Part 38
முத்தமிழ் உரைத்த மூதாட்டியவளுக்கு அதியமானுடன் அழகிய நட்புண்டு பெண்ணவள் புனிதமாய் போற்றப்படுவதால், அன்று
ஒளவை தூற்றப்படவில்லை.
இடைக்காலத்தில் எழுந்த ஆணாதிக்கத்தால் அடுக்களையில் சிறைப்பட்ட -பெண் ஆயுதம் ஏந்தி தேசம் காப்பதலும், அறிவை பேணி பொருளாதாரம் பெருக்குவதாலும், ஆகாயம் தாண்டி அண்டத்தை ஆராய்வதாலும்,
பொறாமை கொண்ட சிறுமாந்தர் பெண்ணடிமை நிலைநிறுத்திட பெண்ணவள் மீதினில் சேரிரைத்திட்டு தூய நட்பினை அழிப்பதும்
ஆணாதிக்கத்தாலே,
தூற்றுவாரை மதியாமல் நட்பு கொண்டால், காமுகன் எவனோ பகுத்தறியாய் என்று சுற்றம் கடிவதுவும் அகத்தெஞ்சி நிற்கும்
ஆணாதிக்கத்தாலே,
பெண்ணிய ஒலி பாரெங்கும் ஒலிக்கும் இக்காலத்தில், உள்மனதில் விதைக்கப்பட்ட அடிமை விலங்குடைக்காத அறியாப்பெண்ணாலே
ஆண் தோழன் கொண்ட பெண் பெரிதும் தூற்றப்படுகிறாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro