Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 20

"ப்ளீஸ் மித்ரன்,ப்ளீஸ் "என்று அனற்றிக்கொண்டிருந்தவளை திவ்யா எழுந்து அணைத்துக்கொண்டவள்

"ஹேய் ஷாக்சி ,என்னாச்சிடி"என்று கேட்க தூக்கத்தில் எழுந்த விழித்த ஷாக்சி

"திவ்யா,மித்ரன் எதுவுமே சொல்லலடி .நான் தப்பான பொண்ணு இல்லன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லு திவ்யா"என்று தன்னை மறந்து உலறிக்கொண்டிருதாள்.திவ்யாவுக்கு ஷாக்சி ஏதோ கெட்ட கனவு ஒன்று கண்டிருக்கின்றால் என்பது மட்டும் புரிய ஷாக்சியை அணைத்தவள் அவளுக்கு தூக்க மாத்திரை ஒன்றை கொடுத்து அவளை மேலும் எதுவும் பேச விடாமல் தூங்க வைத்தாள்.

காலையில் தூக்க மாத்திரையின் வீரியத்தில் தூங்கி கொண்டிருந்த ஷாக்சியை தொந்தரவு செய்யாமல் மித்ரனின் வீட்டுக்கு சென்றவள் அங்கு ஜானவி யாருடனோ போனில் பேசிக்கொன்டிருப்பதை கேட்டவள் எதுவும் கூறாமல் மித்ரனின் அறைக்குள் நுழைந்தாள்.

மித்ரனுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தவள் ஜானவி உள்ளே வருவதை கண்டு  போலியாக புன்னகைத்தவள்

"வா ஜானவி, எப்படி இருக்க. போன் பேசி முடிச்சிட்டியா?" என்று கேட்க அவள் சிறிது முகத்தில் கலவரமானாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல்

"ஹேய் நான் சூப்பரா இருக்கேன்டி.ஆமா நீ இப்போதான் வந்தியா ?"என்று கேட்க திவ்யாவோ

"இல்லடி நான் வரும் போது நீ சீரியஸா போன் பேசிக்கிட்டு இருந்தியா.அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அப்படியே உள்ள வந்துட்டேன்.ஆமா யாரு போன்ல?ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு இருந்த"என்று கேட்க ஜானவியோ

"அது எங்க கம்பனி க்ளையன்ட் ஒருத்தங்கடி.ஒரு லீகல் பிரச்சினை சம்பந்தமா பேசிக்கிட்டு இருந்தோம்.எங்க கம்பனில இப்படித்தாம்பா அடிக்கடி  ஆகும் "என்று கூற திவ்யாவோ

"அது சரி ,பெரிய கம்பனின்னா இப்படித்தான் அடிக்கடி  ஆகும்ல"என்று கூறியவள் ஜானவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.அவள் போகும் வரை அவளுடனே இருந்தவள் ஜானவி கிளம்பியதும் அவளும் வெளியில் சென்றாள்.

வீட்டுக்கு வந்தவள் ஷாக்சி எழுந்து வேலைக்கு செல்ல ஆயத்தமாகி இருப்பதை கண்டவள் அவளின் அருகில் சென்று

"ஹேய் ஷாக்சி இப்போ பரவாயில்லையா? நேத்து நைட் என்னாச்சி உனக்கு.கெட்ட கனவா?"என்று கேட்க அவளோ

" இல்ல திவ்யா கொஞ்ச நாளாவே எனக்கு ரொம்ப கெட்ட கனவு வருதுடி.என்னன்னு தெரியல"என்று கூற திவ்யா நேரடியாகவே ஷாக்சியிடம்

"நீ மித்ரன் அண்ணாவ விரும்புரியா?"என்று கேட்க அவளை முறைத்த ஷாச்கி

"என்ன பேசுற திவ்யா.நான் போய் மித்ரன எப்படி விரும்ப முடியும்.அவரு ஜானவிய கட்டிக்கபோறாரு.அது வேற இல்லாம நான கெட்டு போனவடி"என்று கூற  ஷாக்சியை ஓங்கி பளாரென அறைந்தவள்

  "இங்க பாரு ,எத்தன வாட்டி உனக்குசொல்ரது இப்படி பேசாதன்னு.நீ என்ன தெரிஞ்சா கெட்டு போன.இங்க ஊமைக்கொட்டான் மாதிரி நிறைய ஆளுங்க என்னன்னமோளாம் பளான் பண்ணுதுங்க.இதுல நீ வேற .இன்னொரு வாட்டி இப்படி லூசு மாதிரி பேசின உன்ன கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன் "என்று கூற ஷாக்சி

" ஹேய் அப்படி பண்ணிடாதடி.அப்புறம் அர்ஜுன் பாவம்.தேவதாஸ் மாதிரி தாடி வெச்சிக்கிட்டு அலைய போறாரு"என்றாள்.

"பி சீரியஸ் ஷக்சி.உனக்கு எல்லாமே விளையாட்டுதானா?ஏன்டி நீ எதையுமே சீரியசவே எடுத்துக்க மாட்ட போல.நான் இங்க ஒருத்தி இருந்து கத்திகிட்டு இருக்கேன் நீ என்னடான்னா.ச்ச்சீ ஏன்டி இப்படி இருக்க.உன் வாழ்க்கைய பத்தி உனக்கு அக்கறையில்லையா?"என்று கேட்டவளை முகத்தில் ஒரு உலர்ந்த புன்னகையுடன் பேச ஆரம்பிக்க இருந்த ஷாக்சியை திவ்யா கை நீட்டி

"போதும் வாய மூடு.ஏதாச்சும் லூசுத்தனமா பேசின கொன்னுடுவேன்"என்று எச்சரித்தவள்

"சரி உன் மனசில யாரும் இல்லைன்னு சத்தியம் பண்ணி சொல்லு ஷாக்சி.ரவி கூடவா இப்போ இல்ல.என்னால உன்ன இப்படி பார்க்க முடியலடி" என்றவளை ஷாக்சி

"இல்ல திவ்யா சத்தியமா என் மனசில இப்போ ரவி இல்ல.நான் உண்மையா அவன காதலிச்சேன்.அவனும் காதலிச்சான்தான்.ஆனா அவனோட பழக்க வழக்கங்கள் ரொம்ப வித்தியாசம் திவ்யா.இனி எனக்கும் அவனுக்கும் செட் ஆகாது"என்றளை புன்னகையுடன்               
ஷாக்சியின் அருகில் வந்து அவளின் கையை பிடித்தவள் தன் தலையில் வைத்தவள்

"இப்போ சொல்லு ஷாசக்சி உன் மனசில மித்ரன் அண்ணா இல்லன்னு"என்று கேட்டவளை ஷாக்சி உடனே அவளின் தலையில் இருந்து கையை எடுத்தவள்

"இங்க பாரு திவ்யா ,என் மனசில மித்ரன் இருக்காறான்னு தெரியல.ஆனா கண்டிப்பா இப்போ ரவி இல்ல.அது மட்டும் உண்மை"என்றவளை திவ்யாவோ விடாமல்

"இப்படி பட்டும்படாம பேசாத.உனக்கு அண்ணன பிடிக்காமலா அன்னைக்கு நைட்டு தூக்கத்துல அவன் பேர சொல்லி அனர்த்தின" என்று கேட்க ஷாக்சியால் பதில் கூற முடியவில்லை.அவளின் மௌனத்தை சாதகமாக்க முயன்ற திவ்யா

"ஹேய் ஷாக்சி இப்போ சொல்லு, மித்ரன் அண்ணன் உன் கிட்ட வந்து உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னா என்ன பண்ணுவ.அக்சப்ட் பண்ணுவியா மாட்டியா?"என்றவளை ஷாக்சி யோ

"அப்படி வந்து கேட்டா நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.முதல்ல நீ பகல் கனவு காணாம போய் இருக்குற  வேலைய பாரு.கல்யான வேலை எல்லாம் தலைக்கு மேல இருக்கு" என்றவள் மனதுக்குள்

'மித்ரன் மனதில் ஜானவி இருப்பதால் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படி பேசுவதை தவிர வேறு வழியில்லை .இவள இப்படி பேசிதான் ஆப் பண்ணனும் 'என நினைத்துக்கொண்டாள்.

ஆனால் திவ்யாவோ மனதுக்குள்

'இனி என் ஆட்டத்த பாரு ஷாக்சி,உன் வாழ்க்கை இனிமே என்கைல.அதை எவ்வளவு அழகா மாத்துரேன்னு பாரு' என நினைத்துக்கொண்டாள்.

திருமண நாள் நெருங்கிக்கொண்டிருக்க எல்லோருக்கும் தலைக்கு மேல் வேலை வழிந்து கொண்டிருந்தது,மித்ரனுக்கோ இந்த திருமணம் நடப்பதில் மிகவும் வேதனையாக இருந்தது.தனக்கு தேவையான அன்றாட கடமைகளை செய்வதற் கூட இன்னொருவரின் உதவியை நாடி நிற்பவனுக்கு தான் திருமணம் என்ற பெயரில் ஜானவியின் வாழ்க்கையை கேள்விகுறியாக்க பார்க்கின்றோம் என்ற ஒரு குற்ற உணர்வு அவன் உள்ளத்தை வாட்டிக்கொண்டே இருந்தது.

மணமகனுக்கு தேவையான ஆடைகளை ஜானவி வீட்டார் எடுப்பது என்றும் மணமகளுக்கு உரிய ஆடைகளை மித்ரன் வீட்டினர் எடுப்பது என்றும் முடிவு செய்து திருமணத்திற்க்கு தேவையான ஆடைகள் எல்லாம் தெரிவு செய்தனர்.

மணமகளுக்கு எடுத்த ஆடையை போன்றே திவ்யா அவளுக்கும் ஷாக்சிக்கும் ஆடைகளை செலக்ட் செய்ய எல்லோரும் அவளை ஆச்சரியமாகப்பார்த்தனர். அவளோ அதை எல்லாம் சட்டை செய்யாது ஆடைகளை செலக்ட் செய்வதிலேயே குறியாக இருந்தாள்.அவள் அருகில் வந்த விஷ்வனாத்

"அம்மாடி திவ்யா,என்னடா கல்யான பொண்ணுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரி டிறெஸ் எடுக்குறீங்க.பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்கடா"என்றவளை ஷாக்சியும் எதுவோ கூற வர அவளை முந்திக்கொண்டு

"அப்பா அதெல்லாம் ஒரு பராப்ளமும் இல்ல.நாங்க மூனு பேருமே காலேஜ்ல ரொம்ப க்லோஸ் ப்ரென்ட்ஸ்.அப்பவே நாங்க பேசிப்ப்போம்.மூனு பேரு கல்யாணமும் ஒரே மேடைல நடக்கலைன்னாலும் மூனு பேரு கல்யாணத்தப்போ ஒரே மாதிரி டிறெஸ் பண்ணிக்கனும்னு.அதான் இப்போ முதல்ல ஜானவி கல்யாணம் நடக்க போகுதா,அதான் கல்யாணத்துல எங்க கல்யாணத்துக்கு டிரையல் பார்க்க போறோம்"என்று கூறியவள் ஷாக்சியை பார்த்து அப்பாவுக்கு தெரியாமல் கண் அடித்தவள்

"என்ன ஷாக்ஸ் நான் சொல்ரது கரக்ட்தானே.நீதானே காலேஜ்ல இப்படி சொல்வ"என்று கூற ஷாக்சியும் என்ன கூறுவது என்று புரியாமல்

"ஆமாமா ,நாங்க காலேஜ்ல இப்படித்தான் சார் பேசிக்குவோம்"என்று கூற விஷ்வனாத்தோ முகத்தை கோவமாக வைத்து கொண்டு

"உன்ன எத்தனவாட்டிமா சொல்ரது என்ன சார்னு கூப்பிடாத அப்பான்னு சொல்லுன்னு.நீ அப்படி கூப்பிடவே மாட்டேங்குற"என்று கவலைப்பட்டவரை ஷாக்சி

"அதுக்குதான் உங்கள அப்பான்னு கூப்பிட உங்க வாயாடி மகள் இருக்காலே.அவளே எனக்கும் சேர்த்து கூப்பிடட்டும்"என்று கூற ஷாக்சியை பார்த்து முறைத்த திவ்யா

"நான் வாயாடியாடி"என்று கேட்க இப்போது விஷ்வனாத்

"அம்மாடி திவ்யா சில நேரஙக்ள்ள உண்மைகள் கசக்கத்தான் செய்யும் .சோ நீ ஒன்னும் டென்சன் ஆகாத"என்று கூற அவளோஒ மனதுக்குள்

'இப்பவே மருமகளுக்கு சப்போர்ட்டா.ஹ்ம்ம் பார்க்கலாம்'என நினைத்துக்கொண்டாள்.திருமனத்டிற்கு சரியாக 3 நாள் இருக்கும் போது மித்ரனிடம் வந்த திவ்யா

"அண்ணா நான் உன் தங்கச்சிதானே"என்று கேட்டவளை மித்ரன் குழப்பத்துடன்

"என்ன திவ்யா இப்போ இப்படி ஒரு கேள்வி கேட்குற"என்று சந்தேகமாக கேட்க

"நான் ஏதும் தப்பு பண்ணா என்ன மன்னிப்பியாண்ணா"என்று கேட்டவளை அவனோ

"இங்க பாருடா, நீ என் தங்கச்சி .நீ என்ன பண்ணாலும் நான் உன்ன வெறுக்க மாட்டேன்.அப்புறம் உன் மேல கோபப்படுவேன்.ஆனா ஒரு போதும் உன்ன விட்டு விலகி இருக்கனும்னு நினைக்க மாட்டேன்டா"என்றவனை அன்புடன் தழுவிக்கொண்டாள்.

'அண்ணா நான் பண்ண போற காரியத்தால யாரு என்ன விட்டு போனாலும் நீ போயிடக்கூடாது.அதுதான் என் கவலையே.ஆனா உன் வாழ்க்கைக்காக நான் உன்ன விட்டு போக வேண்டி வந்தாலும் அதை நான் சந்தோசமா செய்வேண்ணா' என மனதுக்குள் நினைத்துக்கொன்டாள்.

---------------------

ஹாய் ப்ரென்ட்ஸ்,

இந்த ஸ்டோரி என்னோட பல வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என்று நன்றாக தெரிகின்றது.ஏனென்றால் இந்த கதையில் காதல்.ரொமான்ஸ்,ஊடல் எதுவுமே இல்லாமல் ப்ளாட் ஆக போய்க்கொண்டிருக்கின்றது.இந்த கதை முடிந்ததும் அடுத்த கதையால ஒரு முழு காதல் கதை (லவ் அன்ட் லவ் ஒன்லி) எழுதலாம் என நினைக்கின்றேன்.அதில் லாஜிக்லாம் குறைவாகவே இருக்கும்.

அடுத்த கதியாக காதல் கதையையே ப்ளான் பண்ணட்டுமா இல்லை வழமையாக நான் எழுதுவது போல எழுதட்டுமா? (பின்னூட்டமிடுங்கள்).

கடைசியாக என் வாசகர்களில் பலரை என்னால் இந்த கதை மூலம் திருப்திப்படுத்த முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro