Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9

அன்று காலையில் நேரமே எழுந்த ஜான்வி குளித்து தயாராக ஜீவிதாவோ தானும் எழுந்து குளிக்க சென்றாள்.

ஜான்வி "ஹே ஜீவிமா நீ ஏன் இப்போவே எந்திரிக்குற ?"என்க

ஜீவிதாவோ அவளை குழப்பமாய் பார்த்தவள் "என்னடி நேத்து தான கெளதம் ப்ரோ சொன்னாரு இன்னைக்கும் வருவேன்னு. நீயும் அதுக்கு தான கெளம்புற? எப்படியும் நீ எழுப்பி விடுவ தான் நானே கெளம்பலாம்னு "என்க

ஜான்வியோ அவள் அருகில் வந்தவள் அவள் தோளை பற்றி "ஜீவி குட்டி அது நேத்து இது இன்னைக்கு .ஒரு லவ் பர்ட்ஸுக்கு உள்ள நீ வரலாமோ ?சின்ன புள்ள கெட்டு போயிருவ அதுனால நீ ஆற அமர தூங்கி எந்திருச்சு பதினோரு மணிக்கு வருவியாம் நா மட்டும் இப்போ போய் சைட் அடிப்பேனாம் "என்க

ஜீவிதாவோ கீழே ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடினாள்.அவள் தேடுவதை பார்த்த ஜான்வி "என்ன செல்லம் தேடுற ?"என்க

அவளோ "ஆங் ஏதாச்சும் அருவாள் இருக்கானு பாக்குறேன் உன்ன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவா இல்லடி பிசாசே "என்று

அவளை கீழே இருந்தா பாட்டில்ஐ வைத்து அடிக்க வர ஜான்வியோ அய்யயோ என்று பதறி தனது கை பையை எடுத்தவள் ஒரே ஓட்டமாய் அறைக்கு வெளியில் ஓடி விட்டாள் .

பின் மூச்சு வாங்கிய ஜீவிதா தனது படுக்கைக்கு வந்து அமர கதவை லேசாய் திறந்த ஜான்வி "ஜீவிமா "என்று கூப்பிட

ஜீவிதா "என்னடி ?"என்க

அவளோ இளித்தவள் "அது.... பிரவீன சமாளிச்சுரு டி "என்றவள்

அவள் "அடிங்குஹ்......." என்று கூறுவதற்கும் சிட்டாய் பறந்து வெளியே ஓடி விட்டாள் .

அவள் ஓடியதை பார்த்து சிரித்த ஜீவிதா அதன் பின்னே பிரவீனின் ஞாபகம் வர அவனிற்கு அழைத்தாள் .அவள் அழைத்த இரண்டு ரிங்கிலேயே எடுத்தவன் "சொல்லு கொரங்கு என்ன திடீர்னு கால் "என்று பழைய துள்ளலுடன் பேச அவளிற்கு அப்பொழுதே நிம்மதியாய் இருந்தது

ஜீவிதாவும் அவனை வம்பிழுக்க நினைத்தவள் "ஆங் அது ஒண்ணுமில்ல நேத்து நைட் ஒரு குழந்தை உக்காந்து என் சாக்கிய அவன் புடுங்கிட்டான் அப்டினு தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்துச்சு அதான் சாக்கி கெடச்சுதா அப்டினு கேக்க கூப்பிட்டேன் "என்க

ப்ரவீனா சிரித்தவன் "அட குரங்கே நா உக்காந்து பீல் பண்ணிகிட்டு இருந்தா கொழந்த choclateah தொலைச்சுட்டு அழுத மாறி இருந்துச்சா உனக்கு ?"என்க

அவளோ சிரித்தவள் "பின்ன தேம்பி தேம்பி அழுகுற உன் கண்ணுல இருந்தது கண்ணீரா இல்ல dam ஆ டா நேத்து என் ட்ரெஸ்ஸேஹ் நனைஞ்சு போச்சு "என்று ஏற்ற இறக்கங்களுடன் கூற

அவனோ சிரித்தவன் "இருக்கும் டி இருக்கும் .என்றவன் பின் நிறுத்திவிட்டு "என்ன இன்னைக்கும் brova பாக்க கெளம்பிட்டாளா ?"என்க

அவளோ அதிர்ந்தாள் இவனுக்கு எப்படி தெரியும் என்று

ப்ரவீனோ அவளின் அமைதியே அவளை காட்டிக்கொடுக்க "என்ன எப்படி கண்டு புடுச்சேன்னு பாக்கறியா ?காலேஜ் படிக்கேலேயே நீங்க பூக்க தொட மாட்டீங்க இங்க வந்ததுகாப்புறோம் நீங்க லைப்ரரில போய் புக் படிக்க போறீங்கன்னு நா நம்பணுமா?பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் டி "என்க

ஜீவிதாவோ இளித்தவள் "சரிடா ஓட்டாத இன்னிக்கு தனியா கெளம்பி போயிருக்கா என்ன ஏழரைய கூட்ட போறாளோ ?"என்க

ப்ரவீனோ"ம்ம் ஆனா ஜீவி கொஞ்சம் பாத்துக்கோ அவளை அது வளந்துருக்கே ஒழிய கொழந்த .பார்த்த வரைக்கும் நல்லவர் தான் ஆனா இன்னும் நல்லா அவர் கேரக்டர் தெரியுற வரைக்கும் அது crush அப்டிங்குற நிலைல இருக்குற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது "என்று கூற

ஜீவிதாவும் ஆமோதித்தாள் "நா பாத்துக்குறேன் டா.நல்ல characteraa இருந்தாலுமே அதே ஸ்டேஜ்ல இருக்குறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது "என்க ப்ரவீனும் ஆமோதித்தான் ஜான்வியின் குடும்பம் அப்படி .

பின் இருவரும் அழைப்பை துண்டித்தனர் இருவரின் மனத்திலும் ஜான்வியின் இந்த பெயரறியா உணர்வை பற்றிய குழப்பம் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த அவளோ மிகவும் கூலாக அந்த escalatorin அருகில் வந்து விட்டாள் .அங்கே நின்றவள் சுற்றி முற்றி தேட அவள் கண்ணில் கௌதம் படவே இல்லை .

"எங்கே போனான் இவன் டைம் ஆச்சே இன்னும் வரல" என்று நினைத்தபடி அவள் வழியை மறித்து நிற்க அது பீக் டைம் ஆதலால் அவளை தள்ளியபடி அந்த escalatoril ஏற்றி விட்டு விட்டனர் பின்னே வந்தவர்கள் அவளோ "இவங்க வேற "என்று நொந்தபடி கண்பார்வையை சுழலவிட்டபடி இருக்க

அவளின் காதிர்கருகில் கேட்ட "யாரை தேடுற ?"என்ற கௌதமின் குரலில் பதறி கீழே விழா பார்த்தாள்.

"ஏய்ய் பார்த்து"என்று அவள் கையை பிடித்தவன் அவளை நேராய் நிற்க வைக்க escalatoril மேலே அடைந்திருந்தனர் .அவளோ அவன் கண்களிலேயே கட்டுண்டு இருக்க அவன் அவள் தோளை தொட்டு உசுப்பிய பின்னே அவள் வெளி வந்தாள்.

கௌதம் "என்ன நா கேட்டுகிட்டே இருக்கேன் நீ ஏதோ கனவுல இருக்குறவ மாறி நிக்கிற ?"என்க

அவளோ "ஆங் என்ன கேட்ட ?"என்று கேட்க

அவனோ "சுத்தம் என்னாச்சு உனக்கு ?யாரை தேடுறன்னு கேட்டேன் "என்க

அவளோ "அது......சும்மா வேடிக்கை பாத்துட்டு வந்தேன் "என்க

அவனோ அவளை நம்பாத பார்வை பார்த்தவன் "அது வேடிக்கை பாத்தா மாறி இல்லையே "என்க

அவளோ "அதான் சொல்றேன்ல ஏன் அதையே கேக்குற ?"என்க

அவனும் "ஓகே ஓகே கூல் "என்றவன் அவளின் உடையை ஆராய்ந்தான் .மஞ்சள் நிறத்தில் சுடிதார் டாப் கேழே நீல நிறத்தில் ஜீன் கழுத்தை சுற்றிய ஸ்டோல் என்று 96 படத்தில் இருந்த ஜானுவை போன்றே உடை உடுத்தி இருந்தாள்.

அவளை பார்த்து அவன் சிரிக்க அவளோ "ஏன் சிரிக்கிற ?"என்க

அவனோ அவள் உடையை காண்பித்தவன் "என்ன 96 ஜானுவா ?"என்க

அவளும் அப்பொழுதே உணர்ந்தாள் தான் அப்படி உடை அணிந்திருக்கின்றோம் என்று ஈஈ என்று இளித்தவள் ஆமா என்று மண்டையை ஆட்ட

அவனோ"நீயே ஒரு ஜான் சைஸ் தான் இருக்க இதுல ஜானு வேறயா ?"என்று அவளை தன்னிடம் பேச வைப்பதற்காக அவளை வம்பிழுக்க சரியாய் ஒர்கவுட் ஆனது

ஜான்வி "ஓய் என்ன ஓவரா கலாய்க்குற எதை பத்தி வேணாலும் பேசு உயரத்த பத்தி மட்டும் பேசாத "என்க

அவனோ "ஆஹான் ஏன் பேசுனா என்ன பண்ணுவ? "என்க

அவளோ அவனை முறைத்தவள் "நா கூட்டமா இருந்தா பூந்து பூந்து போயிருவேன் நீ போவியா ?நா பஸ்ல இடம் இல்லேனா ரெண்டு பேர் உக்காருற சீட்ல மிச்சம் இருக்குற கொஞ்சூண்டு இடத்துல கூட comfortableaah உக்காந்துருவேன் நீ உக்காருவியா ?இப்போ வரைக்கும் என் சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தா சின்ன புள்ளன்னு காசு குடுத்துட்டு போவாங்க உனக்கு குடுப்பாங்களா ?நாங்க குள்ளம் இல்ல கிடே புரியுதா..... "என்று அவள் பாதி குதித்தபடி கையை ஆட்டி ஆட்டி ஒரு விரலை நீட்டி கண்ணை உருட்டியபடி கூற

அவனிற்கு என்னவோ அவள் இருபத்தி ஓரு வயது பெண்ணாய் இல்லாமல் ஏழு வயது பெண்ணாய் தான் தெரிந்தாள்.சிரித்தவன் அவள் தலையிலேயே கையை வைத்து அழுத்தி "சரிங்க cutie நீங்க cute தான் "என்றவன் அந்த பாதை பிரிவு வந்து விட "ஓகே பை ஜானு "என்று கூறி விடை பெற

ஜான்வியோ அவன் புதியதாய் அழைத்ததில் அவனை கூப்பிட்டால் "இப்போ என்னனு கூப்பிட்ட?"என்று கேட்க

அவனோ திரும்பியவன் "ஜான்வி தான உன் பெரு சோ ஜானுனு கூப்பிட்டேன் இனிமே அப்டியே கூப்பிடுறேன் "என்று கூறியவன் அவள் பதிலை எதிர்பாராமலேயே சென்றுவிட இது வரை அரை அடி என்றோ ஜான்வி என்று முழுமையாகவோ தன் பெயரை கேட்டு பழக்கப்பட்டவளுக்கு அந்த ஜானு ஏனோ உயிரின் ஆழம் வரை சென்று வருடியது .

ஜானு என்று மெல்லமாய் முணுமுணுத்தவள் அவன் சென்ற திசையை பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டு தனது பணி இடத்தை நோக்கி சென்றுவிட்டாள் .

இன்று ஜான்வி தனது அலுவலகத்தில் வேலைபார்க்க அங்கு ஜான்வியின் வீட்டிற்கு தனது புதல்வன் அபிஷேக்குடன் வருகை தந்திருந்தார் அவளின் அத்தை ரேவதி .

ஜான்வியின் தந்தையான செகராறோ தனது பணிக்கு கிளம்பிக்

கொண்டிருந்தவர் வாயிலில் தனது தங்கையும் அவரின் புதல்வரும் நிற்க கண்டவர் ஓடி சென்று வரவேற்றார் "அடடே ரா(வா) ரேவதி ரா அபி என்னம்மா மாப்ள வரலையா ?"என்க

அவரோ "லேது(இல்லை ) அண்ணய்யா வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு "என்க

பார்வதியோ சத்தம் கேட்டு வெளியே வந்தவர் "வதினா(அண்ணி ) வாங்க வாங்க அபி வா "என்றவர் பின் "என்ன குடிக்குறீங்க வதினா ?"என்று கேட்க

அவரோ புன்னகை புரிந்தவர் "எதுவும் வேணாம் பாரு நீ இங்க வந்து உக்காரு சின்னு எங்கே?"என்று கேட்க

பார்வதியோ அவரின் அருகில் வந்து அமர்ந்தவர் "அவன் காலேஜ் போய்ட்டான் வதினா எப்படி அபி இருக்க "என்க

அவனோ அது நேரம் வரை அங்கே மாட்டப்பட்டிருந்த ஜான்வியின் புகைப்படத்தையே புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தவன் அவரின் கேள்வியில் சுயநிலை அடைந்து "ஹான் நல்லாருக்கேன் அத்த "என்று கூறினான் .

பின் சேகரன் "என்ன ரேவதி திடீர்னு வந்துருக்க "என்க

ரேவதியோ சற்று தயக்கத்துடன் "அது அண்ணய்யா அபிக்கு 25 ஆயிருச்சு பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம் "என்க

சேகரனோ "அடடே நல்ல விஷயம் தான் நானும் பொண்ணு பாக்குறேன்மா "என்க

அவரோ "அது இல்ல அண்ணய்யா சொந்தத்துலயே பொண்ணு இருக்கேல எதுக்கு வெளிய தேடணும்னு "என்று அவர் கூற

பார்வதியும் சேகரணுமோ புரியாது விழிக்க அபியோ "அது வந்து மாவய்யா எனக்கு ஜான்வினா இஷ்டம். அவளும் இப்போ படிச்சு முடுச்சுட்டாளே அதான் அவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன் "என்று கூற

முதலில் இருவரும் திகைத்தாலும் பின் புன்னகைத்தவர்கள் "எங்களுக்கு இது தோணாம போயிருச்சே நல்ல விஷயம் தான் .நாங்க ஜான்வி கிட்ட கேட்டுட்டு முடிவை சொல்றோம் "என்று கூற

ரேவதியோ பேசி முடித்துவிடும் எண்ணத்துடன் வந்தவர் ஜான்வியின் விருப்பத்தை கேட்டு என்றதும் முகம் சற்று சுருங்கிவிட்டது அவளிடம் என்ன கேட்பது என்று நினைத்தவர் அதை வாய் வழியாகவே சொல்லியும் விட்டார் "அவளுக்கு என்ன அண்ணய்யா தெரியும் சின்ன பொண்ணு நீங்களா சம்மதம் சொன்னா பத்தாதா ?"என்க

இருவரும் தயங்கினர் பார்வதி "அது.... வதினா மன்னிச்சுக்கோங்க வாழ போறது அவ அவளுக்கும் இஷ்டம் இருந்தா எந்த உறுத்தலும் இல்லாம மேற்படி ஆக வேண்டியதை பாக்கலாம். அவ விருப்பத்தை கேக்காம பண்றது சரியா படலை "என்க

ரேவதிக்கோ கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறியது அவர் மேலும் ஏதோ கூற வர அபியோ அவரின் கையை பிடித்தவன் பொறுமையாய் இரு என்று கண்களாலேயே கூறினான் பின் அவர்களின் புறம் புன்னகையுடன் திரும்பியவன் "சரி மாவய்யா நீங்க கேட்டுட்டு சொல்லுங்க "என்று கூறியவன் ரேவதியுடன் வெளியேற

ரேவதியோ அவனிடம் பொருமத்துவங்கினார் "என்ன பெரிய மகாராணியை பெத்து வச்சுருக்காங்க இவங்கனு அவ கிட்ட கேட்டு தான் முடிவை சொல்லுவாங்கலாம்?ஏன் என் பையனுக்கு என்ன கொறச்சல்?"என்க

அபிஷேக்கோ தாயின் செய்கையை புரியாமல் பார்த்தான் "அம்மா என்னம்மா சொல்ற எனக்கு புடுச்சுருக்கானு நீ கேட்ட மாறி தான அவங்களும் அவங்க பொண்ணு கிட்ட கேப்பாங்க ?அப்போ சொல்றது தான் இப்போவும் சொல்றேன் அவ சம்மதம் இருந்தா இந்த கல்யாணம் நடக்கும் இல்லேன்னா இதை பத்தி பேசாத "என்று கூறி வண்டியை எடுக்க ரேவதியோ மனதில் என்ன நடந்தாலும் இந்த திருமணம் நடந்தே தீரும் என்று நினைத்துக்கொள்ள ஜான்வியோ இது எதையும் அறியாமல் தனது keyboardil கோடிங் செய்து கொண்டிருந்தாள் ஒரு பிஸ்கட்டை கொறித்தபடி.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro