Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Episode 4

வகுப்பறையிலிருந்த முகிலன் வழக்கம்போல தான் முடிக்க வேண்டிய தலைப்பை 40 நிமிடங்களில் முடித்து விட்டு கடைசி 10 நிமிடங்கள் தனது மாணவர்களிடம் உரையாடினார்.

"எதாவது கேக்கனுமா சந்தோஷ், ரொம்பநேரமா ஏதோ கேட்க தயங்குற மாதிரி இருக்கு," என்று தன் மாணவனை பார்த்து கேட்டார்.

"ஆமா சார் இன்னும் 3 மாசத்துல செமஸ்டர்   வருது ,அடாமிக் ஃபிசிக்ஸ் இன்னும் முடிக்கலை அதான் கேட்களாம் னு," என்று தயக்கத்துடன் கேட்டான்.

"ஓ  அதை  பத்தி கவலைப்படாதீங்க உங்களுக்கு புது லெக்சரர் இன்னைக்கு ஜாய்ன் பண்ணிடாங்க. நல்ல திறமைசாலி அவங்க அடாமிக் ஃபிசிக்ஸ் எடுக்குற மாதிரி யாராலயும் எடுக்க முடியாது, ஆனால் அவங்க பெண்  அதனால வாலுதனம் பண்ணி என்ன சங்கடத்துல மாட்டி விட்டுடாதீங்க," என்று தன் மாணவர்களுக்கு புரிய வைத்தார்.

"நாங்க உங்க பசங்க சார் தாராளமா நம்பலாம் , உங்களுக்கு எங்களால எந்த சங்கடமும் வராது," என்று உறுதியளித்தனர்.அவர்களின் பதிலில் நிம்மதியடைந்த முகிலன் அவர்களிடமிருந்து விடைபெற்று
ஸ்டாஃப்ரூமிற்கு வந்து தன் வேலையை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான்.

கௌதம் வகுப்பிற்கு சென்றதாலும் மலர் தனக்கு தேவையான நோட்ஸ் எடுப்பதாலும் அங்கு அமைதி நிலவியது.

புயலென உள்ளே புகுந்த பெண்," ஹாய் ஸ்வீட் ஹார்ட் குட் மார்னிங்," என முகிலனின் அருகே சென்று அவன் அமர்திருக்கும் சேரில் அவனை நெருங்கி நின்று பேச துவங்கினாள்.

அவன் அமர்திருந்த நிலையில் இருக்க அந்த புதியவள் அவன் மீது சாய்ந்து அவன் சேரின் கைபிடியில்  அமர்திருந்தாள்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த நிகழ்வை கண்டு திகைத்த முகிலன் வேகமாக தன்னிடம் இருந்து  எழுந்து நின்று, "ரியா?  என்ன இது அநாகரிகமா?" என்று கத்தினான்.

"என்னாச்சு முகில் ஏன் கத்துறீங்க?" என்று கூறிவிட்டு  சுற்றி தன் கண்களை ஓட்டிய ரியா மிகவும் இறுக்கமான ஷார்ட்சுடி அணிந்திருந்தாள்.

அப்பொழுது தான் மலரை கவனித்தது போல   ,"ஓ  மூணாம் மனுஷங்கள்  இருக்காங்கன்னு தான் கத்துனீங்களா?" சாரி சாரி நான் கவனிக்கலை. சரி அப்ப ஈவனிங்மீட்  பண்ணலாம் ஒகே டார்லிங் பை...," என்றுவிடு ஒரு  பறக்கும் முத்தமும்  கொடுத்துவிட்டு சென்றாள்.

புயல் அடித்து ஓய்ந்த அமைதி நிலவியது. முகிலனால் மலரை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

நடந்ததில் அவன் தவறு இல்லை என்றாலும் அவன் அவமானமாக உணர்ந்தான்,"அய்யோ இவ சும்மா வே சாமி ஆடுவா இப்ப என்ன செய்ய போறாளோ?,"என்று மனதிற்குள் புலம்பிய முகிலன் மெதுவாக நிமிர்ந்து மலரை நோக்கினான்.

மலரோ தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தாள்.
முகத்தில் கோபம், இயலாமை போட்டிபோட்டுக்கொண்டிருந்தது.

வேகமாக அவள் அருகே சென்ற முகிலன் அவளது கையை பற்றி தனது நெஞ்சின் ஏக்கங்ளையும் காதலையும் ஒருங்கே திரட்டி "வதூ.......... "   என அழைத்தான்.





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro