Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7

தன்னுள் எழுந்த உணர்வை தன்னுள்ளேயே புதைத்தவன் உறங்க அடுத்த நாள் காலை விடிந்தது .அன்று அவர்கள் கல்லூரி விளையாட்டு விழா ஆரம்பமானது .முதல் அணி இவர்களும் இன்னொரு பொறியியல் கல்லூரியும் மோதினர் .இவர்கள் 3 goals அடித்து விட அவர்களோ கல்லாவே திறக்காமல் ௦ goalsil ஆட்டம் முடிவடைந்தது .

அடுத்தடுத்து இவர்களே அபாரமாக விளையாட இறுதி சுற்றிற்கு தேர்வாயினர் .இறுதி சுற்றிற்கு தேர்வான இன்னொரு கல்லூரியோ ஒரு கலை கல்லூரி .

அந்த அணியின் தலைவனின் பெயர் வினை .பெயரிர்க்கெட்டாற்போல் அவன் செல்லும் இடங்களிலெல்லாம் இவன் பெரும் வினையாகவே இருப்பான் .தான் செல்லும் அனைத்து போட்டிகளிலும் தன் அணியை ஜெயிக்க வைப்பவன் .

திறமையால் பல வெற்றியும் சூழ்ச்சியால் பல வெற்றியும் அடைந்தவன் .இவர்களின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தான் .தனக்கு அருகில் இருந்த தனது நண்பன் சிவாவை அழைத்தவன் வித்யுத்தை சுட்டி காட்டி "யார்டா இவன் இதுக்கு முன்னாடி இந்த காலேஜ்ல பாத்ததில்லையே பாஸ்ட் 3 yearsaah இவனுங்க பிளாப் டீமாச்சேடா finals வரைக்கும் செலக்ட் ஆய்ருக்கானுங்க இந்த தடவ யாரவன் ?"என்று கேட்க

ஷிவாவோ "மச்சி நானும் கவனிச்சேன்டா அதான் பையன்னஹ் பத்தி விசாரிச்சேன் பேரு வித்யுத் இந்த வருஷம் தான் சேந்துருக்கான் இந்த காலேஜ்ல 4aavadhu வருஷம் .நேஷனல் லெவல் புட்பால் playeraam நேஷனல் புட்பால் டீம் அண்டர் 21ku 1 வருஷம் முன்னாடி கேப்டனாக இருந்துருக்கான் அந்த டீம் தான் ஜெயிச்சுச்சு செம talented " என்று கூற வினய் மனதிற்குள் அவனை திறமையால் வீழ்த்த முடியாவிடில் அவனை சூழ்ச்சியால் தான் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்தவன் அங்கும் இங்கும் தன் கண்ணை சுழலவிட்டவன் கண்களில் பட்டது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பழரசம்.

அதை கண்டவன் மனதில் ஒரு எண்ணம் தோன்ற விஷம சிரிப்பு சிரித்தவன் சிவாவை அழைத்து தன் திட்டத்தை கூறினான் பின் இருவரும் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற சென்றனர் .இங்கே ஆடி ஆடி களைத்து வந்த வித்யுதிற்கு உணவுடன் காத்திருந்தாள் சைந்தவி .நாளை கலை நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதால் மற்ற நான்கு நண்பர்களும் தாங்கள் பெயர் கொடுத்திருக்கும் போட்டிகளிற்காக பயிற்சி எடுக்க சென்று விட வித்யுத் செய்த வேலை அறியாத சைந்தவி தான் எதிலும் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தவள் அவனுக்காக காத்திருந்தாள் .வேர்க்க விறுவிறுக்க வந்தவனிடம் துண்டை கொடுத்தவள் அவன் துடைத்த பின் அவனுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டை கொடுத்தால்.

வித்யுத் "ஹே சது என்ன திடீர்னு எனக்கும் சேத்து சாப்பாட்டை எடுத்துட்டு வந்துருக்க ?"என்று கேட்க

அவளோ "எப்பா சாமி நா எடுத்துட்டு வரல உன் ராஜி டார்லிங் தான் நீ இன்னைக்கு விளையாண்டு விளையாண்டு ரொம்ப tiredaah இருப்ப பைனல்ஸ்ல விளையாட ஸ்ட்ரென்த் வேணும் கான்டீன் சாப்பாட சாப்டா அவளோ ஸ்ட்ரென்த் இருக்காதுன்னு உனக்காக specialலாஹ் செஞ்சு குடுத்துருக்கு "

என்க அதிலோ சூப்புடன் பல காய்கறிகளை சேர்த்து செய்த சாதம் இருக்க அவன் சூப்பை குடித்தவன் "ராஜி டார்லிங் கை பக்குவம்கை பக்குவம் தான் சூப் செமயா இருக்கு "என்க

அவளோ வராத கண்ணீரை துடைத்து கொண்டவள்"என் அம்மாக்கு சூப் வைக்க தெரியும்னே இன்னைக்கு தாண்டா எனக்கு தெரியும்"என்க

அவனோ "அதுக்கெல்லாம் ஒரு மொகராசி வேணும்டி "என்க

அவளோ "இந்த மொகரையெல்லாம் மொகராசிய பத்தி பேசுது நேரம் தான் "என்று பேசி கொண்டே சாப்பிட அவனுக்கு மற்ற playersக்கு கொடுப்பதை போல் juise கொடுக்க பட்டது ஆனால் அவன் அறிந்திருக்கவில்லை அவனது பழரசத்தில் வினய் ஒரு வினையாக மயக்க மருந்தை கலந்திருந்தான் என்று.

அவன் குடிக்கும் பழரசத்தில் ஒரு விதமான மயக்க மருந்தை கலந்திருந்தான் வினை .அது குடித்தவுடன் வேலையை காட்டாது .குடித்து 2௦ நிமிடத்திற்கு பிறகே வேலையை காட்ட துவங்கும் மயக்க உணர்வை கட்டுப்படுத்த நினைத்தால் அது மேலும் வீரியமானதாக மாறி ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்தும் போது கோமாவிற்கு அழைத்து செல்லும் அளவிற்கு வீரியம் வாய்ந்தது.வித்யுத் அந்த பழரசத்தை எடுக்கும் வரை பார்த்த வினை தன் காரியம் வெற்றி பெற்றது என்றெண்ணி சிரித்து கொண்டே சென்றான் ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் இல்லையே .

அதை எடுத்த வித்யுத் அதை குடிக்க போக அவன் கரம் பற்றி தடுத்த சைந்தவி அவன் என்ன வென்று நோக்க அவளோ "இவ்வளவும் திண்ணேல இதுல sirku ஜூஸ் வேற வேணுமா குடுடா அத என்றவள் அவன் தடுக்குமுன்பே ஒரே மூச்சில் அதை வாய்க்குள் சரித்துவிட்டால்.

அதை கண்ட வித்யுத் "ஏண்டி லூசே இப்டி பண்ற "என்க

அவளோ "ஹலோ கேப்டன் சார் ரொம்ப சாப்டீங்கன்னா நீங்க ஓட முடியாது சார் உருளதான் முடியும் நான் பண்றதெல்லாம் உங்க நல்லதுக்காக தான் உங்க வெற்றிக்காக தான் "என்று கூற

அவனோ "பேசு பேசு நல்லா பேசு ஹே சது நா மேட்ச் அப்போ அப்பப்போ உன்ன பார்ப்பேன் நீ என்ன encourage பண்ணனும் ஓகேவா.எங்கயும் போயிடாத.உன்ன பார்கேள தான் எனக்கு ஜெயிக்கணும்னு இன்னும் வேகம் வரும் "என்க

அவளும் "மேட்ச் முடியுற வரைக்கும் ஸுஸுக்கு கூட போக மாட்டேன் போடா ஆல் தி பெஸ்ட் "என்று கூறி அனுப்பி வைத்தாள் .

அங்கே அவனுக்கு விளையாட்டு துவங்கும் நேரம் அவனை பார்த்த வினை விஷமமாக சிரிக்க அவனை பற்றி அறிந்த வித்யுத் பதிலிற்கு அதே சிரிப்பை கொடுத்தவன் விளையாட ஆரம்பித்தனர் .முதலிலிருந்தே விளையாட்டு சூடு பிடிக்க அனைவரும் பரபரப்பாக அந்த விளையாட்டை கவனித்து கொண்டிருந்தனர் .அவ்வப்போது வித்யுத் சைந்தவியை பார்த்து கொண்டே விளையாண்டான் .

முதல் 10 நிமிடத்திற்கு உற்சாகமாக "common common கைஸ்" என்று கத்திக்கொண்டிருந்த சைந்தவிக்கு திடீரென்று மயக்கம் வருவதை போல் தோன்ற வித்யுத் அவ்வப்போது அவளை பார்த்து கொண்டே விளையாடுவதை கண்டவள் இப்பொழுது தான் மயங்கினாள் அவன் கவனம் சிதறும் என்று அறிந்தவள் தண்ணீரை முடிந்த அளவுக்கு குடித்து விட்டு மயக்க உணர்வை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தாள் .

இங்கே வித்யுத் சூறாவளியை போல் வேகத்துடன் விளையாடுவதை கண்ட வினை என்ன இவனுக்கு மயக்க மருந்து வேலை செய்யவில்லையா என்று நேரத்தை பார்க்க அதிலோ 3௦ நிமிடங்கள் முடிந்து விட்டது .பின் இனி சூழ்ச்சியை நம்பாது சூக்ஷமத்தால் வெல்வதே ஒரே வழி என்று நினைத்தவன் மிகவும் மும்முரமாக விளையாட ஆரம்பித்தான்.

சரிக்கு சமமாக விளையாண்டனர் இரு அணியினரும் .கடைசி 10 நிமிடங்கள் இருக்கையில் இரு அணியினரும் 2 கு 2 என சமமான புள்ளிகளில் இருக்க மொத்த அரங்கமும் இருக்கையின் நுனியில் அமர்ந்து அந்த விளையாட்டை பார்த்து கொண்டிருந்தது இங்கோ சைந்தவிக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது எனினும் அவனுக்காக பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் .அவள் அறிந்திருக்க வில்லை அவளே அவளுக்கு வினையை தேடி கொள்கின்றாள் என்று .

கடைசி 5 நிமிடங்கள் இருக்கையில் மருத்துவ மாணவர்கள் அணியில் ஒருவன் கிக் செய்து கொண்டு போன பந்தை கலை கல்லூரி மாணவன் ஒருவன் திடீரென்று குறுக்கே வந்து விழ அவர்களிடம் இருந்து பந்து பறிக்கப்பட்டது .வெற்றி கலை கல்லூரிக்கே என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருக்க திடீரென்று அப்பந்தை உதைத்து கொண்டு சென்ற கலை கல்லூரி மாணவன் பின் 4 மருத்துவமானவர்கள் சுற்றி வளைக்க அவன் கோல்போஸ்ட்டில் அதை உதைக்க கோல்கியாய் இருந்தவன் அதை தன் கையால் தடுத்து இடப்பக்கம் இருந்த வித்யுதின் பக்கம் பந்தை திசை திருப்ப 1 நிமிடமே மிச்சம் இருந்தது .

அந்த போஸ்டிலிருந்து ஒரே உதை உதைத்தவனின் காலில் பட்ட பந்து கோல் போஸ்டில் தாக்கி அவர்களிற்கு வெற்றியை ஈட்டி தந்த பின்பே தரையை அடைந்தது .அது தரை அடைந்த போது சரியாக நேரமும் முடிவடைய இங்கே சைந்தவியும் மயங்கி சரிந்தாள் .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro