Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 23

தன்னை அடித்தவனை கவலையாக திவ்யா பார்க்க மித்ரனோ

"திவ்யா நீ என்கிட்ட ஏதோ மறைச்சிருக்க என்னான்னு சொல்லு" என்றவனை திவ்யா

"அண்ணா, ஜானவி இருக்கால்ல.." என்றவளை மித்ரன்

"அவள விடு உன்ன பத்தி சொல்லு நீ யாரு? எங்க அம்மாவ பத்தி உனக்கு என்ன தெரியும்? " என்று கேட்க அவளோ அமைதியாக இருந்தாள். அவளின் அமைதி மித்ரனை ஏதோசெய்ய, அவன் கோவமாக ஏதோ பேசத் தொடங்க முன் விஷ்வனாத் பேசத் தொடங்கினார்.

"மித்ரன் இத பத்தி இங்க பேசவேண்டாம். வீட்டுக்கு போய் பேசிக்கலாம். ஆனா திவ்யா சொல்ர ஜானவிய பத்தின மத்த விசயங்கள் எதுவும் எனக்கு தெரியல" என்று கூறியவர் திவ்யாவை பார்த்து

"நீ சொல்ரது எல்லாம் உண்மையாம்மா?" என்று கேட்க அவளோ தலை தாழ்த்தி இருந்தாள். அவளின் அமைதியே அவள் உண்மை பேசுவதை எடுத்துரைக்க ஜானவியைபார்த்த விஷ்வனாத்

"ஏம்மா எங்க மேல இவ்வளவு கோவம்? அப்படி திவ்யா மேல என்ன பகை உனக்கு? பேசித்தீர்க்க முடியாதது எதுவே இல்லம்மா" என்று கூற அவளோ

"சார் உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து பேசாம இருக்கேன். நீங்க இதுல தலையிடாம இருக்குற வரைக்கும் உங்களுக்கு நல்லது. இல்லன்னா.." என்று ஏதோகூற வர அவள் அருகில் வந்த அர்ஜுன் ஜானவியை அறைந்து

"என்னடி விட்டா ஓவரா பேசுர. இதுக்குமேல ஒரு வார்த்தை பேசின உன்ன நானே கொன்னுடுவேன். உனகுத்தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டியே இதுக்குமேல எதுக்கு இங்க நிற்கிற. இங்கிருந்து போயிடு" என்று கூறியவனை வித்தியாசமாக பார்த்த திவ்யா

"என்ன அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து ட்ராமா போடுறீங்களா?? மித்ரன அவளும், என்ன நீயும் கல்யாணம் பண்ணிதானே ஏமாத்த பார்த்தீங்க" என்று கூற திவ்யாவின்அருகில் வந்தவன்

"திவ்யா பேசுரத பார்த்து பேசு. ஜானவி ஏன் அப்படி பண்றான்னு எனக்குதெரியல. ஆனா நான் உன்மேல வெச்சிருந்த காதல் நிஜம். தயவு செஞ்சி அத கொச்சைப்படுத்தாத. என்னால தாங்க முடியாது" என்று கூறியவனை திவ்யா ஏளனமாக பார்த்து தன் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழற்றியவள்


"உன் தங்கச்சியை நிஜமா தாலிய கட்டிகிட்டு எங்கள ஏமாத்த பார்த்தா.ஆனா நான் இல்லாத புருசன இருக்குறதா சொல்லி உன்ன ஏமாத்திட்டேன். இந்த தாலிய நீயேவெச்சிக்க. உன் காதல் தோல்விக்கு அது ஞாபகர்த்தமா இருக்கும்" என்றுகூற கோவம் வந்த அர்ஜுன் அவள் கையில் கொடுத்த தாலியை அவள் சுதாகர்க்கும் முன் அவள் கழுத்தில் கட்டினான்.

யாருமே இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருக்க திவ்யா பளாரென அர்ஜுனை அறைந்தவள் அவன் கட்டிய தாலியை கழற்றி அவனிடன் கொடுத்து

"என்ன தாலிய கட்டிட்டா மத்த பொண்ணுங்க மாதிரி தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து உன் பின்னாடி வருவேன்னு நினைச்சியா. நீயெல்லாம் ஒரு ஆளு. சொந்த தங்கச்சியவே ஒழுங்க வளர்க்க தெரியல. தங்கச்சிகிட்ட எப்படி அன்பா இருந்து அவள வழி நடத்தனும்னு மித்ரன் அண்ணாகிட்ட பார்த்து கத்துக்க. இப்போ நீயும் உன்தங்கச்சியும் இந்த இடத்தை விட்டு போங்க" என்று கூற என்ன செய்வது என்று புரியாமல் நின்ற அர்ஜுன் திவ்யாவின் அருகில் வந்து

"நீ என்ன சொன்னாலும் உன் கழுத்துல முதன் முதலா தாலி கட்டினது நான். உனக்கு இனி எவன் தாலி கட்டினாலும் என் ஞாபகம் வரும். ஆனா நான் யாருக்கும் தாலி கட்ட மாட்டேன். ஏன்னா இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி" என்று கூறி மண்டபத்தை விட்டு சென்றான்.

மண்டபத்திலிருந்து அர்ஜுனும் ஜானவியும் செல்ல மற்ற உறவினகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டு ஒவ்வொருவராக கலைய தொடங்கினர். மித்ரனை பார்த்த திவ்யா

"அண்ணா ப்ளீஸ்னா, நான் சொல்ரத கொஞ்சம் கேளு. நீ ஷாக்சிய கல்யாணம் பண்ணிக்கோன்னா " என்று கூற திவ்யாவை முறைத்த மித்ரன்"இப்போ நீ எங்கம்மாவ பத்தின உண்மைய சொல்ல போறியா இல்லையா?" என்று சத்தமிட அங்கு இருந்து விஷ்வனாத்"என்னடா ரொம்ப சத்தம் போடுற. உன் அம்மாவும், திவ்யா அம்மாவும்ஒருத்தங்கதான் போதுமா. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நான் அப்பன் இல்லை" என்று கூற மித்ரன் இப்போது அடிபட்ட பூனையாக அவரை பார்த்தான்."அப்பா என்ன சொல்ரீங்க? நீங்க என் அப்பா இல்லைன்னா அப்போ..." என்று ஏதோ கூற வர அவனின் தந்தை

"இங்க பாரு மித்ரன் ஏதாச்சும் நீ வார்த்தைய விடுறதுக்கு முன்னாடி நான் உங்க அம்மா, அப்பா பத்தி சொல்லிடுறேன்" என்று கூறத்தொடங்கினார்.

"நான் அப்போலாம் அப்போ காசு இருக்குற தெனாவெட்டுல டிரக்ஸ்,ஸ்மோக்கிங்க், டிரிங்க்ஸ்னு திரிவேன். ஒரு தடவை நான் குடிச்சிட்டு வரும்போது எனக்கு ஆக்சிடன்ட் ஆச்சு. அப்போதான் தெரிஞ்சது நான் அளவுக்கு அதிகமா ட்ரக்ஸ் யூஸ் பண்ணதால என்னால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாதுன்னு. ஆனா எங்கப்பா இது தெரியாம நான் கல்யாணாம் பண்ணி எனக்கு குழ்ந்தை பிறந்ததும்தான் அவரோட கம்பனி எனக்கு வரும்னு எழுதி வெச்சிட்டி செத்து போய்ட்டாரு. இத தெரிஞ்சுகிட்ட கம்பனியோட செயார் ஹோல்டர்ஸ் நீ நான்னு அவங்க அவங்க பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஒரே ரோதனை. நான் எப்படி அவங்கள கல்யாணாம் பண்ணிக்க முடியும். நானே ஒரு சிக்கல்ல மாட்டிகிட்டு இருக்கும் போதுதான் உங்கம்மாவ பார்த்தேன். உங்க அம்மா பேரு வினோதினி 1990 ல அவங்க சிறீலங்கால இருந்து அகதியா வந்தவங்க. எங்கப்பா கம்பனில டைபிஸ்ட்டா வேலை பார்த்தாங்க. அவங்க அகதியா இங்க வந்தப்போ உங்க அப்பாவ ஏதோ ஒரு காரணத்துக்காக போலீஸ் பிடிச்சிட்டு போயிட்டாங்க. அவரு எங்க இருக்காரு என்னன்னு ஒரு தகவலும் இல்ல. ஒரு நாள் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கும் போதுதான் உங்கம்மா என்கிட்ட வந்து'சார் உங்கப்பா இல்லைன்னா நான் இன்னைக்கு உயிரோட இருந்திருக்கவே முடியாது. இந்த உலகத்துல ஒரு பொண்ணால தனியா இருக்குறத எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அந்த நேரத்துல உங்கப்பா எனக்கு உதவி செய்யலன்னா நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்கே தெரியாது. சார் இப்போ என் கணவர் எங்க இருக்காருன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் இப்போ கர்ப்பமா இருக்கேன். என் குழந்தைய நீங்களே வெச்சிக்கோங்க. பிற்காலத்துல உங்க கம்பனி உரிமை சம்பந்தமா உங்களுக்கு ஏதும் பிரச்சினை வராம இருக்கும்' அப்படின்னுசொன்னாடா. அதுக்கு அப்புறம் அவங்கள ஒரு சடங்குக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா நீ பிறந்து சரியா இரண்டாவது வாரம் உங்க அப்பா போலீஸ்ல இருந்து விடுதலை ஆகி உங்கம்மாவ தேடி வந்துட்டாரு. வந்தவரு என்கிட்ட எதுவுமே பேசாம உங்க அம்மா கிட்ட போய் ஏதோ பேசிட்டு வந்து'சார் நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறேன். நாங்க வாக்கு கொடுத்தா அதுக்கு மாற்றம் செய்ய மாட்டோம். குழந்தைய நீங்க வெச்சிக்கோங்க. அதுதான் அவனுக்கு நல்லது. ஆனா பேர மட்டும் மித்ரன் என்று வெச்சிடுங்கன்னு' சொல்லிட்டு போயிட்டாரு.உங்கம்மா அப்பா கூட்டிகிட்டு போனத எங்க ஆபீஸ்ல ஒருத்தன் பாத்து உங்கம்மா யாரு கூடவோ ஓடி போயிட்டான்னு கதை பரவி டிச்சு. ஆனா நானும் அவங்க எப்போவாச்சும் உன்னை தேடி வருவாங்கனு காத்திகிட்டே இருந்தேன் கடைசி வரைக்கும் வரவே இல்ல. உங்கம்மா சொன்ன வாக்க கடைசிவரைக்கும் காப்பாத்திட்டா.என்றவரை மித்ரன் கேள்வியாக அப்போ திவ்யா என்று இழுக்க அவரோ

"அவள் உன் அம்மாக்கும் அப்பாக்கும் பிறந்தவ. அவ 10வது படிக்கும் போதுஉங்கம்மா அப்பா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. அவங்க இறக்கும் போதுதான் உன்ன பத்தி இவகிட்ட சொல்லிருக்காங்க. இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு பார்க்குறியா. அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல அடிபட்டு இருந்தப்போ இவ அவளஅறியாமலேயே அவளுக்கும் உனக்கும் ஒரே ப்ளட் க்ரூப்தான்னு சொன்னா. உன்னோட ப்ளட் க்ரூப் எப்படி இவளுக்கு மேட்ச் ஆச்சுன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு. காரணம் உன் ப்ளட் ரொம்ப ரெயார் ஆனது. அப்போதான் எனக்கு திவ்யா பண்ண எல்லாமே ஞாபகம் வந்து கொஞ்சம் அவள பத்தி விசாரிச்சி அவ10 வது படிச்சஸ்கூல்ல கண்டுபிடிச்சேன். அப்புறம் எல்லாமே க்ளியர் ஆச்சி" என்று கூறமித்ரன் கண் கலங்க என்ன கூறுவது என்று புரியாமல் நின்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro