Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 2

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் இரவு பார்ட்டி முடித்து வீடு வந்த ஷாக்சிக்கு எதுவுமே நினைவில் இல்லாம இருக்க அவளின் தந்தையே அவளை எழுப்பி காபி கொடுத்தார். முகத்தில் கொஞ்சம் கடுகடுப்பை காட்டியவர் அவளிடம் எதுவுமே பேசவில்லை.தந்தையின் முக மாற்றத்தை அறிந்தவள் ஏதோ ஒன்று தவறாக தோன்ற

"டாட், என்ன ரொம்ப சேட் ஆஹ் இருக்கீங்க"என்றவளை

"ஒன்னுமில்ல.நீ பண்ணிட்டு வந்த காரியத்துக்கு உனக்கு எப்படி பாராட்டு தெரிவிக்கலாம்னு இருக்கேன்"என்றார்.

"டாட் கொஞ்சம் புரியிர மாதிரி சொல்லுங்க"என்றாள்.

"நேத்து நைட் நீ எப்படி வீட்டுக்கு வந்தே தெரியுமா?"என்றவரை

"எப்படி வந்தேன்.ஸ்கூட்டிலதான்" என்றவளை

"ஸ்கூட்டிலயா? அடிங்க, நீ சுய நினைவில்லாம வந்த.அதுவும் உன்ன அந்த திவ்யா பொண்ணுதான் டிராப் பண்ணா.இதுல அவ உனக்கு சப்போர்ட் வேற.புட் பாய்சன்,மயக்கமாகிட்டேன்னு பொய் வேற.எத்தனை வாட்டிமா உனக்கு சொல்ரது.உங்க கம்பனி பார்ட்டிக்கு எல்லாம் போகாதன்னு.நேத்தைக்கு நீ எதையோ குடிச்சி மயக்கமாகி இருக்கேன்னு தெரியுது.அந்த திவ்யா இல்லேன்னா உன் நிலமைய கொஞ்சம் யோசிச்சி பாரு"என்றவரை

"இல்ல டேட் ,சாரி.இனிமே இப்படி ஆகாது.நேத்து நான் குடிச்ச டிரிங்க்ஸ்ல ஏதோ மிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன்.பார்ட்டி நடக்கும் போது சும்மா ஜாலிக்காக இப்படி பண்ணுவாங்கப்பா.ஆனா அட்வாண்டேஜ் எடுத்துக்க மாட்டாங்க.இனிமே இப்படி ஆகாதுப்பா"என்றவளை

"சரி ஏதோ சொல்ர.இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கோ.சரியா.வீட்டுல உன் தம்பி இருக்கான்.அவன் உன்ன பார்த்து கெட்டு போயிட கூடாதுன்னுதான் நான் இப்படி சொன்னேன்.மத்தபடி உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லடா.சரியா.இனிமே பார்த்து கவனமா நடந்துக்க"என்ற தந்தையை அணைத்தவள்

"கண்டிப்பா டாட்.இனிமே இப்படி ஆகாது"என்று முத்தமிட்டால்.

தன் தந்தை கூறியதையே யோசித்துக்கொண்டு வந்தவள் உடனே திவ்யாவுக்கு கால் செய்து

"ஏய் திவ்யா,நைட் என்னாச்சு?நான் எப்படி மயக்கமானேன்?"என்றவளை

"ஷாக்ஸ் ,டென்சன் ஆகாத. நைட் யாரையோ ப்ளாட் ஆக்க டிரிங்க்ஸ்ல எதையோ மிக்ஸ் பண்ணி இருக்கானுங்க.அத நீ தவறுதலா குடிச்சிட்ட.எனக்கும் இது தெரியாது.அப்புறமா பார்த்தா நீ கெஸ்ட் ரூம்ல தூங்குறேன்னு நம்ம வைஷ்னவி சொன்னா.ரவி வருவாருன்னு ஒரு 2 மணித்தியாலம் காத்துக்கிட்டு இருந்தேன்.ஆனா அவரு வரல்ல.அதான் உடனே உன்ன கூட்டிட்டு வீட்ட வந்துட்டேன்" என்றவளை

"சரிடி .என்ன கருமாந்திரத்த கலந்து வெச்சிருந்தானுங்களோ தெரில.ஒரே உடம்பு அசதியா இருக்கு.நான் தூங்க போறேன்.பாய் டி"என்றவளை

"சரிடி எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.நைட் உன்ன மயக்கத்துல‌‌ டூ வீலர்ல கொண்டு‌வர நான்‌ பட்ட பாடு இருக்கே.அய்யய்யோ.நான் ரொம்ப டயர்ட்ட இருக்கேன்.உனக்கு நான் அப்புறமா கால் பண்றேன்"என்று திவ்யா காலை கட் செய்தால்.

சரி மீண்டும் தூங்கலாம் என அறைக்குள் சென்றவளை அவளின் தம்பி வினய்

"அக்கா ,அக்கா என்னோட மொபைல பார்த்தியா?எங்க வெச்சேன்னு தெரியல"என்று சத்தமிட்டு வந்தவனை

"டேய் எருமை மாடே,எதுக்குடா என்ன ஏலம் போடுற.உன் மொபைல் எங்கன்னு உனக்கே தெரியாட்டி எனக்கு எப்படி தெரிய போகுது.ஆமா IIT படிக்கேன்னு சொல்லிட்டு சும்மா ஊர சுத்துரியா?"என்றவளை

"அம்மா தெய்வமே,ஒரு மொபைல கானோம்னு தேடினதுக்கு இவ்வளவு திட்டா.முடியல, வேணாம் ,அழுதுடுவேன்"என்று வடிவேலு பாணியில் பேசியவனை

"சரி சரி ,ரொம்ப பண்ணாத.ஆமா லாஸ்ட் வீக் க்ரூப் ஸ்டடினு சொல்லிட்டு ஐயா ப்ரெண்ட்ஸ் கூட மூவி பார்க்க போன மாதிரி இருந்திச்சி"என்று கேட்ட தன் அக்காவை முறைத்தவன்

"ஆமா நான் மூவி பார்க்க போனேன்.நீங்க அந்த இடத்துல என்ன பண்ணீங்க"என்று நக்கலாக அவளை பார்த்து கேட்க இப்போது ஷாக்சிக்கு தான் வாலண்டியராக போய் தன் தம்பியிடம் மாட்டிக்கிட்டோமே என்று புரிந்தது.

"அது ..அது ...அங்க என்னோட ஸ்டாப்..."என்று ஷாக்சிக்கு வார்த்தைகள் தந்தி அடிக்க வினய்யோ

"போதும் போதும்.என்னையா மாட்டிவிட பார்க்குறே.இரு உன்ன அப்பாகிட்ட மாட்டிவிடுறேன்"என்று கொஞ்சம் கராராக பேசிய தன் தம்பியை பாவமாக பார்த்தவள்

"டேய் வினய்,அப்பாகிட்ட சொல்லிடாதடா.நீ போனத நான் சொல்லமாட்டேன்.நான் போனத நீ சொல்லாததடா ப்ளீஸ்"என்றவளை

"நீ என்ன வேணா அப்பாகிட்ட சொல்லிக்க.எனக்கு கவலையே இல்ல.என்னையா மிரட்டுற.இரு உனக்கு இன்னைக்கு இருக்கு"என்றவனை

"டேய் ப்ளீஸ் டா..இனிமே உன் பக்கமே நான் வரமாட்டேன்.நீ என்ன வேணா பண்ணிக்கோ.அப்பா இப்போதான்டா எனக்கு ஒரு அட்வைஸ் மழையே பொழிஞ்சிட்டு போய் இருக்காரு.ப்ளீஸ்டா தம்பி"என்றவளை நக்கலாக பார்த்த வினய் நெற்றியை தன் விரல்களால் யோசிப்பது போல தேய்த்து

"அப்போ கொஞ்சம் செலவாகுமே பரவாயில்லையா"என்று கேட்டவனை ஷாக்சி மனதுக்குள்

'பக்கி இன்னைக்கு நம்ம கிட்ட காச பார்க்காம போகமாட்டான் போலயே.சும்மாவே ஐநூறு,ஆயிரம்னு கேட்பான் இன்னைக்கு எவ்வளவோ.அவன் கேட்க முன்னாடி நம்மலே ஒரு 2 ஆயிரத்த கொடுத்துடுவோம்' என்று தன் பர்சை எடுத்து காசை நீட்ட வினய்யோ

"என்ன இது.முன் ஜாக்கிரதையா 2ஆயிரத்தோட எஸ்கேப் ஆகலாம்னு பார்குறியா.இன்னைக்கு நல்லா மாட்டி இருக்கே.உன் வாய வெச்சிகிட்டு சும்மா இருக்காம என்ன சீண்டி பார்த்தேல.அதுக்கு உனக்கு 5 ஆயிரம் தண்டம்.சோ மீதி 3 ஆயிரத்தையும் எடு"என்று மிரட்டும் தன் தம்பியை பர்சில் இருந்து மேலும் 3 ஆயிரத்தை எடுத்து கொடுத்த ஷாக்சி

"டேய் இதெல்லாம் நல்லதுகில்லடா.ஒரு நாளைக்கு நீ என்கிட்ட மாட்டுவ அப்ப இருக்கு உனக்கு"எனக்கு என்று கூறிய ஷாக்சியை

"அக்கா டெய்லி என்கிட்ட வந்து ஏதாச்சும் கேளு ஓக்கே.அப்போதான் டெய்லி எனக்கு எக்ஸ்ட்ரா பேட்டா கிடைக்கும்"என்று நக்கலடித்த தன் தம்பியை ஷாக்சி மனதுக்குள்

'நம்ம பேசாம மூடிகிட்டு இருந்து இருக்கலாம்.சும்மா இவன் கிட்ட வாய கொடுத்த் இப்ப 5 ஆயிரம் தண்டமா அழுதிருக்கம்.ஹ்ம்ம் நம்ம தலை எழுத்து அப்படி' என்று நினைத்து அறைக்குள் சென்று தூங்க தொடங்கினால்.

ஷாக்சியின் தந்தை சிறிய ஒரு புடவை கடை நடத்தி வந்தவர் கடந்த 2 வருடமாக கொஞ்சம் கடையை புதுப்பித்து நல்ல வியாபாரம் பார்க்க ஆரம்பித்திருந்தார்.அவருக்கு எப்போதுமே ஷாக்சியை நினைத்து ஒரு பெருமை உண்டு.தன் மகள் பார்க்க நல்ல கலராக இல்லை என்றாலும் பார்க்க கண்ணுக்கு லட்சனமாக அழகாக இருப்பாள்.அவளை IIT இல் படிக்க வைத்தவர் தன் மகனையும் IITலயில் அவனின் விருப்பத்தின் பெயரில் படிக்க வைக்கின்றார்.

இரண்டு நாளாக உடல் நிலை சரி இல்லை என்று ஆபீஸ் செல்லாத ஷாக்சி மூன்றாவது நாள் ஆபீஸ் சென்றவள்

"ஹேய் திவ்யா,எங்கடி ரவிய காணோம்"என்று கேட்டவளை திவ்யா கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தவள்

"என்ன சொல்ர ஷாக்சி,ரவி ஆன்சைட் போய்ட்டாரே.இந்த வீக்கெண்ட்தான் போரதா இருந்திச்சி.ஆனால் க்ளையண்ட் அவசரமா வர சொன்னதால நேத்தைக்கே அவரு போய்ட்டாரு.ஆமா உன்கிட்ட அவரு ஏதுமே சொல்லலயா?"என்று சந்தேகமாக கேட்டவளை ஷாக்சி

"இல்லடி 2 நாளா கால் பண்றேன்.ஆன்சர் இல்லை,அன்னைக்கு அவன் பார்ட்டிக்கு வரவும் இல்ல.நேத்தைல இருந்து போன் வேற ஸ்விட்ச் ஆப்னு வருது.ஹ்ம்ம் நாட்டுல இல்லாதவன் போன் ஸ்விட்ச் ஆப்னுதான் வரும்.ஆனால் இவன் ஏன் என்கிட்ட சொல்லாம போனான்.பக்கி கால் பண்ணட்டும் அவனுக்கு இருக்கு"என்று கோவப்பட்ட ஷாக்சியை

"மேடம் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா இருங்க.அவனுக்கு என்ன கஷ்டமோ.திடீரென ஆன்சைட் போக சொன்னா அவன் செய்வான்.சரி அவன் வாட்சப்புக்கு டிரை பண்ணி பாரேன்"என்ற திவ்யாவை முறைத்த ஷாக்சி

"ஏண்டி உனக்கு பெரிய ஜீனியஸ்னு நினைப்பா.கால் போகலன்னா நெக்ஸ்ட் வாட்சப்தான் பார்ப்பேன்.பட் அது அவனோட லாஸ்ட் சீன் ஸ்டேடஸ் 2 நாளைக்கு முன்னாடிதான் காட்டுது"என்று கவலையுடன் கூறிய ஷாக்சியை திவ்யா

"சரி சரி சும்மா டென்சன் ஆகாத ஒக்கே.எப்படியும் அவன் போய் செட்டில் ஆனதும் உனக்கு கால் பண்ணுவான்"என்று ஆறுதல் கூறி தனது காபினுக்குள் நுழைந்தால்.ஆனால் இங்கு ஷாக்சியின் மனம் ரவி ஏன் தன்னிடம் எதுவுமே கூறாமல் சென்றான் என்று யோசித்துக்கொண்டே இருக்க புத்தியோ

'ஒரு வேலைய அதோட டெட்லைனுக்கு ஒரு மணித்தியாலம் முன்னாடி கேட்டாலே நமக்கு கையும் ஓடாது ,காலும் ஓடாது.பாவம் அவன் இந்த வீக்கெண்ட் போகவேண்டியவன வீக்கோட ஆரம்பத்துலேயே போக சொன்னா என்ன செய்வான்.ஹ்ம்ம் சரி மாப்பள கால் பண்ணட்டும் அப்புறமா இருக்கு அவனுக்கு என தனக்கு தானே பேசிக்கொண்டால்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro