Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌺47🌺

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

வீட்டின் வாயில் கதவு வரை இயல்பாக நடந்து வந்த அட்சயா சட்டென்று நின்று ரிச்சர்டிடம் திரும்பி, "ஒரு நிமிடம்!" என அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

"ம்... இப்பொழுது போகலாம், பார்க்கும் பொழுதே கருணுடைய கண்கள் தெறித்து விழப் போகிறது!" என நகைத்தபடி அவனை தோட்டத்திற்கு இழுத்து சென்றாள்.

'நீ என்னிடம் இப்படியெல்லாம் நடந்துக் கொண்டாய் என்றால் அவன் கண் தெறிக்கிறதோ இல்லையோ நிச்சயம் என் இதயம் தெறிக்கப் போவது உறுதி!' என்று எண்ணிக் கொண்டவன் அவள் உணராதபடி மென்மையாக அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

ஆனால் பெண்ணவளுக்கு தெரியாதா அவனின் நெருக்கமும், அழுத்தமும்... உடலில் குப்பென்று வெப்பம் பரவ சற்றே தடுமாறியவள் எதையும் வெளிக்காட்டாது முகத்தில் இயல்பை பூசிக் கொண்டு அவனுடன் அமைதியாக நடந்தாள்.

பூப்பறிக்கிறேன் என பெயர் செய்துக் கொண்டு அருந்ததியிடம் கருண் வளவளத்துக் கொண்டிருந்தான். அத்தனை ஆண்டு காலமாக பேச்சு துணைக்கு ஆளின்றி மற்றவரிடமிருந்து தனிமையில் ஒதுங்கி வாழ்ந்து வந்த அவளுக்கு அது பெரும் ஆர்வத்தை தான் தந்தது.

அவனுடன் இருக்கும் பொழுதும், அவனின் தடையில்லா பேச்சை கேட்கும் பொழுதும் எவ்வித கவலையுமின்றி மனம் லேசாகி பறப்பதை போன்று உணர்ந்தாள்.

"ஓ மை குட்னஸ்! அங்கே பார் உலக அதிசயத்தை..." என்று அட்சயாவின் கணிப்பை பொய்யாக்காமல் வியப்பினால் அகன்று விரிந்த விழிகளுடன் அருந்ததியிடம் கூவினான் கருண்.

அவனுடைய கூவலை கேட்டதும் மற்றதை மறந்து உற்சாகமான அட்சயா அவனை வெறுப்பேற்றும் விதமாக ரிச்சர்டின் விரல்களோடு விரல்களை கோர்த்து, "என்னடா எதற்காக இப்படி அலறுகிறாய்?" என்று அலட்சியமாக வினவியபடி அருகில் வந்து நின்றாள்.

விஷயம் புரிபட்டாலும், "எதற்கு அலறுகிறேனா... ஏன்டி என் மச்சான் கையை பிடித்துக் கொண்டு வருகிறாய்?" என அவளை சீண்டினான்.

அட்சயா பதிலளிக்கும் முன் அவர்கள் இருவரின் கை பிணைப்பே அவளின் சம்மதத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அருந்ததி வேகமாக அவளிடம் சென்று, "ரொம்ப சந்தோசம் அண்ணி!" என அவளுடைய மறுகரத்தை ஆவலுடன் பற்றிக் கொண்டாள்.

- part to be continued on www.deepababuforum.com

______________________________________

Hi Readers!

Kathai thiruttai kuraikkum vithamaga ini online il kathai veliyiduvathil sila maatrangalai kondu vanthirikkirom. TV serialgal pola indru post seiyum update anthantha kathaigalin adutha update varaiyil mattume thalaththil vaithiruppom. Adutha update podum poluthu munnathai neeki viduvom. So ungalukku kathaigalai mulu novel aaga naangal puthakangal aagavo allathu Kindle ebooks aagavo thaan kudukka iyalum. Matrapadi ungalukku thodarnthu yengalin padaippugal pakuthi vaariyaga koduppathil yentha maatramum illai. Ungalin aatharavu yengalukku nitchayam kidaikkum yengindra nambikkaiyil immuraiyai kaiyil yeduthirukkindrom. Thank u friends.

-Deepababu


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro