
நிறம் மாறும் மயிர்க்கால்கள்\\|
நம் கனவுகளுக்கு காலக்கெடு
காட்டும் கடிகாரங்கள்! இந்த
நிறம் மாறும் மயிர்க்கால்கள்!
காலையில் முகம் பார்க்கும் வேளையில்,
வெள்ளி போல் மின்னும் கண்ணாடியில்!
குழந்தை போல் நடிக்க முடியாது இனி மேலும்!
என்பதை உறுதிபடுத்தும் இந்த வெண்குழழி!
பொறுப்புடன் செயல்படச்சொல்லும் முடிகளது,
மரணம் வரை கடமைகளை எடுத்துரைப்பது!
இரவுக்கும் கண் உண்டு,
உறவுக்கும் உணர்வுண்டு,
இளமைக்கும் அளவுண்டு,
உனக்கும் துணையுண்டு,
கடைசி வரை நானே எனும்
ஒற்றைக்கால் வெள்ளி தேவதை
இவள் மட்டுமே!
என் மனமறிந்து சிலிர்த்தெழுவாள்!
எம் மக்களை மதிக்க வைப்பாள்!
காற்றுக்கு நடனம் ஆடுவாள்!
காதலி குரல் கேட்டு மட்டும்
மறைந்து கொள்வாள்!..
வெண்மை மேல் கொண்ட பாசம் எனக்கு,
கரு-மை பூச ஆசையில்லை உனக்கு!
கண்ணழகை காணமுனைவேன் கண்ணாடியில்,
உன்னழகில் மயங்கி நிற்பேன் தள்ளாடி!
உனக்காக வாழ்வேன் என்பேன் நான்,
உனக்காகவே வாழ்வேன் என்பாய் நீ....
எண்ணமும் எழுத்தும்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro