக்கு இங்க இருக்கிறேங்க தம்பி . என சொல்லவிட்டு அடுத்த வேலையே பார்க்க சென்றார் அவர்
அடுத்து என்ன என்பதில் போல் அவன் அவளை திரும்பி பார்க்க , அவளோ பதட்டத்துடன் இங்கும் அங்குமாய் நடந்துக்கொண்டு இருந்தால் , ஏதோ பெரிதாய் நடக்க போவது போல் அவளது மனம் அடித்துக்கொண்டு இருந்தது , கொஞ்சம் நேரத்தில் மீண்டும் அவளது அலைப்பேசி அவளை அழைக்க , அதை எடுத்து பேசியவளின் முகம் சட்டென்று மாறியது , ஓகே அவங்கள இங்க
வீட்டுக்கு வர சொல்லிடுங்க ஏதும் நீங்க பேசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோபமாக அவளது போனை டீப்பாய் மேல் வைத்தாள் ,
அவனோ என்ன ஆச்சு என்று கேட்க , ஏதும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தால் , மனமோ, அவர்கள் இப்போது வந்தால் எப்பிடி நடந்துக்கொள்ள வேண்டும் என்று , எப்பிடி எல்லாம் பேசுவார்கள் , அதற்கு தான் எப்பிடி பதில் சொல்ல வேண்டும் என்று ஒத்திக்கை பார்த்த படி யோசனையுடன் உட்காந்து இருந்தாள்
அவள் பதில் சொல்லாததை வைத்து அர்ஜுன் முடிவு பண்ணிவிட்டான் அவளது வீட்டு ஆட்கள் வருகிறார்கள் என்று பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு சோஃபாவில் அமர்ந்து ஆராதனாவின் வீட்டினர்க்காக காத்துகொண்டு இருக்க, சொல்லி வைத்தது போல் சரியாக இருபது நிமிடம் கழித்து , ஆராதனா தாய் வீட்டில் இருந்து அனைவரும் அவளை தேடி வந்துவிட்டார்கள் . ராணி தான் அவர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தார் அவருக்கும் இவர்களை பற்றி நன்றாக தெரியும் என்பதால் , இந்த ஏற்பாடு, எதற்க்கென்றால் எங்கே இவர்கள் உள்ளே வந்து எதையாவுது பேசி வைத்தால் அதை ஆராதனா கேட்டு அந்த நாள் பூராவும் வருத்தத்துடன் இருந்துவிடுவாளோ என்று அவருக்கு கவலை வந்துவிட்டது , அதான் அவளது வீட்டு மனிதர்களை வாசலோடு தடுத்தார் ,
ஆனால் அவர்களோ, ஏய் யாரு நீ எங்களையே தடுத்தது நிறுத்துற , வீடு வேளை செய்யுற ஆட்களை கூட எங்க வைக்கணும் அவளுக்கு தெரியாமலா போயிடுச்சு , என ராகவியின் தாயார் துள்ளி கொண்டு இருந்தார் கோபத்தில் .
ராணியோ , நாங்க எல்லாம் சம்பளம் வாங்குற ஆளுங்க தான் ம்மா இருந்தாலும் எங்களை எப்பிடி எங்க வைக்கணும் அந்த புள்ளைக்கு தெரிஞ்சு இருக்கு ஆனால் , சம்பந்தம் பட்டவங்க , சொந்தமாக இருக்கிறவங்க தான் சொந்த பிள்ளைன்னு கூட பார்க்காமல் தெருவுல விட்டுட்டாங்களே என்று நறுக்கென்று கேட்க
ஆராதாவின் அம்மாவுக்கு சுருக்கென்றது இருந்தாலும் கெத்து விடமால் , இங்கே பாரு இப்போ நாங்க உன் கிட்ட எல்லாம் பேச வரல எங்க அவ வர சொல்லு இல்லை வழியே விடு நாங்க போய் பேசணும் அவ கிட்ட
இதற்க்கு மேல் உள்ளே அமர்ந்து இருந்தாள் சரி வராது என்று , நீங்க இருங்க ஏஜே என சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றாள் .
அங்கே ஒஹ் வாங்க மஹாராணி , இவ்வளோ நடக்குது வீட்டுக்கு வெளியே என்ன ஏதுன்னு பார்க்க கூட உங்களுக்கு நேரம் இல்லையோ இப்பிடி அன்னநடை போட்டு வாரிங்க என நக்கலாக அவளது சித்தி கேட்க
மற்றொரு சித்தி புதுசா கல்யாணம் ஆகி இருக்குல்ல அந்த சந்தோசம் தான் அக்கா என சொல்லி கேவலமாக சிரித்து வைத்தார் .
ஆமா எங்க உன் புருஷன் , வந்து இருக்கானா இல்லை அங்கையே அத்து விட்டுட்டானா , சத்தத்தையே காணோம் என மற்றோருவர் கேட்க
அவளோ யார் கேட்கும் கேள்விக்கு எந்த ஒரு காரணம் சொல்லாமல் அமைதியாக அவளது பெற்றோரை பார்த்த படி நின்று இருந்தாள் ,
அவரோ என்னடி அமைதியாக இருக்கிற கேட்குறாங்களா அவங்க கேள்விக்கு பதில் சொல்லு , யாரு அவன் எவ்வளோ நாளா உனக்கு அவனோட பழக்கம் என்கிற கேள்வி இனி பதில் சொல்லி ப்ரயோஜனம் இல்லை என்று தோன்றியது ஆராதனாவுக்கு , ஒரு சிறிய புன்னகையுடன் மீண்டும் வீட்டிற்க்குள் செல்ல திரும்பியவள் அவளது தாய் , ஏய் நில்லுடி , எங்க போற எல்லாரும் கேட்கறோம்ல பதில் சொல்ல கூட வலிக்குதோ , நிதானமாகா அவரை பார்த்து ஆராதனா , நான் இப்போ உங்க கிட்ட என்ன சொன்னாலும் அது தண்ணில எழுதின வார்த்தை மாதிரி நீங்க யாரும் நம்ப மாட்டீங்க அப்படி இருக்கும் பொது நீங்க என்ன நினைச்சுகிட்டு இங்க வந்திங்களோ அதுவே உண்மையா இருந்துட்டு போகட்டும் எதுக்கு, நான் ஒன்னு சொல்லி நீங்க ஒன்னு கேட்டு , உங்க பெண்ணான நேரத்தை வீன் அடிக்கணும், அது மட்டும் இல்லாமல் இந்த பகுதில என்னை மாதிரி நெறையா டாக்டர்ஸ் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் இந்த கூட்டமா வந்து காத்திக்கிட்டு நிக்கறவங்கள கண்டாலே பிடிக்காது, அதுவும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் உங்க குடுத்தும் மானம் தான் காற்றுள்ள பறக்கும் எதுக்கு அதான் வந்திங்க பார்த்தீங்க உங்களுக்கு தோணினத்தை பேசுனிங்க இப்போ நீங்க கிளம்பலாம் எனக்கு ஹாஸ்பிடல் போக நேரம் ஆகிடுச்சு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் ,அவளது வேலையே பார்க்க
அவளது இந்த செய்கை தான் அவளது மொத்த குடும்பத்தை சற்று மேலும் அசைத்து பார்த்தது தவறு செய்தவள் போல் அவளது முகத்தில் ஒரு சிறிய கலக்கம் கூட இல்லை அதைவிட்டு அந்த நிமிர்வு , உங்களால் என்ன செய்துவிட முடியுமோ செய்துகொள்ளுங்கள் போல் இருந்தது . ஒவ்வரு முறையும் அவளிடம் தோற்று போவது போல் உணர்ந்தார்கள் அவளது வீட்டு ஆட்கள் . ரொம்ப நேரம் நின்று பார்த்து கொண்டு இருக்க அங்க மற்ற வீடுகளில் இருந்தவர்கள் இவர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள் அதை கவனித்த ராகவியின் தாய், அக்கா நாம இங்க இருந்து கிளம்பலாம் எல்லாரும் நம்மள ஒரு மாதிரி பார்த்துட்டு பேசிட்டு போறாங்க வாங்க , அவ சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் நேரம் இங்கையே நின்னோம் இருக்கிற மானம் மரியாதையை எல்லாம் போயிடும் போல என பொருமினார் .
அவளை தெருவில் இழுத்து அசிங்க படுத்திவிடாமல் என்று கிளம்பி வந்தால் இங்கே அவள் அல்லவா அவர்களை தெருவில் நிற்க வைத்துவிட்டு சென்று விட்டாள் , அவர்கள் நினைத்து வந்தது ஒன்று ஆனால் இங்கே நடந்து முடிந்தது வேறொன்று ,
ராகவிக்கு , அர்ஜுனை பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் , நகுலுக்கு அவள் தன்னை கேவலமாய் பார்த்தவிதத்தில் வருத்தம் . என்று ஒவ்வரும்அங்கே இருந்து அவரவர் வருத்தத்தில் கிளம்பி சென்றார்கள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro