அத்தியாயம் 9
சர்வேஷ்: பொய் னு யார் சொன்னா.
பாரதி: வாட்???
கவி: டேய் விளையாடாத டா?
சர்வேஷ் : உண்மைதான்
பாரதி: என்ன சொல்ற நீ? அப்போ ஃபிரண்டா நீ பழகல அப்படித்தான.
சர்வேஷ் : நான் ஃபிரண்டா தான் பழகுன, இப்பயும் ஃபிரண்டு தான். நம்ப பிரண்ட்ஷிப் ஸ்பாயில் ஆகிட கூடாதுன்னு நான் அமைதியாக இருந்தேன்.
சம்யுக்தா பாரதியின் காதில், எவனோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கதான் போற அது ஏன் உன்ன நல்லா தெரிஞ்சி வைச்சுகுற சர்வேஷ் ஆ இருக்க கூடாது.
பாரதி: எனக்கு கொஞ்சம் டைம் வேணும் சர்வேஷ்.
இப்போது அவர்களின் கடைசி செமஸ்டர் தேர்வு வந்தது. ஆனாலும் பாரதி அவளின் முடிவை கூறவில்லை. சர்வேஷும் அதைப்பற்றி பேசவில்லை. செமஸ்டர் தேர்வுக்கு அனைவரும் தீவிரமாக படிக்க தொடங்கினர். ஒவ்வொரு தேர்வையும் நன்றாக எழுதி முடித்தனர்.
கடைசி நாளில் பிரிய போகும் நேரத்தில் அனைவரும் கண்கலங்கினர். எதற்குமே கலங்காத ராம், அன்றைக்கு அழுதான்.
சர்வேஷ்: என்ன சார் கண்ணு ரொம்ப வேர்குது போலயே
அனைவரும் அவனை பார்த்தார்கள்.
ராம் : லைட் ஆ தூசி பட்டிடுச்சி, நீங்க நினைக்குற மாதிரி அழலாம் இல்லை.
சாம்: அந்த கெத்த மட்டும் விடமாட்டியே, நல்லா பச்சையா தெரிது. பாத்து கண்ணீர் வெளிய வந்திடபோது புடிச்சிக்க.
சிரித்தனர்.
பின்பு டிப்பார்ட்மென்டில் உள்ள அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கல்லூரி முடிந்த போதும் அவ்வப்போது அனைவரும் சந்தித்துக்கொள்வர். அப்போது பாரதி சர்வேஷின் காதலை ஒப்புக்கொண்டாள்.
கவி: பா, இத நீ அன்னிக்கே அவன்கிட்ட சொல்லிருக்கலாம் ல
பாரதி: Studies Spoil ஆகிட கூடாது ல அவனுக்கு அதான்.
சர்வேஷ்: தியாகி னு நினைப்பு மேடம் கு
பாரதி: நம்பலனா போடா
சர்வேஷ்: என்னது டா வா
ராம்: சரி சரி இப்பவே சண்ட போடாதீங்க, லைஃப் ல டைம் இருக்கு.
சாம்: ஏத்தி விடாத பங்கு.
ஐந்து வருடங்களுக்கு பின்.
ஒரு கட்டிடம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாசலில் வாழைமரம் கட்டப்படிருந்தது.
ஒரு பெண் குழந்தையுடன் ஒரு இளம் ஜோடி உள்ளே நுழைந்தது, எல்லோரும் அவர்களை வரவேற்றனர். வேறு சில பேர் அந்த ஜோடியை தன் அருகில் அமருமாறு அழைத்தனர்.
அந்த இளம் ஜோடி வேறு யாரும் இல்லை கவி மற்றும் ஸ்வேதா. அவர்கள் அழைத்து புதியதாக திருமணமான சர்வேஷ்- பாரதி மற்றும் ராம் - ரேஷ்மா . இவர்கள் அனைவரும் சம்யுக்தாவின் திருமணத்திற்கு தான் வந்துள்ளனர்.
இந்த ஐவரில் முதலில் கவி திருமணம் செய்துக்கொண்டான். பின்பு தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் ராம் தனது சீனியர் ரேஷ்மாவை திருமணம்செய்துக்கொண்டான். பிறகு தான் சர்வேஷும் பாரதியும்.
சம்யுக்தா திருமணம் வேண்டாம் என்று நாள் கடத்திக்கொண்டே செல்ல, தன் அலுவலகத்தில் வேலை பார்த்த நீரஜ் கார்த்திக் சம்யுக்தாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி சம்யுக்தாவிடம் நல்ல முறையில் அணுகினார். பின்பு இருமனமும் ஒன்றாக, இரு குடும்பங்களும் சம்பந்தம் பேசி ஒன்றானது.
சம்யுக்தாவின் திருமணத்தில் அனைவரும் குடும்பமாக மீண்டும் சந்தித்தனர். இந்த நட்பும் மகிழ்ச்சியான பந்தமும் அவர்களின் வாழ்நாள் வரை தொடரட்டும்.
முற்றும்
I ended this story due to the lack of response and might be I probably failed to write it interestingly. That's my mistake too and sorry for this.
Pls do check my other series
Completed
1.Unnai kandene muthal murai naan
2.Trilogy
Ongoing
Yaar nee
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro