Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

28 நீ... நான்...

கண்ணு மண்ணு தெரியாமல் வண்டியை விட்ட ஆதித்.... ஒரு கட்டத்தில் பைக்கை எங்கையோ முட்ட போனவனை காக்கவே சரியாய் வந்தது அந்த அழைப்பு.... ச என சலித்தவாறு பைக்கை நிறுத்தியவன் ஃபோனை எடுத்தான்... அதில் ராஜேந்திரன் தாத்தா தான் அழைத்திருந்தார்....

ஆதித் : ஹலோ

ராஜேந்திரன் தாத்தா : ஆதித்தா...

ஆதித் : சொல்லுங்க... என்றதிலே.... " பேரன் கோவமா இருக்கான் டா சகோதரா " என்று அருகில் நாராயனன் தாத்தா மெதுவாய் குரல் கொடுக்க... உஷாராகி கொண்டனர்...

ராஜேந்திரன் : தம்பி ஒருவேலை இருக்கு... நீ வீட்டுக்கு கெளம்பி வர முடியுமா...

ஆதித் : என்ன வேலை... தாத்தா... என கோவத்தை அடக்கியவாறு பேசினான்....

ராஜேந்திரன் தாத்தா : நீ வா தம்பி... கொஞ்சம் முக்கியமான வேலை....

ஆதித் : வீட்டுக்கே வரவா...

ராஜேந்திரன் தாத்தா : ஆமா பா... வீட்டுக்கே வா...

ஆதித் : ம்ம் சரி தாத்தா... என ஃபோனை வைத்தவன்.... பிஸ்டலை பைக்கின் பக்கிலிருந்து எடுத்து விட்டு அதை முதுகில் மறைத்து வைத்தான்...

அறை சென்று வைக்காமல்... பைக்கிலே இருந்து எவராவது எடுத்தால் பிரச்சனையாகும் என எடுத்து மறைத்தே வைத்தான்...

பைக்கை உரும விட்டவன் நேரே வீட்டை நோக்கி புறப்பட.... அவன் வீட்டை நோக்கி செல்லும் போது சரியாக எதிரில் ரித்திக் பைக்கில் வந்தான்... இருவரின் பார்வைகளும் ஒருவரை ஒருவர் கோவமாய் சந்தித்து கொள்ள... ஊர் முடிவெடுக்கும் போது நம் சண்டைகளை வெளி காட்ட கூடாதென ஒருவரை ஒருவர் முறைத்தவாறே பைக்கை நிறுத்தி விட்டு வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருந்த பெரியவர்களினருகில் சென்று நின்றனர்...

அங்கு ஊரின் பெரிய தலைகள் அனைவரும் வந்திருந்தனர்.... பெரிய தாடி... கருகருவென இருந்த மீசை.... தோளில் போட்ட துண்டென அனைவரும் கம்பீரமாய் அமர்ந்து இருக்க... ஊரின் தலைவராய் நாராயனன் தாத்தாவும்... அவரருகில் ஜமீந்தார் சார்பாக ராஜேந்திரன் தாத்தாவும் அமர்ந்திருக்க... இருவரின் இரு பக்கத்திலும் ஜிம் பாடியாய் போய் நின்றனர் ஆதித்தும் ரித்திக்கும்...

ஆடவர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர்... விஷ்வா ஷியாமும் அதில் அடக்கம்...

நாராயனன் தாத்தா : என் அழைப்ப ஏற்று இங்க வந்த எல்லாருக்கும் நன்றி... நம்ம ஊருலையும் உலகத்துலையும் நோய் பரவி எல்லாம் அடஞ்சு கிடைக்காங்க... நம்ம ஊர்லையும் அஞ்சு வருஷமா சரியான மழை இல்லை... வாணம் பார்த்த பூமி வரண்டு போக நாம விட கூடாது... அதனால எங்க பேரனோட திட்டப்படி இயற்கை விவசாயத்த காப்பாத்த அணை பக்கத்த தூர்வாரபோறோம்... ஆயிரம் வருஷத்துக்கு முன்ன... இங்க குமிழிதூம்பு வச்சு தண்ணியையும் சேரையும் பிரிச்சாங்க... ஆனா இப்போ குமிழிதூம்பும் பாழடைஞ்சு கிடக்கு... அத சரி பன்ன முடியாது... பன்னாலும் மழ இல்லாததால ஏரி நிறம்பல... அதனால தான் அணையோட ஒரு பக்கத்துல மட்டும் திறக்க போறோம்... ஏரி நிறம்பிடும்... இதுல எல்லாருக்கும் சம்மதம் தானே....

( பல வருடங்கள் முன்.... மழையால் ஏரி நிறம்பியதும்... நீந்துவதில் வள்ளவரான ஒருவர் நீருக்குள் இறங்கி.. கலிமுகத்தை அடைந்து... குமிழிதூம்பை தூக்குவர்... அதன் கீழ் இரு துளைகள் தென்படும்.... முதல் துளையிலிருந்து நீர் சுழன்று வெளியேறும்.... அதற்கு கீழிருக்கும் சேரோடி துளையிலிருந்து நீர் சுழன்று சேர் வெளியேறும்... இதனை அக்காலத்தில் குமிழிதூம்பு என கூறுவர் )

அனைவரும் மௌனமாய் தங்கள் சம்மதத்தை தெரிவிக்க...

ராஜேந்திரன் தாத்தா : அடுத்ததா... நம்ம ஊர் மக்களோட உடல்நலம் சரியா இருக்கைனும்ங்குரதுக்காகவும்.. இந்த புதிய நோய் வராம இருக்குரதுக்காகவும் புதிய மருத்துமனைய பக்கத்துலையே திறக்க போறோம்... இனிமே இரண்டு கிலோமீட்டர் தள்ளி கூட போக வேண்டாம்... சுத்து வட்டாரத்துல தான் இருக்கும்... நாளைக்கு அந்த மருத்துவமனைக்கு திறப்பு விழா.... நம்ம ஊரோட நீர்வளமும்... நிலவளமும் பெருகுரதுக்காக திருவிழா நடக்க போகுது... இது நம்ம வந்தனக்குரிச்சி மட்டுமில்ல... நம்ம சுத்துவட்டாரத்துல இருக்க... நாச்சியார்புரம்... அயலூர்... மங்கையூர்... தந்திரகுடின்னு அஞ்சு (கற்பனை )கிராமமும் பத்து வர்ஷத்துக்கு முன்னாடி நடந்த அசம்பாவிதத்துக்கு அப்ரம் திரும்பவும் நடத்த போற ஊரடங்கு திருவிழா.... எல்லாரும் இதுக்கு ஒத்துழைக்கனும்.... ஞாயிறு அன்னைக்கு யாரும் வெளியேற கூடாதுன்னு அரசாங்கம் சொல்லியிருக்குரதால... அடுத்த வார கடைசியில காலைல நம்மள இத்தன வர்ஷமும் உயிர் வாழ வைக்கிற இயற்கை அனைக்கு வைபவம் நடத்தீட்டு.... அதுல இருந்தே திருவிழா நடக்கும்....

நாராயனன் தாத்தா : எல்லாருக்கும் சம்மதம் தானே... எதாவது குறை இருக்கா...

ஒருவர் : எந்த குறையுமில்லங்க ஐயா... பல வருஷம் களிச்சு நடக்குர விஷேஷம்... ரொம்ப சந்தோஷம்ங்கையா....

ஆதித் : தாத்தா...

ராஜேந்திரன் தாத்தா : என்னப்பா...

ஆதித் : பஞ்சாயத்த கூட்டி எல்லார்ட்டையும் கேட்டுக்கோங்க... எல்லாரோட முடிவும் ஒத்துழைப்பும் தேவை...

அங்கு கூடியிருந்தவர்களுக்கு அவனின் பொருப்பு அவன் மீதிருக்கும் மரியாதையை கூட்டியது...

நாராயனன் தாத்தா : ஆனா தம்பி.... என இழுக்க...

ஆதித் : சொன்னா கேளுங்க தாத்தா... பஞ்சாயத்த கூட்டுங்க... ராசையா கூட்ட சொல்லுங்க பஞ்சாயத்த.....

ராசையா... தங்கராசு.... குணத்திலும் தங்கம்.... ஆதித் பிறப்பதற்கு முதலில் இருந்து ஜமீந்தாரிடம் வேலை செய்பவர்... மிகவும் விசுவாசமுள்ள வேலையாள்... ஜமீந்தார் குடும்பத்திற்கே அவர் ஒரு முக்கியமான உறவு... ஆதித் மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளவர்..... ஆதித்திற்கும் அப்படியே... சிறு வயதிலிருந்து அவனுக்கு அவர் ராசையா தான்.... ஐந்து வயதில் அவருக்கு அவன் வைத்த பெயர்.... ஆதித்தை சீராட்டி பாராட்டி வளர்த்தவர்...

ராசையா : சரி தம்பி...

நாராயனன் தாத்தா : சரி வா ராஜேந்திரா... பேரன் சொன்னா கேக்க மாட்டான்....

என ஊருக்கு கிளம்பினர்... கூடிய ஊர்காரர்கள் சென்று விட..... தாத்தாக்கள் அதற்கு முன் ரித்திக்கின் அருகில் சென்றனர்....

ராஜேந்திரன் தாத்தா : ரித்திக்.... உனக்கு எதாவது பிரச்சனை இருக்காயா...

ரித்திக் : எனக்கு என்ன தாத்தா இருக்க போகுது.... பெரியவங்க முடிவ தான் நாங்க தொடர போறோம்... என்ட்ட ஏன் கேக்குறீங்க...

நாராயனன் தாத்தா : என்ன தம்பி இப்டி சொல்லிட்ட.... ராஜப்பனும் என் மவன் தான்.... அவன் புள்ள நீ... என் பேரன் இல்லையா... ராஜப்பன் இல்லாத குறைய நீ தான் ராசா தீர்க்குர... அப்டி இருக்கப்ப... என் நண்பன் அதான் உன் தாத்தா வெங்கடேசனோட ஜமீன் பொருப்புகளையும் ஊர் முடிவுகளையும் உன் சித்தப்பாக்களுக்கு அடுத்து... நீயும் உன் தம்பி விஷ்வாவும் தானையா எடுக்கனும்...

ஆம்.... நம் நாராயன் தாத்தாவின் ஆருயிர் தோழர் தான் உத்ராவின் தாத்தா வெங்கடேசன்... இருவரும் நகமும் சதையுமாய் இருப்பர்.... அவர்களை போலவே அவர்களின் மகன்களும் இருந்தனர்.... வெங்கடேசன் தாத்தா சிலவருடம் முன் உயிர் நீத்து விட்டார்....

ரித்திக் : ம்ம்ம்

ராஜேந்திரன் தாத்தா : அதானால உன் சம்மதமும் வேணும் ராசா...

ரித்திக் : நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சந்தோஷம் தான் தாத்தா....

ராஜேந்திரன் தாத்தா : சரி ராசா... நீ வா... நாங்க கெளொம்புறோன்....

ரித்திக் : நானும் வரேன் தாத்தா...

நாராயனன் தாத்தா : இல்ல ராசா... உன் பாட்டிகளும்... அத்தையும் காத்துட்டு இருக்காங்க... அன்னைக்கு வந்தப்ப நீ கோவத்துல போய்ட்ட.... போ இப்போ போய் பேசு...

ரித்திக் : ம்ம் சரி தாத்தா... என படிகளில் தாவி குதித்து உள்ளே ஓடினான்....

விஷ்வாவும் ஷியாமும் அங்கேயே கதை அளந்தவாறு அமர்ந்து விட்டனர்.... ஆதித் பஞ்சாயத்து கூட்டம் கூடும் இடத்திற்கு சென்று விட்டான்...

உள்ளே அங்குமிங்கும் பார்த்து கொண்டே வந்த ரித்திக்.... யாரையும் காணாது கத்தி அழைத்தான்...

ரித்திக் : அத்த....பாட்டி.... மை ப்யூட்டி... ஸ்வீட்டி... அத்த... அம்ரு அத்த.... இருக்கீங்களா... ஹலோ... என கத்தி கொண்டே சென்றவன் கத்தல் தாங்காது அறையிலிருந்து வெளி வந்த ரேகா அவனை கண்டுதும்.... அவன் ஆதித்தையே அறைந்தது நினைவு வந்து உள்ளே ஓடி விட்டாள்.... அதை கண்டு தோளை குலுக்கியவன் திரும்பவும் பிருந்தா பாட்டி வரவும் சரியாய் இருந்தது...

பிருந்தா பாட்டி : டேய் பேராண்டி...

ரித்திக் : பாட்டிமா...

மரகதம் : ராசா...

ரித்திக் : பாட்டி மா...

பிருந்தா பாட்டி : போடா உன் கிட்ட நாங்க பேச மாட்டோம்... அன்னைக்கு வந்த நீ... எங்கள்ட்ட பேசுனியா...

ரித்திக் : அச்சோ மை டியர் பாட்டி.. பத்து வர்ஷத்துக்கு முன்னாடி இங்க இருந்து போறப்ப நா என்ன சொன்னேன்.... " கோவத்தோட என்னைக்குமே இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன் " னு.. ஆனா அன்னைக்கு வர வேண்டிய நிலமை...

மரகதம் பாட்டி : அதனால எங்கள்ட்ட பேசாம போவியா நீ....

ரித்திக் : நா அதுக்கு மேலையும் அங்க இருந்துர்ந்தா உங்க பேரன் கோவத்த அடக்குறேங்குர பேருல... எதை எதையோ உடச்சு சுசைட் பன்னிக்கிட்டு மேல போய்ருப்பான்...

பிருந்தா பாட்டி : படவா...

மரகதம் பாட்டி : சரி உன் அத்தைய பாத்தியா...

ரித்திக் : இல்லையே... அத்தைய தேடிகிட்டு தா வந்தேன்...

பிருந்தா பாட்டி : சரி இரு நா போப் கூட்டீட்டு வரேன்...

மரகதம் பாட்டி : நா உனக்கு குடிக்க மோர் எடுத்துட்டு வரேன்...

என இருவரும் ஒரு ஒரு பக்கம் செல்ல... ஏதோ யோசித்தவாறு திரும்பிய ரித்திக்... மாடி படியில் கையை கட்டி கொண்டு நின்ற தியாவை கண்டு எச்சிலை விழுங்கினான்...

தலை சிலுப்பி கொண்டவன் எழுந்து தானாகவே அவளருகில் சென்றான்.... தியா அவனை ஆச்சர்யமாய் பார்க்க... அவளருகில் நெருங்கி வந்தவன்... அவளை திருப்பி விட்டு.... கார்த்திகா கொடுத்தனுப்பிய மல்லி சரடை அவளின் பின்னலில் வைத்து விட்டு அவள் தலையில் வெட்டியாய் மாட்டி இருந்த ஹர்பின்னை எடுத்து பூவில் குத்தி விட்டு... கீழிறங்கி சென்றான்....

தன் தலையின் சூடப்பட்ட மல்லியின் மணத்தை முகர்ந்த தியா அவனை திரும்பி முறைக்க... அவனோ சிரித்து விட்டு போய் சோபாவில் அமர்ந்தான்....

ஏனெனில் நம் தியாவிற்கு ஒரு குருட்டு பழக்கம் உண்டு... பூ கொடுத்தால் தானாய் வைத்து கொள்ள மாட்டாள்... வேண்டாமென்று அடம் பிடிப்பாள்... தோழிகள் கிளம்பி வர நேரமெடுக்கும் என்பதால் இங்கே கெளம்பிய ரித்திக்கிடம்... " இத எப்டியாவது அவ தலைல வக்கனும்... அதுக்கு நீ தான் பொருப்பு.... ரொம்ப லேட்டான வதங்கி போய்டும் " என கட்டளை போட்டு உத்ராவின் தாய் கார்த்திகா அனுப்பி இருந்தார்..... அதனால் இவனே சென்று வைத்து விட்டான்.....

அம்ருதா : வா பா ரித்திக்... என்னலாம் உனக்கு நியாபகம் இருக்காதே....

தியா : உன் மகனோட பத்து வர்ஷமா இருக்க சண்டையையே மறக்கல... உன்ன மறந்துருவாறா...

ரித்திக் : ம்ச் என்ன அத்த... உங்கள போய் மறப்பேனா... அன்னைக்கு கோவத்துல போக வேண்டிய நிலமை....

அம்ருதா : நீ மூடு... என் மருமகன் தங்கம்... என்ன மறக்க மாட்டான்...

தியா : உனக்கு சப்போர்ட் பன்ன வந்தேன்ல... எனக்கு தேவை தான்...

ரித்திக் : சரி சொல்லுங்க அத்த... எப்டி இருக்கீங்க...

அம்ருதா : எனக்கென்ன டா.... ஏதோ இருக்கேன்....

ரித்திக் : ஏன் அத்த இவ்ளோ சலிப்பு...

அம்ருதா : வேற என்ன செய்ய சொல்ற.... நா வைத்துல சுமக்காத என் இரெண்டு புள்ளைங்களும் இப்டி வெவ்வேறு துருவமா இருந்தா... நா சந்தோசமா இருப்பேனா...

தியா : மா... யார சொல்ற நீ... என சந்தேகமாய் கேட்க...

அம்ருதா : வேற யாரு... ரித்திக்கும் ஆதித்தும் தான் .... என சாதாரணமாய் கூற....

தியா : நீ தாயா இல்லை பேயா.... என்ன வார்த்த சொல்லிட்ட நீ... இவன் நீ பெற்றெடுக்காத புள்ளையா...

அம்ருதா : ஏன் டி இந்த கத்து கத்துர.... நா சொன்னதுல என்னடி தப்பிருக்கு....

தியா : அதுல என்ன சரியா இருக்குன்னு... தப்பிருக்குன்னு கேக்குர... என ஆத்திரத்தில் கத்த... ரித்திக்கோ கடினப்பட்டு சிரிப்பை தனக்குள்ளே அடக்கி கொண்டிருந்தான்....

அம்ருதா : கிருக்கி போடி அந்தபக்கம்...

தியா : மா.... முற மாறும் மா....

அம்ருதா : மாறுனா என்ன....

தியா : மாறுனா என்னவா.... இதுவே ராஜேந்திரன் தாத்தா பிருந்தா பாட்டிய கல்யாணம் பன்னலன்னா நீ அவங்கள அப்பான்னு கூப்டுவிவா..

அம்ருதா : அதெப்டி டி... மாமா எனக்கு மாமா முறை தானே...

தியா : அப்போ எனக்கு மாமா முறைல இருக்குரவங்கள அப்பான்னு சொன்னா இது என்ன நியாயம்...

அம்ருதா : நா எப்போடி அப்டி சொற்ற...

தியா : இப் சொன்னியே... இவன் நீ பெத்துடுக்காத பையன்னு.. அப்போ ராஜப்பன் மாமா எனக்கு அப்பாவா.... என தலையை சுற்றி மூக்கை தொட்டாள்...

அம்ருதா : உன்ன விட ஆறு வயசு மூத்தவன... என்ன அவன் இன்னு சொவ்விக்கிட்டு.... நா இங்க முறையையே இழுக்கல... நீ எப்டியோ அப்டி தான் இவனும்னு சொன்னேன்.... லூசு மாறி பேசாத...

தியா : அப்போ மாமா எனக்கு மாமா தான....

அம்ருதா : மாமா தான் டி...

தியா : ஹப்பா.. என பெருமூச்சு விட்டாள்...

ரித்திக் : சரி அத்த.... பஞ்சாயத்து கூட்டீர்ப்பாங்க... நா கெளம்புறேன்... என சிரித்தவாறே கூறினாள்....

மரகதம் பாட்டி : அதுக்குள்ளையா.. என மோரை எடுத்து கொண்டு வர...

ரித்திக் : ஆமா பாட்டி... என அவர் நீட்டிய மோரை வாங்கி கொண்டே பதிலளித்தான்...

பிருந்தா பாட்டி : இப்போ தான ராசா வந்த...

ரித்திக் : டைமாச்சு பாட்டிமா... டைம் கிடைக்கும் போது வரேன்... இப்போ கெளம்புறேன்.. வரேன் அத்த....

அம்ருதா : போய்ட்டு வா பா... என வழி அனுப்பினார்....

" என் ட்ட சொல்லாமையா போற.... இருக்கு உனக்கு... " என அவனை பார்த்து பொரிந்து தள்ளினாள் தியா.... சரியாய் அதே நேரம் சிரித்தவாறு திரும்பிய ரித்திக் அவளை பார்த்து கை அசைத்து விட்டு சென்றான்.....

ஊர் முழுவதும் பஞ்சாயத்தில் கூட.... எடுத்து முடிவும் அறிவிக்கப்பட.... அனைவரும் அமைதியாய் இருந்த நேரம்.... " அணைய திறந்து விட்ரேன்னு... வெல்லம் வந்துருச்சுன்னா என்ன ஐயா பன்றது " என்ற குரலை கேட்டு ஆதித் பார்வையை சுழற்றினான்... சரியாய் அவன் கண்களில் சிக்கினார் சேகரநாதன்... ஆனால் அவர் அமைதியாய் தான் அமர்ந்திருந்தார்.... அவரினருகில் அமர்ந்திருந்த அவரின் இரெட்டை சகோதரன் கந்தர்வநாதன் தான் பேசியதென அவரின் பார்வை தாத்தாவின் மீதிருப்பதை வைத்து உறுதி செய்து கொண்டான்.....

சேகரநாதன் மற்றும் கந்தர்வநாதன் இருவரும் இரெட்டை சகோதரர்கள்....

ஆதித் : அந்த மாரி எந்த பிரச்சனையும் வராது சித்தப்பா... நாம திறக்கப்போறது.... சிறு பகுதியதான்.... அத விவசாயத்துக்கு மட்டும் தான் உபயோகிக்க போறோம்.... என்றவனை அப்போதே கவனித்தார் அவர்....

கட்டுக்கோப்பான உடல் வாகில்.. முகம் இருக.... கேசம் அலைபாய... கண்கள் முழுவதும் வெறுப்புடன்.... கம்பீரமாய் நின்றிருந்தான் ஆதித்...

தீரா : ஒரு ஒருத்தரும் இவன தினம் தினம் பார்க்குறாங்க... அதனாலையே டெய்லி இவன வர்ணிக்க வேண்டியதா இருக்குயா....

ஆதித் : அதனால எந்த பிரச்சனையும் வராது....புரஞ்சிர்க்கும்னு நெனக்கிறேன்.... சம்மதமா... என கண்களை நேருக்கு நேராய் பார்த்து கேட்டவனுக்கு மறுபதில் அளிக்க இயலாமல் கந்தர்வசேகரின் தலையையும் சேர்த்து மற்ற அனைவரின் தலையும் ஆடியது.....

நாராயனன் தாத்தா : ரொம்ப சந்தோஷம்.... நாளைக்கு எல்லாரும் மருத்துவமனை திறப்பு விழாக்கு வந்துருங்க... அடுத்து திருவிழாக்கு குடும்பத்தோட எல்லாரும் வரனும்....

அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றனர்.... மரத்தின் பின் நின்று இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த உத்ராவிற்கு மனம் எதனாலோ நெருட நொடங்கினாலும்.... பத்து வருடம் முன் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் அவளை உள்ளூர நடுங்க செய்தது.... " அதை போல் எதுவும் நடக்க கூடாது.... என் ஆதன் மாமாவும் என்றும் நலமாய் இருக்க வேண்டும் இறைவா " என நினைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்....

உத்ராவின் வேண்டுதல் நிறைவேறுமா....???

இதில் வேறேதும் பிரச்சனை வெடிக்குமா...??

பொருத்திருந்து பார்ப்போம்....

நீ... நான்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro