Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தென்றல் 17

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியை காட்டுவது என்று தெரியாமல் குழம்பி இருந்த மித்ரனை ஜானவி

"என்ன மித்ரன் ரொம்ப குழம்பி போய் இருக்கிற மாதிரி இருக்கு" என்று புன்னகை மாறாமல் பேசியவளை மித்ரன்

" என்ன ஜானவி இது .அப்போ எனக்கு டெய்லி பொக்கே அனுப்பினது நீதானா?எதுக்கு எனக்கு பொக்கே அனுப்பின?" என்று கேட்க ஜானவியோ மித்ரனின் அருகில் வந்து அவனின் கரத்தை தன் கரங்களுக்குள் வைத்து

" மித்ரன் ஐ லவ் யூ சோ மச்.உங்கள நான் காலேஜ்ல இருந்தே லவ் பண்றேன்.ஆனா ஒரு பயம் எங்க நான் வந்து உங்க கிட்ட பேசினா என்னயும் மத்த பொண்ணுங்க கிட்ட பேசுர மாதிரி மோசமா பேசிடுவீங்களோன்னு பயந்துதான் நான் என் காதல என் மனசுக்குள்ளயே போட்டு மறைச்சிட்டேன்.ஆனா என்னதான் என் காதல நான் அணை போட்டு தடுத்தாலும் குளத்துல நீர் மட்டம் அதிகமாகுற மாதிரி என் காதல் தினமும் அதிகமாகிட்டே போயிடிச்சி.நீங்க இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால கனவுலயும் நினைச்சி பார்க்க முடியல" என்றவளை மித்ரன்

" நீ சொல்ரத கேட்டு நான் பழைய மித்ரனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன்.ஆனா இப்போ நான் ஒரு ஊனம்.என்னால எழுந்து நடக்கவே முடியாது.இதுல நான் உன்ன காதலிச்சி...." என்றவனை இதற்கு மேல் பேசவைக்க கூடாது என நினைத்தவள் அவனை மூச்சு முட்டும் அளவுக்கு இறுக்கி அனைக்க மித்ரனோ மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தான்.

ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருந்தாவன் சுதாகரித்து அவளை விட்டு விலகி அவள் கண்களை பார்த்தவன்

" இதை இப்போ சொல்ரது கரக்டான்னு தெரியல்ல ஜானு.நீ எப்போ எனக்கு பொக்கே அனுப்பினியோ அன்னைல இருந்து எனக்கு அந்த முகம்தெரியாத பொண்ணு மேல ஒரு ஈர்ப்பு வந்திச்சி.ஆனா இந்த நிலமைலயும் என்ன காதலிக்கிறேன்னு சொன்ன பார்த்தியா அதுல உன்னோட உயர்ந்த குணம் தெரியுது.ஆனா எனக்கு உன்மேல காதல் இருக்கான்னு தெரியல ஜானு" என்று கூற அவளோ புன்னகையுடன்

" மித்ரன் ஒன்ன கவனிச்சீங்களா நீங்க என்ன ஜானவினு கூப்பிடாம ஜானுனு கூப்பிட்டீங்க.அதுலயே தெரியல நீங்களும் என்ன காதலிக்கிறீங்கன்னு" என்று கூற அப்போதுதான் மித்ரனுக்கு உரைத்தது தான் அவள் பெயரை முழுமையாக கூறாமல் சுருக்கி கூப்பிட்டதை.

" இல்லடா, என்ன மாதிரி ஒரு நடக்க முடியாதுன்னு இருக்குறவன உங்க அப்பா எப்படி...." என்று இழுக்க அவளோ

" ஹைய்ய்யா..மித்ரன் அப்போ உங்களுக்கு ஓக்கேயா.தாங்க் காட்.எங்க என்ன வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னு ரொம்ப பயந்தேன்.எங்க அப்பா என் விருப்பத்துக்கு மாற்றமா எதுவுமே பண்ண மாட்டாங்க.சோ அப்பாலாம் இங்க ப்ராப்ளமே இல்ல" என்று சிறு குழந்தை போல குதூகலித்தாள்.

வாழ்க்கையில் எல்லாமே நம் விருப்பப்படி நடப்பதில்லை.அப்படி நடந்தால் இறைவன் என்ற ஒருவன் இருப்பதையே மறந்துவிடுவோம்(புரியுதா).

என்னதான் மித்ரன் ஜானவிக்கு சம்மதம் சொன்னாலும் அவனுக்கு மன்தில் ஷாக்சி பற்றிய கவலை இருந்து கொண்டே இருந்தது.ஏனென்றால் அவளுக்கு தருவதாக கூறியிருந்த 25 லட்சத்தில் 15 லட்சம் கொடுத்தது போக மீதி 10 லட்சம் இன்னுக் கொடுக்கவில்லை.இப்போது இருக்கின்ற நிலமையில் அவனால் அந்த பணத்தை நேரத்திற்கு கொடுக்க முடியுமா என்பதும் தெரியாமல் அவனின் மனம் மிகவும் சங்கடமாக இருந்தது.ஷாக்சியும் அவனிடம் பணம் பற்றி எதுவுமே பேசவில்லை.

ஒரு நாள் மித்ரனை பார்க்க அவர்களின் வீட்டுக்கு வந்த ஜானவி மித்ரனுடன் பேசிக்கொண்டிருக்க அவனின் முகம் பொலிவிழந்து காணப்பட அவளோ அவன் நெற்றியில் கை வைத்து

" என்ன மித்ரன் உடம்புக்கு முடியலயா? ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க" என்று கேட்க அவனோ கொஞ்சம் உலர்ந்த புன்னகையை முகத்தில் சூடி அவனுக்கும் ஷாக்சிக்கும் இடையில் நடந்த அக்ரீமன்ட் பற்றி கூறினான்.இதைக்கேட்ட ஜானவியோ எப்போதும் போல அவள் முகத்தில் இருக்கும் ட்ரேட்மார்க் புன்னகையுடன் அவனிடம்

" இதுதான் மேட்டரா.சரி இதெல்லாம் ஒரு விசயமே இல்ல மித்ரன்.இன்னும் எவ்ளோ நாள் டைம் இருக்கு அவலோட பேங்க் லோன செட்டில் பண்ண" என்று கேட்க அவனோ

" இன்னும் ஒரு இரண்டு  இல்ல ஒரு இரண்டறை மாசம் இருக்கும்னு நினைக்கிறேன் " என்று கூறியவனின் அருகில் வந்த ஜானவி

" நீங்க ஒன்னும் அது பத்தி யோசிக்காதீங்க மித்ரன்  .அந்த பிரச்சினைய நான் முடிச்சி வைக்கிறேன்.என்ன  பணத்த அரேஞ்ச் பண்ண ஒரு ரெண்டு வாரம் போகும்" என்றவளை

" இல்ல ஜானவி வேணாம்.நானே ஏதும் அரேஞ்ச் பண்ண....." என்று பேசி க் கொண்டிருந்தவனை அவள்

" ஏன் மித்ரன் நான் ஷாக்சிக்கு காசு கொடுத்தா என்ன.நான் உங்க பொண்டாட்டி ஆக போறவதானே.அதுவுமில்லாம ஷாக்சி இபோதான் உங்களுக்கு ப்ரெண்ட்.எனக்கு காலேஜ்ல இருந்தே ப்ரெண்ட்தான்.சோ நான் உங்களுக்காக இல்லன்னாலும் அவளுக்காக செய்வேன்.அது நீங்க இல்ல யாரும் தடுக்க முடியாது" என்று கொஞ்சம் காட்டமாகவே பேசியவளை

" அதுக்கில்ல ஜானு, அவளுக்கு இருக்குற கஷ்டத்த அவ வெளில சொல்லிக்க விரும்ப மாட்டா.அவ ஆரம்பத்துல இது பத்தி பேசும் போது யார்கிட்டயும் இதை சொல்ல கூடாதுன்னு சொன்னா.ஆனா இப்போ உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா அவ மனசு வருத்தப்படும்மா.அதுக்குதான் சொல்ரேன்" என்று கூற ஜானவி அதற்கு எல்லாம் அசராமல்

" அவ ஒன்னும் மூணாவது ஆளு இல்ல ஓக்கே.அவ என்னோட ப்ரெண்டு.அவளுக்கு எப்படி ஹெல்ப் பண்ணனும்னு எனக்கு தெரியும் " என்று கூற மித்ரனோ தன் தாயால் எல்லா பெண்களையும் வெறுத்ததிற்கு மிகவும் வேதனைப்பட்டான்.சமீபகாலமாக அவன் வாழ்க்கையில் தோன்றிய மூன்று பெண்களுமே பெண் இனத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதை பார்க்கும் போது பெண்கள் பற்றி அவன் கொண்டிருந்த அபிப்ராயம் மீது கோவம் வந்தது.

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மித்ரனுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த திவ்யாவுக்கு கால் வர எடுத்து பேசியவள்

"என்ன சொல்ரீங்க?இப்போ எங்க இருக்கீங்க.நான் உடனே வரேன்" என்று காலை கட் செய்தவள் மித்ரனிடம் வந்து

" அண்ணா ,நான் கொஞ்சம் அவசரமா வெளில கொஞ்சம் போயிட்டு வர்ரேன்" என்று கூறி அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் உடனே சென்றவளை மித்ரன் ஆச்சரியமாக பார்த்தான்.

" டேய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வாரத்துக்கு ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பணணுவ.உன்ன கொல்லாம விடமாட்டேன்ட்டா" என்று தனக்கு முன் இருந்தவனின் சட்டையை பிடித்து அர்ஜுன் கேட்க அவனோ

" யோவ் ,யாருய்யா நீ.நானே இப்பதான் ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்னு வந்தேன்.ஆனா நீ அதை கெடுத்துடுவ போல இருக்கே" என்று கூற பக்கத்தில் இருந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தால்.ஆனால் அர்ஜுனோ

" டேய் அன்னைக்கு திவ்யாவ ப்ரபோஸ் பண்ணிட்டு இன்னைக்கு அதே ஸ்டைல் அன்ட் மாடுலேசன்ல அதே ஆபீஸல் வேல செய்ற இந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்ரியே.உன்ன மாதிரி ஆளுங்களாலதான்டா எல்லா ஆம்பளைக்கும் கெட்ட பேரு" என்று கூற அர்ஜுனின் கையால் அடிவாங்கியவனை பார்த்து மேலும் பேசிய அர்ஜுன்

" இருடா நான் திவ்யாவுக்கு கால் பண்ணி இங்க வர சொல்ரேன் .அவ வந்ததுக்கு அப்புறமா உன்ன கொல்றேன் பாரு " என்று கூறியவன் திவ்யாவுக்கு கால் செய்தான்.

உள்ளே வந்த திவ்யா வந்த வேகத்திலேயே அவினாஷை அடித்தவள்

" எப்படிடா என்ன விட்டுட்டு இன்னொரு பொண்ண நீ ப்ரபோஸ் பண்ணலாம்.அப்போ என்ன லவ் பன்றேன்னு சொன்னது எல்லாம் பொய்ய்யா" என்று கேட்க இப்போது அவினாஷ் நிஜமாகவே குழம்பினான்.

" என்ன திவ்யா சொல்ர.அது அன்னைக்கு ஏதோ விளையாட்டா" என்றவனை அர்ஜுன் சரமாரியாக அடிக்க துவங்கியவன்

" உன்ன கொல்லாம விடமாட்டன்டா" என்று சத்தமிட பயந்த திவ்யா அர்ஜுனை பார்த்து

" அர்ஜுன் என்ன இருந்தாலும் என்ன கட்டிக்க போறவர நீங்க எப்படி அடிக்கலாம்.விடுங்க அவர" என்று கூற அர்ஜுனோ மனதில் வலியுடன் அவினாஷை விட்டு விலகினான்.

அடிவாங்கிய அவினாஷிடம் சென்ற திவ்யா

" ஏன் அவினாஷ் அன்னைக்கு என்ன ப்ரபோஸ் பண்ணப்போ எங்க அண்ணன்கிட்ட கேட்டு சொல்ரேன்னு சொன்னேன்ல.அதுக்கிடைல அண்ணனுக்கு இப்படி அடிபட்டுடிச்சி.அதான் நான் எந்த பதிலுமே சொல்லல.அதுக்காக நான் உங்கள லவ் பண்ணல என்று எப்படி நீங்க முடிவு செய்யலாம்.நானும் உங்கள உயிருக்கு உயிரா லவ் பண்றேன் அவினாஷ்.நம்ம அண்ணனுக்கு டிரீட்மன்ட் முடிஞ்சதும் கல்யாணம் பணணிக்கலாம் " என்று கூற பக்கத்தில் இருந்த பெண்ணோ கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro