Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -17

"இனியன் இறந்துட்டான்.." என அவன் கூறியதைக் கேட்டு மாசா பிரம்மை பிடித்தார் போல் கால்களை மடக்கி தரையில் அமர,
நிலாவுக்கு சில நிமிடம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே பிடிப்படவில்லை. அவனை கடைசியாய் பார்த்த அந்த இரவை அவளால் மறக்க முடியுமா?.. தன் வாழ்வை மாற்றிய அந்த இரவில் அவனுக்கும் பங்குண்டு தானே. அவன் வரவில்லை என்றால் ஹரிஷின் சுயரூபம் அவளிற்கு தெரிந்திருக்காதே. பெயர்கேத்தார்ப் போல் எப்போழுதும் இனித்தவன் முதல் முறையாய் கசந்தான் அன்று. அவனோடு பழகியது சிறிது காலம் தான் என்றாலும் ஓர் ஆழமான உறவாய் மாறிப்போனான். அவனது பச்சை கண்களை வைத்தும் பிஜிலியிடம் பேசியதை வைத்தும் அவன் மாயனின் சகோதரன் என்று யூகித்திருந்தாள். அன்று இரவுக்கு பிறகு அவனை இங்கு கூட அவள் சந்திக்கவில்லையே. அவன் தன்னை கொல்ல வந்தவன் என்று அறிந்தும் ஏனோ அவனது இறப்புச் செய்திக் கேட்டு அவள் மனம் கனத்தது. மூளை அவனை துரோகியாக நினைத்தாலும் மனம் அவனை நண்பனாகவே நினைத்தது.

"எப்போ?" என மாசா உடைந்த குரலில் கேட்க,

"இரண்டு நாள் முன்னாடி" என்றான்.

மாசாவின் அழு குரல் கேட்க திராணி இல்லாமல் வெளியே சென்றுவிட்டான் மாயன். மற்றவர்கள் முகத்தில் பெரிதாய் சோகம் தெரியவில்லை நிலாவுக்கு. அவனிடம் சென்றவள், "மாயன், இனியன் எப்படி இறந்தான்?"

"எனக்குத் தெரியாது."

"பொய் சொல்லாத மாயன்"

"இதுல பொய் சொல்ல என்.." அவனை கத்திறித்தவள் "நடிக்காத. ரெண்டு நாள் முன்னாடி நைட் என்ன நடந்ததுனு உனக்கு தெரியாது?"

"இல்லை" என வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

"போதும். பொய் சொல்றதை நிறுத்து. நேத்து நான் அவனைப் பத்தி கேட்டப்போக் கூட உன் பேஸே மாறிடுச்சி. அன்னைக்கு நைட் நீ அவனைப் பார்க்கவே இல்லையா?"

"பார்த்தேன் தான்." என கண்களை இறுக்க மூடி கூறினான்.

"அப்போ அவன் என்னைக் கொல்ல தானே வந்தான். ஆனா நீ முந்திக்கிட்ட. அதுக்கு அப்புறம் என்ன நடந்தது?"

அவள் தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவன், "உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியம் இல்லை.", என  கத்திவிட்டு விருட்டென செல்ல, தன் கண்களை விட்டு அவன் மறையும் வரை அவனையேப் பார்த்துத் கொண்டு இருந்தாள் நிலா.

இங்கு கோட்டையில்..

"யாரவள்?" என கம்பீரம் கலந்தக் குரலில் கேட்டான் அவன்.

"தெரியவில்லை அரசே. மாயனின் தோழி ஈலா தங்கி இருக்கும் குடிலில் தான் அவளைக் கண்டேன்"

"தன் அண்ணனின் இறப்புச் செய்திக் கேட்டவன் அதிர்ந்தானா என்ன?"

"அவன் இதைச் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை என அவனது முக பாவனையே கூறியது அரசே" என்றவன் சற்று இடைவெளிக்கு பிறகு,

"அந்த பெண்னை என்ன செய்வதாய் உத்தேசம் அரசே?"

"முதலில் அவள் யார் என கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேலை நாம் தேடியவள் அவளாய் இருந்தால், மாயனின் கண் முன்னே அவளை துடிதுடிக்க கொல்லவேண்டும்."

"இன்றிரவு சஊலாவை அவள் இருப்பிடத்திறுக்கு அனுப்பி வைத்து விடவா அரசே?"

"இன்று வேண்டாம். நாளை இரவு." எனக் கூறியவனிடம் காவலர்கள் விடைப்பெற்றுக் கொண்டு செல்ல, வன்மமாய் சிரித்தான் கொம்பன்.

தன்னை சுற்றி நடக்கப் போகும் விபரிதங்கள் அறியாமல், நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் நம் நிலா.

நாள்: 4

காலை விடியல் அழகாய் இருந்தாலும் நிலாவிற்கு அது அழகாய் இல்லை. அவளது தொடர் தும்பலில் அவளது தலைவேறு பாரமாய் வலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவளிடம் ஈலா சுடச்சுட ஏதோ ஒரு பானத்தைக் குடுத்தாள்.

அதைக் குடித்த பிறகு தொண்டை வலியும் தலை வலியும் லேசாய் குறைந்ததுப் போல் உணர்ந்தவள், அதன் செய்முறையைக் கேட்டு தெரிந்துக் கொண்டாள்.

வெளியே வந்தவள், மாசா தனியாய் நிற்பதைக் கண்டாள். இனியன் இறந்த செய்திக் கேட்டதில் இருந்து அவள் வாடிய முகத்தோடு இருப்பது நிலாவிற்கு உறுத்தலாய் இருக்க, அவளை சமாதனம் படுத்த வேண்டி அவளருகில் சென்றவள், அவள் தோலை சினேகமாய் அழுத்தியவுடன், விருட்டென தட்டி விட்டாள் மாசா.

அவள் கையை தட்டி விட்டது மட்டுமின்றி, "எல்லாம் உன்னாலதான்.." என கத்தியவளை புரியாமல் நிலா பார்க்க,

"எல்லாம் தெரிஞ்சும் நடிக்காத.. முதல்ல உன்னால என் அப்பா என்னை விட்டு போனாரு. இப்போ இனியன் அண்ணன். இன்னும் உன்னால யாரெல்லாம் சாகணும்.. சொல்லு? எனக்குனு இருக்குறது என் மாயன் அண்ணாவும் என் தம்பியும் மட்டும் தான். அவங்களுக்கும் உன்னால எதாவது ஆகிடுமானு, எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சு எங்கேயாவது போய்டு. எங்களை விட்டுத் தூரமா போய்டு." என உச்சஸ்தாணியில் கத்தி விட்டு நிலாவை திரும்பிக் கூட பார்க்காமல் சென்ற மாசாவை குழப்பமாய் பார்த்தவள், பின் தோள்களை குலுக்கிக் கொண்டு தன் வேலையைத் தொடர போய்விட்டாள். (அதாங்க சாப்டுட்டு தூங்குறது.)

அன்று நாள் முழுவதும் நிலாவின் தும்பல் சத்தத்தோடும், இரும்பல் சத்தத்தோடும் கழிய, இரவும் வந்தது.

அந்த நிசப்தமான நள்ளிரவில் ஈலாவின் குடிலை நோக்கி, ஒரு நாகம் வந்துக் கொண்டு இருந்தது. அதன் நெற்றியில் பிரகாசமாய் நிலாப் போன்ற சின்னம் பதிக்கப்பட்டு அது போகும் வழியை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அடைக்கப்பட்ட வாசலின் கீழ் இருந்த சிறு இடைவெளி, உள்ளே நுழைய அதற்கு பொதுமானதாக இருந்தது.

வரிசையாய் படுத்திருந்த மாசா, ஈலாவின் மேல் ஊர்ந்து கடைசியாய் இருந்த நிலாவை பார்த்து நிமிர்ந்த அது, சிறிது நேரம் அவ்வாறே இருந்துவிட்டு மீண்டும் வந்த வழியே சென்றுவிட்டது.

தன் முன் இருந்த ஒரு வட்டக் கண்ணாடியில் சஊழா (நாகத்தின் பெயர்) வின் நெற்றியில் இருந்த சின்னத்தின் வழியே உறக்கத்தில் இருந்த நிலாவின் முகத்தை பார்த்த கொம்பன், தன் நாற்காலியில் சாய்ந்த வண்ணம் "மாயன்.. மாயன்.. மாயன்.." என பற்களைக் கடித்துக்கொண்டே, பித்துப்பிடித்தவன் போல் சிரித்தான் கொம்பன்.

"இது அவள் தான் என்று உறுதியாகிவிட்டதே. தாமதிக்காமல் அவளை இருந்த இடம் தெரியாமல் உரு குழைத்து விடு." என அவன் அருகில் நின்றிருந்த அவனின் தந்தைக் கூற,

"எனக்கு சாதகமாய் இருப்பது போலே நடித்துக் கொண்டு, என் முதுகுக்கு பின்னால் சதி செய்கிறான் அல்லவா..?! அவனுக்கு நம்பிக்கையுரிவரை வைத்தே, அவள் உயிரைப் பறிக்க வைக்கிறேன். முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்." எனக்கூறி ஓர் அர்த்தப் புன்னகை சிந்தினான்.

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro