Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

24

காலை முதல் அன்பு காணும் இடமெல்லாம் எழிலே தெரிய அவனோ பைத்தியம் போல ஆனான்... " அன்பு... அன்பு... மாமா...." என்று அவள் குரல் காற்றெங்கும் கேட்க அவனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த இயலவில்லை... தன்னை தவறாக எண்ணி பயந்ததை அவனால் தாங்கவும் இயலவில்லை...

காலையில் இருந்து எழிலின் உருவம் கண்முன் தோன்ற மிகவும் கவலையானவன் இரவில் என்றும் இல்லாமல் அன்று மது அறுந்திவிட்டு வந்தான்... இசை, இனியா, எழில் மூவரும் வீட்டில் இருக்க அன்புவோ போதையில் வர.. மூவரும் அதிர்ந்தனர்... இசையிடம் அன்பு காலையிலேயே தன் காதலை தான் மட்டுமே அவளது கண்பார்த்து கூற வேண்டும் என்றும்..

மீறி இசை அன்புவின் காதலைப்பற்றி இனியாவிடமோ அல்லது வேறு யாரிடமும் கூறினால் அவனை வாழ்நாள் முழுவதும் மன்னிக்கப்போவதில்லை... என்றும் கூறி சத்தியம் பெற்று இசையின் வாய்க்கு பூட்டு போட்டிருந்தான்... உள்ளே வந்த அன்பு போதையில் தன் அறைக்குச் சென்று உறங்க... இசை, இனியா இருவரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர்...

அன்பு உறங்கிக்கொண்டு இருக்கும் அறைக்குச் சென்ற எழில் அவனிடம் அமர்ந்து அவனது கூந்தலை கோதிவிட்டுக் கொண்டே " எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் டா.. ஆனா உனக்கு மட்டும் ஏன் அது புரியவே மாட்டீது... இத்தன நாள் நீ எவ்லோ நல்லவனா இருந்த ஆனா ஏன் நேத்து என்கிட்ட அப்படி நடந்துகிட்ட... எனக்கு எவ்லோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா??... ம்ம்ம்ம் பரவால... ஐ லவ் யூ டா ரொம்ப ரொம்ப லவ் யூ... லவ் யூ சோ மச்...." என்று அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளது அறைக்கு சென்றாள்... பாவம் அவனோ இதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்புவோ போதையில் " ம்ம்ம்ம் இவளுக்கு இப்படி வந்து வந்து ஐ லவ் யூ சொல்லறதே வேலையா போச்சு... ஏன் டி இப்படி வந்து வந்து கொள்ற ஆனா நெஜத்துல மட்டும் மொறைக்கற... நா இப்படியெல்லாம் இருந்ததே இல்ல... லவ் யூ லட்டு.." என்று கூறிக்கொண்டே உறங்கினான்... மறுநாள் என்றும் போல விடிய எழில் நிறுவத்திற்கு செல்லாமல் இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கப் போவதாக கூறி வீட்டில் தங்கினாள்...

அன்புவோ வழமைபோல நிறுவனத்திற்க்குச் சென்றான்.. ஆனால் அவனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை அடிக்கடி அவளது உருவம் வந்து வந்து மறைய ஒரு கட்டத்தில் கோவமே வந்தது... இரவு மீண்டும் மது அறுந்திவிட்டு வர வழியெங்கும் அவள்முகமே அவனது கண்களில் வந்து போனது...

வீட்டிற்கு வந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு செல்ல இசை, இனியா இருவரும் அவனை நிதானப்படுத்த முயன்றனர்... இனியா அன்புவிற்கு உணவை ஊட்டி விட்டாள் ( தங்கச்சி பாசம்னா அதுதான்) அவனோ உண்டுவிட்டு தன் அறையில் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருந்தான்... இனியா, இசை இருவரும் அறையைவிட்டு வெளியேறியபின்...

அன்புவின் நினைவில் எழில் " ஏன் டா இப்படி குடுச்சு இருக்க... நீ குடுச்சா எனக்கு புடிக்கல டா மாமா.." என்க..

அன்புவோ நிஜத்தில் தனியாக " நீ தான் என்ன இப்படி குடிக்க வெக்கற... உன் விழிகளில் தன்னிலை மறந்தேனடி.."என்று கூற அவளோ அவனை அணைத்து..

அவனது நினைவில் " சரி டா இனி குடிக்காத... அப்படி குடுச்ச அப்றம் உன்ன..." என்று அவனது காதைக்கடிக்க அவனோ காதைத்தொட அவளது உருவம் காற்றில் கரைந்தது...

" ஐயோ ஏன் டி இப்டி பண்ற இனி என்முன்னாடி வந்த உன்ன கொன்னுருவேன்..." என்க.. மீண்டும் மீண்டும் அவளே தோன்ற கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து உடைத்தான்.. போதையும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது...

வெளியில் இசை எழிலிடம் " இங்க பாரு டா.. அவனுக்கு உனக்கும் என்ன பிரச்சணனு எனக்கு தெரியாது ஆனா அன்பு நல்லவன் அவன மிஸ் பண்ணீறாத... நீ அவன் பொண்டாட்டி நீ தான் அவன்கிட்ட போயி ஏன் குடிக்கற என்ன ஏதுனு கேக்கனும் " எனக்கூறிவிட்டு மனதிற்க்குள் " நீ போயி பேசு மா அவன் லவ்வ உன்கிட்ட சொல்லுவா குடுச்சுட்டு ஒளருவான் அப்போ நீயே கேட்டு தெருஞ்சுக்குவ" என எண்ணினான்...

இனியாவோ " ஆமா டி நீ போயி அண்ணாகிட்ட பேசு.. இப்பவே கேளு போதைல எதாவது சொல்லுவா அண்ணா... நாங்க இங்க இருக்கோம் நீ போயி பேசு.." என்க...

எழிலும் யோசனையுடன் அவனது அறைக்குச் சென்று " அன்பு... " என்க..

அன்புவோ நிதானமின்றி " ஏய் உன்ன... என் முகத்துலையே முழிக்காத... என்ன ஏன் நிம்மதியா இருக்க விட மாட்டீற... உன் தொல்ல தாங்காமதான் குடுச்சுட்டு வந்த.. இப்போ எதுக்கு இங்க வந்த.." என்றான் அவள் பிரம்மை என எண்ணி...

அவளோ " நீ ஏன் குடுச்ச.. உனக்கு என்ன பிரச்சண?? எதா இருந்தாலும் சொல்லு ப்ளீஸ்.." என்க...

அவனோ "நீ தான் டி பிரச்சண.. இப்போ இங்க இருந்து போ... இல்ல நீ போகமாட்ட.. உன்ன..."  என்று அந்த உருவத்தின் தொல்லை என எண்ணி முன்பு பொருளை எடுத்து வீசவும் அவள் மறைந்ததைப்போல் மறைவாள் என எண்ணி தன் அறையில் இருந்த சிரிய கண்ணாடி மலர் குவளையை (flower vase) எடுத்து அவள்மேல் வீச அது சரியாக அவளது தலையில் பட்டது... அன்பு போதையில் " ம்ம்ம்ம் இனி வந்த அப்றம் பாரு..." என்று கீழே விழ...

எழிலிற்க்கோ தலையில் அது பலமான காயத்தை ஏற்படுத்தியது.. இரத்தம் வர அவளும் மயங்கி கீழே விழுந்தாள்... நெடு நேரம் ஆகியும் அவள் வராததால் இனியா அறையின் கதவைத்தட்ட அது தானாகத்திறந்தது... உள்ளே சென்றவள் எழில் மயங்கி இருப்பதைக்கண்டு இசையிடம் கூறி அவளை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்... அன்பு போதையில் இருந்தமையால் அவனை உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றனர்...

அன்புவின் கெட்ட நேரம் திருப்பதி சென்ற அனைவரும் வீட்டிற்கு வந்து கதவைப்பார்க்க நல்லிரவில் வீடு பூட்டப்பட்டிருப்பதால் பதரிய இன்பா (இசையின் தந்தை) இசைக்கு அழைக்க அவனோ மருத்துவமனையில் எழிலை சேர்த்துவிட்டு மருத்துவரின் பதிலுக்கு காத்திருந்தான்...

அந்த நேரம் போன் வர எடுத்துபேசிய இசை ஒரு பதற்றத்தில் எழிலிற்கு அடிப்பட்டிருப்பதைக்கூற.. அனைவரும் அங்கு திரண்டனர்... அனைவரும் " எப்படி அடி பட்டுச்சு.. அன்பு எங்க... டாக்டர் என்ன சொன்னாங்க... எழில் கண் முழுச்சாலா" எனக்கேட்க..

அன்புவின் மீது கோவத்தில் இருந்த இனியா " அன்பு அண்ணா குடுச்சுட்டு போதைல வந்து எழில அடுச்சுருச்சு.. அண்ணாவ வீட்ல வெச்சு பூட்டீட்டோம்.. எழில் இன்னும் கண்ணு முழிக்கல.. சின்ன காயம் தான்.." என்க...

எழிலின் தந்தை " என்னதா அவன் கோவக்காரனா இருந்தாலும் என்பொண்ண எப்படி அடிக்கலாம்.." என்க..

செல்வா(எழிலின் பெரியப்பா) " அதுவும் இப்படி இரத்தம் வர அளவுக்கு அடுச்சுருக்கான்.." என்க ...

மணி " அவனுக்கு அப்படி என்ன கோவம்.. அதுவும் குடிக்கவேற செஞ்சிருக்கா... படுபாவி என் மருமகள இப்படி அடுச்சுட்டான் " என்க..

மகாலட்சுமி " அதான் அவன் மொதல்லயே புடிக்கலனு சொன்னான்ல... ம்ம்ம்ம் நம்ம இன்னைக்கு வருவோம்னு தெருஞ்சே இப்படினா மத்த நாள்ள எழில எப்படி அடிச்சுருப்பான்..." என்று ஏத்தி விட..

வீட்டில் இசை உட்பட அனைவரும் அன்புவின் மீது கோவத்தில் இருக்க... வீட்டிற்குச் சென்று இதைப்பற்றி பேசிக்கொள்வோம் என்று அனைவரும் அமைதியாய் இருந்தனர்...

குணசேகரனின் மூலம் தகவல் அறிந்த ரவி அங்கு வந்து அவனும் அவனது பங்கிற்க்கு அன்புவைத் திட்டினான்.. இதுதான் சமயம் என்று இன்பா, செல்வா, ராஜா ( எழிலோட அப்பா, பெரியப்பா) மூவரையும் தனியாக அழைத்து

" அன்பு தினமும் எழில அடிப்பான், பயங்கறமா குடிப்பான் அதுமட்டு இல்ல நான் ஆபீஸ்ல விசாருச்சேன் அவனோட சொந்த ஆபீஸ்ல எழில வேலைக்கு வெச்சு இருந்திருக்கான்... ரொம்ப கொடும படுத்துவான்.. பாவம் எழில், அவள எப்படியாவது காப்பாத்துங்க.. நான் ஏன் இத சொல்லறன்னா எழில் எனக்கு தங்கச்சி மாதிரி... ப்ளீஸ் அன்பு எங்க வீட்டு பையன்தான் ஆனாலும் அவன் ரொம்ப மோசம்.. உங்களுக்கே தெரியும்ல அவன் ஒரு திமிரு புடுச்சவன்... அவன்கிட்ட மாட்டிக்கிட்டு எழில் ரொம்ப கஷ்டப்பட்றா அவள காப்பாத்தி உங்ககூட கூப்ட்டுட்டு போங்க... உங்கள கெஞ்சி கேக்கறன் ப்ளீஸ்... எழில் பாவம் " என நல்லவன் போல் நாடகம் போட

முதலிலேயே அன்புவின் மேல் கொலைவெறியில் இருந்த மூவரும் கோவத்தின் உச்சிக்கே சென்றனர்.. ஆனால் தாத்தா மட்டும் ஏதோ யோசனையிலேயே இருந்தார்...

இசையோ மனதிற்க்குள் " ஏன் டா லவ் பண்றனு சொன்ன அப்றம் ஏன் டா குடுச்சுட்டு ச்சே.... ஒருவேல அவட்ட லவ்வ சொல்லி அவ ஏத்துக்கலனு அடுச்சுட்டானோ....  ஐயோ ரெண்டு பேரும் மயக்கத்துல இருக்காங்கலே... என்ன ஆச்சூனு ஒன்னு தெரியலயே... " எனக்குழம்ப...

இனியா மனதிற்க்குள் " ஒருவேல எழில் லவ்வ சொல்லீருப்பாலோ... அண்ணா புடிக்காம கோவத்துல அடுச்சுருச்சோ... ஆனா அண்ணா பொண்ணுங்கல அடிக்காதே... நான்வேற கோவத்துல அண்ணாதான் அடுச்சானு உண்மைய சொல்லீட்டனே... " என்க..

காலை விடிய எழிலும் முழித்துக்கொண்டாள்.. அவளிடம் யாரும் எதுவும் கேட்க வேண்டாம் வீட்டிற்கு சென்று கேட்போம் என்று அனைவரும் அமைதி காத்தனர்..

அங்கு அறையில் கண்விழித்த அன்புவோ தன் அறையில் உள்ள பொருட்கள் உடைந்திருப்பதையும், இரத்தம் இருப்பதையும் பார்த்து பயந்தான்.. குடித்ததால் அவனிற்கு முன்னாள் இரவு நடந்த எதுவும் நினைவிற்கு வரவில்லை...

அவனோ அறைகளெங்கும் தன் இதய அறையில் இருப்பவளைத் தேட அவளைக் காணாதுபோகவே மிகவும் பயமடைந்தான்... வீட்டை விட்டு வெளியேற முயற்ச்சிக்க வீடு பூட்டப்பட்டு இருந்தது...

" போச்சு நா அவள அடுச்சுட்ட போல ... ஐயோ குடுச்சதுல எதுவும் ஞாபகம் இல்லையே... எழில்க்கு என்ன ஆச்சு... நா யார அடுச்ச... ஒருவேல இசை, இனியாவ அடுச்சுட்டனா... ஒன்னுமே ஞாபகம் வரலையே..." என தனியே பேசிக்கொண்டு இருந்தான்...

தனது போனை எடுத்து இசைக்கு அழைத்தான்....

Next part la pakkala ta ta 👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro