
பொய்யில் புலர்ந்த புது உறவே -3
அவனுக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் அவர் சொல்லி முடிக்கும் வரை தன்னை சமாளித்து படி நின்று அவர் சொல்லுவதை கவனமாக கேட்டு ரவிக்கு புரியும் படியாக ஒவ்வன்றாக சொன்னாள் , அவர் சென்று பின் மீண்டும் தன் அறைக்கு பற்களை நறநறவென கடித்தால் அவளால் இன்னும் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை , இதே தன் குடும்பத்தினர் தனக்கு துணையாய் இருந்து இருந்தாள் எவன் எவனோ வந்து இப்பிடி என்று நினைத்து அவளுக்கு இப்போது அழுகையே வந்தது
எவ்வளோ நேரம் அப்பிடியே நடந்தாளோ , மீண்டும் தன்னுடையே தந்தையின் குரல் அறை வாசலில் கேட்டபின் தான் சுயநினைவுக்கே வந்தாள் சந்தோஷத்தில் அப்பா .. என அவரை அவள் நெருங்க , அவரோ , அங்கயே நில்லு எவ்வளோ தைரியம் இருந்தா எங்க வீட்டு மாப்பிள்ளையே நீ கை நீட்டி அடிச்சி இருப்ப , உனக்காக வீட்டுல பேசுறேன் சொன்னவற அடிச்சு இருக்கேன்னா எவ்வளோ திமிரு இருக்கணும் .அடுத்தடுத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கூட வந்து அவளை கேள்வி கேட்டு துளைத்து எடுக்க
அர்ஜுன் மருந்து விசயமாக கேட்க வந்த ரவி அவர்கள் எல்லாரும் ஆராதனவை ஒரு வார்த்தையால் ஒரு வழி செய்வதை பார்த்து கோபத்துடன் வந்த சுவடு தெரியாமல் அர்ஜுன் அறைக்கு திரும்பினான் .
இங்க எல்லாரும் பேசுவதை ஆராதனா வேதனை உடன் கேட்டு கொண்டு நின்று இருந்தாள் , தன் பக்கம் நியாயம் இருக்கும் கூடவா இவர்களுக்கு புரியவில்லை ஒரு வார்த்தை என்ன நடந்தது என்று கேட்காமல் தவறு தன் பக்கம் தான் இருக்கும் முடிவுடன் பேசும் இவர்கள் என் குடும்பம் தானா என்கிற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு ஆனால் மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை அவள் , வந்தவர்கள் எல்லாரும் பேசி அமைதி ஆகிவிட , இப்போது ஆராதனா நர்ஸை அழைத்து , சிஸ்டர் இவங்க எல்லாருக்கும் சூடா டீ கான்டீன்ல இருந்து வரவழைச்சு கொடுங்க எனக்கு பேசன்ட் பார்க்க நேரம் ஆகிடுச்சு என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் ,அவளின் இந்த செயல் அவளது குடும்பத்தை சற்று அசைத்தது தான் பார்த்தது , நகுல் கூட அவளை பார்த்து வாய் பிளந்து நின்றான் , ஒவ்வரு முறையும் அவளை அவளின் தன் நண்பிக்கையே உடைத்து சாய்க்க பார்க்கும் அவனுக்கு தோழ்வியே.
இங்கே கோபத்துடன் அறைக்கு வந்த நண்பனை யோசனையுடன் பார்த்தன் அர்ஜுன் , என்னடா எப்போவும் என்னையே பொறுமை எருமைன்னு சொல்லுவ இன்னைக்கு உன் பொறுமை எருமை மேய்க்க போயிடுச்சா என லேசா சிரித்த படி நக்கலாக கேட்டான் , [ மனதுக்குள் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் , நேரடியாக கேட்கவில்லை அவன்]நண்பனின் கேலி புரிந்தாலும் நிராதரவாக நின்ற அவளின் முகம் தான் ரவி முன்னால் தோன்றியது , அதில் இன்னும் கோபமாக வெடிதான் அவன், என்ன மனுசங்க டா அவங்க , ஒரு பொம்பள புள்ளையே அதுவும் வேலை பார்க்கிற இடத்துல வந்து பேச கூடாது கூடவா தெரியாது இவளுங்களுக்கு எப்பிடி எல்லாம் பேசி உயிரோட கொல்லுறாங்க , அந்த புள்ள பக்கம் நியாயம் இருக்கும் கூடவா ஒரு வார்த்தை கேட்க தோனல ச்சீ , எனக்கு வர ஆத்திரத்துக்கு கொலையே பண்ணிடுவேன் போல அதான் திரும்ப வந்துட்டேன் , ஆனா அந்த புள்ளைக்கு என்ன தைரியம் தெரியுமா அவங்க பேசினதுக்கு எல்லாம் அசரவே இல்லையே ,என பேசிக்கொண்டே போக அர்ஜுன் , யோசித்தான் மீண்டும் அவளை பற்றி , அவனுக்கு தெரியும் இப்போது அவள் மனது அளவில் எவ்வாறு நொறுங்கி போய் இருப்பாள் என்று , புரிந்து என்ன பயன், ஆராதனாவுக்காக அவனும் வேதனை பட்டான் , இன்னும் என்னவெல்லாம் அவள் பார்க்க வேண்டி இருக்குமோ , விழிகள் மூடி யோசித்து கொண்டு இருந்த அவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது [ அவளுக்காக அவன் வழியும் முதல் கண்ணீர் ]
அதே வேதனை உடன் அவனின் நினைவு பின்னோக்கி சென்றது , அர்ஜுன் , எவ்வளோ நேரம் , எப்போ வர சொன்னா எப்போ வர நீ ,அதுவும் இந்த வேகாத வெயில உனக்காக எவ்வளோ நேரம் காத்து கிடக்கிறது , ச்சே என அவள் கால்களை தரையில் உதைத்து அவனை வார்த்தையில் பந்தாடஅவனோ , ஆஸ்கார் விருது வாங்கினது அவளது திட்டுகள் அனைத்தையும் வாங்கி கொண்டான் , சாரி ம்மா, முக்கியமா ப்ராஜெக்ட் டீடைல்ஸ் அனுப்ப சொல்லிடாங்க அதுவும் இன்னைக்கே அதான் வர தாமாதம் ஆகிருச்சு இனி இப்பிடி நடக்காம பார்த்துகிறேன் , வா போகலாம் என அவளை தன்னுடையே பைக்கில் ஏற சொல்ல ,அதை பார்த்து அவள் மீண்டும் ஆரம்பித்தாள், எது இதுலையா ,விளையாடாத அஜ்ஜூ , பேசாம ஒரு கேப் புக் பண்ணு அதுலயே போவோம் , ரொம்ப வெயிலா வேற இருக்கு , என்னால உன்கூட இந்த டூ வீலர் எல்லாம் வர முடியாது , என சொல்லஇப்போது அவளின் அந்த வார்த்தை அவனை அசைத்து பார்த்தது , என்ன ரம்யா நீ சொல்லி , உனக்காக தானே இந்த மாடல் பைக் போன மாசம் சேர்த்து வச்சு இருந்த சேவிங்க்ஸ் எல்லாம் போட்டு வாங்கினேன் இப்போ இப்பிடி சொல்லுற , என மனம் தாளாமல் கேட்டு விட்டான்அவ்வளோதான் , இப்போ என்ன சொல்லுற அஜ்ஜூ , சொல்லி காட்றியா நீ , யாரும் உன்னை குறை சொல்ல கூடாதுன்னு தான் இந்த மாடல் வாங்க சொன்னேன் , எல்லாரும் வாழ்க்கைல அடுத்து அடுத்து நிலைக்கு போறாங்க , நீயும் அப்பிடி போகணும் நினச்சது என் தப்பா சொல்லு டா, இப்போ என்ன உன் கிட்ட நான் ஆடி காரா கேட்டேன் வெயில்ல போக முடியாது கேப் புக் பண்ணு சொன்னதுக்கு என்னையே குறை சொல்லுற நீயி , நாளை பின்ன நமக்கு கல்யாணம் ஆனா ஒரு புடவை எடுத்தா அதை கூட சொல்லி காட்டுவ போல என என்ன என்னவோ கத்தி –கத்தி அவள் பேசிக்கொண்டே போகஅவள் போட்ட சத்தத்தில் போற வரவர்கள் எல்லாரும் இவர்களை தான் வேடிக்கை பார்த்து படி தாண்டி சென்றார்கள் , அதை கவனித்த அர்ஜுனுக்கு அவமானமாக இருந்தது , மேலும் எதாவுது கேட்க போனால் இன்னும் பேசுவாள் என அவன் அவளிடம் போதும் ரம்யா நிறுத்து தெரியாமல் பேசிட்டேன் இனி எதாவுது உன்னை கேட்டா என்ன என்னனு கேளு , சரி இப்போ எங்க போகலாம் சாப்பிட அவன் கேட்கஅவள் ஒரு உயர்தர உணவகம் பெயரை சொன்னாள் , அர்ஜுனன் அவசரமாக பணம் எவ்வளோ இருக்கிறது என்று பார்க்க அதை பார்த்த ரம்யாவின் முகம் மீதும் கடுகடுவென மாறியது , என்கிட்டே பணம் இருக்கு அர்ஜுன் நானே உனக்கும் சேர்த்து பணம் கொண்டு வந்து இருக்கேன் , அப்பா எடுத்துட்டு போக சொல்லணும் பொது எனக்கு புரியலை ஆனா இப்போ உன்ன பார்த்த அப்புறம் புரியுது , அப்பா ஏன் கொஞ்சம் பணம் கைல வச்சுக்க சொன்னங்கன்னு , என மேலும் அவனை தாழ்த்தி பேசினாள் ,அர்ஜுன் ஏதும் பேசாமல் அவள் சொன்னது போல் கேப் புக் செய்தான் அது வந்த உடன் அவள் சொன்ன ஹோடேல்க்கே சென்றார்கள் , அங்கே அவள் தனக்கு தேவையானா ஆர்டர் கொடுத்துவிட்டு , அவனை பார்த்து உனக்கு என்ன வேணும்னு சொல்லு அர்ஜுன் நானே பணம் குடுக்கிறேன், அவளுடன் சேர்ந்து உணவு சாப்பிடலாம் என கிளம்பி வந்தவனுக்கு பசியே பறந்து போய் விட்டது , ஒரு கிளாஸ் குடிக்க தண்ணி மட்டும் போதும் என சொல்லிவிட்டான் அவன் கேட்கும் படியே , இந்த ரோசதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என சொல்லிவிட்டு தனது போனில் முழ்கி விட்டாள் அவள், அவனோ அவளை சந்தித்த நாளை நினைத்து பார்த்தான் சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்று சொந்த ஊரை விட்டு நண்பனுடன் மைசூர் வந்தான் வந்த இடத்தில அதற்க்கு சரியான சந்தர்பம் அமையாமல் போய் விட இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என நண்பர் இருவருமே அங்கயே ஒரு ரூம் வாடைகைக்கு எடுத்து தங்கி ஐ .டி கம்பனியில் வேலைக்கு சேர்ந்தார்கள் , பிடிக்காத வேலை என்றாலும் பணம் தேவை அதிகம் இருந்ததால் நேரம் காலம் பாராமல் இருவரும் உழைத்து பிசினெஸ்க்கென்று பணத்தை தனியாக சேர்த்து கொண்டு வந்தார்கள் , அதை பற்றி யாரிடமும் இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை ஒரு மதியம் வேளையில் அர்ஜுன் மற்றும் ரவி எதோ ஒரு உணவகத்தில் இடம் விசையமாக ஒருத்தர பார்க்க வந்து இருந்தார்கள் வந்த வேலை சரியாக முடியாததால் அங்கயே மத்திய உணவை முடிதுவிட்டு வேலை செய்யனும் இடத்துக்கு போகலாம் என்று முடிவு செய்து ஓரமாய் இருக்கையே பார்த்து அமர்ந்தார்கள் அப்போதுதான் , அர்ஜுனின் தாய்வீட்டு வழி மாமன் மற்றும் அவரது பொன்னும் அங்கே வந்து சேர்ந்தார்கள் , ஹே அர்ஜுன் நீ என்ன இங்க என அவர் நலம் விசாரிச்சு அங்கயே அவர்களுடன் அமர்ந்து விட , வேலை விசயமாக பேச ஆரம்பித்தார்கள் , ஆனால் அப்போது தான் ரம்யா அர்ஜுனை முதல் முறை பார்ப்பதால் , ஆச்சரியத்தில் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் , மனதுக்குள் ரொம்ப அழகா இருக்கானே , ஐ .டி யில் வேலை என்றதும் அப்போ சம்பலும் ஓகே , என முடிவுக்கே வந்துவிட்டாள் , அவனிடம் எப்பிடி பேச்சு ஆரம்பிப்பது என்று அவள் யோசித்து கொண்டு இருக்க, அவ்வளோ நேரம் அர்ஜுனிடம் பேசி கொண்டு இருந்த அவளின் தந்தை , ஹான் அர்ஜுன் இது என் பொண்ணு ரம்யா ,இங்க படிக்க வந்து இருக்கா என அறிமுகம் செய்து வைத்தார்அவள் அவனிடம் பேச போகிறோம் என்கிற சந்தோஷத்தில், " ஹாய் " என்றாள்அவனும் , " ஹாய் என்றான்" இப்பிடித்தான் அறிமுகம் ஆனால் ரம்யா அர்ஜுனுக்கு , தந்தை தன்னை பார்த்துக்க சொல்லி இருக்கிறாரு என்று பேசியே அவனிடம் ஒரு நாள் அவனை காதலிப்பத்தாய் சொல்லிவிட்டாள் , நல்ல பெண் தான் சொந்தமும் கூட என தாயார் சொல்லவிட அர்ஜுனுக்கு மறுக்க கரணம் கிடைக்கவில்லை அவனும் அவளின் காதலை ஏற்று கொண்டான் . இப்போது அதுவே அவனுக்கு பெரியே தலைவலியே கொடுத்தது , எதற்கு எடுத்தாலும் அங்க போக வேண்டும் , இங்க போக வேண்டும் , அதை வாங்கு , என அவனுக்கு அதிக செலவு வைத்து படி இருந்தாள் , அவன் செலவு செய்யே யோசிக்க ஆரம்பித்தாள் போதும் இவள் சலங்கையே காலில் கட்டிவிட்டது போல் ஆடியே தீர்த்துவிடுவாள் , அதுவே அர்ஜுனு தொழிழ் தொடங்க தாமதம் ஆக்கியது , காதல் – காதல் என்று எங்கே வாழ்க்கையில் தோற்று விடுவோமோ என்கிற பயம் வந்து விட்டது .இருந்தும் தன்னை சமாளித்து நிமிர்வதற்க்குள் , ரம்யா ரெண்டு நாளைக்குள் பைக் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்க வேற வழி இல்லாமல் லோன் போட்டு புது வண்டியே வாங்கினான் , அதுவும் அவளுக்கு இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அழுத்து போய் விட அவள் இப்போ அவனை சார் வாங்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள் , அதற்கு தான் இவ்வளோ பேச்சும். ஒரு வழியாக ரம்யா உணவை உண்டு முடிக்க அர்ஜுனும் அவளை பற்றியே நினைவில் இருந்து மீண்டான் ,அவனை பார்த்து ரம்யா குலைவான பேச்சில் ஆரம்பித்தாள் , சாரி அஜ்ஜூ , எதோ கோபம் அப்பிடி பேசிட்டேன் , என்னோட படிப்பும் முடியே போகிறது , உனக்காக தான் இவ்வளோ நாள் இங்கே வேற கோர்ஸ் இழுத்து போட்டு படிச்சுட்டு இருக்கேன் , நீ ஒரு அளவுக்கு செட்டில் ஆகிட்டா அப்பா நம்ம கல்யாணம் சீக்கிரம் பண்ணி வைப்பாறு , அப்புறம் நீயும் – நானும் தான் ஒரு பெரியே வீடு , ரெண்டு கார் என அவன் தோழ்களில் சாய்ந்த படி அவளது கனவுகளை அடிக்கி கொண்டே போக அப்போது தான் அர்ஜுன் ஒன்றை கவனித்தான் , அவளது கனவில் , தன் குடும்பமே வரவில்லை என்று , இப்போ போருக்க மாட்டாமல் மீண்டும் கேட்டே விட்டான், எல்லாம் சரி ரம்யா , அதென்ன நீயும்- நானும் , என் அப்பா –அம்மா, தங்கை எல்லாம் நம்ம கூட இருக்க மாட்டாங்களா .அவனது பேச்சை கேட்டு , ரம்யாவின் முகம் மாற தொடங்கியது ,ஆனால் காரியம் ஆக வேண்டுமே , என்று அப்போதைக்கு மட்டும் சிரித்து வைத்தாள் , ஆமா அவங்களும் தான் , அவங்க இல்லாமையா , என்ன அஜ்ஜூ நீ. என சொல்லி அவன் கையே இருக்க கட்டி பிடித்து நன்றாக சாய்ந்து கொண்டாள் .அவளது பதில் அப்போதைக்கு சமாதனம் ஆனாலும் , மனதில் ஏதோ நெருடியது , என்னவென்று தான் அப்போது புரியவில்லை அவனுக்கு , புரிந்த போது ...?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro