நாக்குமுக்க 4
நால்வரும் நான்கு மூலைகளில் தலைமேல் கைவைத்து அமர்ந்தவாறு இருக்க ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்... தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவை கையில் எடுத்தவன் தினேஷின் மேல் எறிந்துவிட்டு "டே கூமுட்டை தலையா ஏதாவது சொல்லி தொலை டா இப்படியே விட்டோம்னா உன் தங்கச்சியும், என் தங்கச்சியும் பைத்தியமா சுத்தனாலும் கேக்கறதுக்கு ஒன்னுமில்ல சோ சட்டுப்பூட்டுன்னு ஏதாவது யோசி..." என தனக்கு எதிரில் அமர்ந்திருந்த தினேஷை கேட்க.
அவனோ "தெரிஞ்சா சொல்லமாட்டோமா மச்சா எனக்கும் அதே யோசனையா தா இருக்கு விட்டா இவளுகளும் பைத்தியம் ஆகிடுவாங்கப் போல.. கேம் ஷோ, அந்த ஷோ, இந்த ஷோனு, வீட்டில தமிழ் மொழியைப் பத்திப் பேசிட்டு இருக்கரவளுங்க இனி வெளியப் போயி தமிழ் மொழியை சீர்திருத்த போர. சமூகசேவை செய்யறனு வெளிய போயிட்டா.
அசல் பைத்தியகார ஹாஸ்பிட்டல இருந்து பைத்தியங்கள் தப்பிச்சுடாங்கன்னு சொல்லிப் புடிச்சுட்டு போயிடங்கன்னா என்ன பண்றதுனு நானும் யோசனையாவே தான் இருக்கேன். ஆனா பாரு எனக்கு ஒன்னும் பிடிப்படமாடேங்குது..." என வருத்தமாக கூறியவனை முறைதனர் மூவரும்.
"இதோ பாருணா நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்து படிச்சது தமிழ், அப்புறம் கோர்ஸ் எடுத்ததும் தமிழ் தா, போதாதக் குறைக்கு நாங்க ரெண்டு பேரும் எம். எ. தமிழ் வரைக்கும் படிச்சுருக்கோம். சோ இப்படி இருக்கும் போது நாங்க என்ன பண்ண முடியும் சொல்லு வீட்டுல வெட்டியாக இருக்கோம்னு வேலைக்கு போகலாம்னு போனா அங்க ரொம்ப மோசம். எத்தனை ஸ்கூல்ல வேலை கேட்டம்னு உங்களுக்கு தெரியுமா, அவங்க பதில் சொன்ன ஒரே வார்த்தை இங்க தமிழ் கிடையாது.. இங்க ஃப்ரஸ்ட் லேங்குவேஜ் இங்கிலீஸும், ஹிந்தியும் தான் தமிழ் திர்ட் லேங்குவேஜ் சோ இங்க ஒரு ஸ்டாப் இருக்கான்னு சொன்னாங்க.
உங்களுக்கு வேணா நாங்க சொல்றது சாதாரண விஷயமா இருக்கலாம் ... ஆனா இது எங்களுக்கு பெரிய விஷயம் ஒரு தமிழ முதல் மொழியா எடுத்துக்க கூட வெட்க படற ஸ்கூல் இருக்கானு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என க்ருசிகா கூற
"ச்சே ஹிப்பாப் ஆதி படத்தை பார்த்துட்டு என்னமா பேசறா என் தங்கச்சி..." என நினைத்தான் அமைதியாக அவளை பார்க்க அவளோ பேச்சை முடிக்காமல் பேசி கொண்டிருந்தாள்.
"அதுக்கு அப்புறம் டியூஷன் வைச்சோம், நல்லா தான் இப்ப வரைக்கும் இருக்கு . ஆனா அந்த பசங்களுக்கு தமிழ் எழுதவே வரல தமிழ் மொழிய பேச கத்துகுடுத்த அவங்க அப்பா அம்மா தமிழ் மொழிய எழுத கத்துக்குடுகல அப்படிங்கர போது அந்த பெற்றோரமேலயும் அந்த ஸ்கூல் மேலயும் ரொம்ப கோவமா வருது ... நாங்க சமூக சீர் திருத்தவாதி இல்லையே எங்களால சொல்ல மட்டும் தானே முடியும் அதான் நன்குறம் மாதிரி சிரிச்சாவது சொல்ல நினைக்கிறோம். இதுக்கு.. பேரு நீ..." என அவள் அடுத்து பேச ஆரம்பிக்கும் போதே தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்ட தினேஷ்
"ஐய்யோ ஆத்தா, மாரியாத்தா ஒரு வார்த்தை சும்மா தா சொன்ன டி அதுக்கு ஏன் இந்த ஏறு ஏறற..
விடாம பத்து நிமிஷம் பேசற மதன் கௌரி கூட இடையில தண்ணி குடிச்சுருப்பாண்டி.. ஆனா நீ ரொம்ப ரொம்ப பேசற..." எனக் கூற மதன் கௌரியின் பெயரைக் கேட்டதும் மூவருக்கும் பொறித் தட்டியது..
"ஏய் செம டா.. அடியே இங்க பாருங்க டி இனிமே வெட்டியா பேசி இங்க எதுவும் சொல்லாம ஒரு யூடூப் சேனல் ஓபன் பண்ணி அதுல உங்க வீடியோவை போடுங்க கண்டிப்பா உங்களோட காமெடியான விடியோ மூலமா உங்களுக்கு தெரிஞ்ச தமிழை தாராளமா சொல்லுங்க.. என ஸ்ரீ கூற
"ஏய்ய.. ஜாலி.. செம ஐடியா.. ஒழுங்கா சேனல் ஓபன் பண்ணி கூடு டா எருமை என தன் அண்ணனிடம் கூறியவள் "லவ் யூ மாமா.." என கூறி அவனை பார்த்து ஓட அவனோ அவளை பிடிக்க கையை நீட்டிட அவனை தாண்டி அடுத்து இருந்த மதுகைஸ்ரீயை கட்டியணைத்துக் கொள்ள.. சத்தமாக சிரித்து விட்டான் தினேஷ்...
*****
என்னப்பா நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல... நீங்க சொல்லுங்க.. நான் நாளைக்கு விடையை சொல்லிட்டு அடுத்த தமிழ் வார்த்தையோட உங்களை சந்திக்க வரேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro