Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 15 😇


என் நாட்காட்டியை வினவுகிறேன்..
போகும் உன் கால்
தடங்கள்..
என் ஜீவனில்..
பதியும் நாள்..
எந்நாளோ.. 🤔

வர்ஷாவும் ஜானவியும் ஷிவாக்ஷியின் அறைக்குள் நுழைந்தனர்..

அறையில் யாரும் இருப்பதற்கான சுவடில்லாததால்.. ஜானவி
"ஷிவு.. ஷிவு.. " என விளித்தாள்..

"நான் இங்க.. இருக்கேன்.. " என ஷிவாக்ஷி குளியலறையில் இருந்து பதிலிளித்தாள்..

"ஹோ.. ஓகே.. சரி வெளிய வா.. ட்ரஸ் போட்டுக்குவியாம்.. " என வர்ஷா வெளியே வரும் படி அழைத்தாள்..

"துண்டு மட்டும் கட்டிண்டு எப்படி வர்றது.. நேக்கு சங்கோஜமா இருக்கும்.. " என ஷிவாக்ஷி குளியலறையிலிருந்தே கேட்டதன் மறுமொழியாய்..

கேலி புன்னகையை முகத்தில் பூசியவர்கள்.. வர்ஷா கிண்டலாக..
"நாங்க.. பொன்னுங்க தான்.. உன் புருஷன் இல்ல.. வெளியே வா.. " என கூறியதும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அவசரமாக வெளியே வந்தாள்..

"என்ன இப்படியெல்லாம் பேசறேள்... ??" என ஷிவாக்ஷி முகத்தை சின்னதாக்கி கொண்டு கேட்டாள்..

"பின்ன.. என்ன.. வெளிய வந்திருந்தா நாங்க ஏன்.. இப்படி பேசப்போறோம்.. " என ஜானவி கூறிவிட்டு.. மயில் கழுத்து நிற சேலையை காண்பித்து.. அதற்கான ரவிக்கையை காண்பித்து.. "இந்தா.. ப்ளவுஸ்.. அப்பறம் இத போட்டுட்டு வா.. புடவைய கட்டி விடறோம்.. " என அணிந்து வருமாறு தொடர்ந்து கூறினாள்.. ஜானவி..

ஷிவாக்ஷி அறைக்குள் சென்று அவர்கள் கொடுத்த உள்ளாடைகளை அணிந்து வந்தாள்..

"இது.. எனக்குன்னு.. வாங்குன சேலை தான்.. ஆனா.. கட்டிக்கல .. புதுசு தான்.‌.. என் சைஸ் உனக்கு அன்னிக்கே கரக்ட்டா இருந்துச்சுல.. அதான்.. நாம நாளைக்கு ஷாப்பிங்ல உனக்கு காஸ்ட்யூம்ஸ், ஆர்ணமென்டஸ் எல்லாம் வாங்கிக்கலாம்.. " என வர்ஷா ஷிவாக்ஷிக்கு கட்டிவிட்டபடியே கூறிவிடவும்‌...

ஷிவாக்ஷி "அதெல்லாம்.. வேண்டா.. " என மறுக்கவும்..

"பின்ன.. உனக்கு போடறத்துக்கு எந்த துணியும் இல்ல.. வாங்கி தான் ஆகணும்.. " என ஜானவி மறுமொழி தந்தாள்..

ஷிவாக்ஷிக்கு மௌனமே மொழியானாது.. உண்மை அதுவன்றொ.. தனக்கு உடுத்த உடைக்கூட இல்லாமல் தான் இருக்கிறோமென அவளால் தன் விதியை நினைக்காமல் இருக்க முடியவில்லை..

ஷிவாக்ஷியிடம்
"இப்ப.. ஓகேவா.. ??" என ஜானவி ஷிவாக்ஷிக்கு சேலை கட்டுவதற்கேற்ப மடிப்பு எடுத்துக் கொண்டே கேட்கவும்..

மறுமொழியாக புரியாத பார்வையை வீசினாள்.. ஷிவாக்ஷி..

"இல்ல.. நேத்து உன்கிட்ட பேச ட்ரைப் பண்ணுணோம்.. ஆனா உன்கிட்ட எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்ல.. அதான் கேட்டேன்.. " என ஜானவி அவளுக்கு முந்தானையை அவளின் தோளில் போட்டு அவிழாமல் இருக்க.. ஊசியை குத்தியபடி கூறிமுடிக்கவும்..

"அது மட்டுமா.. பிரம்மை பிடிச்சவ.. மாதிரி இருந்த.‌. " என வர்ஷா ஷிவாக்ஷியின் கொசுவத்தை சரி செய்தபடி கூறிக் கொண்டிருக்க..

"என்ன.. ??? நீங்களெல்லாம்.. என்கிட்ட பேசுனேளா.. ?? என ஷிவாக்ஷி அதிர்ச்சியாக வினவினாள்..

"அடிப்பாவி..‌ நாங்க மட்டுமா பேச ட்ரை பண்ணுணோம்.. ?? அம்மா.. ஷ்ரித்திக் அண்ணா.. விக்ரம் அண்ணா.. எல்லாரும் தான்.. ஆனா நீ தான்.. என்ன ஏதுன்னு கூட கேக்கல.. " என ஜானவி புலம்பலாக கூறினாள்.‌.

"அவ்ளோ.. ஏன்.. திரும்பி கூட பார்க்கல்ல.. " என வர்ஷா முடித்து வைத்தாள்..

"அச்சோ.. சாரி.. நான் வேணும்னு பண்ணல.. திடீர்னு கல்யாணம்.. தாத்தா வந்து.. கொஞ்சம் அதிர்ச்சி ஆயிண்டேன்.. " என ஷிவாக்ஷி தன் பக்க தரப்பை விவரித்தாள்..

"கொஞ்சம் இல்ல.. ரொம்ப.. " என வர்ஷா கிண்டலடிக்க.. அவளை தோளில் இடித்து.. அமைதியாக இரு.. என ஜானவி மொழிந்துவிட்டு..
"அட.. அதுக்கு சொல்லல.. ஷிவு.. " என ஜானவி தாங்கள் கூற வந்ததை ஷிவாக்ஷி தவறாக புரிந்துகொண்டாளே என கூறினாள்...

"நான் ஒன்னு சொன்னா.. கோச்சுக்க மாட்டியே..‌ ??.." என வர்ஷா கேட்கவும்.. "ம்ஹூம்.. " என இடம் வலமாக மண்டையாட்டி கோபிக்க மாட்டேன் என கூறினாள்.. ஷிவாக்ஷி..

"நீ ஃபீல் பண்ற அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணலையே.. இது ஒன்னும் நீ தெரிஞ்சோ இல்ல வேணும்னோ பண்ணல.. உன் ஸ்ச்சுவேஷன் அப்படியிருக்கும் போது.‌.. நீ என்ன பண்ணுவ.. " என வர்ஷா கூறிக்கொண்டு இருந்தபோதே இடையே பேசவந்த ஷிவாக்ஷியை "இரு பேசி முடிச்சுடறேன்.. " என கூறிவிட்டு தொடர்ந்தாள்..

வர்ஷா.. "உன் தாத்தா கோபம் நியாயமானது தான்.. நாம வளத்த பொன்னு.. நமக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டாளே.. அப்ப கண்டிப்பா கோபம் வரும்.. இது நீ வேணும்னு பண்ணல.. ஆனா நடந்துருச்சு.. இனி மாத்த முடியாது.. பெரியவங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க.. இதுவும் கடந்து போகும்னு .. காலம் எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்கும்.. அந்த மாதிரி தான்.. இது அட்வைஸோ.. ஆறுதலோ இல்ல.. உன் மேல தப்பிலலன்னு சொல்றேன்.. அவ்வளோதான்.. " என வர்ஷா கூற கூற.. தான் எதும் வேண்டுமென்றே செய்யவில்லை என அப்போது தான் புரிய யோசனையில் ஆழ்ந்தாள்.. ஷிவாக்ஷி..

"எனக்கு வர்ஷாவ மாதிரியெல்லாம் பேச வராது.. ஆனா.. ஒன்னு.. கொஞ்சம் நாள் போனதும் தாத்தாவே சமாதானம் ஆயிடுவாங்க.. அதுவேனா உறுதி.. " என ஜானவி கூறியதும் மனதில் ஒரு மெல்லிய சாரல் அடித்தது..

"நீங்க சொல்றது நடக்குமான்னு தெரியல.. ஆனா கேக்கும் போது மனசுக்கு நன்னா இதமா இருக்கு.. தேங்க்ஸ்.. " என ஷிவாக்ஷி முகத்தில் குழப்பம் தெளிந்த உணர்வு தெரிந்தது..

ஷிவாக்ஷி "சரி .. சேலை கட்டிவிட்டதுக்கு தேங்க்ஸ்.. நா தலை வாரிட்டு வந்துடறேன்.. " என கூறியதும்..

"ஹேய்.. க்ளிப் போட்டு.. ஃப்ரீயா விடு.. இந்த சேலைக்கு அதான் நல்லா இருக்கும்" என ஜானவி கூறியதை போலவே..

ஜானவி.. ஷிவாக்ஷியின் தலைமுடியை க்ளிப்பில் அடக்கினாள்.. சில தங்க ஆபரணங்களை ஷிவாக்ஷிக்கு போட்டு விட..
வர்ஷா.. மல்லிகை சரத்தை அவளின் கூந்தலில் சூடியதும்.. பெண்களே பொறாமை படும்‌ அளவிற்கு அழகாய் மிளிர்ந்தாள்..

"ஹப்பா.. எப்படி இவ்ளோ முடியை மெயின்டேன் பண்ற.. ??" என ஜானவி ஷிவாக்ஷியின் கூந்தலின் நீளத்தை பார்த்து வினவினாள்..

"பாரு‌.. முட்டி வரைக்கும் வளத்து வைச்சிருக்கா.. உருட்டு கட்டை மாதிரி அடர்த்தியா இருக்கு.‌. " என வர்ஷாவும் ஜானவியிடம் அவளின் கூந்தலை எடுத்துக் காண்பிக்கவும்..

"ச்சு.. போதும்.. மறுபடியும் ஆரம்பிக்காதேள்.. " என இருவரின் வாயையும் கரம் கொண்டு முடினாள்.. ஷிவாக்ஷி..

"ஒரு உண்மைய சொல்லட்டுமா.. ??" என வர்ஷா.. அவளையே பார்த்துக் கொண்டே கேட்கவும்..

ஷிவாக்ஷியும்.. என்னவென ஷிவாக்ஷியும் புருவத்தை உயர்த்தி கேட்டாள்..

"உண்மையிலேயே.. மாயா எங்களுக்கு அண்ணியா வந்திருந்தா.. நாங்க இவ்ளோ சந்தோஷப்பட்டிருப் போம்மான்னு தெரியல.. அவ்ளோ சந்தோஷமா இருக்கோம்.. " என வர்ஷா மனம் முழுவதும் மகிழ்ச்சியில் இருப்பது அவளின் முகம் காண்பித்தது..

அவர்களின் கூற்றை கேட்டு.. ஷிவாக்ஷியின் முகம் சுருங்கி விட்டது..

"நீ.. ஒன்னும் கவலப்படதா.. இந்த வீட்ல எல்லாருக்கும் உன்னை பிடிச்சிருக்கு.. என்ன அத்தையும் மாமாவும் தான்.. கோபத்தில இருப்பாங்க.. அத நீ பெரிசா எடுத்துக்காத.." என ஜானவி மற்றவர்களகன் பிடித்தத்தையும்.. மாயாவின் பெற்றோர் பிடித்தமின்மையும் கூறினாள்..

வர்ஷாவும் ஜானவியும் பேச பேச.. தான் தவறு செய்து விட்டோம்.. என்றெண்ணம் வந்து குற்ற உணர்ச்சியில் உறுத்தியது.‌

கிண்டலாக.. புன்னகையுடன்
"இனி.. நாங்க உன்ன.. அண்ணின்னு தான் கூப்டனும்.. " என வர்ஷா கூறிக் கொண்டே திரும்ப.. அப்போதுதான் ஷிவாக்ஷியின் முகத்தை கவனித்தனர்..ஜானவியும் வர்ஷாவும்..

"ஹே.. சாரி.. வேணும்னு சொல்லல.. " என வர்ஷா அவளின் முகத்தை கண்டு பதற்றமாக கூறினாள்..

ஷிவாக்ஷி.. "இல்ல.. நீங்க.. சாரி சொல்லாதேள்.. ஒன்னு இல்ல.. நேக்கு.. கொஞ்சம் தனியா இருக்கவா.. " என வார்த்தைகள் தேடி தேடி பேசினாள்..

வர்ஷாவும் ஜானவியும் இருவரும் பேந்த பேந்த ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்..

ஷிவாக்ஷி மொழிந்ததும்.. வர்ஷாவும் ஜானவியும் அவ்வறையை விட்டு வெளியே வந்தனர்..

"ஹேய்.. எதுக்கு டி கல்யாணத்த பத்தி பேசுன.. ??" என்று ஜானவி வர்ஷாவிடம் மெல்லிய கோபத்தோடு கேட்டாள்..

"இல்ல.. டி.. நல்லா தான பேசுனா.. அதான்.. பேசுனேன்... " என வர்ஷா அவளிடம் காரணம் சொன்னாள்..

"இல்ல.. டி.. அந்த அதிர்ச்சியில இருந்து கொஞ்ச கொஞ்சமா வெளியே வந்துட்டு இருக்கா.. அது நீயே கெடுத்துறாத.. நாளைக்கு வேனா சரியாயிடுவா.. அப்ப பேசு.. இப்ப வேணாம்.. " என ஜானவி வர்ஷாவிடம் கதைத்த வண்ணம் அவர்கள் வேலையில் ஈடுபட்டனர்..

ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. வேலையாட்களை அனுப்பி ஷ்ரித்திக் அணிந்திருந்த ஆடையும் ஷிவாக்ஷி அணிந்திருந்த முகூர்த்த புடவையையும் நேற்று அணிந்திருந்த புடவையையும் எடுத்து வர கூறவும்.. அவர்களும் அவ்வாறே செய்தனர்..

வர்ஷாவும் ஜானவியும் வெளியே சென்றவுடன் பால்கனியில் வந்து நின்றாள்.. ஷிவாக்ஷி..

சில்லென்ற காற்றை அவளின் முகத்தை தடவியது.. ஆனால்.. ஷிவாக்ஷி அதை ரசிக்கும் நிலையில் இல்லை.. அவளின் சிந்தனையை முழுவதும் ஷ்ரித்திக்கை பற்றியே..

'நாம தான்.. அவசரப்பட்டு இந்த கன்னியாதானத்துக்கு ஒத்துக்கிட்டோமோ.. அவாளா பத்தி யோசிக்காம விட்டுட்டோமே.. இந்த கல்யாணத்துக்கு அவா எவ்ளோ ஆவலா இருந்திருப்பா.. ' என ஷ்ரித்திக்கை பற்றி எண்ணிக் கொண்டு இருந்தாள்..

அதேசமயம் தாத்தாவும் எப்படி சமாளித்துக் கொள்வார்.. என
ஷிவாக்ஷியின் எண்ணம் இப்படியிருக்க..

ஷ்ரித்திக் ராபர்டிடம் பேசிக்கொண்டு இருந்தனர்..

அவளின் கால்களை சுற்றி முயல் குட்டிகள் விளையாடிக் கொண்டிருக்க..
ஷிவாக்ஷி யோசனையில் லயித்திருக்க..

அப்போது திடீரென ஷிவாக்ஷியின் சேலையின் தலைப்பை பிடித்து இழுத்தது.. வேறு யாருமல்ல..
மூன்றரை அடிக்கும் குறையாது வளர்ந்த ருத்ராவே ..

ருத்ராவை கண்டதும்.. ஷிவாக்ஷிக்கு மெல்லிய புன்னகை அவளின் இதழ்கள் காண்பித்தது..

"என்ன.. நீ.. ?? என்னைய எப்ப எங்க பார்த்தாலும்.. தூக்கி வைச்சுக்குவ.. ?? இப்ப என்ன தூக்க மாட்ற.. ?" என கோபம் தன் மழலைக் குரலில் குழைத்து கேட்டான்.. ருத்ரா..

"சாரி.. " என ருத்ராவிடம் மன்னிப்பையும் வேண்டிக் கொண்டே ருத்ராவை தூக்கி தன் இடையில் வைத்துக் கொண்டாள்...

"ம்ம்ம்.. பரவால்ல.. பரவால்ல.." என எங்கோ பார்த்துக் கொண்டே ருத்ரா கூறிவதை பார்த்து.. புன்னகை பூத்தது.. ஷிவாக்ஷிக்கு

ருத்ராவிற்கு ஷிவாக்ஷியின் புன்னகையை பார்த்துக் கொண்டே.. "சிரிச்சா.. எவ்ளோ.. நல்லாருக்கு.. நேத்து நீ அழுதியா.. அதான்.. என் அப்பா என்கிட்ட சொல்லுவாரு.. அழுதா சரியாகும்னா.. உலகத்தில பாதி பேர் அழுதுட்டு தான் இருப்பாங்க.. அழுதா எதுவும் சரியாகாது... நாம தான் நமக்கு வந்த பிரச்சினைய ஃபேஸ் பண்ணணும்னு.. இனிமே அழுவாத‌... " என மழலை மொழியில் கூறுவதை கேட்டவள்...

"ஹாஹாஹா... " என ஷிவாக்ஷி சிரிப்பை உதிர்த்தாள்.. ஷிவாக்ஷி..

"ஹேய்... எதுக்கு சிரிக்குற.. ??" என ருத்ரா புருவத்தை உயர்த்தி கேட்டான்..

சிறு குழந்தையின் கோபத்தில் அழகை உணர்ந்தவள் ... அதை ரசிக்கலானாள்.. "ருத்துக் குட்டி பெரிய மனஷாளாயிட்டாளா.. ??" என புன்னகையின்னோட கேட்கவும்...

ஷ்ரித்திக் அறைக்குள் நுழையவும் சரியாய் இருந்தது..

ஷிவாக்ஷி ருத்துவை இடையில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவன்.. மென்நகை எட்டிப் பார்த்தது..

"டேய்.. நீ.. இங்கயா இருக்க.‌. ? உன்ன அங்க நேஹா தேடிட்டு இருக்கா.. ?" என ஷ்ரித்திக் ருத்ராவை பார்த்து வினவினான்..

"ஹ்ம்ம்ம்ம்ம்... " என ருத்ரா ஷிவாக்ஷியை விட்டு இறங்கி... நேரே ஷ்ரித்திக்கின் முன் வந்தவன்..

ருத்ரா ஷ்ரித்திக்கை ஏற இறங்க பார்த்து விட்டு.. ஷிவாக்ஷியை ஒரு தரம் சிரிப்புடன் பார்த்தவன்.. மீண்டும் ஷ்ரித்திக்கை ஏற இறங்க பார்த்தவனை..

"டேய்... என்ன... ??" என ஷ்ரித்திக்கும் ருத்ராவின் பார்வையை கண்டு பொய் கோபத்தோடு கேட்டான்..

ஷிவாக்ஷியையும் ஷ்ரித்திக்கையும் மீண்டும் பார்த்து விட்டு..
"ஹ்ம்ம்.. குரங்கு கைல பூமாலை... " என கைகளை மேலே விரித்து காண்பித்துவிட்டு சலித்துக் கொண்டே நடக்க..

புரியாது யோசித்த ஷ்ரித்திக்கிற்கு மெதுவாக விளங்க.. ருத்ரா திரும்பி ஷ்ரித்திக்கை பார்க்கவும்.. ஷ்ரித்திக் ருத்து குட்டியை துரத்துவதை போல பாவனை செய்யவும்.. கொக்கலிக்கா காண்பித்து ஓடினான்.. ருத்ரா..

ருத்ராவின் செய்கையில்
"ஹாஹாஹா... " என ஷிவாக்ஷி முத்துக்கள் கொட்டிவிடுவதை போல வெடித்து சிரித்தாள்..

ஷ்ரித்திக் அவளின் புன்னைகையை கண்டு ரசிக்கலானான்.. ஷ்ரித்திக்கின் மனம் இலகுவானாது..

ஷ்ரித்திக் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள்.. சிரிப்பை மட்டுப் படுத்தினாள்.. ஷிவாக்ஷி

ஷிவாக்ஷியிடம் "கிளம்பலாமா..‌ ??" என வினவிய.. ஷ்ரித்திக்கிற்கு மறுமொழியாய் தலை குனிந்த நிலையில்.. ம்ம்ம் என கூறியதும்..

"வா.. " எனக் கூறி ஷிவாக்ஷியை தன்னுடன் அழைத்துச் சென்றான்.. ஷ்ரித்திக்..

வரவேற்பரையில் அனைவரும் தங்கள் இல்லத்திற்கு செல்ல தத்தம் தயாராக இருந்தனர்..

யாதவனும் சமீராவும்.. கோபத்தில் உளன்ற வண்ணமிருந்தனர்..

"என் பொன்ன பத்தி யாராவது கவலப் படறாங்களா..‌ ??" என யாதவன் தன் மனைவி சமீராவிடம் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்...

மாயாவை நேற்றைய பொழுதிலிருந்து காணாததால்.. அப்பதற்றம் அவர்களின் கண்களில் தெரிந்தது.. ஆனால் இக்குடும்பத்தில் யாருக்கும் அக்கவலை இல்லாததை போலிருப்பதை கண்டு அதை கோபமாக வெளிப்படுத்தினர்..

"என்னம்மா.. உன் புருஷன் எதுக்கு கத்திட்டு இருக்காரு.. ??" என தாத்தா அமரேந்திரர் வினவினார்..

"என்னப்பா.. என் புருஷன் பொண்ண காணாமேன்னு பதறது.. உங்களுக்கு கத்தற மாதிரி இருக்கா.. ??" என சமீரா தன் தந்தையிடம் ஆத்திரம் கொண்டவள்.. மீண்டும் தொடர்ந்தார்..

"என் புருஷன் சொல்றதும் சரிதான்.. என் பொண்ணு பத்தி உங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது அக்கறை இருக்கா.. ?? எங்க.. அது இருந்திருந்தா.. தேடி இருந்திருப்பீங்க.. உங்களுக்கு உங்க பேரன் தான முக்கியம்.. நாங்க எல்லாம் எம்மாத்திரம்.. ??" என சமீரா கத்திக் கொண்டு இருக்கும் போதே.. ஷ்ரித்திக்கும் அவன் பின்னோடே ஷிவாக்ஷியும் நுழைந்தனர்..

"அன்னிக்கு ஷ்ரித்திக் காணாம போனதுக்கு அப்படி பதறுனீங்க... இப்ப என் பொண்ணு காணாம போயிருக்கா... அதுவும் பொம்பள பிள்ள.. யாராவது கொஞ்சமாவது‌... பதறுனீங்களா.. ?? ஏன்பா அவளும் உங்க பேத்தி தான.. ??" என்று தன் ஆத்திரத்தை கொட்டித் தள்ளினார்..

"மாயா என் பேத்திதாம்மா.. என்ன ஷ்ரித்திக் பாத்துக்குவான்னு நாங்க அமைதியா இருந்தோம்..‌ " என்று நடுவே பேசிய தாத்தாவின் வார்த்தைகளை சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. சமீரா

"என்ன.. ஷ்ரித்திக்.. ?? உன் கல்யாணம் முடிஞ்சு.. முதலிரவெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா.. ?? இல்ல ஏதாவது பாக்கி இருக்கா..‌ ??" என்று சமீராவின் ஏளனம் கலந்த கோபத்தை பார்த்தவர்கள்.. அனைவரும் ஒருவித பயத்திலே இருந்தனர்..

தாத்தாவின் செல்லமகள் என்பதாலே சமீராவின் சகோதரர்கள் ராஜ தேவனும், தேவ தேவனும் இருவருக்குமே சிறிதளவில் பயம் துளிர்விட்டது..

ஷ்ரித்திக் அமைதியாக அதே சமயம் கூர்ந்து பார்ப்பதை கண்டு... சமீரா.. "என்ன ஷ்ரித்திக்.. ஒன்னுமே பேசமாட்டிகிற.. ??" என்றார்..

மார்பின் கூறுக்கே கைகளை கட்டிக்கொண்டு ..
"இல்ல.. எப்ப நீங்க பேச்ச முடிப்பீங்கன்னு பார்த்தேன்.. நீங்க பேச்ச முடிச்சிட்டிங்களா.. ?? இல்ல இன்னும் ஏதாவது பேசனுமா.. ?? நா பேசலாமா.. ??" என ஷ்ரித்திக் ஏளனமாக அதேசமயம் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்..

ஷ்ரித்திக்கின் கோபத்தை பார்த்து அவனை விட்டு விழியகலாது பார்த்தாள்.. ஷிவாக்ஷி..

ஷ்ரித்திக்கின் கோப மொழிகளை கேட்டு மாயாவின் தாய் சமீரா.. அமைதியானார்.. ஷ்ரித்திக்கின் கோபம் அவரை அமைதியாக இருக்க செய்தது..

ஷ்ரித்திக்கின்.. ஏளனப் புன்னகையால் விரிந்திருந்த இதழ்கள் சுருங்கியது..

"ராபர்ட்.. " என மீண்டும் வரவேற்பறையை அதிரும்படி கத்தியதில் ஷிவாக்ஷி பயந்து போனாள்..

ஷ்ரித்திக் ராபர்டை அழைத்தவுடன் மாயாவை அழைத்து வந்தான்.. ராபர்ட்..

ராபர்ட் "ஜீ.. " என கூறி மாயாவை அக்குடும்பத்தின் முன் நிறுத்தினான்..

மாயாவை கண்டதும் யாதவனும் சமீராவும் அவளை அணைத்துக் கொண்டனர்.. மொத்த குடும்பமும் அவளை சூழ்ந்து கொண்டது.. இந்திரகவியும் அவரின் மகன் ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும் தவிர..

"எங்கம்மா..போன.. ?? உன்ன பாக்காம அப்பா தவிச்சு போய்டேன்ம்மா.. " என யாதவன் கரகரத்த குரலில் மொழிந்தார்..

"ஏய்.. எங்க.. டி.. போன.. நீ இல்லாததுனால.. கண்ட கண்ட.. நாயெல்லாம்.. நீ இருக்க வேண்டிய இடத்தில இருக்கு.. " என சமீரா கோபத்தில் வார்த்தைகளை கொட்டினார்..

ஷ்ரித்திக்கிற்கு அவரின் மொழிகள்.. ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலிருந்தது.. ஆயினும்.. அமைதி காத்தான்..

தன் எஜமானின் கோபத்தை கண்டவன்.. மாயாவை பற்றிய உண்மைகளை கூற விழைந்தான் "ஜீ.. நா மாயா பத்தி.. ??" என ராபர்ட் இழுக்கவும்.. அவனை கை உயர்த்தி அமைதிபடுத்தினான்.. ஷ்ரித்திக்..

வசவு மொழிகள் நிச்சயம் தன்னை சாறும் என்று எதிர்பார்த்திருந்தமையால்.. ஷிவாக்ஷிக்கு எதுவும் தெரியவில்லை.. ஆனாலும் மனதின் ஓரத்தில் சிறு வலி எழத்தான் செய்தது..

"ஏய்.. சமீரா வார்த்தைய அடக்கி பேசு.. " என இந்திரகவி தன் மருமகளை பேசுவதை பொறுக்காது.. கத்தினார்..

"போதும்.. மதினி.. நீங்க பேசாதீங்க.. " என சமீரா தன் அண்ணியிடம் கத்தினார்..

ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் அருகிலிருப்பதை பார்த்தவள்.. 'என்ன.. ஷ்ரித்திக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. ??' என மனதில் அப்படியே கேட்டாள்.. மாயா.. நடந்தவற்றை மாயாவின் அம்மா சமீரா.. அச்சு பிசகாமல் கூறுவதை கேட்டு மாயாவிற்கு மிகுந்த கோபம் உண்டானது..

ஆனால்.. தன் கோபத்தை காண்பிக்க முடியாத நிலையில் இருக்கிறாள்..

"நீ.. இருக்க வேண்டிய இடத்தில இன்னிக்கு எவளோ ஒருத்தி இருக்கா.. என்னால அத தான் ஏத்துக்க முடியல.. " என யாதவன் எரிச்சலாக மொழிந்தார்..

மாயாவின் பெற்றோர்கள் வசவும் மொழிகளை கேட்டு குடும்பத்தில் அனைவருக்குமே கோபம் உண்டானது..

"நான் என் பொண்ணுக்கு.. பரம்பரை நகைங்கள கேக்கும் போது.. தரல.. ஆனா.. எவளோ ஒருத்திக்கு பரம்பரை நகைகள போட்டுவிட்டிருக்கீங்க.. தெரியாம தான் கேக்கறேன்.. அப்படியென்ன என் பொண்ணு அவ்ளோ தாழ்ந்துட்டா.. ??" என சமீரா மேலும் ஆத்திரம் குறையாது கத்த..

அப்போது தான் மாயாவுக்கு .. ஷிவாக்ஷிக்கு பரம்பரை நகைகளை தந்ததிருப்பது.. தெரிந்தது.. கோபக் கனல் அவளுள் கொழுந்து விட்டு எரிந்தது..

"நீ இருக்க வேண்டிய இடத்தில இவள பாக்கும் போது தான்.. ஆத்திரமா வருது.. இவள.. " என கோபத்தில் பற்களை கடித்தவர்.. ஷிவாக்ஷியை அடிக்க நெருங்கினார்...

தன்னை அடிக்க போவது உறுதி என நினைத்து என்ன செய்வது என அறியாது ஷிவாக்ஷியின் கண்கள் பயத்தில் மூடிக்கொள்ள.. அவளின் கரங்கள் அன்னிச்சையாய்.. ஷ்ரித்திக்கின் கரங்களை பற்றியது..

'என்ன.. நேக்கு இன்னும் அடி விழல.. ' என விழித்துப் பார்க்கவும்.. கண்கள் விரிய மெலிதாய் அதிர்ந்தாள்..

"போச்சு.. என் செல்லத்த அடிக்கப் போறாங்க.‌‌. ??" என ருத்ரா ஆராவிடம் கூறவும்..

தியா அவனின் பெல்ட்டை சத்தமே இல்லாமல் உருவினாள்..

ருத்ரா அணிந்திருந்த காற்சட்டை கீழே விழுந்தது..

மெதுவாக ருத்ராவை திரும்பி பார்த்த ஆரா.. "பப்பி சேம்.. " என கண்களை முடி கொள்ள..

ருத்ரா "என்ன இந்த மாமன பாத்து வெக்கமா.. ?? கண்ண முடிக்கிற.. " என ஆராவிடம் காலரை தூக்கி கேட்கவும்..

"டேய்.. எடுமை.. கீழ பாது.. " என ரித்துல் ருத்ராவின் மண்டையை தட்டவும்..

ருத்ரா "கீழ.. என்ன... ??" என ரித்துலிடம் பேசிக் கொண்டே கீழே பார்க்க..

தன் மானம் கப்பலேருவதை பார்த்து பதறியடித்து தன் காற்சட்டையை எடுத்து பிடித்து கொண்டான்.. ருத்ரா..

"அய்யோ.. என்ற மானம் போச்சு மருவாதை போச்சு.. எல்லாம் போச்சு.. " கொங்கு மொழியில் புலம்பிக் கொண்டிருந்தான்.. ருத்ரா..

தியாவும் ஆராவும்.. ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்..

அதேசமயம்..

ஷிவாக்ஷியை அடிக்க ஓங்கிய தன் அத்தையின் கரத்தை பற்றியிருந்தான்.. ஷ்ரித்திக்..

ஷ்ரித்திக்கின் கண்களில் அத்துனை ஆத்திரம்.. கண்கள் சிவக்க தன்னுடைய அத்தையை உறுத்து விழித்தான்..

"பார்ரா.. பாட்டி கையவே பிடிச்சுட்டான்.. ஷ்ரித்திக்.. பெரிய ஆளு தான்.. " என காற்சட்டை அவிழ போகவும்.. அதை பிடித்து கொண்டே.. ரித்துலிடம் பேசிக்கொண்டிருந்தான்..

ஷ்ரித்திக் உறுத்து விழிப்பதை கண்ட ஷிவாக்ஷி பயந்து போனாள்.. இவரின் கண்களுக்கு சக்தி இருந்திருந்தால் எரித்திருப்பார் போலும்.. என்றவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

விக்ரம்.. 'தைரியம்.. பங்கு ஒரு நாலு போட போடு.. ' என தன் மனதில் நினைத்துக் கொண்டான்‌‌.‌.

சமீராவின் கைகளை முறுக்கிய படி.. "யார் மேல.. கைய வைக்க வரீங்க.. அவள யாருன்னு நினைச்சீங்க.. ஷீ இஸ்.. மிஸஸ். ஆரிஷ்.. என்னோட பொண்டாட்டி.. இந்த நாயக் குடும்பத்தோட மருமகள்.. எல்லாத்துக்கும் மேல.. இனி இந்த வீட்ட ஆளப்போற மகாராணி.. அவ மேல கைய வைக்கறதுக்கு.. எனக்கே உரிமையில்ல.. என் கண்ணு முன்னாடியே அடிக்க வரீங்க.." என கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க கத்தினான்.. ஷ்ரித்திக்..

ஷ்ரித்திக்கின் ஆத்திரத்தில் மாயாவின் அம்மா சமீரா மட்டுமன்றி மொத்த குடும்பமும் பயத்தில் நடுங்கினர்.. ஷ்ரித்திக்கை இத்துனை ரௌத்திரமாக யாரும் கண்டதில்லை..

ஆதலால்.. ஷ்ரித்திக்கை நெருங்க பயந்தனர்.. தொலைவில் இருந்தபடியே.. சமீராவின் கரங்களை விடு என குடும்பமே கூறியது.. ஆனால்.. அதை கேட்கும் நிலையில் ஷ்ரித்திக் இல்லை..

இதை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாக்ஷிக்கு.. தன்னால் தான் இத்தனையும் என நொந்தாள்..

ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் கரத்தைப் பற்றி.. சமீராவை விடுமாறு போராடிக் கொண்டிருந்தாள்..

தன்னவளின் மொழி.. செவியை அடைந்தாலும்.. அதை செயல்படுத்தும் எண்ணமில்லை.. ஷ்ரித்திக்கிற்கு..

ஷ்ரித்திக் தன் கையை முறுக்குவதால்.. வலி ஏற்பட.. அதை மறைத்த வண்ணமே
"ஷ்ரித்திக்.. எனக்கு.. உன் மேல கோபமில்ல.. உனக்கு விருப்பமில்லாம.. கட்டாயப்படுத்தி தான இந்த கல்யாணம் நடந்துச்சு.. ??" என சமீரா.. பயந்து கொண்டே கூறினார்..

ஷ்ரித்திக்.. "சோ.. வாட்.. ?? இப்ப இவ என்னோட பொண்டாட்டி.. எனக்கு உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு.. அத நீங்களே கெடுத்துக்காதீங்க.. ?? எனக்கு நீங்க என்ன மரியாதைய தரீங்களோ.. அதே மரியாதைய என் பொண்டாட்டிக்கும் தரனும்.. தரனுமில்ல.. தந்துதான் ஆகனும்... " என சமீராவின் கரத்தை உதறி.. எச்சரிக்கையும் கட்டளையும் ஓரே சமயத்தில் விடுத்தான்..

தன்னவளின் நெடுநேரமாய் கெஞ்சல் மொழி விடுப்பது பொறுக்காது.. சமீராவின் கரத்தை உதறினான்.. ஷ்ரித்திக்..

ஷ்ரித்திக்கின் உதறியதில் இரண்டடி பின்னால் சென்றார்.. முறுக்கியதில்..
சமீராவின் கரம் கன்றிப் போனது.. வலியில் தன் கைகளை உதறிக் கொண்டு.. ஷிவாக்ஷியை பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தார்..

சமீரா.. "என்ன அண்ணா.. உன் பையன பேச விட்டு வேடிக்கை பாக்குற.. ??" என தன் கோபத்தை எப்படி காண்பிப்பது என தெரியாமல்.. சகோதரனிடம் திருப்பினார்..

"என்னம்மா.. பண்றது.. ?? அந்த பொண்ணு மேல கை வைக்க போனது.. உன் தப்பு.. நாங்க என்ன பண்ண முடியும்.. ??" என ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன்.‌.. எந்தவோரு சலனமுமின்றி மொழிந்தார்..

தன் சகோதரனின் மொழிகள்.. இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியதே ஒழிய மட்டுப்படுத்தியதில்லை..

ஷ்ரித்திக்.. மாயாவை நெருங்கினான்.. "எல்லாரும் மாயா எப்படி காணாம போனான்னு யாருமே கேக்கலையே‌... ??" என அனைவரிடமும் மொழிந்து விட்டு.. "உங்க.. அப்பாவி பொன்னு.. அப்பாவி அப்பாவி.. எப்படி காணாம போனான்னு தெரியுமா.. ??" என யாதவனின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டான்..

மாயாவின் அருகில் சென்ற ஷ்ரித்திக்.. "மாயா.. சொல்லுமா.. அட சொல்லுமா.. ஏன் தயங்குற.. எல்லார்கிட்டயும் தைரியமா உன்ன கடத்துனத பத்தி சொல்லும்மா.. சொல்லுமா.. சொல்லு.. ஏய்.. சொல்லு டி.. ??" என தன் குரலை ஏற்ற இறக்கத்தோட ஏளனமாக ஆரம்பித்து கோபத்தில் கத்தினான்... ஷ்ரித்திக்..

"ஷ்ரித்திக்..அ.. அ... து.. அ..து வ.. ந்.. து.. ?? " என பயத்தில் குரல் தந்தியடித்தது.. மாயாவிற்கு..

ஷ்ரித்திக் கூர்மையாக அதேசமயம் கோபத்தில் மாயாவை எரிப்பதை போல பார்த்தவன்.. ஒரு கணம் மாயாவை பார்த்த ஷ்ரித்திக்.. நெற்றியை தேய்த்து கொண்டவன்.. பளார் என மாயாவை அறைந்தான்..

ஷ்ரித்திக் அடித்ததின் தாக்கத்தில் கண்ணத்தை பிடித்துக் கொண்டே கீழே விழுந்தாள்.. மாயா..

அவளின் கண்ணத்தில் ஷ்ரித்திக்கின் ஐ விரல் பதிந்து சிவந்து பழுத்து போனது..

தன் மகளை அடித்ததை கண்ட பெற்ற மனம் பற்றியெறிந்தது.. யாதவனிற்கு..

"ஷ்ரித்திக்.. என் கண்ணு முன்னாடியே என் பொண்ண அடிக்கறதுக்கு.. உனக்கு எவ்ளோ.. தைரியம்.. ??" என கோபத்தில் ஷ்ரித்திக்கை அடிக்க கையோங்கினார்..

ஷ்ரித்திக் கண்கள் சிவக்க பார்த்த பார்வையிலேயே தன் கரத்தை இறக்கினார்.. யாதவன்..

மாயா விஜய் என்ற ஒரு வாலிபனை காதலித்து ஏமாற்றியதையும்.. ஆதலால்.. விஜய் மாயாவை கடத்தியது என அனைத்தையும்..
ராபர்ட் மொத்த குடும்பத்திடமும் கூறினான்..

அனைவரின் முகத்திலும் அதிர்வலைகள் பரவியது.. மாயா இப்படிபட்டவளா என முகத்தை சுளித்தனர்..

தன்னை அனைவரும் கோபமாகவும் அருவருப்பாக பார்ப்பதை அவமானமாக உணர்ந்தாள்.. மாயா

இவளுக்காகவா.. இவ்வளவு சண்டையிட்டேன்.. வாய்க்கு வந்தபடியெல்லாம்.. அனைவரிடமும் பேசினேன்.. என தன் மகளை எண்ணி .. தன்னை நொந்து கொண்டார்.. சமீரா..

ஷ்ரித்திக் தன் பார்வையை மாயாவிடம் திருப்பினான்.. "எப்படி என்னைய ஏமாத்த நெனச்ச ?? என்னென்ன டயலாக் பேசுன.. ?? என்ன பாத்த உனக்கு இளிச்சவாயன் மாதிரி தெரியுதா.. ??" என ஷ்ரித்திக் உறுத்து மாயாவை உறுத்து நோக்கினான்..

ஆனால்.. மாயா ஷ்ரித்திக்கை மனதார காதலித்து தான் வந்தாள்.. நடுவில் தோழிகளின் உசுப்பும் வார்த்தைகளால்.. விஜயின் காதலை ஏற்றுக் கொண்டதால் வந்த வினையை எண்ணி தன்னை நொந்தாள்..
"இல்ல.. ஷ்.. ஷ்.. ஷ்ரித்திக்.. நா.. நா.. உன்ன தான்.. லவ்.." என மாயாவை முடிக்க விடாமல்..

கோபத்தில் ஷ்ரித்திக்..
" நீ அந்த பையன லவ் பையன.. ஏன் ப்ரேக் அப் கூட பண்ணிருக்கலாம்.. ஏன் நியாயமான காரணங்கள் இருந்திருந்தா சந்தோஷப்படலாம்.. ஆனா ஓருதனை லவ்ங்கற பேருல ஏமாத்திருக்க.. கேவலம் சொத்துக்காகவும்.. பரம்பரை நகைக்காகவும்.. ச்சை.. வெக்காமயில்ல.." என வார்த்தைகளை கடித்து துப்பினான்..

ஷ்ரித்திக்கின் வார்த்தைகள் மாயாவிற்கு மிகுந்த அளவில் கோபம் உண்டானது.. அதை வெளிப்படுத்த முடியாது ‌‌ தலை குனிந்திருந்தாள்.. மாயா..

ஷ்ரித்திக் .. "உங்க.. பொண்ணு மேல தப்ப வைச்சிட்டு.. என் பொண்டாட்டிய அடிக்க வரீங்க.. ??" என தன் சமீரா அத்தையிடம் கோபமாக மொழிந்தவன்..

யாதவனிடம் திரும்பிய ஷ்ரித்திக்.. "உங்க.. பொண்ண என்ன வளத்து‌‌.. வைச்சிருக்கீங்க.. செல்லம் செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கீங்க.. " என கடுகடுத்தான்..

"ஷ்ரித்திக்.. மன்னிச்சுக்கோ.. நீ என் அப்பா அம்மாவ.. அவமானம் படுத்தறியோன்னு தோணுது.." என மகேந்திரன் தன் பெற்றோருக்கு ஆதரவாக பேசிய .. அதேசமயம் நேஹாவும்..

"ஷ்ரித்திக்.. இப்படி கேக்கறத்துக்காக மன்னிச்சுக்கோ .. என் அப்பா அம்மா பொண்ண காணாம்ன்னு பதறுனாங்க.. அதுக்காக.. அவங்கள அவமானம் படுத்தறத.. எங்களால ஏத்துக்க முடியாது.. " என அமைதியாக தன் கோபத்தை தெரிவித்தாள்.. நேஹா..

"இப்படி பேசறத்துக்கு.. என்னையும் மன்னிச்சுக்கோ.. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. நான் உங்க அப்பா அம்மாவ அவமானப் படுத்தற மாதிரி ஒரு வார்த்தை பேசியிருப்பேனா.. ??" என இருவரிடமும் வினவினான்..

மகேந்திரன் மற்றும் நேஹாவினாலும் பதில் கூற முடியாது போயிற்று.. ஏதாவது கூறியிருந்தால் தானே சொல்ல முடியும்.. ஷ்ரித்திக் தான் அவ்வாறு தூற்றி பேசவில்லையே.. மாறாக கோபம் தானே கொண்டான்..

இருவரையும் மாறி மாறி பார்த்து கேள்வி கேட்டான்..
"உன் அம்மா என் பொண்டாட்டிய அடிக்க வருவாங்க.. உன் தங்கச்சி என்னைய ஏமாத்த நினைப்பா.. உன் அப்பா இதெல்லாத்துக்கும் ஒத்து ஊதுவாரு.. இதை ஏன் கேக்கறது.. எனக்கு தப்பா தோணல.. இதுக்காக எல்லாம் என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. பரவால்ல.. அப்பா அம்மாக்காக பேச வந்ததது சந்தோஷமா தான் இருக்கு.." என ஷ்ரித்திக்கின் வார்த்தைகள் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தது..

"மாயா.. அவங்க சொல்றதெல்லாம்.. " என அவமானத்தில் கரகரத்து வினவிய யாதவனிற்கு மறுமொழியாய்..மாயா தன் தந்தையிடம் தலை அசைத்து உண்மையென கூற.. உடைந்து போனார்..

"கடைசி பொண்ணுன்னு.. செல்லம் கொடுத்து வளத்தேன்ல.. என்ன செருப்பால அடிச்சுக்கனும்.." என யாதவன் தன்னை நொந்து கொண்டார்..

"எல்லாரும் மன்னிச்சிடுங்க.. என் பொண்ணு பண்ண தப்புக்கு நா மன்னிப்பு கேட்டுக்கறேன்.. " என அனைவரிடமும்.. கூனி குறுகி மன்னிப்பை யாசித்தார்.. யாதவன்..

சமீரா.. தன் மகளை பற்றி தெரிந்ததும்.. ஒற்றை வார்த்தைக் கூட பேசவில்லை.. தன் கணவரை அனைவரின் முன் கூனி குறுக வைத்துவிட்டாளே.. என எரித்து விடுவது போல பார்த்தார்..

"இதென்ன.. மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம்.. பேசறீங்க.. சின்ன பொண்ணு.. சரியாயிடுவா.. வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்.. " என தாத்தா அமரேந்திரர் அவரை சமாதானம் செய்தார்..

தாத்தா மட்டுமன்றி அனைவரும் அவரை சமாதானம் செய்ய.. யாதவனும் சற்று தன்னை சமன் செய்து கொண்டார்..

ஷிவாக்ஷியோ.. ஷ்ரித்திக்கையே பே என பார்த்து கொண்டிருந்தாள் ‌‌.. இத்துனை கோபம் கொள்வாரா.. ?? இவரை பார்த்து குடும்பம் மொத்தமும் நடுங்கியதே.. ?? என இவளின் எண்ணம் தறிக் கெட்டு ஓடியது..

மொத்த குடும்பமும்.. சென்னை செல்ல ஆயத்தமாயினர்..

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் அருகில் வந்து.. "கிளம்பலாமா.. ??" என்க.. அவளின் தலை தானாய் ஆடியது..

விக்ரம் ஷ்ரித்திக்கிடம் வந்து பேசியவன்.. ஷிவாக்ஷியின் அருகே வந்தான்..

"ஷிவு.. நாம சென்னைல மீட் பண்ணலாம்.. " என விக்ரம் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஷிவாக்ஷி பேச விழைய..

"இரு.. இப்ப.. வேணா.. நாம நாளைக்கு நல்லா பேசலாம்.. எனக்கு கொஞ்சம் அவசர வேலை.. சோ .. நா சீக்கிரமா போகனும்.. பொறுமையா பேசிக்கலாம்.. ஹ்ம்ம்ம்ம்.. " என விக்ரம் ஷிவாக்ஷியிடம் கூறிவிட்டு விரைவாக கிளம்பினான்..

அனைவரும் சென்னையில் உள்ள தங்கள் இல்லத்திற்கு அவரவர் மகிழுந்தில் புறப்பட்டனர்..

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை தன்னுடைய ஃபெராரி காரின் கதவை திறந்து உள்ளே அமர வைத்து.. காரை சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்து மகிழுந்தை இயக்கினான்..

முக்கிய சாலையிலிருந்து மகிழுந்து.. நெடுஞ்சாலையை அடைந்தது.. அதற்குள்.. ஷிவாக்ஷியின் மனதில் ஆயிரம் யோசனைகள்.. பல தயக்கங்கள்.. ஷ்ரித்திக்கிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது..
என்றே..

வரும் வழியில் ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியை கவனித்து தான் வந்தான்.. ஏதோ பேச விழைகிறாள்.. ஏன் அவள் பேசட்டும் என காத்திருப்பதிற்கு நாமே பேச்சை ஆரம்பிக்கலாம் என ஷ்ரித்திக்கும்.. "நா.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. " என தன் பேச்சை ஆரம்பிக்க போக..‌ என்ன தன் குரல் பெண் குரலாக ஒலிக்கிறதே.. என நினைத்த ஷ்ரித்திக்கிற்கு.. அது ஷிவாக்ஷியின்‌ குரல் என புரிந்தது..

"நா உங்.. உங்க கி... கிட்ட கொ.. கொஞ்சம் பேசனும்.. " என திக்கி திக்கி.. ஒரு வழியாக பேச்சை ஆரம்பித்தாள்...

"ஹப்பா.. மேடம் ஒருவழியா பேசிட்டீங்க.. " என ஷ்ரித்திக் கிண்டலடித்தான்..

ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கை திரும்பி ஏற இறங்க ஒர் பார்வை பார்த்தாள்..

"சரி.. பேசனும்னு சொன்னியே.. பேசு.. " என ஷ்ரித்திக் வண்டியை ஓட்டிக் கொண்டே கேட்டான்..

ஷிவாக்ஷி.. தன் விரல் சொடுக்கு எடுத்துக்கொண்டே நெளிந்தாள்..

அதைப் பார்த்த ஷ்ரித்திக்கிற்கு தன் கனவிலும் இதேபோல் நெளிந்ததை எண்ணி இதழ்கள் விரிந்தது.. தன்னுள் சிரித்துக் கொண்டான்..

"ஹேய்.. ஃப்ரியா இரு.. பயப்படாத.. எதுவா இருந்தாலும் மனசவிட்டு பேசு.. " என ஷ்ரித்திக் அவளை இலகுவாக்க..

ஷிவாக்ஷியும் தன் தயக்கத்தை சிறிது விடுத்து.. "அது.. வந்து.. என்ன மன்னிச்சிடுங்கோ.. " என தயங்கி தயங்கி கூறினாள்..

இடையில் பேச வந்த ஷ்ரித்திக்கை கையமர்த்தினாள்.. "இருங்கோ.. நா பேசி முடிச்சுடுறேனே.. " என கூறிவிட்டு ஷிவாக்ஷி தொடர்ந்தாள்..

"நா.. நீங்க.. பேச வரச்ச எல்லாம் நா கவனிக்காம போயிட்டேன்.. நேக்கு தெரியல.. அதிர்ச்சில .. எல்லாம்.. ம்ப்ச்.. அதுக்காகவும்.. அப்பறம்.. நா உங்க வாழ்க்கைல நுழைஞ்சதுக்கும்.. நேக்கு தெரியும்.. உங்களுக்கு இந்த கன்னியாதானம்.. பிடிச்சிருக்காது.. நீங்க நிறையவே கனவு கண்டு இருப்பேள்.. என்னால பாழாயிடுத்து.. அதுக்காக மன்னிச்சிடுங்கோ.. நேக்கு அப்ப இருந்த அதிர்ச்சியில அஷடு மாதிரி .. அம்மா வேற தற்கொலை அது இதுன்னு.. அதிர்ச்சி வேற.. " என ஷிவாக்ஷி கூறிக்கொண்டு இருக்கும் போதே..

மெலிதாய் அதிர்ந்த ஷ்ரித்திக்.. "என்ன.. தற்கொலையா.. ??" என காரை சட்டென ப்ரேக்கை அழுத்தி.. வண்டியை நிறுத்திவிட்டு.. மீண்டும் இயக்கினான்..

"ஆமா.. அம்மா.. உங்ககிட்ட சொல்லலையா.. ??" என ஷிவாக்ஷி நடந்த அனைத்தையும் அப்படியே கூறினாள்..

நடந்ததைக் கேட்டு.. 'அதான பாத்தேன்.. ஷிவாக்ஷி எப்படி ஒத்துக்கிட்டான்னு.. ' என தன் மனதில் நினைத்துக் கொண்டான்.‌.. ஷ்ரித்திக்

"நேக்கும்.. அந்த நாழில என்ன செய்றதுன்னு தெரியல.. ?? மறுபடியும்.. தூக்கு போடறேன்னு அவா எந்திரிச்சாளா.. ?? அதான்.. நேக்கு புத்தி மட்டு.‌. அவா இப்படி பண்றான்னு வெளிய வந்து சொல்லிருந்திருக்கனும்.. நா அவா தூக்கு போடறத பார்த்ததே.. நேக்கு படபடன்னு வந்துடுத்தா.. நேக்கு யோசிக்கக் கூட நாழியில்லாமா போயிடுத்து அதான்.. மன்னிச்சிடுங்கோ.." என ஷிவாக்ஷி தன் கூறவந்ததை மொத்ததையும் கூறி முடித்தாள்..

ஷ்ரித்திக் "இங்க.. பாரு.. வார்த்தைக்கு வார்த்தை.. மன்னிப்பு கேக்காத.. நீ ஒரு தப்பும் பண்ணல.. அம்மா உன்னை வற்புறுத்தி இருக்காங்க.. யோசிக்க கூட விடல.. நீ எதுக்கு மன்னிப்பு கேக்கற.. ??" என ஷ்ரித்திக் தன்மையாகவே கூற நினைத்தாலும்.. அவனின் குரல் சிறு கோபத்தை காட்டியது..

"அவா என்ன தப்பு பண்ணுனா.. ?? அவா இடத்தில யாரிருந்தாலும்..‌ இப்படி தான் பண்ணியிருப்பா.. எங்க தான் பிள்ளைக்கு எதுனா ஆயிடுமோன்னு பயந்துட்டா.. ??" என ஷிவாக்ஷி இந்திரகவிக்கு பரிந்து வந்தாள்..

தன் தாயின் மேல் தவறிருந்தும் விட்டு கொடுக்காமல் பேசுகிறாளே.. என எண்ணி சிரித்துக் கொண்டான்.. ஷ்ரித்திக்..

"அப்படி பார்த்தா.. நானும் தான் மன்னிப்பு கேக்கனும்.. நா அப்பயே கல்யாணத்த நிறுத்தி இருந்தேன்னா.. உனக்கு இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது இல்ல.. ?? நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. " என ஷ்ரித்திக்கும் மன்னிப்பை யாசித்தான்..

"அச்சோ.. என்ன.. இப்படி.. நீங்க ஒரு தப்பும் பண்ணல.. " என ஷிவாக்ஷி கூறிக்கொண்டு.. மீண்டும் தொடர்ந்தாள்..

"நேக்கு.. இன்னும் ஒரு க்வோஷின் கேக்கனும்.. ??" என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் வினவ..

ஷ்ரித்திக்.. "ம்ம்ம்ம்.. தாராளமா கேளு.. " என ஒப்புதல் அளித்ததும்..

"இல்ல.. இப்ப நா.‌. உங்க கூட வர்றது.. சரியா தப்பா.. ??" என ஷிவாக்ஷி தயக்கத்தினோடே இழுக்கவும்..

ஷிவாக்ஷியின் வார்த்தைகள் அவனுக்கு நெருஞ்சி முள்ளாய் குத்தியது..
"ஏன்.. இப்படியோரு கேள்வி.. ஷிவு.. " என ஷ்ரித்திக் குரல் தழுதழுத்தாலும்.. அதை காண்பிக்காது.. கேட்டான்..

"நேக்கு தெரியும்.. உங்களுக்கு இந்த கன்னியாதானத்துல இஷ்டம் இல்ல.. அதான் கேட்டேன்.. அதுவும் இல்லாம.. நீங்க பெரிய தனக்காரர்.. நா உங்களையும்.. அம்மாவையும் நா மயக்கிட்டதா.. இந்த ஸ்ருஷ்டி தப்பா பேசும்.. " என ஷிவாக்ஷி கூறியதும்..

ஷிவாக்ஷி கூறியதை
மென்நகை உதித்தது.. ஷ்ரித்திக்கிற்கு..

"இங்க.. பாரு .. ஷிவு.. நா வீட்ல சொன்னது தான்.. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. நீ என்னோட பொண்டாட்டி ஆயிட்ட.. இந்த உலகம் இப்படி பேசும் அப்படி பேசும்னு பாக்காத.. என்ன மிஞ்சி மிஞ்சி போனா.. இரண்டு நாள் பேசுவாங்க.. அப்பறம்.. சரி.. மத்தவங்கள விடு.. நீ என்ன நெனைக்கற.. ??" என்று ஷ்ரித்திக் அவளை கூர்மையாக பார்த்து கேட்டான்..

"தெரியல.. " என ஷிவாக்ஷி முழித்தாள்..

"ஷிவு.. ஏற்கனவே.. அதிர்ச்சியில இருந்து இப்ப தான்.. வெளியே வந்துட்டு இருக்க.. இத பத்தியெல்லாம் யோசிட்டு மனச இன்னும் குழப்பிக்காத.. நடக்கறது நடக்கட்டும்.. பாத்துக்கலாம்.. ஃப்ரீயா இரு.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழிந்ததை கேட்டதும்.. தான் தெளிவானதை போல் உணர்ந்தாள்..

"ஷிவு.. கேக்கறேனு தப்பா.. நினைக்க மாட்டியே.. ??" என ஷ்ரித்திக் கேட்கவும்.. புருவ முடிச்சுடன்.. கேளுங்கள் என மண்டையை இடம் வலமாக ஆட்டவும்..

"இதுக்கு முன்னாடி ‌யாரையாவது லவ்.. ??" என ஷ்ரித்திக் முடிக்கக்கூட விடாமல்..

"ச்சே.. அபிஷ்டு.. என்ன பேசறேள்.. தாத்தா என்ன கொன்னுடுவா.. " என படபடத்து கூறியதை கேட்டதும்.. ஷ்ரித்திக் வெடித்து சிரித்தான்..

"சரி.. எனக்கு உன்ன பிடிக்காதுன்னு.. நீயா நெனச்சுக்கிட்ட.. ?? யார் சொன்னா அப்படின்னு.. ??" என ஷ்ரித்திக் கேள்வி எழுப்ப..

"இல்ல.‌. ஒரு பொண்ண வேத்தாளா.. பாக்கறத்துக்கும்.. ஆத்துக்காரியா பாக்கறதுக்கும்.‌. வித்தியாசம் இருக்குமோன்லியோ.. அதான்.. அப்படி பாக்கறச்ச.‌ என்ன பிடிக்காம போகறதுல்ல தப்பில்லையே.." என தயக்கத்தினோடே ஷிவாக்ஷி கூறிக்கொண்டு இருந்தாள்...

"எனக்கு ஆரம்பத்தில இருந்தே..‌ உன்ன பிடிக்கும்மா.. அப்படியெல்லாம் நெனைக்காத.. நா ஆரம்பத்தில இருந்தே சொல்றேன்.. நாம ஃப்ரண்ட்ஸ்னு.. நீ இன்னும் அதக் கூட சொல்லல.. " என ஷ்ரித்திக் கூறியதை கேட்டவள்...

"சரி.. ஃப்ரண்ட்ஸ்.. " என ஷிவாக்ஷியும் அவனோடு மொழிந்தாள்..

அவளின் மொழிகளை கேட்டு மென்னகை புரிந்தான்..

"உங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா.. ?? உங்கள பாத்துண்டு.. எல்லாரும் பயந்தா.. தெரியுமா.. ??" என ஷிவாக்ஷி கூறியதை கேட்டு..

"அது.. அப்பப்போ.. ஆமா.‌. நீ பயந்தியா.. ??" ஷ்ரித்திக் புன்னகையினோடே கேட்டான்..

அதற்கு மறுமொழியாய்.. "ச்சே.. ச்சே.. ஆனா மாயா அம்மா கைய பிடிச்சிருந்தேளே.. ?? அப்போ கொஞ்சம் பயந்துட்டேன்.. அவ்ளோ தான்.. " என ஷிவாக்ஷி கூறினாள்..

"என்ன பாத்து.. பயப்படாத ஒரே ஆள்.. நீ தான்.. ஆனாலும்.. நீ.. இவ்ளோ.. அம்மாஞ்சியா இருக்கக் கூடாதும்மா.. அவங்க அடிக்க வராங்க.. கண்ண முடிட்டு நிக்கறியே.. " என ஷ்ரித்திக் எற்ற இரக்கத்தோடு கதைக்கவும்..

"நா ஒன்னும் அம்மாஞ்சி கிடையாது.. என்கிட்டே வம்பு பண்றாவாள எல்லாம்.. ஏதோரு விதத்துல பழி வாங்கிடுவேன்.. தெரியுமா நோக்கு.. அவா என்ன அடிக்க வந்தா.‌. வயசுல பெரியவாள திருப்பியா அடிக்க முடியும்.‌. ?" என ஷிவாக்ஷி கிண்டலாக கேட்டாள்..

ஷிவாக்ஷியின் மொழிகள் கேட்டு.. புன்னகைத்துக் கொண்டே.. "ஹாஹாஹா.. பெரியவங்கள அடிக்க சொல்லல.. எதிர்த்து பேச சொல்றேன்.. அதுவும் உன் மேல தப்பே இல்லாத பச்சத்துல.. நீ.. எதிர்த்து பேசியிருந்தா.. நா அவ்ளோ கோபப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.. " ஷ்ரித்திக் பொறுமையாய் கூறினான்..

இப்போது ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கிடம் சகஜமாய் பேச தொடங்கிருந்தாள்..

ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும் மகிழுந்தில் சென்னையை அடைந்தனர்..

ஷ்ரித்திக் ஒரு பெரிய மாலின் முன்பு தன் மகிழுந்தை நிறுத்தினான்..

ஷிவாக்ஷி அந்த பெரிய மால் வாயை பிளக்க பார்த்தாள்..

ஷ்ரித்திக் இறங்கி.. ஷிவாக்ஷி இறங்குவதற்கு வழி வகுத்தான்.. மகிழுந்தை விட்டு இறங்கிக் கொண்டு
"ஆத்துக்குன்னு சொல்லிட்டு.. இங்க கூட்டிட்டு வந்திருக்கேள்.. ??" என ஷிவாக்ஷி கேள்வியாக நோக்கினாள்..

"இல்ல.. சின்ன பர்ச்சேஸ்.. வா.. " என ஷிவாக்ஷியை அழைத்து கொண்டு அந்த பெரிய மாலுக்குள் நுழைந்தான்.. ஷ்ரித்திக்..

ஷிவாக்ஷியோ.. அந்த மாலையே சுற்றி சுற்றி பார்த்தாள்.. இதற்கு முன் இது போன்ற இடத்திற்கு வந்திராதமையால் .. ஏதோ.‌ அதிசயத்தை கண்டதை போல பார்த்த வண்ணம் வந்தாள்..

-------------
To be continued...

Naa yedhavadhu mistake panni irundha sollunga.. kandippa thiruthikirean.. tq..

Pora pokula star thattitu ponga.. commentsum mukiyam amaichare..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro