,
"ஹாய் ஹலோ ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க....
சாரி சாரி ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மறுபடியும் இந்த பக்கம் வரோம்.
எல்லாரும் எங்களை மன்னிச்சுக்கோங்க.. ஏன்னா எங்களுக்கு ரொம்ப பெரிய வேலை இல்லை இருந்தாலும் உங்களை பார்க்காமல் இருந்துட்டோம்...
ஆனா இனிமே கண்டிப்பா வர ட்ரை பண்றோம் ஓகேவா.
இன்னைக்கு என்ன டாபிக் அப்படின்னா அன்னைக்கே சொன்னேன் இல்லையா அதே டாபிக் தாங்க இண்னைக்கு பாக்க போறோம். நான் உங்க நாக்குமுக்க சுந்தரி.. இது உங்க நாக்குமுக்க மூக்குனாக்க சேனல்.. தொடர்ந்து பாருங்க..." என அவள் ஆரம்பித்த அடுத்த நொடி அவளை இடித்தவாறே வந்தாள் சிந்திரி..
"ஹலோ, ஹாய் எப்படி இருக்கீங்க.. நான் தான் உங்க மூக்குணாக்க சிந்திரி.. இன்னைக்கு நம்ம என்ன பாக்க போறோம் அப்படின்னா..." என அவள் ஆரம்பிக்க அவளை முறைத்தவாறே வந்தவள்
"போதும் போதும் அடங்கு... நான் முன்னாடியே சொல்லிட்டேன்.. இப்போ டாபிக் உள்ள போகணும்..." என அவள் தன் ஜடையை ஆட்டியவாறே சொல்ல
"முன்னாடியே சொல்ல மாட்டாயா எருமை.. சரிங்க மக்களே நாங்க ரெண்டு பேரும் அன்னைக்கு சொன்ன மாதிரி திட்டற வார்த்தைகள் அதாங்க நம்மலை நம்ம அம்மா ஆகட்டும் இல்லை நம்ம பிரின்ட்ஸ் ஆகட்டும் சும்மா சும்மா மடையன், வெட்டியா இருக்கா, முட்டாள், எருமை, கழுத, இப்படியெல்லா சொல்லி திட்டுவாங்களே அதை பத்தி தான் இண்னைக்கு நம்ம பாக்க போறோம்.
முதல்ல மடையன் அப்டிங்கறது ஏரி, வாய்க்கால், எல்லாத்துக்கும் மடை திறந்து விடுவாங்கள்ள சிந்திரி அவங்கள தான் அப்படி சொல்லுவாங்களம் ஆனா இது தெரியாத நம்ம மக்கள் திட்டற வார்த்தையா யூஸ் பண்ணிட்டாங்க.
"அதான் பாரு டி சுந்தரி என் அம்மா எல்லாம் சும்மா சும்மா என்னை மடைச்சின்னு திட்டும்.. இப்போ போயி நான் என்னை இப்படி வேலையா செய்யறேன்னு சொன்னா எங்கம்மா என்னை சொல்லும்.." என சிந்திரி கேட்க
"வேற என்ன பண்ணும்.. அந்த வேலை கூட செய்யமா வெட்டிய இருக்கற நீ, அத சொல்லாதன்னு சொல்லும் ..." என சுந்தரி சொல்லி சிரிக்க
"இதோடா... வெட்டிவேலைக்கு பொருள் வேற தெரியுமா என் சுந்தரி செல்லம்..." என நக்கலாக சிந்தரி கேட்க
"அப்படியா.. அப்ப அது என்ன.." என தடவாயில் கை வைத்தப்படி கேட்க
"ஆமா டி சுந்தரி.. வயல் எல்லாம் வரப்பு வெட்டி போடுவாங்களே அவங்கள தான் வெட்டிவேலை செய்யறவங்கன்னு சொல்லுவாங்களம்..." என சிந்திரி சொல்ல
"சே...சிந்திரி உணக்குள்ள இத்தனை அறிவா.. நான் கூட உன்னை முட்டாள் அப்படின்னு நினைச்சுட்டேன்..." என சொல்ல
"ஏய் சுந்தரி.. முட்டாள் அப்படினாலும் பொருள் வேற டி.." என்றாள் ஆர்வமாக
"அடி ஆத்தி... சிந்தரி எப்பவும் எருமை மாதிரி நிப்பா.. ஆனா இன்னைக்கு எவ்ளோ அறிவா பேசற.." மீண்டும் ஆச்சரியம் போல் சொல்ல
"அடுத்து அவள் வாய் திறக்கும் முன் அவளின் வாயை அடைத்த சுந்தரி மக்களே இவ ஓவரா கூகுள பார்த்துட்டு பொங்கிட்டு இருக்கா.. நம்ம அடுத்த செய்தியை நாளைக்கு பார்க்கலாம் இப்படிக்கு உங்களிடம் இருந்து விடை பெறுவது நாங்க தாங்க... "
****************
"என் அழகு ராட்சஸி.. எவ்ளோ அழக பேசற..." என தினேஷ் மதுகைஸ்ரீயை(சிந்தரி) கொஞ்சி அவளை அணைக்க
"டேய் நீ நாங்க இருக்கும் போது.. .. இப்படியா பண்ணுவ.." என மிரட்டியவனிடம்
"இதோ பாரு மச்சி.. நீ என் தங்கச்சிகிட்ட பேசு ஒடு.. சும்மா என் ஆளு கூட பேச வேண்டாம்னு சொல்லி என்னை கொடுமை பண்ணாத..." என தினேஷ் சொல்ல அவனை முறைத்தான் ஸ்ரீ..
"டேய் மாமா வா எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கி குடு..." என அழைத்த கிருசிகாவை(சுந்தரி) பார்க்க அவளோ அவனின் கையைப் பிடித்துக் கொண்டு தன் அண்ணன் மற்றும் வருங்கால மனைவியை தனியாக விட்டுவிட்டு பஞ்சு மிட்டாய் வாங்க தன்னவனை அழைத்து சென்றாள்..
***
இவங்க என்னமோ பண்ணட்டும் நம்ம போலாம் வாங்க மக்களே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro